search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide mother in law"

    பூதப்பாண்டி அருகே மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி சரோஜா (வயது 60).

    இன்று காலை சரோஜா தனது வீட்டில் வைத்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் காப்பாற்றுவதற்குள் சரோஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணையில் சரோஜாவுக்கும், அவரது மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும் இதில் மனவேதனை அடைந்த சரோஜா தீக்குளித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சரோஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகனுடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மாமியார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அந்தோணி ஜெரால்டு கருணா (வயது50). இவர்களது மகன் ஜெயந்தன். அவரது மனைவி சுபாஷினி. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தனுக்கும் அவரது மனைவி சுபாஷினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது மாமியார் அந்தோணி ஜெரால்டு கருணாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 

    கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமால் அமைதியாக இருந்தார். நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×