என் மலர்
நீங்கள் தேடியது "மாமியார் தற்கொலை"
- இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளா
- தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சுஷ்மா (35) Dell நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக முன்பு பணியாற்றி வந்தவர்.
இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தன்னைசமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மா தனது குடும்பத்தினரிடம் முன்பே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரைப் கைது செய்த போலீசார், தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி சரோஜா (வயது 60).
இன்று காலை சரோஜா தனது வீட்டில் வைத்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் காப்பாற்றுவதற்குள் சரோஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணையில் சரோஜாவுக்கும், அவரது மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும் இதில் மனவேதனை அடைந்த சரோஜா தீக்குளித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரோஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






