search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "76 சதவிகித பங்குகள் விற்பனை"

    • 993 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    கோவை,

    திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    நேற்று கோவை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். புறநகர் மாவட்டத்தில் பெரிய நாயக்கன் பாளையம் சப்-டிவிசன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 269 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பேரூர் சப்-டிவிசன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கருமத்தம்பட்டி சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 217 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் இருந்து 92 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்- டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 91 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புறநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 பேர் கைது செய்யப்பட்டு, 801 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல கோவை மாநகர போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், காட்டூர், இடையர்பாளையம், இருகூர்,கோவைப்புதூர், நஞ்சுண்டாபுரம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 192 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 76 பேர் கைது செய்யப்பட்டு 993 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டுள்ளது. #AirIndia #AirIndiaPrivatisation #CivilAviationMinistry
    புதுடெல்லி :

    பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

    இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் விமான போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதை தற்காலிகமாக கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முன்னர் சில விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை நிறைவேற்றிய பிறகே அடுத்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

    அதற்குள், ஒரு லாபகரமான நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்ற வேண்டும். இதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தவும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    செபி விதிமுறைகளின்படி, கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டிய நிறுவனத்தை மட்டுமே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகளை விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  #AirIndia #AirIndiaPrivatisation #CivilAviationMinistry
    மத்திய பிரதேச மாநிலத்தில் ஊர் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க தனி ஒருவனாக நின்று 76 அடி ஆழ கிணறு வெட்டிய முதியவரின் 3 ஆண்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹதுவா கிராமம். இந்த கிராமம் மத்திய பிரதேசத்தின் வறண்ட பகுதியான பண்டல்கன்ட் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

    இதனால் இந்த கிராமத்தில் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. மக்கள் குடிநீருக்காக அலைவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஊரில் பொதுக் கிணறும் இல்லை.

    2015-ம் ஆண்டு மே மாதம் இங்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அந்த ஊரை சேர்ந்த சீத்தாராம் லோடி ஊரில் கிணறு வெட்டுவது என்று முடிவு செய்தார்.

    தனி ஒரு ஆளாக நின்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவினார்கள்.

    பின்னர் இது வீண் வேலை என்று கூறி அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர். ஆனாலும், மனம் தளராத சீத்தாராம் லோடி தனியாக கிணறு தோண்டினார். தினமும் காலையில் கிணறு தோண்டும் பணியை தொடங்கி மாலை வரை அதை செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    மழை காலத்தில் அந்த கிணறு இடிந்து விழுவதும் வாடிக்கையாக இருந்தது. இவ்வாறு 3 தடவை கிணறு இடிந்து விழுந்தது. ஆனாலும், மனம் தளராத அவர் தொடர்ந்து தோண்டும் பணியில் ஈடுபட்டார்.

    இப்போது 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 76 அடிக்கு கிணற்றை தோண்டி உள்ளார். அதில் தண்ணீர் கிடைக்கிறது. சீத்தாராம் லோடிக்கு தற்போது 71 வயது ஆகிறது.

    இந்த வயதில் அவர் கிணறு தோண்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    இதுபற்றி சீத்தாராம் லோடி கூறும்போது, எனது பணியை பலரும் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தார்கள். என் குடும்பத்தினர் கூட எனக்கு உதவவில்லை. ஆனாலும், கிணறை தோண்டியே தீருவது என்பதில் உறுதியாக இருந்து பணியை முடித்துள்ளேன் என்று கூறினார்.

    ×