search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ ரெயில்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம்.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. அந்த வகையில், போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும், அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் லண்டன் பாராளுமன்றத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு "கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது" வழங்கப்பட்டு இருக்கிறது.

    கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரெயில் இந்தியா நிறுவனம் தங்கம் வென்றதை அடுத்து இந்த விருதுக்கான சான்றிதழ் மற்றும் பச்சை நிற ஆப்பிள் சின்னம் ஒன்றும் கோப்பையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இன்றைய போட்டி காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி இது ஆகும்.

    இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டி முடிந்து திரும்பும் போது சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ள முடியும்.

    ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அரசினர் தோட்டம் ரெயில் நிலையம் வருவதற்கான டிக்கெட்களை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும். வார இறுதி நாட்களில் புதிய ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான். அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. இன்று சென்னையில் நடைபெற இருக்கும் முதல் குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    முன்னதாக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மெட்ரோ ரெயில் உடன் கூட்டணி அமைத்து- சேப்பாக்கத்தில் போட்டியை காண மெட்ரோ ரெயில் மூலம் வரும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி வந்தது. அந்த வகையில், இன்று நடைபெற இருக்கும் குவாலிபையர் போட்டிக்கும் சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்றைய குவாலிபையர் போட்டியை காண சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் பயணம் வழங்கப்படாது என்று தெரியவந்துள்ளது. இன்றைய போட்டியை பிசிசிஐ நடத்துவதால், சேப்பாக்கத்தில் வழங்கப்படும் டிக்கெட்களை கொண்டு ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது.

    லீக் சுற்று ஆட்டங்களை போன்றே, குவாலிபையர் போட்டிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.

     

     

    இன்று (மே23) மற்றும் நாளை (மே 24) நடைபெற இருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய, வாட்ஸ்அப் சாட்பாட்-இல் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்ய வாட்ஸ்அப்-இல் இருந்த படி 8300086000 என்ற எண்ணிற்கு Hi என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றி டிக்கெட்களை வாட்ஸ்அப் செயலியிலேயே எடுக்கலாம். இது தவிர, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது சிஎம்ஆர்எல் மொபைல் செயலி மூலமாகவும் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், சென்னை மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு பிறகு டிக்கெட் கவுண்டர்கள் இயங்காது என்பதால், பயனர்கள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம். 

    ×