என் மலர்
நீங்கள் தேடியது "சடாரி சேவை"
- பக்தி மூலம் அஞ்ஞானம் நீங்கி, இறை அருள் கிடைப்பதைக் குறிக்கும்.
- பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது, பக்தி வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும்.
சடாரி, கிரீடம் போன்ற வடிவில் இருந்தாலும், அதன் மேல் பகவானின் பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், அந்த சடாரியை நம் தலையில் வைக்கும் போது, நாம் பகவானின் திருவடிகளை நேரடியாக நம் தலையில் தாங்குவதாகக் கருதப்படும்.
ஆசிர்வாதம் மற்றும் அருள் பெறுதல்: இறை தரிசனத்திற்குப் பிறகு, சடாரி வைப்பதன் மூலம் பக்தர்கள் பகவானின் ஆசியையும் அருளையும் நேரடியாகப் பெறுவதாகக் நம்பப்படுகிறது.
அஞ்ஞானத்தை நீக்குதல்: 'சடம்' என்றால் அஞ்ஞானம் அல்லது உலகப் பந்தங்கள் என்று பொருள். குழந்தைகள் பிறந்ததும் இவ்வுலகப் பந்தங்களில் பிணைப்பதே சடாரி வைப்பதன் ஒரு தத்துவமாகும். இது, பக்தி மூலம் அஞ்ஞானம் நீங்கி, இறை அருள் கிடைப்பதைக் குறிக்கும்.
சடகோபர் பக்தியைப் பிரதிபலித்தல்: நாலாயிரதிவ்யபிரபந்தத்தை அருளிய நம்மாழ்வார் 'சடகோபன்' என்று அழைக்கப்படுகிறார். சடாரியை தலையில் வைப்பது, சடகோபரின் பக்தியை நினைவுகூறும் விதமாகவும், அவர் பகவானின் பாதங்களைக் கண்டடைந்ததைப் போல பக்தர்களும் அவரது அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகிறது.
பக்தி அனுபவத்தின் ஒரு பகுதி: பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது, பக்தி வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். இது பக்தர்களுக்கு ஒரு புனிதமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.
- நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்.
- சடாரி என்பது என்ன?
பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..?
அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது.
சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது வைக்கப்படுகிறது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம், தன்னுடைய சங்கு, சக்கரம் திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும் சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன ஆனால் அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து
கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன
"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்' என்றன பாதுகைகள்.
பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும். சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு, பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.
உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் அலங்கரிப்பவர்கள்தான் ஆனால், பாதங்களை அல்ல.
மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன.
கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பகவானிடம் முறையிட காத்து நின்றன. பகவானும் வந்தார்.

அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. 'இங்கே நடந்ததை நான் அறிவேன் என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.
அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.






