என் மலர்
நீங்கள் தேடியது "9 PEOPLE ARRESTED"
- காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார்.
- பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர்,
கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அடுத்த சின்னக்குயில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்ப டுவதாக கோவை மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் சிறப்பு படையினர் பாப்பம்பட்டி அடுத்த திருமுருகன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர்.
அங்கு மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(39), சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன் (42), இருகூர் பூங்கா நகரை சேர்ந்த செல்வகுமார்(45), செலக்கரைசலை சேர்ந்த குருநாதன் (49) என்பதும், விற்பனைக்காக அங்கு குட்காவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.5 டன் எடையுள்ள குட்கா, கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைதான செல்வகுமார் இருகூரில் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார். இவரை ஆசை வார்த்தை கூறி குட்கா விற்பனையில் ஈடுபடுத்தி உள்ளனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், அவரது மனைவி தனது மகனுடன் போலீஸ் நிலையத்தில் வந்து அழுதார்.
துடியலூர் போலீசாருக்கு வெள்ளக்கிணறு குளம் அருகே சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது. போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர்கள் கோட்டையாம்பாளை யத்தை சேர்ந்த ரவிந்தரன்(21), கீரநத்தத்தை சேர்ந்த நந்தகுமார் (22), சரவணம்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் (19), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அக்ஷய்குமார் (22), கோவில்பாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து கஞ்சாவை சப்ளை செய்யும் முகேஷ் பட்டேல் (23) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது.
- வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசார் சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20), வினோத் பாண்டியன் (23), ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
- மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது தோழி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாணவி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சரக்கு வாகன டிரைவர் ஆவார். இவரது தாயார் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். அயனாவரம் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களும், தேவையில்லாத அழைப்புகளும் வந்துள்ளதை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர், தனது மகளுக்கு 'செமஸ்டர்' தேர்வு நடந்ததால் விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். தந்தை விசாரித்த போது, 'என்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாணவியை கல்லூரி அருகில் இருந்து அழைத்து சென்றிருப்பதால் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி அவரும் புகார் அளித்தார்.
சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவிடம் விசாரித்த போது, அவர் தனது கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான நரேஷ், சுரேஷ், சீனு ஆகிய 3 பேர் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும், மேலும் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேட்டை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோர் 'ஸ்னாப் ஸாட்' மூலம் பழகி அவர்களும் என்னை இந்த தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்றும் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது பெண்ணை பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்து செல்லுதல், அனுமதியின்றி தொடுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவியின் தோழி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கில் சிக்கியவர்கள் கைதான பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை அயனாவரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மன வளர்ச்சி குன்றிய சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
கரூர்
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம், சட்டம் -ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர், உதயகுமார் மற்றும் போலீசார், கரூர் டவுன், வாங்கல், வேலாயுதம் பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமசாமி, சிதம்பரம், செந்தில்குமார், ராஜ சேகர், தமிழரசன், ரமேஷ், அஜித் குமார், ரவி, ஜோதிமுருகன், ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிட மிருந்து, 158 மதுபாட்டில்களை போலீசார் பறி முதல் செய்தனர்.