என் மலர்
கோவில்கள்
சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில்.
பழங்கால சோழ வளநாட்டின் காவிரியின் தென்கரை தலங்களில் தலப் புராண வரலாறும், தேவார பாடல்களும் பெற்ற சிறப்பும் சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் உள்ள ஊர் தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள இறைவன் உமாமகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலப் பெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொண்டு திருமண கோலத்தில் விளங்குவதால் இவரை கல்யாண சுந்தரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து இறைவனை பூமிதேவி, பூஜித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும், கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் பூமி தேவியால் ஏற்படுத்தி நீராடப்பெற்ற பூமி தீர்த்தமும், பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தமும், விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஞான கூபம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தத்தில் நீராடுவோர் குஷ்டநோயும், பிற பாவங்களும் நீங்கி நலம் பெறுவர் என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் அரச மரமாகும்.
உமாமகேஸ்வர பெருமானை தேவர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமி தேவிக்கு அசுர பயம் போக்கி அருள் செய்ததும், சந்திரகுலமன்னன் புரூரவசுவின் குஷ்டநோய் போக்கி அருள் செய்ததும், கவுதம முனிவருக்கு ஆனந்த தாண்டவ காட்சி அளித்து அருளியதும் இத்தல பெருமானின் அற்புதங்களாகும்.சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிபட்டதால் கோனேரிராஜபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு.
திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூஜித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் பூமிதேவி, துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால், வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார்.
திருமாலை வணங்கிய பூமி தேவியை ஆசீர்வதித்து அவளது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ, காவிரியின் கரையில் உள்ள அரசு வனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அசுர பயம் நிரந்தரமாக நீங்க பெறுவாய் என ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே பூமிதேவி, காவிரிக்கரையில் உள்ள அரச வனத்தின் கண் அரச மரத்தின் கீழ் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவ்விடத்தில் கோவில் எடுப்பித்து சிவாகம முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள்.
பூமி தேவியின் பூஜையை கண்டு உணர்ந்த பெருமான், அவருக்கு காட்சி தந்து அவரது அசுர பயத்தை போக்கி நிலைபெறும் பேரளித்தார். பூமிதேவி வழிபட்டதால் இத்தலம் பூமிசுரம் எனவும் பெயர் விளங்கியது. பூமி தேவியால் நிர்மாணிக்கப் பெற்ற தீர்த்தமே பூமி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தலப் பெருமானை வைகாசி மாதத்தில் பூமி தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வழிபட்டால் அசுர பயம் நீங்கும். பல நன்மைகளும் பெற்று இன்புறலாம் என தல புராணம் கூறுகிறது.
கவுதம முனிவரும், மூவாயிர முனிவர்களும், சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு தரிசிக்க பேரார்வம் கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையில் உள்ள அரசவனத்தில் சிவபெருமானை நோக்கி பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் கடும் தவம் சித்தி பெற்றது. சிவபெருமான் அவர்களது தவத்திற்கு இரங்கி உமாதேவியுடன் தோன்றி காட்சி அளித்தார்.
அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த கவுதமமுனிவர், சிவபெருமானை நோக்கி பெருமானே! நாங்கள், உமது ஆனந்த தாண்டவத்தை காணவே தவம் புரிந்தோம். எமக்கு அதனை காட்டியருளுக என வேண்டினார் அதற்கு சிவபெருமான், முனிவர்களே உங்கள் எண்ணம் ஈடேறும். கவலைப்படாதீர். யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்த தாண்டவ காட்சியை காட்டி அருளுவோம். அப்போது நீங்களும் கண்டு தரிசிக்கலாம் எனக்கூறி மறைந்தார்.
அதன்படியே பூமி தேவிக்கு ஆனந்த தாண்டவ காட்சி அருளிய காலத்தில் கவுதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர் அத்தாண்டவ காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து மகிழ்ச்சியில் திளைக்க இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ மூர்த்தியாக(நடராச பெருமான்) எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கோவிலின் வெளி மண்டபம் நடராசர் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என ஐந்து தனித்தனி அமைப்புகளை கொண்டது. இத்திருக்கோவிலின் கர்ப்பகிரக விமானம், சோழர் கால சிற்பக்கலை பாணியை கொண்ட அமைப்பாகும். இக்கோவிலின் கர்ப்பகிரக ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பு, திருநாகேஸ்வரம் கோவிலில் ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பை ஒத்துள்ளது சிந்திக்கத்தக்கது.
திருநாகேஸ்வரம் திருக்கோவிலை கற்றளியாக முதன் முதலில் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழன். கர்ப்பகிரக கோஷ்டங்களில் தெற்குப்பக்கம் தட்சிணாமூர்த்திக்கு அடுத்து கோவிலை கற்றளியாக திருப்பணி செய்த செம்பியன்மாதேவி கண்டராதித்த சோழன், சிவபெருமானை வழிபடுவது போன்ற படைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. அதன்கீழ் செம்பியன் மாதேவி தன் கணவன் கண்டராதித்தன் நினைவாக இக்கோவிலை எடுப்பித்த கல்வெட்டு செய்தியும் செதுக்கப்பட்டுள்ளது.
மூலவர் உமாமகேஸ்வரர், மிக அழகிய லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொள்ளும் கல்யாண சுந்தரராக, அம்பிகை தேகசுந்தரி மணப்பெண் கோலத்தில் எதிர், எதிராக உள்ளனர் என்பதை விளக்குவது தான் இக்கோவில் அமைப்பு என கூறப்படுகிறது.
சிவபெருமானும், உமாதேவியும் திருவேள்விகுடியில் திருமண வேள்வியும், திருமணஞ்சேரியில் மாலை மாற்றியும், திருநல்லத்தில் திருக்கல்யாணமும் செய்து காட்சி தந்தனர் என்ற செவிவழிச் செய்தியும் வழங்கி வருகிறது. இம்மூன்று தலத்தையும் வழிபடுவோரின் திருமணம் தடையின்றி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் பெருமையும், புனிதமும் காசியை போன்ற சிறப்புடையது ஆகும்.
இக்கோவில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலின் இணை கோவிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
நந்தி இல்லாத கோவில்
பூமிதேவி வழிபட்ட பூமீஸ்வரம் என்னும் திரு நல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களாள் வழிபடப் பெற்ற தலங்கள் நாகம்பாடி, அன்னியூர், கருவேலி, வயலூர், சிவனாரகரம், அகலங்கண், புதூர், நல்லாவூர் ஆகிய ஊர்களில் உள்ளது. 8 தளங்களுடன் திருமாலால் வழிபடப்பெற்ற திருவீழிமிழலையும், பிரமனால் பூஜிக்கப் பெற்ற வைகல் தலமும் உள்ளன. திருநல்ல தல பெருமானை வழிபடும் முன் அஷ்டதிக்கு தலங்களை வழிபட்டு பின் திருநல்லமுடையாரை வழிபடுவது சிறப்புடையது, நற்பயன் அளிக்கும் என தல புராணம் கூறுகிறது.
திருநல்லம் திருக்கோவிலை கருங்கல் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இத்திருக்கோவில் மேற்கு நோக்கிய அமைப்புடையது. காசி, ஸ்ரீசைலம் ஆகிய கோவில்களும் மேற்கு நோக்கிய அமைப்புடையவை. திருக்கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அதன் கீழ்க்கரையில் கோவிலின் முன்புறம் தலவிருட்சமான அரசமரம் உள்ளது. கோவிலின் முன் நுழைவு வாயில், கட்டை கோபுரமாக உள்ளது. அதன் வழியே சென்றால் வெளிப்பிரகார சுற்று அமைந்துள்ளது.
அதன் இரு பக்கங்களிலும் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் வலப்புறமும், முருகன் கோவில் இடப்புறமும் அமைந்துள்ளன வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் கோவில் ஒரு திருச்சுற்றுடன் கிழக்கு நோக்கி தனி கோவிலாக அமைந்துள்ளது. அதனை அடுத்து புரூரவஸ் மன்னனால் பூஜிக்கப்பெற்ற வைத்தியநாதர் கோவில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோவிலின் முன்பு நந்தி இல்லை. நந்தி இல்லாத கோவிலில் உள்ள பெருமானை தியானித்து வழிபட்டால் ஒன்றுக்கு நூறு மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பது புராண கூற்றாகும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோவிலை சென்றடையலாம்.
இங்குள்ள இறைவன் உமாமகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலப் பெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொண்டு திருமண கோலத்தில் விளங்குவதால் இவரை கல்யாண சுந்தரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து இறைவனை பூமிதேவி, பூஜித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும், கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் பூமி தேவியால் ஏற்படுத்தி நீராடப்பெற்ற பூமி தீர்த்தமும், பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தமும், விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஞான கூபம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தத்தில் நீராடுவோர் குஷ்டநோயும், பிற பாவங்களும் நீங்கி நலம் பெறுவர் என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் அரச மரமாகும்.
உமாமகேஸ்வர பெருமானை தேவர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமி தேவிக்கு அசுர பயம் போக்கி அருள் செய்ததும், சந்திரகுலமன்னன் புரூரவசுவின் குஷ்டநோய் போக்கி அருள் செய்ததும், கவுதம முனிவருக்கு ஆனந்த தாண்டவ காட்சி அளித்து அருளியதும் இத்தல பெருமானின் அற்புதங்களாகும்.சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிபட்டதால் கோனேரிராஜபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு.
திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூஜித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் பூமிதேவி, துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால், வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார்.
திருமாலை வணங்கிய பூமி தேவியை ஆசீர்வதித்து அவளது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ, காவிரியின் கரையில் உள்ள அரசு வனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அசுர பயம் நிரந்தரமாக நீங்க பெறுவாய் என ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே பூமிதேவி, காவிரிக்கரையில் உள்ள அரச வனத்தின் கண் அரச மரத்தின் கீழ் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவ்விடத்தில் கோவில் எடுப்பித்து சிவாகம முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள்.
பூமி தேவியின் பூஜையை கண்டு உணர்ந்த பெருமான், அவருக்கு காட்சி தந்து அவரது அசுர பயத்தை போக்கி நிலைபெறும் பேரளித்தார். பூமிதேவி வழிபட்டதால் இத்தலம் பூமிசுரம் எனவும் பெயர் விளங்கியது. பூமி தேவியால் நிர்மாணிக்கப் பெற்ற தீர்த்தமே பூமி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தலப் பெருமானை வைகாசி மாதத்தில் பூமி தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வழிபட்டால் அசுர பயம் நீங்கும். பல நன்மைகளும் பெற்று இன்புறலாம் என தல புராணம் கூறுகிறது.
கவுதம முனிவரும், மூவாயிர முனிவர்களும், சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு தரிசிக்க பேரார்வம் கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையில் உள்ள அரசவனத்தில் சிவபெருமானை நோக்கி பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் கடும் தவம் சித்தி பெற்றது. சிவபெருமான் அவர்களது தவத்திற்கு இரங்கி உமாதேவியுடன் தோன்றி காட்சி அளித்தார்.
அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த கவுதமமுனிவர், சிவபெருமானை நோக்கி பெருமானே! நாங்கள், உமது ஆனந்த தாண்டவத்தை காணவே தவம் புரிந்தோம். எமக்கு அதனை காட்டியருளுக என வேண்டினார் அதற்கு சிவபெருமான், முனிவர்களே உங்கள் எண்ணம் ஈடேறும். கவலைப்படாதீர். யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்த தாண்டவ காட்சியை காட்டி அருளுவோம். அப்போது நீங்களும் கண்டு தரிசிக்கலாம் எனக்கூறி மறைந்தார்.
அதன்படியே பூமி தேவிக்கு ஆனந்த தாண்டவ காட்சி அருளிய காலத்தில் கவுதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர் அத்தாண்டவ காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து மகிழ்ச்சியில் திளைக்க இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ மூர்த்தியாக(நடராச பெருமான்) எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கோவிலின் வெளி மண்டபம் நடராசர் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என ஐந்து தனித்தனி அமைப்புகளை கொண்டது. இத்திருக்கோவிலின் கர்ப்பகிரக விமானம், சோழர் கால சிற்பக்கலை பாணியை கொண்ட அமைப்பாகும். இக்கோவிலின் கர்ப்பகிரக ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பு, திருநாகேஸ்வரம் கோவிலில் ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பை ஒத்துள்ளது சிந்திக்கத்தக்கது.
திருநாகேஸ்வரம் திருக்கோவிலை கற்றளியாக முதன் முதலில் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழன். கர்ப்பகிரக கோஷ்டங்களில் தெற்குப்பக்கம் தட்சிணாமூர்த்திக்கு அடுத்து கோவிலை கற்றளியாக திருப்பணி செய்த செம்பியன்மாதேவி கண்டராதித்த சோழன், சிவபெருமானை வழிபடுவது போன்ற படைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. அதன்கீழ் செம்பியன் மாதேவி தன் கணவன் கண்டராதித்தன் நினைவாக இக்கோவிலை எடுப்பித்த கல்வெட்டு செய்தியும் செதுக்கப்பட்டுள்ளது.
மூலவர் உமாமகேஸ்வரர், மிக அழகிய லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொள்ளும் கல்யாண சுந்தரராக, அம்பிகை தேகசுந்தரி மணப்பெண் கோலத்தில் எதிர், எதிராக உள்ளனர் என்பதை விளக்குவது தான் இக்கோவில் அமைப்பு என கூறப்படுகிறது.
சிவபெருமானும், உமாதேவியும் திருவேள்விகுடியில் திருமண வேள்வியும், திருமணஞ்சேரியில் மாலை மாற்றியும், திருநல்லத்தில் திருக்கல்யாணமும் செய்து காட்சி தந்தனர் என்ற செவிவழிச் செய்தியும் வழங்கி வருகிறது. இம்மூன்று தலத்தையும் வழிபடுவோரின் திருமணம் தடையின்றி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் பெருமையும், புனிதமும் காசியை போன்ற சிறப்புடையது ஆகும்.
இக்கோவில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலின் இணை கோவிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
நந்தி இல்லாத கோவில்
பூமிதேவி வழிபட்ட பூமீஸ்வரம் என்னும் திரு நல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களாள் வழிபடப் பெற்ற தலங்கள் நாகம்பாடி, அன்னியூர், கருவேலி, வயலூர், சிவனாரகரம், அகலங்கண், புதூர், நல்லாவூர் ஆகிய ஊர்களில் உள்ளது. 8 தளங்களுடன் திருமாலால் வழிபடப்பெற்ற திருவீழிமிழலையும், பிரமனால் பூஜிக்கப் பெற்ற வைகல் தலமும் உள்ளன. திருநல்ல தல பெருமானை வழிபடும் முன் அஷ்டதிக்கு தலங்களை வழிபட்டு பின் திருநல்லமுடையாரை வழிபடுவது சிறப்புடையது, நற்பயன் அளிக்கும் என தல புராணம் கூறுகிறது.
திருநல்லம் திருக்கோவிலை கருங்கல் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இத்திருக்கோவில் மேற்கு நோக்கிய அமைப்புடையது. காசி, ஸ்ரீசைலம் ஆகிய கோவில்களும் மேற்கு நோக்கிய அமைப்புடையவை. திருக்கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அதன் கீழ்க்கரையில் கோவிலின் முன்புறம் தலவிருட்சமான அரசமரம் உள்ளது. கோவிலின் முன் நுழைவு வாயில், கட்டை கோபுரமாக உள்ளது. அதன் வழியே சென்றால் வெளிப்பிரகார சுற்று அமைந்துள்ளது.
அதன் இரு பக்கங்களிலும் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் வலப்புறமும், முருகன் கோவில் இடப்புறமும் அமைந்துள்ளன வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் கோவில் ஒரு திருச்சுற்றுடன் கிழக்கு நோக்கி தனி கோவிலாக அமைந்துள்ளது. அதனை அடுத்து புரூரவஸ் மன்னனால் பூஜிக்கப்பெற்ற வைத்தியநாதர் கோவில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோவிலின் முன்பு நந்தி இல்லை. நந்தி இல்லாத கோவிலில் உள்ள பெருமானை தியானித்து வழிபட்டால் ஒன்றுக்கு நூறு மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பது புராண கூற்றாகும்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோவிலை சென்றடையலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள், என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.
தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது.
தல வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை ராணி மல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். ராணி மல்லிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அந்த சமயம் கண்டன் என்ற மகன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாத ராணி மல்லி தனது மகன் என்ன ஆனார், என்று காட்டில் தேடிக் கொண்டே இருந்தார்.
வெகுநேரம் தேடி கலைத்த பின்பு சிறிது நேரம் உறங்கி விட்டார். அவரது கனவில் கடவுள் வந்து கண்டனுக்கு என்ன ஆயிற்று என்பதை விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மல்லி அந்த காட்டை சீரமைத்து சுத்தம் செய்ததினால், அந்த காடானது, ஒரு அழகான நகரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த நகரம் வில்லிபுத்தூர் என்ற பெயர் கொண்டது.
இந்த வில்லிபுத்தூரில் தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் ஒரு நாள் பெருமாளுக்கு சாப்பிடுவதற்காக வைத்திருந்த பூவை அவள் தன் தலையில் சூடிக்கொண்டு அழகு பார்த்த பின்பு பெருமாளுக்கு அணிவிக்க கொடுத்திருக்கின்றார். இதனை அறியாத பெரிய ஆழ்வார் பெருமாளுக்கு அந்த பூவை சூட்டி விட்டார். ஒரு முறை பூவில் தலைமுடி இருந்ததை அறிந்த பெரியாழ்வார், அந்த பூவினை தவிர்த்துவிட்டு, புதிய பூவை பெருமாளுக்கு சூட்டினார்.
அந்த சமயத்தில் ஆழ்வார் முன்னே தோன்றிய பெருமாள், கோதையின் கூந்தலில் சூடிய பூவைதான் நான் சூடிக் கொள்வேன் என்று அவரிடம் கூறினார். இன்றும் கூட ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெரும் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. இந்த நகரத்தில் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் அவதாரம் எடுத்து பிறந்ததன் காரணமாக இது ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. திரு என்ற அடைமொழியை கொண்டு திருவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இந்த திருத்தலத்திற்கு வந்து மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
தரிசன நேரம்:
காலை 6AM-11 மணி வரை
மாலை 4PM-8 மணி வரை.
செல்லும் வழி
மதுரையிலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்.
முகவரி:
அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125,
விருதுநகர் மாவட்டம்.
தொலைபேசி எண் +91-4563-260-254.
தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது.
தல வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை ராணி மல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். ராணி மல்லிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அந்த சமயம் கண்டன் என்ற மகன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாத ராணி மல்லி தனது மகன் என்ன ஆனார், என்று காட்டில் தேடிக் கொண்டே இருந்தார்.
வெகுநேரம் தேடி கலைத்த பின்பு சிறிது நேரம் உறங்கி விட்டார். அவரது கனவில் கடவுள் வந்து கண்டனுக்கு என்ன ஆயிற்று என்பதை விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மல்லி அந்த காட்டை சீரமைத்து சுத்தம் செய்ததினால், அந்த காடானது, ஒரு அழகான நகரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த நகரம் வில்லிபுத்தூர் என்ற பெயர் கொண்டது.
இந்த வில்லிபுத்தூரில் தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் ஒரு நாள் பெருமாளுக்கு சாப்பிடுவதற்காக வைத்திருந்த பூவை அவள் தன் தலையில் சூடிக்கொண்டு அழகு பார்த்த பின்பு பெருமாளுக்கு அணிவிக்க கொடுத்திருக்கின்றார். இதனை அறியாத பெரிய ஆழ்வார் பெருமாளுக்கு அந்த பூவை சூட்டி விட்டார். ஒரு முறை பூவில் தலைமுடி இருந்ததை அறிந்த பெரியாழ்வார், அந்த பூவினை தவிர்த்துவிட்டு, புதிய பூவை பெருமாளுக்கு சூட்டினார்.
அந்த சமயத்தில் ஆழ்வார் முன்னே தோன்றிய பெருமாள், கோதையின் கூந்தலில் சூடிய பூவைதான் நான் சூடிக் கொள்வேன் என்று அவரிடம் கூறினார். இன்றும் கூட ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெரும் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. இந்த நகரத்தில் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் அவதாரம் எடுத்து பிறந்ததன் காரணமாக இது ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. திரு என்ற அடைமொழியை கொண்டு திருவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இந்த திருத்தலத்திற்கு வந்து மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
தரிசன நேரம்:
காலை 6AM-11 மணி வரை
மாலை 4PM-8 மணி வரை.
செல்லும் வழி
மதுரையிலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்.
முகவரி:
அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125,
விருதுநகர் மாவட்டம்.
தொலைபேசி எண் +91-4563-260-254.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இந்த மலை அறியப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இருந்த மலையில் வீற்றிருக்கும் இறைவனைக் காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். இத்தல இறைவனின் பெயர், ‘ஓதிமலையாண்டவர்’ என்பதாகும். இந்தக் கோவிலைப் பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.
தல வரலாறு
படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் ‘பிரணவ’த்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப்பெருமான், பிரம்மதேவரின் படைப்பு தொழிலை சில காலம் செய்து வந்தார். அதுவும் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்தே, முருகப்பெருமான் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வீற்றி ருக்கும் இறைவனுக்கு, ஐந்து முகங்கள் உள்ளன. இது வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் ஆகும்.
முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும் பிரவணத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு.
ஆலய அமைப்பு
இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி அமைக்கப்படவில்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.
பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்துவிட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது.
அமைவிடம்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் ஓதிமலையை அடையலாம். அதேபோல் கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியம்பட்டி சென்று, அங்கிருந்தும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்குச் செல்லலாம்.
தல வரலாறு
படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் ‘பிரணவ’த்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப்பெருமான், பிரம்மதேவரின் படைப்பு தொழிலை சில காலம் செய்து வந்தார். அதுவும் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்தே, முருகப்பெருமான் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வீற்றி ருக்கும் இறைவனுக்கு, ஐந்து முகங்கள் உள்ளன. இது வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் ஆகும்.
முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும் பிரவணத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு.
ஆலய அமைப்பு
இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி அமைக்கப்படவில்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.
பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்துவிட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது.
அமைவிடம்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் ஓதிமலையை அடையலாம். அதேபோல் கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியம்பட்டி சென்று, அங்கிருந்தும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்குச் செல்லலாம்.
அம்பாள் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
கரைப்பூண்டி
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.
தென்பள்ளிப்பட்டு
போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொலலப்படுகிறது. எனவே யுகத்தின் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி என்று இத்தல இறைவனை சிறப்பிக்கிறார்கள். இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு ‘தென்பள்ளிப்பட்டு’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள். ஈசனை வணங்கி வந்த, ஸ்ரீமத் சபாபதி ஞானதேசிகர் சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
பழங்கோயில்
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
நார்த்தாம்பூண்டி
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.
தாமரைப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
வாசுதேவம்பட்டு
திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே இருக்கிறது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முன் காலத்தில் ‘ஆட்கொண்டேஸ்வரர்’ என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர். இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவிலுக்குள் நுழையும் போது உள்ள 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர்கள், சிலை ரூபமாக வீற்றிருக்கின்றனர்.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
கரைப்பூண்டி
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.
தென்பள்ளிப்பட்டு
போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொலலப்படுகிறது. எனவே யுகத்தின் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி என்று இத்தல இறைவனை சிறப்பிக்கிறார்கள். இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு ‘தென்பள்ளிப்பட்டு’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள். ஈசனை வணங்கி வந்த, ஸ்ரீமத் சபாபதி ஞானதேசிகர் சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
பழங்கோயில்
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
நார்த்தாம்பூண்டி
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.
தாமரைப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
வாசுதேவம்பட்டு
திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே இருக்கிறது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முன் காலத்தில் ‘ஆட்கொண்டேஸ்வரர்’ என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர். இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவிலுக்குள் நுழையும் போது உள்ள 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர்கள், சிலை ரூபமாக வீற்றிருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள். இந்த கோவிலின் தலவரலாறு மகத்துவமானது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம்!.
சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர்-காமாட்சி அம்மன்.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவிலில் தனிக்கோவில் கொண்டு சிம்ம வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இயற்ற விரும்பினார்.
அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இயற்றுவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார்.
சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்கு சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெறும் பேறு கிடைத்தது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு மகாசிவராத்திரி வழிபாடு அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடைபெறும். இங்கு மகாசிவராத்திரி நாளில் கைலாச நாதரை வழிபட்டு திருக்கயிலாயம் சென்ற பலனை அடைவோமாக!.
ேவறு எங்குமே காண முடியாத ஐந்தரை அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.
அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!
இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர்-காமாட்சி அம்மன்.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவிலில் தனிக்கோவில் கொண்டு சிம்ம வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இயற்ற விரும்பினார்.
அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இயற்றுவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார்.
சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்கு சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெறும் பேறு கிடைத்தது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு மகாசிவராத்திரி வழிபாடு அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடைபெறும். இங்கு மகாசிவராத்திரி நாளில் கைலாச நாதரை வழிபட்டு திருக்கயிலாயம் சென்ற பலனை அடைவோமாக!.
ேவறு எங்குமே காண முடியாத ஐந்தரை அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.
அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!
‘காரியத்தை தொடங்க அம்பிகையிடம் உத்தரவு கேட்கும் பக்தர்கள்’
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே அம்மனாக வணங்கப்படுகிறது. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதாவது தெற்கில் கடலும், கிழக்கு மற்றும் மேற்கில் ஏராளமான தென்னை, பலா மரங்களும் உள்ளன. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.
புற்று உடைந்து ரத்தம் வெளியேறியது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்போது பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடுவார்கள். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது பட்டது. புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அதில் ஒருவர் சாமி ஆடினார்.
அப்போது இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் புற்றில் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசப்பட்டது. உடனே ரத்தம் வருவது நின்றது. தொடர்ந்து சோழி ஜோதிடம் பார்ப்பவர்களை அழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சாமி ஆடியவர் கூறிய அனைத்தும் உண்மை என்றும், புற்றில் தோன்றியது அம்மன்தான் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் கூறியதாக கோவில் தொடர்பான புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
பக்தர்களின் நம்பிக்கை
குமரி மற்றும் கேரள மக்கள் பகவதி அம்மனை, தொடக்கத்தில் காளி தேவியாக வழிபட்டனர். நாளடைவில் கேரள மக்கள் வழக்கப்படி பகவதி அம்மனாக வழிபடுகின்றனர். அப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக அளித்தால் தலைநோய் குணமாகும். 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கழுத்துக்கு மேல் நோய்வாய்ப்பட்டவர்கள் அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வந்தவர்கள் முத்தப்பமும் படைத்து வழிபடுகின்றனர். எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனை மகிழ்விக்கும் சடங்கு ஒன்று செய்யப்படும். அதாவது மல்லி பூ, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து வகையான மலர்கள், மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை உள்பட அனைத்து விதமான பழங்கள், அடை மாவில் செய்த பலகாரங்கள், வடை, அப்பம் முதலானவற்றை செய்து கொண்டுபோய் கோவில் நடையில் வைக்கிறார்கள். இது தேவர்களை மகிழ்விக்கும் சடங்கு என்றும், அம்மனின் பரிவாரங்களை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் சடங்கு என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு கோவிலின் ஓலைகூரை ஓடாக மாறியுள்ளது. கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மேடை, பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பொங்கல் வழிபாடு
கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பானது மாசி கொடை விழாவில் பொங்கலிடுவதுதான். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவர். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி வழியும். வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் நாள் வலிய படுக்கையும், அதன் பின்னர் மஹா ஒடுக்கு பூஜையும் நடைபெறும். இதுதவிர ஆவணி அஸ்வதி பொங்கல், தங்கதேர் பவனி, பங்குனி மாதத்தில் பரணி கொடை விழா நடக்கிறது. மேலும் பரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை நிகழ்ச்சி நடக்கின்றது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.
புற்று உடைந்து ரத்தம் வெளியேறியது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்போது பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடுவார்கள். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது பட்டது. புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அதில் ஒருவர் சாமி ஆடினார்.
அப்போது இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் புற்றில் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசப்பட்டது. உடனே ரத்தம் வருவது நின்றது. தொடர்ந்து சோழி ஜோதிடம் பார்ப்பவர்களை அழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சாமி ஆடியவர் கூறிய அனைத்தும் உண்மை என்றும், புற்றில் தோன்றியது அம்மன்தான் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் கூறியதாக கோவில் தொடர்பான புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
பக்தர்களின் நம்பிக்கை
குமரி மற்றும் கேரள மக்கள் பகவதி அம்மனை, தொடக்கத்தில் காளி தேவியாக வழிபட்டனர். நாளடைவில் கேரள மக்கள் வழக்கப்படி பகவதி அம்மனாக வழிபடுகின்றனர். அப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக அளித்தால் தலைநோய் குணமாகும். 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கழுத்துக்கு மேல் நோய்வாய்ப்பட்டவர்கள் அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வந்தவர்கள் முத்தப்பமும் படைத்து வழிபடுகின்றனர். எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனை மகிழ்விக்கும் சடங்கு ஒன்று செய்யப்படும். அதாவது மல்லி பூ, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து வகையான மலர்கள், மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை உள்பட அனைத்து விதமான பழங்கள், அடை மாவில் செய்த பலகாரங்கள், வடை, அப்பம் முதலானவற்றை செய்து கொண்டுபோய் கோவில் நடையில் வைக்கிறார்கள். இது தேவர்களை மகிழ்விக்கும் சடங்கு என்றும், அம்மனின் பரிவாரங்களை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் சடங்கு என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு கோவிலின் ஓலைகூரை ஓடாக மாறியுள்ளது. கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மேடை, பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பொங்கல் வழிபாடு
கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பானது மாசி கொடை விழாவில் பொங்கலிடுவதுதான். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவர். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி வழியும். வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் நாள் வலிய படுக்கையும், அதன் பின்னர் மஹா ஒடுக்கு பூஜையும் நடைபெறும். இதுதவிர ஆவணி அஸ்வதி பொங்கல், தங்கதேர் பவனி, பங்குனி மாதத்தில் பரணி கொடை விழா நடக்கிறது. மேலும் பரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை நிகழ்ச்சி நடக்கின்றது.
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்த மயிலாப்பூர் பகுதி, முக்கியமான இடமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பலரும் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் மட்டுமே இருப்பதாக எண்ணி, அதை மட்டுமே வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலோடு சேர்த்து, மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மொத்தம் 7 சிவாலயங்கள் உள்ளன. மயிலாப்பூரின் சப்த சிவாலயங்களாகத் திகழும் இவற்றை, சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். மேலும் மற்ற ஆறு சிவாலயங்களையும் தரிசித்தபிறகு, இறுதியாகவே கபாலீஸ்வரர் திருக்கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற வழிமுறையும் முன்னோர்களால் வகுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 7 சிவாலயங்களையும் சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
காரணீஸ்வரர்
சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
தீர்த்தபாலீஸ்வரர்
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம். தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.
வெள்ளீஸ்வரர்
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார். அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி. உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு. இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
விருபாட்சீஸ்வரர்
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.
வாலீஸ்வரர்
மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.
மல்லீஸ்வரர்
காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்திருக்கிறது, இந்தக் கோவில். சப்த சிவாலயங்களில் 6-வது தலம் இது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு கோவில் கொண்ட இறைவன் ‘மல்லீஸ்வரர்’ ஆனார். இறைவியின் திருநாமம், மரகதவல்லி என்பதாகும். பிருகு முனிவர் வழிபட்ட சிறப்புமிக்க தலம் இது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கபாலீஸ்வரர்
மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் இதுவாகும். இங்கு கற்பகாம்பிகை உடனாய கபாலீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயம் இது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற ஆலயமாகவும் இது திகழ்கிறது. ஈசன், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. புன்னை மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவனை, பார்வதிதேவி மயில் வடிவில் வந்து வழிபட்ட தலம் என்பதால், இது ‘மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. ஆதிகாலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும், அதன் காரணமாக 350 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதைய இடத்தில் கபாலீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காரணீஸ்வரர்
சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூரில், கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்தல இறைவியின் நாமம், சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்திருப்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில், முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.
தீர்த்தபாலீஸ்வரர்
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம். தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.
வெள்ளீஸ்வரர்
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார். அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி. உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு. இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
விருபாட்சீஸ்வரர்
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.
வாலீஸ்வரர்
மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும். இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.
மல்லீஸ்வரர்
காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்திருக்கிறது, இந்தக் கோவில். சப்த சிவாலயங்களில் 6-வது தலம் இது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு கோவில் கொண்ட இறைவன் ‘மல்லீஸ்வரர்’ ஆனார். இறைவியின் திருநாமம், மரகதவல்லி என்பதாகும். பிருகு முனிவர் வழிபட்ட சிறப்புமிக்க தலம் இது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கபாலீஸ்வரர்
மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் இதுவாகும். இங்கு கற்பகாம்பிகை உடனாய கபாலீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயம் இது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற ஆலயமாகவும் இது திகழ்கிறது. ஈசன், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. புன்னை மரத்தின் அடியில் வீற்றிருந்த இறைவனை, பார்வதிதேவி மயில் வடிவில் வந்து வழிபட்ட தலம் என்பதால், இது ‘மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. ஆதிகாலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும், அதன் காரணமாக 350 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதைய இடத்தில் கபாலீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அவளிவநல்லூர் சாட்சிநாதர் கோவிலில் மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
இறைவர் திருப்பெயர்: சாட்சிநாதர், தம்பரிசுடையார்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.
தல மரம்: பாதிரி
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.
தல வரலாறு
பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.
சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு.
பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும் வழிபட்ட தலம் இது.
வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.
தல வரலாறு: பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.
தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.
இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.
தல மரம்: பாதிரி
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.
தல வரலாறு
பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.
சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு.
பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும் வழிபட்ட தலம் இது.
வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.
தல வரலாறு: பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.
தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.
இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
வேலூர் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை மீது அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால், அவரது பெயராலேயே இந்த மலை அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்தில் உள்ள வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி, மான் வடிவில் அவர் முன்பு வந்தாள். முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவர் நம்பிராஜன், அந்தப் பெண் குழந்தையை எடுத்து ‘வள்ளி’ என பெயரிட்டு வளர்த்தார். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியை திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு.
இத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர். தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. மலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
ஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.
தற்போதும் இந்தப் பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாக கூறி, தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
அமைவிடம்
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.
இத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர். தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. மலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
ஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.
தற்போதும் இந்தப் பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாக கூறி, தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
அமைவிடம்
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் ‘லே பட்சி’ என்கிற கிராமத்தில் உள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ‘லே பட்சி’ என்கிற சிறிய கிராமம். பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் லே-பட்சி பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில், எத்தனையோ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்லப்படும் இங்குள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
ராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.
ராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.
விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.
வீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்
இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.
ஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதிகளும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.
ஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா? என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண் :
வீரபத்திர சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் தொங்கும் தூண், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. லே- பட்சி கோவில்களின் கலை சிறப்பும் அதுவே. முடிந்தும், முடியாமல் நிற்கும் கல் மண்டபத்தில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தரையை தொடாமல், அந்தரத்தில் மிதந்தபடி இருக்கிறது. தரைக்கும், தூணிற்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதால் பக்தர்கள் ஆச்சரியத்தோடு அதை ரசிக்கிறார்கள்.
வேறு சிலரே இருக்கும் இடைவெளியில் குச்சிகளையும், துணிகளையும் உள்நுழைத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம். ஆனால் 3 ஆண்டுகால இணைப்பு பணி இடம் தெரியாமல் போனாதல், விரக்தியுடன் ஊர் திரும்பியதாக ஒரு செவிவழி செய்தியும் உலவுகிறது.
ராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.
ராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.
விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.
வீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.
ஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதிகளும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.
ஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா? என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண் :
வீரபத்திர சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் தொங்கும் தூண், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. லே- பட்சி கோவில்களின் கலை சிறப்பும் அதுவே. முடிந்தும், முடியாமல் நிற்கும் கல் மண்டபத்தில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தரையை தொடாமல், அந்தரத்தில் மிதந்தபடி இருக்கிறது. தரைக்கும், தூணிற்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதால் பக்தர்கள் ஆச்சரியத்தோடு அதை ரசிக்கிறார்கள்.
வேறு சிலரே இருக்கும் இடைவெளியில் குச்சிகளையும், துணிகளையும் உள்நுழைத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம். ஆனால் 3 ஆண்டுகால இணைப்பு பணி இடம் தெரியாமல் போனாதல், விரக்தியுடன் ஊர் திரும்பியதாக ஒரு செவிவழி செய்தியும் உலவுகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.
தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது. சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
இவ்வாலய விமானங்கள் திருமதிற் சுவர்கள் திருமடைப்பள்ளி நுழைவு வாயில் முதலிய அனைத்தும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.
முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். இங்கு கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூர் சோழமன்னர் காலத்தில் அம்மன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள்
சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் உய்யக்கொண்டான் வளநாட்டில் காவிரிக்கும், அரசலாற்றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் வேநாடு என்ற பிரிவின் கீழ் இருந்ததாக குறிக்கப்படுகிறது. வேநாடு என்பது பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ள பிரதேசம் என்பது காஞ்சி பரமாச்சாரியாரின் விளக்கம். இந்த கோவிலுக்கு பலரும் மானியங்கள் கொடுத்து உள்ளார்கள். இ்ந்த கோவிலில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மூன்று சிவயோகியாருக்கு உணவு அளிக்க மானியம். தினசரி பானை கொடுக்கும் குயவருக்கு மானியம், ஓதுவார், நாட்டியக்காரர், மாலை கட்டுபவர், வாத்தியம் வாசிப்பவர்களுக்கு மானியம், இதுபோன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பல கல்வெட்டுகள் சிதைந்து போய் விட்டதால் விவரங்கள் கண்டுகொள்ள முடியவில்லை.
அம்மனை வழிபட சிறப்பான நாட்கள்
துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். கிருஷ்ண பட்ஷமும், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சுக்கிலபட்ஷமும், அஷ்டமி திதியும், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த கோவிலில் ராகுதோஷம், சுக்கிரதோஷம் ஆகியவற்றிற்கு சாந்தி செய்தால் விசேஷ பலன் உண்டு. திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.
தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது. சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
இவ்வாலய விமானங்கள் திருமதிற் சுவர்கள் திருமடைப்பள்ளி நுழைவு வாயில் முதலிய அனைத்தும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.
முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். இங்கு கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூர் சோழமன்னர் காலத்தில் அம்மன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள்
சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் உய்யக்கொண்டான் வளநாட்டில் காவிரிக்கும், அரசலாற்றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் வேநாடு என்ற பிரிவின் கீழ் இருந்ததாக குறிக்கப்படுகிறது. வேநாடு என்பது பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ள பிரதேசம் என்பது காஞ்சி பரமாச்சாரியாரின் விளக்கம். இந்த கோவிலுக்கு பலரும் மானியங்கள் கொடுத்து உள்ளார்கள். இ்ந்த கோவிலில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மூன்று சிவயோகியாருக்கு உணவு அளிக்க மானியம். தினசரி பானை கொடுக்கும் குயவருக்கு மானியம், ஓதுவார், நாட்டியக்காரர், மாலை கட்டுபவர், வாத்தியம் வாசிப்பவர்களுக்கு மானியம், இதுபோன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பல கல்வெட்டுகள் சிதைந்து போய் விட்டதால் விவரங்கள் கண்டுகொள்ள முடியவில்லை.
அம்மனை வழிபட சிறப்பான நாட்கள்
துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். கிருஷ்ண பட்ஷமும், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சுக்கிலபட்ஷமும், அஷ்டமி திதியும், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த கோவிலில் ராகுதோஷம், சுக்கிரதோஷம் ஆகியவற்றிற்கு சாந்தி செய்தால் விசேஷ பலன் உண்டு. திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவிலில் லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் மூலவராக அருள்பாலிக்கிறார்.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.
அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.
அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.
காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.
அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.
பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.
அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.
காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.
அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.
பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.






