என் மலர்
கோவில்கள்
சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
புராண வரலாறு :
அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.
இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.
மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.
ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.
இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.
சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.
பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
சரபேஸ்வரர் :
தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.
அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.
வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.
இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.
எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.
தொன்மைச் சிறப்பு:
இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.
சரபேஸ்வரர் வழிபாடு :
எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.
இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.
புராண வரலாறு :
அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.
இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.
மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.
ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.
இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.
சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.
பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
சரபேஸ்வரர் :
தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.
அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.
வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.
இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.
எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.
தொன்மைச் சிறப்பு:
இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.
சரபேஸ்வரர் வழிபாடு :
எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.
இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியே விமானங்கள் உண்டு.
மொத்தம் ஏழு விமானங்களும், சிறிய மற்றும் பெரிதாக நான்கு கோபுரங்களும் உள்ளன. கோவிலின் ராஜகோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டதாய் 76 அடி உயரம் கொண்டது. இக்கோவிலில் மொத்தம் ஐந்து தீர்த்த குளங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் வலப்புறம் திருமங்கை ஆழ்வார் சன்னதி உள்ளது.
கோவிலின் உள்ளே ஆழ்வார் உடையவர் கூரத்தாழ்வார், மணவாள மாமுனிவர், ஸ்ரீதேசிகன், அனுமார் சேனை முதலியார் தாமோதர பிள்ளையார், பொன்னியம்மன், யோக நரசிம்மர், கருடன் சன்னதிகளும், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், சவுரிராஜன், அரங்கநாதர்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சன்னதிகளும் உள்ளன. மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. ராஜகோபுர வாசலில் நின்று நோக்கினாலும் கருவறையிலும் உள்ள எம்பெருமாள் ஒரு மலைமேல் எழுந்தருளி இருப்பதாக மணிமாடக் கோவில் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த வகையில் தரிசனம் தருவார்.
இந்த கோவிலில் மூலவர் சீனிவாச பெருமாள் வலது பக்கம் தனி நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் என்ற திருப்பெயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வஞ்சுளசெடியின் அடியில் இவரை மேதாவி முனிவர் கண்டெடுத்தபடியால் வஞ்சுளவல்லி என்ற திருப்பெயரால் இவரை அழைக்கிறார்கள். கருவரை நான்குபுறமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைப்பு சிற்ப சிலையாக காணப்படுகின்றனர்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.
சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் முன்பு மேதாவி என்ற மாமுனிவர், வாவிதடஞ்சூழ் மணிமுத்தாற்றின் தென் கரையில் அமர்ந்து தவம் செய்தார் முனிவருக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசன் மருமகனாக வேண்டும் என்ற ஆசை.. ஒருநாள் முனிவர் மணிமுத்தாறில் நீராடுகையில் மற்றொரு பக்கம் நரசிங்கப்பெருமாளுடன் கூடிய ஒரு சக்கரபாணி சுவாமி அவர் கையில் கிடைத்ததால் முனிவர் வியந்து நின்றார். அப்போது முனிவரே... வியந்து நிற்க வேண்டாம். தங்கள் கை புகுந்த எம்பெருமான் சக்கரபாணி நரசிங்கப் பெருமாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் நினைத்த எண்ணம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கு எழுந்தது. அசரீரியின் சொற்கேட்ட முனிவர் வியந்து தமது எண்ணம் கை கூட விரும்பி மகிழ்ச்சியுடன் இக்கோவிலின் உள்ளே அந்த சக்கரபாணி நரசிம்ம பெருமாளை பிரதிஷ்டை செய்து முறைப்படி வழிபட்டு வந்தார்.
வஞ்சி மரத்தின் அடியில் ஒரு ஒளிப் பிழம்பான அழகி இவளை தவம்செய்து அடைந்தது எனலாம்படியான தெய்வத்திருமகள் ஒருவர் தோழிகளுடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார். முனிவர் அந்த தெய்வங்களை கண்டதும் தனது தவம் பலித்தது என்று மகிழ்ந்தார். அச்சிறுமியின் அருகே சென்று குழந்தாய், நீ யாரம்மா? உன்னைப்பெற்ற பெருந்தவத்தினர் யார்? உனது திருப்பெயர் என்ன? நீ இருக்கும் இடம் யாது? என வினவினார். அதற்கு அந்த குழந்தை முனிவரை நோக்கி, என் தந்தையையும், தாயையும் என் பெயரையும், ஊரையும் பிற ஒன்றையும் யானறியேன். எல்லாம் எனக்கு தாங்களே என்று எண்ணியே இத்தலம் அடைந்தேன். என்னை மகளாக ஏற்று அருள் புரிவீர் என வேண்டி நின்றாள்.
இதனையடுத்து அந்த சிறுமியை ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்று முனிவர் வளர்த்து வந்தார். வஞ்சி மரத்தடியில் தோன்றிய திருமகளை வஞ்சுளவல்லி என பெயரிட்டு அழைத்து வந்தார். இறைவன் மேதாவி முனிவரை நோக்கி முனிவரே... தங்களது மகளை எனக்கு திருமணம் செய்வித்து மாமனாராக வேண்டும் என்றார். இஷ்டசித்தி ஏற்பட்டதை நினைத்து பெரிதும் மகிழ்ந்தார். எம்பெருமான் தன் நிலையையும் எளிமையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து முனிவரும் அப்பெருமானைப் போற்றினார். எந்தாய் அடியேன் நின்பால் சில வரங்கள் பெற வேண்டி நிற்கிறேன். அருள்புரிய வேண்டும்.
அடியேனுக்கு இன்று திருவஞ்சுளவள்ளியுடன் கூடி தரிசனம் தந்தது போல் இத்தலத்தில் இனியும் பின்னர் யாவரும் தேவரீரையும் வஞ்சுளவல்லியையும் ஏக சிம்மாசனத்தில் சேவித்து இம்மை மறுமைப் பயனை பெற அவர்களுக்கும் தரிசனம் தந்தருள வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மை சுதந்திரமும் தருவதுடன் அவர் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தேவரீரை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும். இந்த வரங்களை தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதன்படி இறைவன், முனிவர் கேட்ட வரங்களை அருளினார்.
கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்
கோவில் பட்டாச்சாரியார் கோபி கூறுகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் உடையவர் திருநட்சத்திர விழா, வைகாசியில் வசந்த திருவிழா, ஆடி மாதத்தில் சுதர்சன ஹோமம், பவித்ரோட்சவம், ஆவணி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, ஸ்ரீ வேங்கடமுடையான் லட்சார்ச்சனை, தேசிகர் உற்சவம், ஐப்பசி மாதத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை சொக்கப்பனை மற்றும் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு.
மார்கழி மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், சுவாதி நட்சத்திர நாளில் கருட பகவானுக்கு லட்சார்ச்சனை, கணு உற்சவம் அன்று தீர்த்தவாரி, மாசி மாதத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவிழா, மாதந்தோறும் சுவாதி அன்று சுவாதி தீபம் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ப.ரமேஷ், செயல் அலுவலர் ஆ. ஜீவானந்தம் மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் ஏழு விமானங்களும், சிறிய மற்றும் பெரிதாக நான்கு கோபுரங்களும் உள்ளன. கோவிலின் ராஜகோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டதாய் 76 அடி உயரம் கொண்டது. இக்கோவிலில் மொத்தம் ஐந்து தீர்த்த குளங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் வலப்புறம் திருமங்கை ஆழ்வார் சன்னதி உள்ளது.
கோவிலின் உள்ளே ஆழ்வார் உடையவர் கூரத்தாழ்வார், மணவாள மாமுனிவர், ஸ்ரீதேசிகன், அனுமார் சேனை முதலியார் தாமோதர பிள்ளையார், பொன்னியம்மன், யோக நரசிம்மர், கருடன் சன்னதிகளும், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், சவுரிராஜன், அரங்கநாதர்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சன்னதிகளும் உள்ளன. மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. ராஜகோபுர வாசலில் நின்று நோக்கினாலும் கருவறையிலும் உள்ள எம்பெருமாள் ஒரு மலைமேல் எழுந்தருளி இருப்பதாக மணிமாடக் கோவில் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த வகையில் தரிசனம் தருவார்.
இந்த கோவிலில் மூலவர் சீனிவாச பெருமாள் வலது பக்கம் தனி நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் என்ற திருப்பெயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வஞ்சுளசெடியின் அடியில் இவரை மேதாவி முனிவர் கண்டெடுத்தபடியால் வஞ்சுளவல்லி என்ற திருப்பெயரால் இவரை அழைக்கிறார்கள். கருவரை நான்குபுறமும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைப்பு சிற்ப சிலையாக காணப்படுகின்றனர்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.
சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் முன்பு மேதாவி என்ற மாமுனிவர், வாவிதடஞ்சூழ் மணிமுத்தாற்றின் தென் கரையில் அமர்ந்து தவம் செய்தார் முனிவருக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசன் மருமகனாக வேண்டும் என்ற ஆசை.. ஒருநாள் முனிவர் மணிமுத்தாறில் நீராடுகையில் மற்றொரு பக்கம் நரசிங்கப்பெருமாளுடன் கூடிய ஒரு சக்கரபாணி சுவாமி அவர் கையில் கிடைத்ததால் முனிவர் வியந்து நின்றார். அப்போது முனிவரே... வியந்து நிற்க வேண்டாம். தங்கள் கை புகுந்த எம்பெருமான் சக்கரபாணி நரசிங்கப் பெருமாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் நினைத்த எண்ணம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கு எழுந்தது. அசரீரியின் சொற்கேட்ட முனிவர் வியந்து தமது எண்ணம் கை கூட விரும்பி மகிழ்ச்சியுடன் இக்கோவிலின் உள்ளே அந்த சக்கரபாணி நரசிம்ம பெருமாளை பிரதிஷ்டை செய்து முறைப்படி வழிபட்டு வந்தார்.
வஞ்சி மரத்தின் அடியில் ஒரு ஒளிப் பிழம்பான அழகி இவளை தவம்செய்து அடைந்தது எனலாம்படியான தெய்வத்திருமகள் ஒருவர் தோழிகளுடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தார். முனிவர் அந்த தெய்வங்களை கண்டதும் தனது தவம் பலித்தது என்று மகிழ்ந்தார். அச்சிறுமியின் அருகே சென்று குழந்தாய், நீ யாரம்மா? உன்னைப்பெற்ற பெருந்தவத்தினர் யார்? உனது திருப்பெயர் என்ன? நீ இருக்கும் இடம் யாது? என வினவினார். அதற்கு அந்த குழந்தை முனிவரை நோக்கி, என் தந்தையையும், தாயையும் என் பெயரையும், ஊரையும் பிற ஒன்றையும் யானறியேன். எல்லாம் எனக்கு தாங்களே என்று எண்ணியே இத்தலம் அடைந்தேன். என்னை மகளாக ஏற்று அருள் புரிவீர் என வேண்டி நின்றாள்.
இதனையடுத்து அந்த சிறுமியை ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்று முனிவர் வளர்த்து வந்தார். வஞ்சி மரத்தடியில் தோன்றிய திருமகளை வஞ்சுளவல்லி என பெயரிட்டு அழைத்து வந்தார். இறைவன் மேதாவி முனிவரை நோக்கி முனிவரே... தங்களது மகளை எனக்கு திருமணம் செய்வித்து மாமனாராக வேண்டும் என்றார். இஷ்டசித்தி ஏற்பட்டதை நினைத்து பெரிதும் மகிழ்ந்தார். எம்பெருமான் தன் நிலையையும் எளிமையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து முனிவரும் அப்பெருமானைப் போற்றினார். எந்தாய் அடியேன் நின்பால் சில வரங்கள் பெற வேண்டி நிற்கிறேன். அருள்புரிய வேண்டும்.
அடியேனுக்கு இன்று திருவஞ்சுளவள்ளியுடன் கூடி தரிசனம் தந்தது போல் இத்தலத்தில் இனியும் பின்னர் யாவரும் தேவரீரையும் வஞ்சுளவல்லியையும் ஏக சிம்மாசனத்தில் சேவித்து இம்மை மறுமைப் பயனை பெற அவர்களுக்கும் தரிசனம் தந்தருள வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மை சுதந்திரமும் தருவதுடன் அவர் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தேவரீரை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும். இந்த வரங்களை தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதன்படி இறைவன், முனிவர் கேட்ட வரங்களை அருளினார்.
கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்
கோவில் பட்டாச்சாரியார் கோபி கூறுகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் உடையவர் திருநட்சத்திர விழா, வைகாசியில் வசந்த திருவிழா, ஆடி மாதத்தில் சுதர்சன ஹோமம், பவித்ரோட்சவம், ஆவணி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, ஸ்ரீ வேங்கடமுடையான் லட்சார்ச்சனை, தேசிகர் உற்சவம், ஐப்பசி மாதத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை சொக்கப்பனை மற்றும் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு.
மார்கழி மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், சுவாதி நட்சத்திர நாளில் கருட பகவானுக்கு லட்சார்ச்சனை, கணு உற்சவம் அன்று தீர்த்தவாரி, மாசி மாதத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவிழா, மாதந்தோறும் சுவாதி அன்று சுவாதி தீபம் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ப.ரமேஷ், செயல் அலுவலர் ஆ. ஜீவானந்தம் மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம்.
இறைவன் பெயர்- புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர் - சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.
திருவிளையாடல்: திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
எப்படிப் போவது
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்புவனம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623611
இறைவி பெயர் - சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.
திருவிளையாடல்: திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
எப்படிப் போவது
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்புவனம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623611
திருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் - திருவாலம்பொழில்
இறைவன் பெயர் - ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர் - ஞானாம்பிகை
பதிகம் - திருநாவுக்கரசர் - 1
இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படிப் போவது
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில்
திருவாலம் பொழில் அஞ்சல்
திருப்பந்துருத்தி - S.O.
(வழி) திருக்கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613 103
இறைவன் பெயர் - ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர் - ஞானாம்பிகை
பதிகம் - திருநாவுக்கரசர் - 1
இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படிப் போவது
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில்
திருவாலம் பொழில் அஞ்சல்
திருப்பந்துருத்தி - S.O.
(வழி) திருக்கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613 103
சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன்.
சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன். பண்ணாரி என்ற இந்த இடத்தில் குடிகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களை கைத்தாங்கி காப்பாற்றும் மாரி அம்மனே, பண்ணாரி அம்மன் அல்லது பண்ணாரி மாரியம்மன் என்ற பெயர்கள் கொண்டு வீற்றிருக்கிறார். சுற்றிலும் அடர்ந்த காடாக இருக்கும் பண்ணாரியில் எப்போதும் யானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் எந்த காட்டு விலங்காலும் தனது பக்தர்களுக்கு தீங்கு நேராமல் காத்து வரும் அன்னையின் அருளே, பண்ணாரியின் பெருமை.
ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய தலமாக பெயர் பெற்று விளங்குகிறது பண்ணாரி மாரியம்மன் கோவில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாய் தோன்றி, இன்று மக்கள் மனதில் குடியேறி இருக்கும் பண்ணாரி அம்மனின் அருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
பண்ணாரி அருகே உள்ள காட்டு ஆறு தோரணப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்டாற்றில் எப்போதும் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கும். அதுமட்டுமின்றி இந்த பகுதி மிகவும் அமைதி குடிகொள்ளும் பகுதியாகவும் இருந்து வந்தது. இதனால் பண்ணாரியின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை மேய்க்கும் பகுதியாக இந்த இடத்தை தேர்ந்து எடுத்து வைத்திருந்தனர்.
அப்படி மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் தோரணபள்ளத்தில் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். மாடுகள் ஒருபுறம் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, காட்டாற்றின் மறுகரையில் புலிகள் தண்ணீர் குடிக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், பசுக்களை கண்ட புலிகள் அவற்றை துரத்துவதோ, புலிகளை கண்ட பசுக்கள் மிரண்டு ஓடுவதோ இல்லை என்ற அளவுக்கு அமைதி குடிகொண்டு இருந்தது. இதனால் கிராம விவசாயிகள் காட்டுப்பகுதியாக இருந்தாலும் பண்ணாரி பகுதியினை மாட்டு தொழுவங்கள் போடும் பகுதியாக பயன்படுத்தினார்கள். மாடுகளை கவனிக்க வேலையாட்கள் இருந்தனர்.
அவர்கள் பசுக்களை பகல் பொழுதில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதும், மாலையில் தொழுவத்தில் அடைத்து பாதுகாப்பதுமாக இருந்தனர். கன்று ஈன்ற பசுக்களில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று அக்கம்பக்கத்து கிராமங்களில் விற்றும் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த பகுதி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்ல குறுக்கு வழியாக இருந்ததால் வியாபாரிகள் நடைபயணமாகவும், வண்டிகள் கட்டிக்கொண்டும் பண்ணாரி வழியாக செல்வது உண்டு.
இப்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், பண்ணாரி பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தொழுவத்தில் காராம் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த பசு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. இதனால் அதிகம் பால் கறந்து விற்கலாம் என்று அந்த பசுவை கவனித்து வந்த வேலைக்காரர் நினைத்தார். ஆனால் அவர் பால் கறக்க அருகில் சென்று விட்டால் அவருக்கு பிடி கொடுத்ததே இல்லை. மற்ற நேரங்களில் எல்லாம் சாதுவாக இருக்கும் காராம்பசு பால் கறக்க சென்றால் மட்டும் அவரது கைக்கு பிடிபடாமல் சென்று விடும்.
கன்றுக்குட்டிக்கும் அது பால் கொடுப்பதில்லை என்பதை அவர் பார்த்து வியந்து போனார். இப்படி ஒரு பசுமாடு இருக்க முடியுமா என்று யோசனையில் இருந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி பசுவிடம் பால் குடிக்க ஓடிச்சென்றது. ஆனால், காராம் பசு, கன்றுக்குட்டியிடம் பிடி கொடுக்காமல் வேறு திசையில் ஓடியது. அதைப்பார்த்த வேலையாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார். வேகமாக ஓடிய பசு ஒரு இடத்தில் நின்றது. அதுவரை ஓடிய எந்த களைப்பும் இன்றி அது மிகவும் தெம்பாக அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்த அவருக்கு இன்னும் ஆச்சரியம். எங்கேயோ காட்டுக்குள் ஓடி காட்டு விலங்குகளிடம் பசு சிக்கிவிடுமோ என்று பயந்த அவருக்கு பசு ஒரே இடத்தில் அமைதியாக நின்றதால் பிடித்து விடலாம் என்று அவரது மனமும் அமைதியானது.
திடீரென்று அவரது மனம் அமைதியானது. தெய்வீக தென்றல் அந்த பகுதியில் வீசுவதை உணர்ந்தார். அவரது பார்வை பசுவின் மீதே இருந்தது. பசு அங்கிருந்த ஒரு வேங்கை மரத்தின் அடியில் சென்றது. அங்கு காணாம்புற்கள் ஓங்கி வளர்ந்திருந்தது. அதனுள் பசு நடந்து சென்றது. பசு புல் சாப்பிடத்தான் வந்திருக்கும் என்று நினைத்த வேலையாள் அமைதியாக நடந்து அருகில் வந்தார். ஆனால் என்ன ஆச்சரியம், பால்கறக்க பிடி கொடுக்காத காராம்பசு அங்கு ஒரு இடத்தில் தன்னிச்சையாக பாலை சொரிந்து கொண்டிருந்தது. பால் முழுவதும் முடிந்த பின்னர் எதுவும் நடக்காதது போன்று பசு தொழுவத்தை வந்து சேர்ந்தது.
தினமும் பால் கறக்கும் நேரத்தில் பசு காட்டுக்குள் செல்வதும் அங்கு தனிமையான இடத்தில் பால் சொரிந்து கொண்டு தொழுவத்துக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இதனை வேலையாளும் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதே நேரம் பசுமாட்டு பால் என்ன ஆனது என்று கேட்கும் முதலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்த அவர், உடனடியாக சென்று முதலாளியிடம் விவரத்தை கூறினார். ஆனால் அவருக்கு இது புதிய கதையாக இருந்தது. மேலும், வேலையாள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
அவருக்கு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டியது இருந்தது. எனவே வேலையாள் கூறிய இடத்துக்கு தனது அக்கம்பக்கத்தினரையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவர்கள் வேலையாள் சொன்ன இடத்தில் மறைந்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பசு காணாம்புற்கள் வளர்ந்து இருந்த இடத்துக்கு வந்து வழக்கம்போல பாலை சொரிந்து விட்டு புறப்பட்டது. ஆச்சரியம் நீங்காத முதலாளியும் உடன் வந்தவர்களும் அங்கே வந்து வளர்ந்து இருந்த காணாம்புற்களை அகற்றினார்கள். வேங்கை மரத்தின் அடிப்பகுதியில் பசு பால்சொரிந்த இடத்தில் புற்கள் அகற்றப்பட்டபோது பாலின் ஈரம் காயவில்லை. அங்கே ஒரு சுயம்புலிங்கம் தென்பட்டது. லிங்கத்தில் பசு சுரந்த பால் வழிந்தோடியது. அவர்கள் அதைப்பார்த்து வியந்து நிற்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று அருள்வாக்கு கூறினார்.
'நான்... கேரளாவில் உள்ள வண்ணார்காட்டில் இருந்து, மைசூர் செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக வந்தேன். இந்த இடத்தின் இயற்கை சூழல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனிமேல் நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்வேன்...' என்று அவர் அருள் வாக்கு உரைத்தார். அதைக்கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அம்மா தன்னை வெளிப்படுத்தவே பசுவின் மூலம் விளையாடல் செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தனர். பண்ணாரியில் வெளிப்பட்ட காரணத்தால் இந்த மாரியம்மனை பண்ணாரி மாரியம்மன் என்று அழைத்தனர். சுயம்பு அம்மனுக்கு காணாம்புற்களால் கூரை வேய்ந்து ஒரு சிறிய கோவிலை உருவாக்கினர் அந்த கிராம மக்கள். அன்று முதல் அம்மனுக்கு வழிபாடு தொடங்கியது. கிராம மக்கள் தவறாமல் வந்து அம்மனை வழிபட்டனர். குண்டம் திருவிழா நடத்தப்பட்டது. வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த பண்ணாரி அம்மன் புகழ் எங்கும் பரவியது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பண்ணாரி அம்மன் அருள் ஒளி பரவியது. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தெய்வமாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார். கேரளாவில் இருந்தும் பண்ணாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய தலமாக பெயர் பெற்று விளங்குகிறது பண்ணாரி மாரியம்மன் கோவில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாய் தோன்றி, இன்று மக்கள் மனதில் குடியேறி இருக்கும் பண்ணாரி அம்மனின் அருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
பண்ணாரி அருகே உள்ள காட்டு ஆறு தோரணப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்டாற்றில் எப்போதும் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கும். அதுமட்டுமின்றி இந்த பகுதி மிகவும் அமைதி குடிகொள்ளும் பகுதியாகவும் இருந்து வந்தது. இதனால் பண்ணாரியின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை மேய்க்கும் பகுதியாக இந்த இடத்தை தேர்ந்து எடுத்து வைத்திருந்தனர்.
அப்படி மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் தோரணபள்ளத்தில் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். மாடுகள் ஒருபுறம் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, காட்டாற்றின் மறுகரையில் புலிகள் தண்ணீர் குடிக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், பசுக்களை கண்ட புலிகள் அவற்றை துரத்துவதோ, புலிகளை கண்ட பசுக்கள் மிரண்டு ஓடுவதோ இல்லை என்ற அளவுக்கு அமைதி குடிகொண்டு இருந்தது. இதனால் கிராம விவசாயிகள் காட்டுப்பகுதியாக இருந்தாலும் பண்ணாரி பகுதியினை மாட்டு தொழுவங்கள் போடும் பகுதியாக பயன்படுத்தினார்கள். மாடுகளை கவனிக்க வேலையாட்கள் இருந்தனர்.
அவர்கள் பசுக்களை பகல் பொழுதில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதும், மாலையில் தொழுவத்தில் அடைத்து பாதுகாப்பதுமாக இருந்தனர். கன்று ஈன்ற பசுக்களில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று அக்கம்பக்கத்து கிராமங்களில் விற்றும் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த பகுதி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்ல குறுக்கு வழியாக இருந்ததால் வியாபாரிகள் நடைபயணமாகவும், வண்டிகள் கட்டிக்கொண்டும் பண்ணாரி வழியாக செல்வது உண்டு.
இப்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், பண்ணாரி பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தொழுவத்தில் காராம் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த பசு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. இதனால் அதிகம் பால் கறந்து விற்கலாம் என்று அந்த பசுவை கவனித்து வந்த வேலைக்காரர் நினைத்தார். ஆனால் அவர் பால் கறக்க அருகில் சென்று விட்டால் அவருக்கு பிடி கொடுத்ததே இல்லை. மற்ற நேரங்களில் எல்லாம் சாதுவாக இருக்கும் காராம்பசு பால் கறக்க சென்றால் மட்டும் அவரது கைக்கு பிடிபடாமல் சென்று விடும்.
கன்றுக்குட்டிக்கும் அது பால் கொடுப்பதில்லை என்பதை அவர் பார்த்து வியந்து போனார். இப்படி ஒரு பசுமாடு இருக்க முடியுமா என்று யோசனையில் இருந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி பசுவிடம் பால் குடிக்க ஓடிச்சென்றது. ஆனால், காராம் பசு, கன்றுக்குட்டியிடம் பிடி கொடுக்காமல் வேறு திசையில் ஓடியது. அதைப்பார்த்த வேலையாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார். வேகமாக ஓடிய பசு ஒரு இடத்தில் நின்றது. அதுவரை ஓடிய எந்த களைப்பும் இன்றி அது மிகவும் தெம்பாக அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்த அவருக்கு இன்னும் ஆச்சரியம். எங்கேயோ காட்டுக்குள் ஓடி காட்டு விலங்குகளிடம் பசு சிக்கிவிடுமோ என்று பயந்த அவருக்கு பசு ஒரே இடத்தில் அமைதியாக நின்றதால் பிடித்து விடலாம் என்று அவரது மனமும் அமைதியானது.
திடீரென்று அவரது மனம் அமைதியானது. தெய்வீக தென்றல் அந்த பகுதியில் வீசுவதை உணர்ந்தார். அவரது பார்வை பசுவின் மீதே இருந்தது. பசு அங்கிருந்த ஒரு வேங்கை மரத்தின் அடியில் சென்றது. அங்கு காணாம்புற்கள் ஓங்கி வளர்ந்திருந்தது. அதனுள் பசு நடந்து சென்றது. பசு புல் சாப்பிடத்தான் வந்திருக்கும் என்று நினைத்த வேலையாள் அமைதியாக நடந்து அருகில் வந்தார். ஆனால் என்ன ஆச்சரியம், பால்கறக்க பிடி கொடுக்காத காராம்பசு அங்கு ஒரு இடத்தில் தன்னிச்சையாக பாலை சொரிந்து கொண்டிருந்தது. பால் முழுவதும் முடிந்த பின்னர் எதுவும் நடக்காதது போன்று பசு தொழுவத்தை வந்து சேர்ந்தது.
தினமும் பால் கறக்கும் நேரத்தில் பசு காட்டுக்குள் செல்வதும் அங்கு தனிமையான இடத்தில் பால் சொரிந்து கொண்டு தொழுவத்துக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இதனை வேலையாளும் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதே நேரம் பசுமாட்டு பால் என்ன ஆனது என்று கேட்கும் முதலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்த அவர், உடனடியாக சென்று முதலாளியிடம் விவரத்தை கூறினார். ஆனால் அவருக்கு இது புதிய கதையாக இருந்தது. மேலும், வேலையாள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
அவருக்கு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டியது இருந்தது. எனவே வேலையாள் கூறிய இடத்துக்கு தனது அக்கம்பக்கத்தினரையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவர்கள் வேலையாள் சொன்ன இடத்தில் மறைந்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பசு காணாம்புற்கள் வளர்ந்து இருந்த இடத்துக்கு வந்து வழக்கம்போல பாலை சொரிந்து விட்டு புறப்பட்டது. ஆச்சரியம் நீங்காத முதலாளியும் உடன் வந்தவர்களும் அங்கே வந்து வளர்ந்து இருந்த காணாம்புற்களை அகற்றினார்கள். வேங்கை மரத்தின் அடிப்பகுதியில் பசு பால்சொரிந்த இடத்தில் புற்கள் அகற்றப்பட்டபோது பாலின் ஈரம் காயவில்லை. அங்கே ஒரு சுயம்புலிங்கம் தென்பட்டது. லிங்கத்தில் பசு சுரந்த பால் வழிந்தோடியது. அவர்கள் அதைப்பார்த்து வியந்து நிற்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று அருள்வாக்கு கூறினார்.
'நான்... கேரளாவில் உள்ள வண்ணார்காட்டில் இருந்து, மைசூர் செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக வந்தேன். இந்த இடத்தின் இயற்கை சூழல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனிமேல் நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்வேன்...' என்று அவர் அருள் வாக்கு உரைத்தார். அதைக்கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அம்மா தன்னை வெளிப்படுத்தவே பசுவின் மூலம் விளையாடல் செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தனர். பண்ணாரியில் வெளிப்பட்ட காரணத்தால் இந்த மாரியம்மனை பண்ணாரி மாரியம்மன் என்று அழைத்தனர். சுயம்பு அம்மனுக்கு காணாம்புற்களால் கூரை வேய்ந்து ஒரு சிறிய கோவிலை உருவாக்கினர் அந்த கிராம மக்கள். அன்று முதல் அம்மனுக்கு வழிபாடு தொடங்கியது. கிராம மக்கள் தவறாமல் வந்து அம்மனை வழிபட்டனர். குண்டம் திருவிழா நடத்தப்பட்டது. வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த பண்ணாரி அம்மன் புகழ் எங்கும் பரவியது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பண்ணாரி அம்மன் அருள் ஒளி பரவியது. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தெய்வமாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார். கேரளாவில் இருந்தும் பண்ணாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன.
அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து மிகப்பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்தக் கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர், பைரவர், லிங்கோத்பவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் நேர்த்திக்கடனை சொல்லி வழிபட்டு வருவதும், அதை நிறைவேற்றித்தரும் தெய்வமாக அம்மன் வீற்றிருக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மிளகு, உப்பு காணிக்கை
உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.
மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர் களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன.
அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து மிகப்பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்தக் கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர், பைரவர், லிங்கோத்பவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் நேர்த்திக்கடனை சொல்லி வழிபட்டு வருவதும், அதை நிறைவேற்றித்தரும் தெய்வமாக அம்மன் வீற்றிருக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மிளகு, உப்பு காணிக்கை
உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.
மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர் களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள்.
மூலவர் - ஏகவுரி அம்மன்
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - வல்லம்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி,”ஏ கவுரி. சாந்தம் கொள்” (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோவில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு “ஏகவுரியம்மன்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு “வல்லத்துக்காளி” என்றும் பெயர்கள் ஏற்பட்டது.
தீயது அழியும்; நல்லது நடக்கும்:
அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இது, அசுரனை அழித்த கோப வடிவமாகும். இது, பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும். இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. இது, நல்லதை அருளும் சாந்தமான நிலை ஆகும். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. பாதத்தின் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
எலுமிச்சை சாறு பிரசாதம்:
வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தைச் செல்வம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மங்கலம் தரும் மஞ்சள்:
அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.
காக்கும் தெய்வம்:
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல்நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேட பூசை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டிஹோமம் நடக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று நடக்கும் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் வராகி, பிரத்யங்கிரா, சுப்பிரமணியர், காவல் தெய்வங்கள் சாலியங்காத்தான், லாடசன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, ஏகாம்பரம், பட்டவராயர் மற்றும் சிவலிங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.
திருவிழா:
ஆடி கடைசி வெள்ளி, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பவுர்ணமி குழந்தைச் செல்வம் கிடைக்கவும், களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தால் திருமணத்தடை ஏற்பட்ட பெண்கள் வழிபடும் தலம் இது. நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோவில்
வல்லம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94435 86453, 98437 36037 (மாற்றங்களுக்குட்பட்டவை)
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - வல்லம்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி,”ஏ கவுரி. சாந்தம் கொள்” (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோவில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு “ஏகவுரியம்மன்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு “வல்லத்துக்காளி” என்றும் பெயர்கள் ஏற்பட்டது.
தீயது அழியும்; நல்லது நடக்கும்:
அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இது, அசுரனை அழித்த கோப வடிவமாகும். இது, பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும். இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. இது, நல்லதை அருளும் சாந்தமான நிலை ஆகும். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. பாதத்தின் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
எலுமிச்சை சாறு பிரசாதம்:
வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தைச் செல்வம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மங்கலம் தரும் மஞ்சள்:
அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.
காக்கும் தெய்வம்:
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல்நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேட பூசை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டிஹோமம் நடக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று நடக்கும் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் வராகி, பிரத்யங்கிரா, சுப்பிரமணியர், காவல் தெய்வங்கள் சாலியங்காத்தான், லாடசன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, ஏகாம்பரம், பட்டவராயர் மற்றும் சிவலிங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.
திருவிழா:
ஆடி கடைசி வெள்ளி, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பவுர்ணமி குழந்தைச் செல்வம் கிடைக்கவும், களத்திர தோடம், காலசர்ப்ப தோடத்தால் திருமணத்தடை ஏற்பட்ட பெண்கள் வழிபடும் தலம் இது. நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோவில்
வல்லம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94435 86453, 98437 36037 (மாற்றங்களுக்குட்பட்டவை)
சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் ‘திருமழப்பாடி’ என்று மருவியதாக சொல்கிறார்கள்.
சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
தல வரலாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.
அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.
இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
அமைவிடம்
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
திருமழப்பாடி ஆலய சிறப்பு
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
தல வரலாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.
அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.
இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
அமைவிடம்
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
திருமழப்பாடி ஆலய சிறப்பு
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
மூலவர் – முருகன்
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – இராமநாதபுரம்
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக கோவில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
கோவிலின் உள்ளே “சாயா” என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. சனிபகவானின் தாயார் பெயர் சாயா. இந்த மரத்தை சாயாதேவியின் அம்சமாக இப்பகுதி மக்கள் பூஜை செய்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை, தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சனி பகவான் துன்பங்களை குறைப்பதாக ஐதீகம். இந்த மரம் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை
வேண்டுகோள்:
சொத்துக்காக சண்டையிட்டு, கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்குவந்து வழிபட்டால் சமாதானமாக போகவும், இருவரும் வாழவும் வழி பிறக்கிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவில்,
இராமநாதபுரம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – இராமநாதபுரம்
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக கோவில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
கோவிலின் உள்ளே “சாயா” என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. சனிபகவானின் தாயார் பெயர் சாயா. இந்த மரத்தை சாயாதேவியின் அம்சமாக இப்பகுதி மக்கள் பூஜை செய்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை, தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சனி பகவான் துன்பங்களை குறைப்பதாக ஐதீகம். இந்த மரம் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை
வேண்டுகோள்:
சொத்துக்காக சண்டையிட்டு, கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்குவந்து வழிபட்டால் சமாதானமாக போகவும், இருவரும் வாழவும் வழி பிறக்கிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவில்,
இராமநாதபுரம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் 5-ம் நாளில் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்ட பேரண்ட பட்சி (ஓருடல் இரண்டு தலைகள் கொண்ட பறவை) வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருள்கிறார். இந்த வாகனங்கள் வேறு எந்த ஊரிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. திருவிழாவின் நிறைவாக தேரோட்டம் நடக்கிறது. இதில் 80 ஆண்டுகளாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேரினை வடம் பிடித்து நிலைக்கு சேர்ப்பது இந்த ஊரில் மட்டுமே காண முடியும்.
ஒற்றுமைக்கு சான்று
18 நாட்கள் திருவிழா முடிந்து தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி என்கின்ற திருவிழாவும் கலை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு மாதம் ஊரெங்கும் கோலாகலம் தான்.
இந்த 30 நாட்கள் திருவிழாவை பல்வேறு சாதி அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை ஊழியர் சங்கங்கள் பன்னெடுங்காலமாக உபயமாக ஏற்று நடத்தி வருவது மிகச் சிறந்த நல்லிணக்கத்திற்கும், ஊரின் ஒற்றுமைக்கும் சான்றாக அமைகிறது.
4 யுகம் கண்ட பெருமாள்
ஒவ்வொரு நாளும் எந்த வாகனத்தில் ராஜகோபாலன் வருகிறாரோ அதனை கோவிலின் 4 வீதிகளிலும் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் தனி மேடை அமைத்து வர்ண பொடிகள் கொண்டு கோலமாக வரைந்து ராஜகோபாலனை வரவேற்பதை காண கண் கோடி வேண்டும்.
ராஜகோபாலன் 4 யுகங்களிலும் சேவை சாதித்தமையால் சதுர் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கோவிலில் எழுந்தருளியிருக்கும் செங்கமலத்தாயார் நம் பண்பாட்டு மரபிற்கு ஏற்ப படிதாண்டா பத்தினி என்று அழைக்கப்படுகின்றார். காரணம் தாயார் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை.
ஆடிப்பூரம் திருவிழா
தாயாருக்கான ஆடிப்பூரம் திருவிழா 10 நாட்கள் கோயில் வளாகத்திற்குளேயே நடைபெறுகிறது. தாயாருக்கான தேர் கோவிலுக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள தாயார் பிரகாரத்தில் வலம் வருகிறது. இந்த தேரினையும் பள்ளி மாணவர்களே இழுத்து நிலைக்கு சேர்ப்பர்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆண்டில் 300 நாட்கள் உற்சவங்கள் தான். எனவே திருவரங்கத்தை போலவே மன்னார்குடி ராஜகோபாலனும் நித்ய உற்சவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
மன்னார்குடியில் நீர்நிலைகள் ஏராளம். சுமார் 96 குளங்கள் இருந்ததாக வரலாறு. கோவில் பாதி குளம் பாதி என்கின்ற பழமொழிக்கேற்ப நகரில் 23 ஏக்கர் பரப்பளவுடைய பிரம்மாண்டமான ‘ஹரித்ராநதி’ என்கின்ற தெப்பக்குளம் மிகவும் புகழ் பெற்றது.
32 திருக்கோலங்கள்
ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்த பெருமாள் துவாரகைக்கு இணையாக 32 திருக்கோலங்களில் காட்சி அருளினார். ஜலக்ரீடை செய்து களைப்புற்ற பெருமாளுக்கு மன்னார்குடி சிவன்கோவிலில் அருள்பாலிக்கும் ஜெயங்கொண்டநாதர் திரட்டுப்பால் செய்து அனுப்பியதாக ஐதீகம். அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
திருவிழாவின் 5-ம் நாளில் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்ட பேரண்ட பட்சி (ஓருடல் இரண்டு தலைகள் கொண்ட பறவை) வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருள்கிறார். இந்த வாகனங்கள் வேறு எந்த ஊரிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. திருவிழாவின் நிறைவாக தேரோட்டம் நடக்கிறது. இதில் 80 ஆண்டுகளாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேரினை வடம் பிடித்து நிலைக்கு சேர்ப்பது இந்த ஊரில் மட்டுமே காண முடியும்.
ஒற்றுமைக்கு சான்று
18 நாட்கள் திருவிழா முடிந்து தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி என்கின்ற திருவிழாவும் கலை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு மாதம் ஊரெங்கும் கோலாகலம் தான்.
இந்த 30 நாட்கள் திருவிழாவை பல்வேறு சாதி அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை ஊழியர் சங்கங்கள் பன்னெடுங்காலமாக உபயமாக ஏற்று நடத்தி வருவது மிகச் சிறந்த நல்லிணக்கத்திற்கும், ஊரின் ஒற்றுமைக்கும் சான்றாக அமைகிறது.
4 யுகம் கண்ட பெருமாள்
ஒவ்வொரு நாளும் எந்த வாகனத்தில் ராஜகோபாலன் வருகிறாரோ அதனை கோவிலின் 4 வீதிகளிலும் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் தனி மேடை அமைத்து வர்ண பொடிகள் கொண்டு கோலமாக வரைந்து ராஜகோபாலனை வரவேற்பதை காண கண் கோடி வேண்டும்.
ராஜகோபாலன் 4 யுகங்களிலும் சேவை சாதித்தமையால் சதுர் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கோவிலில் எழுந்தருளியிருக்கும் செங்கமலத்தாயார் நம் பண்பாட்டு மரபிற்கு ஏற்ப படிதாண்டா பத்தினி என்று அழைக்கப்படுகின்றார். காரணம் தாயார் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை.
ஆடிப்பூரம் திருவிழா
தாயாருக்கான ஆடிப்பூரம் திருவிழா 10 நாட்கள் கோயில் வளாகத்திற்குளேயே நடைபெறுகிறது. தாயாருக்கான தேர் கோவிலுக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள தாயார் பிரகாரத்தில் வலம் வருகிறது. இந்த தேரினையும் பள்ளி மாணவர்களே இழுத்து நிலைக்கு சேர்ப்பர்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆண்டில் 300 நாட்கள் உற்சவங்கள் தான். எனவே திருவரங்கத்தை போலவே மன்னார்குடி ராஜகோபாலனும் நித்ய உற்சவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
மன்னார்குடியில் நீர்நிலைகள் ஏராளம். சுமார் 96 குளங்கள் இருந்ததாக வரலாறு. கோவில் பாதி குளம் பாதி என்கின்ற பழமொழிக்கேற்ப நகரில் 23 ஏக்கர் பரப்பளவுடைய பிரம்மாண்டமான ‘ஹரித்ராநதி’ என்கின்ற தெப்பக்குளம் மிகவும் புகழ் பெற்றது.
32 திருக்கோலங்கள்
ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்த பெருமாள் துவாரகைக்கு இணையாக 32 திருக்கோலங்களில் காட்சி அருளினார். ஜலக்ரீடை செய்து களைப்புற்ற பெருமாளுக்கு மன்னார்குடி சிவன்கோவிலில் அருள்பாலிக்கும் ஜெயங்கொண்டநாதர் திரட்டுப்பால் செய்து அனுப்பியதாக ஐதீகம். அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.
இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.
ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).
அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார்.
மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.
அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார்.
சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம்.
தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.
கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.
பிராது கொடுக்கும் வழிபாடு :
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.
இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.
ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).
அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார்.
மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.
அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார்.
சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம்.
தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.
கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.
பிராது கொடுக்கும் வழிபாடு :
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.
பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார்.
இறை வழிபாட்டில் குல தெய்வ வழிபாட்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும், ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, ராமேஸ்வரம் என்று புனிதப் பயணம் சென்று வந்தாலும், தனது குல தெய்வத்தை வணங்கி வழிபட்டால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், சவால்களையும் ஒருவரால் தாண்டி வர முடியும்.
கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.
இந்தக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே, ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தவறாமல் சென்றுவரும் கோவில் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.
ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில், அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அனுசூயா தேவி, கற்பில் சிறந்தவள். அவளது கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர், அத்ரி மகிரிஷி இல்லாத நேரத்தில் துறவிகள் போல வேடமணிந்து ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க வந்தபோது, துறவிகள் மூவரும் திடுக்கிட்டது போல் எழுந்துவிட்டனர்.
“நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” என அனுசூயா அழுதபடியே அவர்களிடம் கேட்டாள்.
அதற்கு துறவிகள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், உண்ண வேண்டுமென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என பதில் கூறினர். தொடர்ந்து “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பறிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.
இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும், ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் முனிவர்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவது” என அத்துறவிகளின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.
என்ன ஆச்சரியம்? ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும், அத்ரி மகரிஷி ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அனுசூயாதேவி, அவர்களுக்கு சுயவுருவை மீண்டும் அளித்தாள்.
அப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம்? அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என உரக்கக் கூவினார். அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை’ என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.
இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலது கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்து உள்ளார்.
இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம் மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா இக்கோவிலில் வெகு பிரசித்தம்.
அமைவிடம்
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.
கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.
இந்தக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே, ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தவறாமல் சென்றுவரும் கோவில் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.
ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில், அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அனுசூயா தேவி, கற்பில் சிறந்தவள். அவளது கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர், அத்ரி மகிரிஷி இல்லாத நேரத்தில் துறவிகள் போல வேடமணிந்து ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க வந்தபோது, துறவிகள் மூவரும் திடுக்கிட்டது போல் எழுந்துவிட்டனர்.
“நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” என அனுசூயா அழுதபடியே அவர்களிடம் கேட்டாள்.
அதற்கு துறவிகள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், உண்ண வேண்டுமென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என பதில் கூறினர். தொடர்ந்து “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பறிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.
இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும், ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் முனிவர்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவது” என அத்துறவிகளின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.
என்ன ஆச்சரியம்? ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும், அத்ரி மகரிஷி ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அனுசூயாதேவி, அவர்களுக்கு சுயவுருவை மீண்டும் அளித்தாள்.
அப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம்? அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என உரக்கக் கூவினார். அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை’ என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.
இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலது கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்து உள்ளார்.
இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம் மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா இக்கோவிலில் வெகு பிரசித்தம்.
அமைவிடம்
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.






