என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"
- போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நுழைவு வாயில்கள் திறக்கப்படும்.
- பீடி சிகரெட், குட்கா, பான் மசாலா அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களும் அனுமதிக்கப்படாது.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் உள்ளூர் மைதானம், வெளியூர் மைதானங்களில் லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது. இதில் சிஎஸ்கே அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ₨.1,500 முதல் ₨.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் தவிர மற்ற பிற மின்னணு சாதனங்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஹெல்மெட், லேப்டாப் பைகள், குடை அல்லது பிற பைகள் மைதான வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது. பொருட்களை வைக்க மைதானத்தில் லாக்கர்கள் எதுவும் இல்லை.
டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவு மற்றும் வாயிலை கவனமாக பார்த்து அந்த வாயில் வழியாக செல்ல வேண்டும். கவுண்டர் அல்லது ஆன்லைன் வாயிலாக, ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கலைவாணர் அரங்கம் பார்க்கிங் பகுதி, பொதுப்பணித்துறை பார்க்கிங் பகுதி (பி.பட்டாபிராம் கேட் அல்லது வாலாஜா சாலை), சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகளில் கார் பார்க்கிங் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளது.
மைதான வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்படாது. பீடி சிகரெட், குட்கா, பான் மசாலா அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களும் அனுமதிக்கப்படாது. அனைத்து ஸ்டாண்டிலும் இலவச குடிநீர் வசதி உள்ளது.
போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நுழைவு வாயில்கள் திறக்கப்படும். ஒருமுறை வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது. உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. வெளியில் இருந்து வரும் உணவு டெலிவரிகளுக்கும் அனுமதி இல்லை. செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி கிடையாது.
மாற்றுத் திறனாளிகளுக்காக I லோயர் ஸ்டாண்டில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு செல்வதற்கு சக்கர நாற்காலி வசதியும் உள்ளது.
- டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உளள்து. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) எதிர்கொள்கிறது. இந்த தொடரில் உள்ளூர், வெளியூர் மைதானங்கள் என மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற போட்டிகளை விட சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிஎஸ்கே அணியின் முதல் உள்ளூர் ஆட்டம், ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கிறது.
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம்.
- விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார்.
- இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சென்னை:
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை ஆர்சிபி ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
- ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் ஜடேஜா சென்னை அணியுடன் இணைந்தார்.
- அதனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி அணியுடன் இணைந்துள்ளனர்.
சென்னை :
ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர்களான மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்தடைந்தனர். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சென்னை அணிக்கு புதிதாக களமிறங்கவிருக்கும் பென் ஸ்டோக்ஸ்-க்கு மாஸ் என்ட்ரி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை சென்னை அணி நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதில் சென்னை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பென் ஸ்டோக்ஸ் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவர் நடந்து வரும் போது சென்னை 600028 படத்தில் உள்ள பாடல் பின்னணியில் ஒலிக்க பென் ஸ்டோக்ஸ் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
- சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் 2023-ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெறுகிறது. கடந்த சீசன் முதல் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் மாஸ்டர் படத்தில் விஜய் பஸ்சில் ஏறுவது போல உள்ள காட்சியில் விஜய்க்கு பதிலாக ரகானே இடம் பெற்றுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
- அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்எஸ் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
- மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோவை மும்பை அணி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
- அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
- அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது.
சென்னை:
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் கெய்ல் ஜேமிசன். அவரை ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக ஜேமிசன் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீரர் சிசந்தா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. மகலா தென் ஆப்பிரிக்க அணிக்காக நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
- டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அந்த அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த வருட ஐ.பி.எல். தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து நடப்பாண்டு ஐ.பி.எல். தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான புதிய சீருடையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னரும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்
- வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார்.
- அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் என்பவரை ரூ. 3.2 கோடியில் ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக வில் ஜாக்ஸை வாங்கியது.
ஐபிஎல் தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது தசையில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் பிரேஸ்வெல் இதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.