search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Bibi"

    மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி கனடாவிற்கு சென்றுள்ளார். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

    தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தைக் கைவிட்டன.


    இதற்கிடையே, சிறையில் இருந்து விடுதலையான ஆசியா பீவி, நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது. ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஆசியா பீவி பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் எப்போது நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்? எங்கு சென்றார்? என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் அவர் கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    ஆசியா பீவி ஏற்கனவே கனடாவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், கனடாவில் அவரது மகள்களுடன் சேர்ந்துவிட்டதாகவும் ஆசியா பீவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆசியாவுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஆசியா பீவி பாகிஸ்தானை விட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்வரை, அவரை யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைத்துள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    ஒட்டாவா:

    பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி. இவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த அவர் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

    மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதற்கு எதிர்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

    எனவே, இங்கிலாந்து, கனடா, இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆசியா பீபீயின் கணவர் ஆசிக்மாசிக் கோரிக்கை விடுத்தார்.

    சமீபத்தில் பாரீசில் நடந்த முதல் உலகப்போர் 100 ஆண்டு நிறைவு விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூ கலந்துகொண்டார். அவரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறினார். இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை.

    அதேநேரத்தில் கனடா மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ஆசியா பீபியும் அவரது குடும்பத்தினரும் கனடாவில் தஞ்சம் அடைய இருப்பதை அந்நாட்டு பிரதமர் டிருடீயோ சூசகமாக தெரிவித்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுதுறை மந்திரி ஷா முகமது குரேசியுடன் கனடா வெளியுறவு மந்திரி இதுகுறித்து பேசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மந்திரி குரேஷி கூறும்போது, ஆசியா பீபி எங்கள் நாட்டு பிரஜை. அவருக்குரிய சட்டப்பூர்வ உரிமைகள் முழுவதையும் பாகிஸ்தான் வழங்கும் என்றார். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
     
    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக்கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



    ‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
     
    மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    நியூயார்க்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்புகிறது.



    இற்கிடையே ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

    பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு சென்றடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, தனக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு அளித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு செல்லும்படி விமானத்தில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறினார்.

    இந்த குற்றச்சாட்டை ஐநா செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ மறுத்துள்ளார். வழக்கறிஞர் சாய்புல் முலூக் கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகம் அவருக்கு உதவி செய்ததாகவும், நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்திய டிஎல்பி கட்சியினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #AsiaBibi #TLPCallsOffProtest
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஆசியா பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கட்சியான தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். சீராய்வு மனுவுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.



    இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதையடுத்து, 5 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.  பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தர்ணா போராட்டத்தை திரும்ப பெறுவதாக டிஎல்பி கட்சி அறிவித்தது. போராட்டம் நடத்தி வரும் தொண்டர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லும்படி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    மறு சீராய்வு மனு விசாரணை முடியும்வரை, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் (இசிஎல்) ஆசியா பீவி பெயரை அரசு சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனே எடுக்கும். #AsiaBibi #TLPCallsOffProtest
    மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
     
    இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. 

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபி, தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்மூறையீடு செய்திருந்தார். இந்த மனுமீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது.



    நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டுமே அன்றி மீறக்கூடாது. இது விஷயமாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted #ImranKhan
    பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கு மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறாமல் இருக்க பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில்,  மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என லாகூர் சிறையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசியா பீவி தெரிவித்துள்ளார்.

    ஆசியா பீபியின் விடுதலை செய்தி தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவரது கணவர் ஆஷிக் மசிஹ் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆசியா பீபி குற்றமற்றவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted

    ×