என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணிராமதாஸ்"
- மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியது. குறிப்பாக கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல. சொந்தமாக கூடிய கூட்டம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.
10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன். ஆனாலும் பயனில்லை. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் சாதிவாரி மக்கள்தொகை நடத்தலாம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன.
மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் இருப்பதை நான் அறிவேன். பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் நல்ல கூட்டணி நிச்சயம் அமையும். அது இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். அதில் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார்
- தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே உள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் பிடித்திருந்த "IF YOU ARE BAD I AM YOUR DAD" என்ற வாசகம் பொருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
- கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், "பெண்கள் இல்லாமல் நாம் இல்லை. உலகமே இல்லை; பெண்களுக்கு காக்கும் சக்தி உள்ளது. பெண்கள் எல்லா வகையிலும் முன்னேற வழிகாட்டுவதற்கே இந்த மாநாடு.
கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களை விட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்.
தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பெரியகோவிலை விஞ்சிடக் கூடாது என ராஜேந்திரன் நினைத்ததே இதற்கு உதாரணம்" என்று தெரிவித்தார்.
- உடல்நலக் குறைவால் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வரவில்லை.
- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து அவர் முன்பு ஆஜர் ஆனார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. இருப்பினும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
- உடல்நலக் குறைவால் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வரவில்லை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து அவர் முன்பு ஆஜர் ஆனார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. இருப்பினும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொண்டுள்ளார்.
- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
- பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வர மாட்டார் எனத் தகவல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. ஆனாலும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
- அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
- பாமக செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி வருவதாக கூறியுள்ள நிலையில் ராமதாஸ் வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக் குறைவால் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என நீதிபதியிடம் கடிதம் தரச் சொல்லி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு கூறியுள்ளார்
- அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
- செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், "உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரவுள்ளார்" என்று தெரிவித்தார்.
- போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் நான் முதல்வன் திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப் போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு அரசின் பொறுப்பின்மை தான் காரணமாகும்.
தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற உதவி செய்யும் திட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 35,137 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 11,865 ஆக குறைந்து விட்டதாக தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான்.
2023-ஆம் ஆண்டில் திறன் பயிற்சி திட்டத்தில் சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்களில் பாதிக்கும் குறைவாக வெறும் 66,537 பேருக்கு மட்டும் தான் வேலைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 68,600 பேருக்கு வேலைகள் கிடைக்கவில்லை.
அதனால் 2024-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம் குறைந்து 36,584 ஆக வீழ்ச்சியடைந்துவிட்டது. அவர்களிலும் வெறும் 8517 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன் விளைவாகத் தான் நடப்பாண்டில் இத்திட்டத்தில் வெறும் 11,865 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களிலும் 796 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது.
புரட்சிகரமான திட்டம் என்று அரசால் கொண்டாடப்பட்டு தொடங்கப்படும் ஒரு திட்டத்தில் பயனடைவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களை விட இரண்டாம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் (74%) குறைவாகத் தான் சேர்ந்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு சேர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் தான் மூன்றாம் ஆண்டில் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். அதுமட்டுமின்றி, திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் விகிதமும் குறைந்து வருகிறது.
2023&ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 23.33% ஆகவும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 6.76% ஆகவும் குறைந்து விட்டன.
இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை. நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை. இவற்றை தமிழக அரசால் கூட மறுக்க முடியாது.
அடிப்படையில் திறன் பயிற்சி அளித்து, படித்த இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றும் திட்டங்கள் சிறப்பானவை. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையானவை. நான் முதல்வன் திட்டமும் அத்தகைய திட்டம் தான். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் நான் முதல்வன் திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக, படித்த இளைஞர்களுக்கு தையல் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பப்பட்டனர். ஆனால், அந்த நிறுவனத்தில் வெறும் 2 தையல் எந்திரங்கள் மட்டுமே இருந்ததாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளே கூறியிருக்கின்றனர்.
வெறும் 2 எந்திரங்களை வைத்துக் கொண்டு எவ்வாறு நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்? அவ்வாறு பயிற்சி அளித்தாலும் அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இதேபோல் இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளே இல்லாவிட்டாலும் அவற்றுக்கு பயிற்சிக்கான ஒப்பந்தம் வாரி வழங்கப்படுவது தான்.
திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களும் அதில் நீடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் முதல்வன் திட்டத்தின்படி பணியில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.500 என்ற விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
பணியில் சேருபவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி தான் இந்தப் பணியை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், அவர்கள் வேலையை உதறுகின்றனர்.
எந்த வகையில் பார்த்தாலும் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டம் வெற்றிகரமானதாக இல்லை. இன்றைய தேவைக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படாததும், மிகக் குறைந்த ஊதியத்தில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதும் தான் இதற்கு காரணமாகும்.
நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் சென்றிருப்பேன்.
- எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ம.க. விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது.
என்னால் தொடங்கப்பட்ட பா.ம.க. வளர்த்தது நான் தான். என் மூச்சு இருக்கும் வரை தலைவராக செயல்படுவேன். நிர்வாகிளுக்கு நான் வழங்கிய பொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. பா.ம.க. இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அருள் தொடர்ந்து மாவட்ட செயலாளராவும் செயல்படுவார். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். அந்த கட்சிக்கு நான் தலைவராக செயல்பட கூடாதா?
கருணாநிதி பாணியில் பா.ம.க.வின் தலைவராக நான் தான் இருப்பேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல்தலைவராக இருக்கட்டும். கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை. என் மனசாட்சி நீ மூச்சு இருக்கும் வரை தலைவராக இரு என கூறியது.
மனசாட்சி சொன்னதால் மூச்சு உள்ளவரை நானே தலைவராக செயல்படுவேன். எனக்கு பிறகு அவர் தானே தலைவராக இருக்க போகிறார். எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான். நான் நாகரீகமாக, நளினமாக இருக்க கற்றுக்கொண்டது கருணாநிதியிடம் தான். பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் கடந்து நாகரீகமாக நளினமாக நான் கற்று கொண்டிருக்கிறேன். இந்த கட்சியை கொண்டு வர என்னை போல் இந்தியாவிலே எந்த தலைவரும் பாடுபட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நான் பாடுபட்டு இருக்கிறேன்.
பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானலும் சென்றிருப்பேன். 4,5 பிரதமரிடம் நான் பழகியிருக்கிறேன். அரசு கட்டிலுக்கு நான் போகமாட்டேன். சுயம்புவாக இருந்து தனிமனிதனாக இந்த கட்சியை நான் உருவாக்கினேன். இப்போது எனக்கு மனசு சொல்கிறது. அதனால் தான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்புகிறேன். குடிக்கிறவனுக்கு 2 வருடம் தண்டனை என்றால் சாராயம் விக்கிறவர்களுக்கு 4 வருடம் தண்டனை தர வேண்டும்.
எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல. தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகள் செயல். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை கொச்சப்படுத்தக்கூடாது. மதுரை முருகர் பக்தர் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுவில்லை. மதுரை முருகர் பக்தர் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது.
என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்கள் தான் பதவி கொடுத்திருக்கிறேன். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. செயல்தலைவர் என்பது சிறந்த பொறுப்பு. அதனை அன்புமணி ஏற்க மறுக்கிறார். எனது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
தேர்தல் நேரத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
உங்களது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது குறித்த கேள்வி கேட்ட போது டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார்.
- 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
- 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.
தைலாபுரம்:
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.
பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.
- நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துது.
- அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமாதான நடவடிக்கையாக ராமதாஸை அன்புமணி இன்று சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசாமல் அன்புமணி அங்கிருந்து கிளம்பினார்.
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தனர்.
ராமதாஸ் அழைப்பின் பெயராலேயே சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் அக்கட்சிக்கு மட்டுமில்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பியுள்ளார். ஆனால் அன்புமணியின் வற்புறுத்தலால் தான் பாமக பாஜக கூட்டணி ஏற்பட்டது என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். பாமக - பாஜக கூட்டணி ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கூட்டணியை பொறுத்தவரை பாமகவுக்கு 3 வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று திமுக கூட்டணி இல்லையென்றால் அதிமுக கூட்டணி. இன்னொருபக்கம் விஜயின் த.வெ.க.வுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளதாலும், அக்கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதாலும், த.வெ.க. முதல்முறையாக தேர்தலை சந்திப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணியில் தான் பாமக இணையும் என்று கூறப்படுகிறது.
அன்புமணி ஆசைப்படும் பாஜகவும் ராமதாஸின் விருப்பமான அதிமுகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், அன்புமணி - ராமதாஸை சமாதானப்படுத்தி பாமகவை ஒன்றிணைக்கவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைக்கவும் தான் சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாஸை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே வரும் 8 ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வரும் நிலையில் ராமதாஸ் - ஆட்டிட்டார் குருமூர்த்தி சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.






