என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்- ராமதாஸ்
    X

    96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்- ராமதாஸ்

    • பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் சென்றிருப்பேன்.
    • எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ம.க. விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது.

    என்னால் தொடங்கப்பட்ட பா.ம.க. வளர்த்தது நான் தான். என் மூச்சு இருக்கும் வரை தலைவராக செயல்படுவேன். நிர்வாகிளுக்கு நான் வழங்கிய பொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. பா.ம.க. இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அருள் தொடர்ந்து மாவட்ட செயலாளராவும் செயல்படுவார். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். அந்த கட்சிக்கு நான் தலைவராக செயல்பட கூடாதா?

    கருணாநிதி பாணியில் பா.ம.க.வின் தலைவராக நான் தான் இருப்பேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல்தலைவராக இருக்கட்டும். கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை. என் மனசாட்சி நீ மூச்சு இருக்கும் வரை தலைவராக இரு என கூறியது.

    மனசாட்சி சொன்னதால் மூச்சு உள்ளவரை நானே தலைவராக செயல்படுவேன். எனக்கு பிறகு அவர் தானே தலைவராக இருக்க போகிறார். எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான். நான் நாகரீகமாக, நளினமாக இருக்க கற்றுக்கொண்டது கருணாநிதியிடம் தான். பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் கடந்து நாகரீகமாக நளினமாக நான் கற்று கொண்டிருக்கிறேன். இந்த கட்சியை கொண்டு வர என்னை போல் இந்தியாவிலே எந்த தலைவரும் பாடுபட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நான் பாடுபட்டு இருக்கிறேன்.

    பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானலும் சென்றிருப்பேன். 4,5 பிரதமரிடம் நான் பழகியிருக்கிறேன். அரசு கட்டிலுக்கு நான் போகமாட்டேன். சுயம்புவாக இருந்து தனிமனிதனாக இந்த கட்சியை நான் உருவாக்கினேன். இப்போது எனக்கு மனசு சொல்கிறது. அதனால் தான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்புகிறேன். குடிக்கிறவனுக்கு 2 வருடம் தண்டனை என்றால் சாராயம் விக்கிறவர்களுக்கு 4 வருடம் தண்டனை தர வேண்டும்.

    எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல. தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகள் செயல். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை கொச்சப்படுத்தக்கூடாது. மதுரை முருகர் பக்தர் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுவில்லை. மதுரை முருகர் பக்தர் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது.

    என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்கள் தான் பதவி கொடுத்திருக்கிறேன். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. செயல்தலைவர் என்பது சிறந்த பொறுப்பு. அதனை அன்புமணி ஏற்க மறுக்கிறார். எனது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.

    தேர்தல் நேரத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    உங்களது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது குறித்த கேள்வி கேட்ட போது டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார்.

    Next Story
    ×