என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
    • ஆடி மாதம் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.

    ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால் நீங்களும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயத்துக்கு தவறாமல் செல்வீர்கள். அதைப் பார்க்கலாம்...

    தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்க்கு சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.

    மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.

    ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.

    ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.

    தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

    தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும்.

    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார். கடகம் சந்திரன் வீடு பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால் ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

    வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.

    அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

    அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

    அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

    அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

    ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்ப தால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
    • பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே அமைந்திருக்கிறது, பூதநாதர் குழு கோவில்கள். இவை கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமய ஆலயங்களாகும். இவை இரண்டு துணைக் குழுக்களாக அமைந்துள்ளன.

    அதில் ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மை குழு என்று அழைக்கப்படுகிறது. இது 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.

    மற்றொன்று வட பூமிநாதர் குழு அல்லது மல்லிகார்ஜூன குழு என்று அழைக்கப்படுகிறது. இவை 11 முதல் 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இதன் பெரும்பாலான கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    இந்த பூதநாதர் கோவிலானது, பழமையான இந்து கோவில்களில் ஒன்று. இந்த ஆலயம் ஒரு மைய மண்டபத்துடன், எண்கோணம், கனசதுரம், வட்டம் ஆகிய அமைப்புகளில் நான்கு விதமாக கட்டிட அமைப்புகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.

    மைய மண்டபமானது, சிவலிங்கம் வீற்றிருக்கும் சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பு இருக்கிறது. மலையின் அடிவாரத்தில், நீர் நிலைக்குள் இருப்பது போல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது, பார்ப்பவர்களின் கண்களை கவர்வதாக இருக்கிறது.

    கருவறையின் உச்சியில் (விமானம்) திராவிட கட்டிடக் கலை பாணியிலான 'திரிதால' (மூன்று தளங்கள்) கட்டுமானம் கொண்டிருக்கிறது. கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்ப அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணியில் செவ்வக வடிவ தூண்களும், கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது தளமானது, கீழ் தளத்தை விட சற்று சிறியதாக உள்ளது. மூன்றாவது தளம், இரண்டாவது தளத்தின் பாதி அளவில் காணப்படுகிறது. உச்சியில் குட்டையான சிகரத்துடன் காட்சி தருகிறது.

    கோவிலின் அடிவாரத்தின் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் யமுனாதேவி தன் வாகனமான ஆமையின் மீது வீற்றிருக்கிறார். தவிர விநாயகர், மகிஷாசுரமர்த்தினி உருவங்கள் காணப்படுகின்றன.

    பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிற்றாலயம் உள்ளது. இது முதலில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தக் கோவிலை, லிங்காயத்து மரபினர் கைப்பற்றினர். அவர்கள்தான் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தைக் கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவியுள்ளனர்.

    முதன்மை பூதநாதர் கோவிலுக்கு அருகாமையிலேயே மல்லிகார்ஜூனா குழு கோவில்கள் உள்ளன. இவை ஏரியின் வடக்கு பகுதியில் உள்ளன. தெற்கு வாசலைக் கொண்ட இந்த ஆலயம், பாம்சனா நாகர பாணியில் கட்டப்பட்டவை. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷ்ணு வழிபாட்டிற்குரிய கோவிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    பின் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில், பின்வந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். கோவிலில் எட்டு தூண்களுடன் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகிய அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் சுவரில் விஷ்ணு, சிவன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.

    • கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை.
    • மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை. இதன் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    சாளுக்கியர்கள் 6-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மந்திர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு மந்திர்கள், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

     1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்த காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன.

    கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாணவட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர்.

    இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக்காலிட்டது போல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    • ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
    • ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது பெருமை வாய்ந்தது.

    ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது, பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை 'சயினி ஏகாதசி' என்பார்கள்.

    'பத்ம ஏகாதசி', 'தேவபோதி ஏகாதசி', 'விஷ்ணு சயன ஏகாதசி', 'தாயினி ஏகாதசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    விஷ்ணு பகவான் தன்னுடைய உலக கடமைகளை நிறைவேற்றிய பிறகு, பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இது வாகும். அந்த நான்கு மாதங்களும் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

    ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும். அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது.

    இந்த நாளில் 'கோ பத்ம விரதம்' இருப்பது மிகவும் விசேஷமானது. கோ என்னும் பசு வழிபாடு புராணங்களில் மிகச் சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து பல்வேறு பொருட்களும், உயிரினங்களும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றில் கேட்டதை கொடுக்கும் 'காமதேனு' பசுவும் அடங்கும். இந்த பசுவிற்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    சிவபெருமான், நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

    அதன்படி இந்திரனுக்கு 'சுசிலை' என்ற பசுவும், எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும், வருணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும், குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள்புரிகின்றனர்.

    ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, 'கோ பத்ம விரத'த்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள், அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கொட்டிலில் (பசு கொட்டில் இல்லாதவர்கள், பூஜை அறையில் செய்யலாம்) பச்சரிசி மாவால், தாமரைப் பூ போன்று வரைந்து கோலம் போட்டு விட்டு, பின்னர் சிறிய சிறிய கோலங்களாக தாமரைப் பூ இதழ்களுடன் 33 கோலங்கள் போட வேண்டும்.

    இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும், தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம். இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கியதும், ஓம் கேசவா நமஹா, ஓம் நாராயணா நமஹா, ஓம் மாதவா நமஹா, ஓம் கோவிந்தா நமஹா, ஓம் விஷ்ணு நமஹா, ஓம் மதுசூதனா நமஹா, ஓம் திரிவிக்கிரமா நமஹா, ஓம் வாமனா நமஹா, ஓம் ஸ்ரீதரா நமஹா, ஓம் ஹ்ருஷிகேஷா நமஹா, ஓம் பத்மநாபா நமஹா, ஓம் தாமோதரா நமஹா என்ற 12 நாமங்களை சொல்லி இறைவனை ஆவாகனம் செய்ய வேண்டும்.

    பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 33 முறை இறைவனை சுற்றி வர வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, 33 வெல்லத்தில் செய்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    பூஜையின் முடிவில் அந்த நைவேத்திய பிரசாதத்தை 33 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம். இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

    இந்த நாளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகமிக சிறப்பானது. பசுவை முதலில் பூஜித்து விட்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் துன்பமான நிகழ்வுகள் நடக்காது. அதோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மரண பயம் விலகும்.

    • 19-ந்தேதி பிரதோஷம்.
    • 21-ந்தேதி பவுர்ணமி.

    16-ந்தேதி (செவ்வாய்)

    * அங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல் அலங்காரம்.

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வியாழன்)

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வெள்ளி)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (சனி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவணி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை.

    * வடமதுரை சவுந்திர ராஜர் குதிரை வாகனத் தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (ஞாயிறு)

    * பவுர்ணமி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (திங்கள்)

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தீர்த்தவாரி. இரவு சப்தாவர்ணம்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-32 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 6.38 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 1 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக் கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-சாதனை

    கன்னி-பண்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- யோகம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-நற்சொல்

    மீனம்-கடமை

    • மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன.
    • ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் 'காட்டுவீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காட்டுவீர ஆஞ்சநேயரின் திருக்கோயில் இல்லை. இந்த பகுதி குன்றுகளாகவும் விளைநிலங்களாகவுமே இருந்துள்ளது. இந்த விளைநிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூசித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே சென்றது.


    ஆஞ்சநேயரின் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கொண்டு மக்கள் வழிபட்டு வருவதை கண்ட வெங்கட்ராம செட்டியார், அங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என முடிவு செய்தார். திருக்கோயில் கட்டுவதற்கு தன்விளைநிலத்தில் இருந்து எவ்வளவு அளவு இடம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஊர்மக்களிடம் கூறியுள்ளார். பிறகு இதற்கென்று அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது, திருக்கோயிலானது எழிலுற எழுந்தது.

    மூலவர் ஸ்ரீஅருள்மிகு ஆஞ்சநேயர் ஒற்றைப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. இந்த சிற்பத்தை செதுக்கியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும் வரலாறு செவி வழி செய்தியாக ஒரு தகவலைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் மார்கத பிராமணர் என ஒருவர் இருந்தாராம். இவர் அனுமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இதனால் இவர் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பாறைகளின் மீதும் மலைகளின் மீதும் அனுமன் சிலைகளை செதுக்கி வந்தாராம். இதனால் அனுமனின் மீது பலருக்கும் பக்தி வரும் என்று எண்ணி உள்ளார். அதனால் இதுவும் அவருடைய கைவண்ணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஏனென்றால் அவர் வடிவமைத்த அனுமன் சிற்பங்கள் அனைத்திலும், அனுமன் வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் இருக்கும். இங்கும் அவ்வாறே உள்ளது. ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.


    ராம நாமம் எழுகிறதோ அவ்விடத்தில் நிச்சயம் அனுமன் இருப்பார். இங்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வலது பக்கம் பொன்மலை எனும் சிறுமலையொன்றுள்ளது. அங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அனுமன் வலது புறம் திரும்பி தலை தூக்கி மலைமீதுள்ள பெருமாளைத் துதித்தபடி நின்றிருக்கிறார். இதனை காணக் கண் கோடி வேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

    மூலவருக்கு இடது புறம் பெரிய உருண்டை பாறையின் மீது சிறிய நந்தீஸ்வரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை வளர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எல்லா அனுமன் கோயில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம் எனலாம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள்ளாக நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எனப்படும் சேலம் பைபாஸை ஒட்டிய இடதுபுற சாலையில் அமைந்துள்ள தேவசமுத்திரத்தில் கலையம்சத்துடன் வளர்ந்து நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சிநேயர் திருக்கோயில்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம்.
    • ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம்.

    குரோதி ஆண்டு ஆனி-31 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி மாலை 5.32 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: சுவாதி இரவு 11.21 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமாவதாரம் ஸ்ரீ அனுமார் வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு. மதுரை சொக்கலிங்க புதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-திறமை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிந்தனை

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- ஜெயம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-கடமை

    மீனம்-பணிவு

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம்.
    • வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 2.13 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.53 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருவாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-விருத்தி

    சிம்மம்-துணிவு

    கன்னி-போட்டி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- இன்பம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-பணிவு

    மீனம்-உற்சாகம்

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ×