என் மலர்
வழிபாடு
- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
- திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார்.
இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது, திருமாலின் அவதாரமான நரசிம்ம அவதாரம். அவர் உடனடியாக பக்தர்களுக்கு பலன் அளிப்பவர்.
அப்படிப்பட்ட நரசிம்மர் அருளும் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படி ஒரு உன்னதமான தலம்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோவில்.
தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், புலஸ்திய மகரிஷி தவம் இயற்றிய காரணத்தால் 'புலஸ்தியபுரம்' என்று புராணப் பெயர் பெற்றது. போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது, சம்பத்கிரி என்ற மலை.

இங்கு குபேரனுக்கு அனைத்து சம்பத்களையும் (செல்வங்களையும், பொருளையும்) நரசிம்மர் வழங்கியதால், இது 'சம்பத்கிரி' என்று பெயர் பெற்றது.
'பொருள்' நிறைந்த ஊர் என்பதாக, சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊரை 'பொருளூர்' என்று அழைத்தனர். அதுவே மருவி 'போளூர்' என்றானதாக சொல்கிறார்கள். சம்பத்கிரி மலையில் சப்தரிஷிகளும் தவம் இயற்றியதாக கூறப்படுகிறது.
சப்தகிரி மலையில் புலஸ்தியர் மற்றும் பவுலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள், திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். அந்த தவத்தின் பயனாக கோவிந்தனிடம் இருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பவுலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன.
இதையடுத்து பவுலஸ்தியர், இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையை கிரிவலம் வந்தார்.
48-ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது, அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் நரசிம்மர் விக்கிரகமும் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி கூறிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதை கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
அன்றே ஊரில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். இதையடுத்து அங்கே ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகிறது.
மலை மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஊருக்குள் ஒரு ஆலயம் எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.
பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர், உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களின் விக்கிரகத்தையும் இங்கே நிறுவியுள்ளார். மேலும் பாமா - ருக்மணி உடனான வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவினார்.
இந்த சம்பத்கிரி மலை சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கும் சன்னிதி இருக்கிறது. அதோடு நான்கு ஓய்வு மண்டபங்களும் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன.
மலை மீது ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரண் போன்று மலையைச் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்பு பலிபீடம், தீப ஸ்தம்பம், கருடாழ்வார் உள்ளனர். மின்னொளியில் மின்னும் வகையில், சங்கு, சக்கரத்துடன் திருநாமம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கருவறைக்குள் சுயம்புவாக திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக லட்சுமி தேவியின் நரசிம்மமூர்த்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவரது சன்னிதிக்கு வலது புறம் கனகவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், மலையின் கீழ் புலஸ்திய தீர்த்தமும் இருக்கின்றன. பாஹுநதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது.
இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு சுவாதி, மாத பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.
சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசியில் 10 நாள் பிரமோற்சவம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவை மலைக் கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளாகும்.
திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபட, பிரதோஷ நாட்களில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன நைவேத்தியங்களை படைத்து கிரிவலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.
சனிக்கிழமை மட்டும்...
மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
அதே நேரம் கீழே உள்ள வேணுகோபாலர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-11 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: தசமி மாலை 5.34 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: : பூசம் மறுநாள் விடியற்காலை 5.29 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் பவனி. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-அமைதி
கடகம்-தெளிவு
சிம்மம்-மாற்றம்
கன்னி-கடமை
துலாம்- கவனம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- சுகம்
மகரம்-உற்சாகம்
கும்பம்-இன்பம்
மீனம்-ஓய்வு
- இன்று அவிதவா நவமி.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-10 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி மாலை 5.30 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: புனர்பூசம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு பூசம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று அவிதவா நவமி. சுவாமிமல ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆராதனை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலையில் சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-இன்பம்
சிம்மம்-ஆசை
கன்னி-நிறைவு
துலாம்- பணிவு
விருச்சிகம்-பண்பு
தனுசு- ஒழுக்கம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-ஆதரவு
மீனம்-அன்பு
- பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும்.
- ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு...
அதுவும் பித்ருகளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தேய்பிறையில் வருகிற அஷ்டமியை சம்புகாஷ்டமி என்று கூறுவதுண்டு. இந்நாளில் பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும். இந்நாளில் பைரவரை வழிபடும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்...
* பைரவருக்கு செவ்வரளி மலர் சூட்டி நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்கேற்றி வழிபடலாம்.
* மிளகு சேர்த்த உளுந்தவடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
* முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.
* கடன் தொல்லை, தொழில் நஷ்டம் போன்றவைகளால் பாதிப்படைந்தவர்கள் பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபடமிட வேண்டும்.
* ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.
- நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்.
- சடாரி என்பது என்ன?
பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..?
அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது.
சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது வைக்கப்படுகிறது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம், தன்னுடைய சங்கு, சக்கரம் திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும் சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன ஆனால் அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து
கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன
"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்' என்றன பாதுகைகள்.
பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும். சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு, பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.
உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் அலங்கரிப்பவர்கள்தான் ஆனால், பாதங்களை அல்ல.
மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன.
கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பகவானிடம் முறையிட காத்து நின்றன. பகவானும் வந்தார்.

அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. 'இங்கே நடந்ததை நான் அறிவேன் என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.
அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.
- இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது.
- பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.
ஒரு ரிஷி எமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்.! எம தர்மன் அவரது ஆசைக்கு செவிசாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திர குப்தனை அனுப்புகிறேன் என்றார். பின் சித்திரக்குப்தனை எமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார். சித்திரக்குப்தன் எமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.

எமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி. நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார்.
தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். 'இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்? நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?
சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனை திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.
இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.
'இது என்ன கற்பாறை?*
'ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம். இப்படி வளர்ந்து நிற்கிறது!"
"சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?"
பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்த பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான்.
அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்த கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது.
விதி முடியும் நேரத்தில் அவன் எமலோகத்துக்கு வரும்போது இந்த பாறையை அவன் உண்ண வேண்டும் இதுதான் அவனுக்கான தண்டனை" என்றான் சித்ரகுப்தன்.
அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள், முனிவருக்கு அந்த சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம்.
ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்த சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல. சாட்சாத் அவரேதான்.
தன் தவறை உணர்ந்தார். எமதர்மனிடம் போனார் நடந்ததைச் சொன்னார்.
எமதர்மா நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்கு தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும், எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்த பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்த கல்லை தின்று செரித்துவிடுகிறேனே!
முனிவரின் கோரிக்கையை எமதர்மன் ஏற்றான். கல்லை சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். 'சிலா' என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர். சிலாதர் ஆனார்.
எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.
ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்கு கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.
சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது. அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.
- மத்யாஷ்டமி.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-9 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி மாலை 5.55 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: திருவாதிரை மறுநாள் விடியற்காலை 4.11மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மத்யாஷ்டமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூடப்புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-இன்பம்
சிம்மம்-ஆசை
கன்னி-நிறைவு
துலாம்- பணிவு
விருச்சிகம்-பண்பு
தனுசு- ஒழுக்கம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-ஆதரவு
மீனம்-அன்பு
- புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
- கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை ‘கன்னியா மாதம்’ என்றும் அழைப்பர்.
தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால், அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதமாகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் 'கோவிந்தா' என்னும் திருநாமமே.

புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன், கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை 'கன்னியா மாதம்' என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு, துளசி தீர்த்தம் வைத்து 'கோவிந்தா.. கோவிந்தா..' என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடியும்.

வழிபாட்டு முறைகள்
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்காரம் செய்யுங்கள். உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்கிரகமாகவோ இருந்தால், அதனை நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்கரிப்பது உத்தமம்.
பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கில் ஏதாவது ஒன்றை ஏற்றவும். பின்பு பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்த உணவை, படைக்க வேண்டும். அந்த படையலில் மாவிளக்கு, துளசி தீர்த்தம் இருப்பது அவசியம்.
பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். மா விளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்கலாம்.
வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். பெருமாளின் உருவத்திற்கு, கற்பூர தீபாராதனை மற்றும் தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து நைவேத்திய பிரசாதத்தையும் அனைவருக்கும் வழங்கலாம். இவ்வாறு வழிபடுவதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.மேலும் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைத்து, நிறைவான வாழ்க்கை அமையும்.
- 25-ந்தேதி தேய்பிறை அஷ்டமி
- 30-ந்தேதி பிரதோஷம்.
24- ந்தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல் .
* திருவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (புதன்)
* தேய்பிறை அஷ்டமி, சிவாலயங்களில் பைரவர் சிறப்பு அபிஷேகம்.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன் னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் .
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்,
29-ந்தேதி (ஞாயிறு)
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந்தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
* கீழ்நோக்கு நாள்.
- உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள்.
- திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது.
கோவில் தோற்றம்
உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள். அவ்வகையில் உலகில் உள்ள திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது, உன்னதபுரம் என்னும் மெலட்டூர். வெட்டாற்றின் கரையில் உள்ள இத்திருத்தலம் 'சப்த சாகர ஷேத்திரம்' என்றும் போற்றப்படுகிறது.

அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஏழு சக்திகளாக உருவெடுத்தாள். அந்த ஏழு சக்திகளே 'சப்த மாதாக்கள்' ஆவர். அந்த சப்தமாதர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, வரங்கள் பல பெற்றுள்ளனர். ஆதலால் இத்தலம் ஆதியில் 'சிவசக்தி பீட'மாகத் திகழ்ந்துள்ளது.
தேவலோக தச்சனான மயனால், உன்னத புரீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நகரின் எல்லைகளில் உள்ள பிற தெய்வங்களையும் தேச தச்சனே நிறுவியதாக சொல்கிறார்கள். இதனால் மேலான ஊர் என்னும் பொருளில் 'மேலத்தூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'மெலட்டூர்' என்று ஆனதாக கூறப்படுகிறது.

தல வரலாறு
ஈசனிடம் வரம் பெற்ற கோமுகாசுரன், பிரம்மனது வேதச் சுவடிகளை பறித்துக்கொண்டு, கடலில் சென்று ஒளிந்துகொண்டான். திருமால் மச்ச அவதாரம் எடுத்து, கோமுகாசுரனிடம் சண்டையிட்டு வேதங்களை மீட்டார்.
மிகப்பெரிய மீன் வடிவில் இருந்த திருமாலால், கடல் கலங்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு துன்பம் நேர்ந்தது. எனவே சிவபெருமான் மீனவராக வந்து, ஏழு கடலையும் மறைக்கும் படியான வலையை வீசி, மீன் வடிவில் இருந்த திருமாலை பிடித்தார்.
இதையடுத்து அவரின் வலிமை குறைந்தது. அப்போது ஈசன் உருவாக்கிய திருத்தலமே, உன்னதபுரம் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
மகாவிஷ்ணு ஒரு சமயம் கயிலை சென்றபோது, அவரை நந்தியம்பெருமான் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர் நந்தியை கதாயுதத்தால் தாக்கினார். இதனால் கோபம் கொண்ட நந்தி, மகாவிஷ்ணுவை சாதாரண மனிதனாக பிறக்கும்படியும், அவரது வாகனமான கருடனை சாதாரண பறவையாக பிறக்கும்படியும் சபித்தார்.
கருட பகவான், உன்னதபுரம் திருத்தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, இத்தலபெருமானை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றார். பின் தனது பெயரில் கருட தீர்த்தம் உண்டாக்கியும் வழிபாடு செய்தார்.
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, பெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.

ஆலயத்தின் எதிரே சிவகங்கை தீர்த்தம் பிரமாண்டமாக அமையப்பெற்றுள்ளது. முதலில் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. அதையடுத்து கிழக்கு முகம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நேராக கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதை அடுத்து முகமண்டபம், இடை மண்டபம் இருக்கின்றன. தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளது. கருவறையிலே சுயம்பு நாதனாக எழில் மிகு கோலத்தில் உன்னதபுரீஸ்வரர் அருள்காட்சி தருகிறார்.
முக மண்டபத்தின் வடக்கு திசையில் தென் திசை பார்த்தபடி, சிவப்பிரியாம்பிகா தேவி அருள்பாலிக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அவர் அருகே தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
திருக்கருகாவூரில் இருந்து திட்டை குருஸ்தலம் செல்லும் வழியில், சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மெலட்டூர் திருத்தலம்.
- 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
- சக்தியானவள் ‘அட்சர சுந்தரி’ என்றும் போற்றப்படுகிறாள்.
படைப்பு கடவுள் என்று அறியப்படும் பிரம்மதேவன், தன்னுடைய படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க நான்கு பேரை தோற்றுவித்தார். சனத்குமாரர், சனகர், சதானந்தர், சனாதனர் ஆகிய அந்த நால்வரும், பிரம்மபுத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நால்வரும் தோன்றிய உடனேயே ஆன்மிக அறிவில் ஆழ்ந்து, நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர்.

இவர்களில் முதல்வரான சனத்குமாரர், ஒரு முறை சதச்ருங்க மலை மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த ஈசன், ரிஷபாரூடராக அங்கே தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானம் காரணமாக சனத்குமாரர், கண் விழித்துப் பார்க்கவில்லை.
இதனால் அவரை எழுப்ப சிவபெருமான் தன் கையில் இருந்த டமருகத்தை (உடுக்கை) வேகமாக அசைத்தார். அந்த உடுக்கையில் இருந்து 'டம்.. டம்..' என்று எழுந்த நாதமே, சமஸ்கிருதத்தின் 'அ முதல் க்ஷ' வரையான 51 எழுத்துக்கள் ஆகின என்றும், மேலும் அந்த எழுத்துக்கள் பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம் போல தெறித்து விழுந்தன என்றும் ஆன்மிக சான்றோர்கள் நம்புகின்றனர்.

இந்த 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனால் சக்தியானவள், 'அட்சர சுந்தரி' என்றும் போற்றப்படுகிறாள். 51 அட்சரங்களுக்கான தேவிகளின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* அமிர்தா தேவி
* ஆகர்ஷணீ தேவி
* இந்திராணி தேவி
* ஈஷிணி தேவி
* உமா தேவி
* ஊர்த்வகேஷி தேவி
* ருத்திதாயீ தேவி
* ரூகார தேவி
* லுகார தேவி
* லூகார தேவி
* ஏகபாத தேவி
* ஐஷ்வர்யாத்மிகா தேவி
* ஓம்கார தேவி
* ஔஷதா தேவி
* அம்பிகா தேவி
* அக்ஷரா தேவி
* காராத்ரி தேவி
* கண்டிதா தேவி
* காயத்ரி தேவி
* கண்டாக்ர்ஷிணி தேவி
* டார்ணா தேவி
* சாமுண்டா தேவி
* சயார்தா தேவி
* ஜயா தேவி
* ஜங்காரிணி தேவி
* ஞானரூபா தேவி
* டங்கஹஸ்தா தேவி
* டங்காரிணி தேவி
* டாமரி தேவி
* டங்காரிணீ தேவி
* ணார்ணீ தேவி
* தமஸ்யா தேவி
* ஸ்தாண்வீ தேவி
* தாக்ஷாயணி தேவி
* தத்யா தேவி
* நார்யா தேவி
* பார்வதி தேவி
* பட்காரிணி தேவி
* பந்தினி தேவி
* பத்ரகாளி தேவி
* மகாமாயா தேவி
* யக்ஷஸ்வினி தேவி
* ரக்தா தேவி
* லம்போஷ்டி தேவி
* வரதா தேவி
* திரு தேவி
* ஷண்டா தேவி
* சரஸ்வதி தேவி
* ஹம்ஸவதி தேவி
* பந்தமோகினி தேவி
* க்ஷமா தேவி
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி இரவு 6.49 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.12 மணி வரை. பிறகு திருவாதிரை.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. திருநாறையூர் ஸ்ரீசித்தாதீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருக்கோளூர் ஸ்ரீவைத்த மாநிதிப் பெருமாள் குமுதவல்லி கோளூர் வள்ளி தாயார் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-கடமை
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-லாபம்
கன்னி-வரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- கவனம்
மகரம்-கடமை
கும்பம்-பெருமை
மீனம்-சாந்தம்






