என் மலர்
நீங்கள் தேடியது "Varushabishekam"
- புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு வருசாபி ஷேகத்தை முன்னிட்டு 504 பால்குடம் தமிழ்நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் எடுக்கப்பட்டு விநாயகர் கோவிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமானம் கோபுர கலசங்கள் மீது இலஞ்சி ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் 21 வகையான நறுமணப் பொருட்கள் உள்பட பாலாபி ஷேகமும், தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்று காளி, நாகக்காளி, ரத்தக்காளி, சூலக்காளி, பதினெட்டாம்படி கருப்ப சாமி, செங்காளி யம்மன், மகாகாளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷே கங்கள் நடைபெற்றது.
அம்மனுக்கும், புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபா ராதனை காண்பிக்கப்ட்டது.
மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையில் காலை 9 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திரவியாகுதி, பூர்ணா குதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரனம், ராபர்பனம், ரக்சா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு இரவு 8 மணிக்கு எந்திர ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
- பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு நாளான நேற்று காலை முதல் கணபதி பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை நடந்தது.
யாக சாலையில் இருந்து கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. முருகனுக்கு 108 எண்ணிக்கை கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
இந்த நிகழ்வில் கோவில் தக்கார் ஆதிமூலம், ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
- இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
திருச்செந்தூா் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மேல் தளத்திற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு 9.15 மணிக்கு ஊற்றப்பட்டது.
தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர் திரளாக கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இணை ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
- நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
- குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடக்கிறது.
தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடக்கிறது.
கோவிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப் பூக்கள் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம் நடந்தது
- வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார்.
உடன்குடி:
உடன்குடி பண்டாரவிளைதெரு கல்யாண விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம், தொடர்ந்து கல்யாண விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு புது விருந்து அன்னதானமும் நடந்தது. வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார். இதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், தொழிலதிபர் வாசுதேவன், உடன்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் ஷேக் முகமது, உடன்குடி நகர தி.மு.க. பொருளாளர் திரவியம், முன்னாள் கவுன்சிலர் சலீம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.
- சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதில்விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜ நம்,கும்ப பூஜை,மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம்,தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் நிர்வாக பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் செடி வந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மஹா கணபதி பூஜை, சங்கல்பம் கணபதி ஹோமம், அம்பாள் முலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்பாள் குரு பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் உற்சவ அம்பாள் குருவுக்கும் மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.
பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன், சங்கரேஷ்வரி ஆலய அர்ச்சகர் சுப்பிரமணியன் முரளிதரன் சுவாமிகள் செய்தனர். அதன்பிறகு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் தொழில் அதிபர் எஸ்.கே.பி. முருகன் பிரேமா, பூமா டெக்ஸ் நவநீதராஜா, சுப்பையா, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், வார்டு உறுப்பினர் ராமர், யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, லட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.
- 24-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் நடக்கிறது.
- மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 13-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை, மகாகணபதி ஹோமம், மூலமந்திரம், மாலாமந்திரம் ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. கோட்டையின் கீழே விநாயகா் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது.
காலப்போக்கில் கோட்டை சிதிலம் அடைந்தாலும் இக்கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்த சன்னதியில் 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் விழாவில் முதல்நாள் ஷண்முகா அர்ச்சனையும், 2-வது நாள் அருணகிரிநாதா் குருபூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வருசாபிஷேக விழா நேற்று உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற்றது.
இதற்காக காலை விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணியசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பிரசன்ன விநாயகா், வள்ளி- தேவவேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இதனை தொடர்ந்து அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை மத்தியபதி ஈஸ்வரர் நடுநக்கர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மணி 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை மணி 11.45 மணிக்கு கணபதி, முருகன், அம்பாள் சுவாமிக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மதியம் 12 மணி அளவில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சிவபெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.