என் மலர்
கோவில்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவில் உருவான வரலாறே சுவாரசியம் மிகுந்தது தான். அதனை பற்றி பார்ப்போம்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.
வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ‘‘இரசை’’ என்று பெயரிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ‘‘இரசை’’ நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.
சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
கலைநயம் மிகுந்த சிலைகள்
நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
கோவில் நடை திறப்பு
நத்தம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர், தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார்.
வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ‘‘இரசை’’ என்று பெயரிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ‘‘இரசை’’ நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.
சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
கலைநயம் மிகுந்த சிலைகள்
நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
கோவில் நடை திறப்பு
நத்தம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
மனிதர்களின் பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார்.
சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.
மனிதர்களின் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைப் பெருக்கவும், பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார்.
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோயில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.
இந்த ஆற்றின் கரையில் குபேரவர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததா கவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர் களான ஸ்ரீகங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீசதாசிவ சுவாமி களுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ள தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்களாம்.
காசியில் ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.
மேலும், கோயிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீலட்சுமிவராகப் பெருமாள், ஸ்ரீஅகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோயிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம். பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங் களையும் புதிதாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
சிறப்பு வழிபாடுகள்...
இந்தக் கோயிலில் பௌர்ணமிதோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோயிலுக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
பாண்டிச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
மனிதர்களின் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைப் பெருக்கவும், பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார்.
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோயில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.
இந்த ஆற்றின் கரையில் குபேரவர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததா கவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர் களான ஸ்ரீகங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீசதாசிவ சுவாமி களுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ள தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்களாம்.
காசியில் ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.
மேலும், கோயிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீலட்சுமிவராகப் பெருமாள், ஸ்ரீஅகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோயிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம். பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங் களையும் புதிதாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
சிறப்பு வழிபாடுகள்...
இந்தக் கோயிலில் பௌர்ணமிதோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோயிலுக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
பாண்டிச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான அவர் அரச குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். துறவியான விசுவாமித்திரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ராஜரிஷி பட்டம் பெற்ற அவர் ஒருமுறை கடக நாச்சிமலை என்ற இடத்திற்கு சென்று மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார்.
ஆனால் கடக நாச்சிமலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் ராவணனின் அபாய சக்திகளை பெற்றவள். பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அந்த மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து அரக்கியை சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு ஏற்ப ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினார். அரக்கியை அழிக்கப்போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்துவிட வேண்டும் என்றார்.
அதை ஏற்று பூஜை செய்த ராமர் அதை அழிக்க மறந்துவிடுகிறார். அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவத்தை அழிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரில் உள்ளது. அவ்வாறு அமைத்த தெய்வமே மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வமாக, கொங்கு நாட்டு காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவில் தோன்றிய வரலாறு பின் வருமாறு:-
சங்க காலத்தில் உப்பற்காடான ஆனைமலை பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த மன்னன் ஆழியாற்றங்கரையில் இருந்த அரசு தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து வந்தான். அந்த மாமரத்தின் காய், கனிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு இருந்தான். ஒரு நாள் இளம் பெண் ஒருத்தி தோழிகளுடன் உப்பாற்றங்கரையில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றங்கரை யோரத்தில் இருந்த மாமரத்தில் இருந்து விழுந்த ஒரு மாம்பழம் ஆற்று நீரில் மிதந்து வந்தது. அரச கட்டளையை அறியாத அந்த இளம் பெண் மாங்கனியை எடுத்து தின்று விட்டாள். இந்த செய்தியை அறிந்த மன்னன் நன்னன் அரச கட்டளையை அவமதித்த இளம் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து உத்தர விட்டான்.
இதற்கு அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் எடையளவுக்கு தங்கப்பாவை ஒன்றும், 81 ஆண் யானை களையும் அபராதமாக தருவதாக மன்னனிடம் கெஞ்சினார். மேலும், அந்த இளம் பெண்ணும் ‘நான் ஆற்று நீரில் மிதந்து வந்த மாங்கனியை தான் எடுத்து தின்றேன். மன்னன் உத்தரவை மீறவில்லை’ என்று வாதாடினாள். ஆனால் அந்த பெண் கூறிய கருத்தை ஏற்காத மன்னன் நன்னன், அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி காவலர்களும் மரண தண்டனையை நிறை வேற்றினர்.
பின்னர் அந்த பெண்ணின் உடல் உப்பாற்றங்கரையில் சமாதி படுத்தப்பட்டது. பெண்ணை கொலை செய்த மன்னன் நன்னனை கொங்கிளங்கோவர்கள் படை யெடுத்து சென்று கண்டித்து, அவனது காவல் மாமரத்தையும் வெட்டி வீழ்த்தினர். பெண் சமாதி படுத்தப்பட்ட இடத்தில் நாளடைவில் தெய்வீக சக்தி இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சமாதி மீது, அந்த பெண் படுத்து இருப்பது போன்ற உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். மயானத்தில் சயன கோலத்தில் இருந்த பெண்ணின் உருவம் ‘மாசயன அம்மன்’ என்று அழைக்கப்பட்டது.
பின் காலத்தில் பெயர் மருவி ‘மாசாணியம்மன்’ என்றழைக்கப்பட்டு வருகிறது. மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு.
ஆனால் கடக நாச்சிமலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் ராவணனின் அபாய சக்திகளை பெற்றவள். பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அந்த மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து அரக்கியை சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு ஏற்ப ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினார். அரக்கியை அழிக்கப்போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்துவிட வேண்டும் என்றார்.
அதை ஏற்று பூஜை செய்த ராமர் அதை அழிக்க மறந்துவிடுகிறார். அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவத்தை அழிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரில் உள்ளது. அவ்வாறு அமைத்த தெய்வமே மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வமாக, கொங்கு நாட்டு காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவில் தோன்றிய வரலாறு பின் வருமாறு:-
சங்க காலத்தில் உப்பற்காடான ஆனைமலை பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த மன்னன் ஆழியாற்றங்கரையில் இருந்த அரசு தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து வந்தான். அந்த மாமரத்தின் காய், கனிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு இருந்தான். ஒரு நாள் இளம் பெண் ஒருத்தி தோழிகளுடன் உப்பாற்றங்கரையில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றங்கரை யோரத்தில் இருந்த மாமரத்தில் இருந்து விழுந்த ஒரு மாம்பழம் ஆற்று நீரில் மிதந்து வந்தது. அரச கட்டளையை அறியாத அந்த இளம் பெண் மாங்கனியை எடுத்து தின்று விட்டாள். இந்த செய்தியை அறிந்த மன்னன் நன்னன் அரச கட்டளையை அவமதித்த இளம் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து உத்தர விட்டான்.
இதற்கு அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் எடையளவுக்கு தங்கப்பாவை ஒன்றும், 81 ஆண் யானை களையும் அபராதமாக தருவதாக மன்னனிடம் கெஞ்சினார். மேலும், அந்த இளம் பெண்ணும் ‘நான் ஆற்று நீரில் மிதந்து வந்த மாங்கனியை தான் எடுத்து தின்றேன். மன்னன் உத்தரவை மீறவில்லை’ என்று வாதாடினாள். ஆனால் அந்த பெண் கூறிய கருத்தை ஏற்காத மன்னன் நன்னன், அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி காவலர்களும் மரண தண்டனையை நிறை வேற்றினர்.
பின்னர் அந்த பெண்ணின் உடல் உப்பாற்றங்கரையில் சமாதி படுத்தப்பட்டது. பெண்ணை கொலை செய்த மன்னன் நன்னனை கொங்கிளங்கோவர்கள் படை யெடுத்து சென்று கண்டித்து, அவனது காவல் மாமரத்தையும் வெட்டி வீழ்த்தினர். பெண் சமாதி படுத்தப்பட்ட இடத்தில் நாளடைவில் தெய்வீக சக்தி இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சமாதி மீது, அந்த பெண் படுத்து இருப்பது போன்ற உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். மயானத்தில் சயன கோலத்தில் இருந்த பெண்ணின் உருவம் ‘மாசயன அம்மன்’ என்று அழைக்கப்பட்டது.
பின் காலத்தில் பெயர் மருவி ‘மாசாணியம்மன்’ என்றழைக்கப்பட்டு வருகிறது. மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.
விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி- தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மூலகணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.
சுருட்டு நிவேதனம் :
குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை, வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர் இந்த தீவிர முருக பக்தர்.
வழக்கம் போல் முருகப்பெருமானை தரிசிக்க ஒரு நாள் விராலிமலை வந்தார் கருப்பமுத்துப் பிள்ளை. வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தது மழை விட்டபாடில்லை.
நீண்ட நேரமாக காத்திருந்ததில் அவருக்கு பசிக்கத் தொடங்கியது. பசியைப் போக்க உணவில்லை. முருகப்பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. புகைக்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என வருந்தினார் அவர்.
பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர் முன் தோன்றினார். அவருக்கு சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு.
அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது விருப்பப்படி அன்று முதல் மாலை பூஜையின் போது சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்த பின் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர்.
அருணகிரி நாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரி நாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.
தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது.
மன்னரின் வயிற்று வலி :
சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு.
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை.
ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைக்க மன்னரின் வயிற்று வலி குணமானது.
திருவிழாக்கள் :
பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.
ஜனவரி முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.
திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியில்இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை.
விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி- தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மூலகணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.
சுருட்டு நிவேதனம் :
குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை, வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர் இந்த தீவிர முருக பக்தர்.
வழக்கம் போல் முருகப்பெருமானை தரிசிக்க ஒரு நாள் விராலிமலை வந்தார் கருப்பமுத்துப் பிள்ளை. வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தது மழை விட்டபாடில்லை.
நீண்ட நேரமாக காத்திருந்ததில் அவருக்கு பசிக்கத் தொடங்கியது. பசியைப் போக்க உணவில்லை. முருகப்பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. புகைக்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என வருந்தினார் அவர்.
பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர் முன் தோன்றினார். அவருக்கு சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு.
அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது விருப்பப்படி அன்று முதல் மாலை பூஜையின் போது சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்த பின் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர்.
அருணகிரி நாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரி நாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.
தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது.
மன்னரின் வயிற்று வலி :
சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு.
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை.
ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைக்க மன்னரின் வயிற்று வலி குணமானது.
திருவிழாக்கள் :
பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.
ஜனவரி முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.
திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியில்இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை.
அகரம் முத்தாலம்மன் கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் கடைசிக்காலத்தில் வரித்தண்டலராக பணிபுரிந்தவர் சக்கரராயர் என்ற அந்தணர். இவர் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஆவார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அங்கிருந்து தன் குலதெய்வமான முத்தியாலு அம்மனின் உத்தரவின்படி முத்தியாலு அம்மனுடன் தென்திசை நோக்கி தன் படைபரிவாரங்களுடன் கிளம்பினார்.
தாடிக்கொம்பு அருகே செல்லும் குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய இடத்தில் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனுக்கு கோவில் கட்டினார். இதனைத்தொடர்ந்து இக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் பாரம்பரிய முறைகளின்படி நடத்தி வந்தார். இம்முத்தியாலு அம்மன் காலப்போக்கில் பெயர் மறுவி, தற்போது முத்தாலம்மன் என அழைக்கப்பட்டு வழிப்பட்டு வருகின்றனர்.
இந்த கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 2005-ம் ஆண்டிற்கு முன்னர் சுதையால் செய்யப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவினை கேட்டு கற்சிற்பங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என பிரகாரங்கள் அமைந்துள்ளன.
மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமாமுனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமாமுனிவருக்கும், பண்டாரப்பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐந்து முகங்களைக்கொண்டு எழுந்தருளியுள்ள சுரலிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி, ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், வடமேற்கு மூலையில் பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, வடகிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன்பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அம்மனின் சன்னதியில் அம்மனின் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் கூடுவர். குண்டுசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் வண்ணம் நிசப்தத்துடன் அம்மனை மனமுருக வேண்டியபடி அமர்ந்து இருப்பர். கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடக்குப்பகுதியில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்குப்பிரகாரத்தில் உள்ள திருவாச்சி பக்கமோ பல்லி சப்தம் தருவதை அம்மனின் உத்தரவாக கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனின் உத்தரவு கேட்கும்போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூதராஜாவின் பக்கம் பல்லி சப்தம் செய்து சகுனம் அளித்தால் திருவிழா நடத்தப்படுவதில்லை. மேலும் எந்த பகுதியிலும் பல்லி சப்தம் கொடுக்கவில்லை என்றாலும் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை எனக்கருதி திருவிழா நடைபெறுவதில்லை.
அம்மனின் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா பாரம்பரிய அடிப்படையில் சாட்டுதல் நடைபெறும். மறுநாள் முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டாரப்பெட்டி சன்னதியிலிருந்து கிளம்பி கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதனைத்தொடர்ந்து புராண நாடகங்களும் நடைபெறும். உற்சவ காலத்தில் எழுந்தருளும் அம்மன் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை மூட்டை, களிமண் உள்ளிட்ட பல பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம்நாள் வெள்ளிக்கிழமை உருவாக்கப்படுகிறது. பிறப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் கண்திறப்பு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பபடுவார்.
அங்கு அம்மனின் கண்திறப்பு விழா அரசு உயர் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காலை 10 மணிக்கு நடைபெற்று உடனடியாக ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். கண்திறக்கப்பட்ட உற்சவகால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வது வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.
அன்று பகல் முழுவதும் சகல வரம் தரும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றோர் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தைகளை தூக்கிவந்தும் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் அம்மனின் அருளால் தங்களது விவசாயத்தில் கிடைத்த கம்பு, சோளம், நெல், மக்காசோளம், வாழைப்பழம் உள்ளிட் விவசாய பொருட்களை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு மண்பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அன்று நள்ளிரவு அம்மன் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். மறுநாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன், பின்னர் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் மத்தியில் உலா வந்து பூஞ்சோலையில் எழுந்தருள்வார். குறிப்பாக அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தின்று, பூஜிக்கப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இத்திருக்கோவிலின் காவல் தெய்வமான பூதராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அகரம் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது.
தாடிக்கொம்பு அருகே செல்லும் குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய இடத்தில் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனுக்கு கோவில் கட்டினார். இதனைத்தொடர்ந்து இக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் பாரம்பரிய முறைகளின்படி நடத்தி வந்தார். இம்முத்தியாலு அம்மன் காலப்போக்கில் பெயர் மறுவி, தற்போது முத்தாலம்மன் என அழைக்கப்பட்டு வழிப்பட்டு வருகின்றனர்.
இந்த கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 2005-ம் ஆண்டிற்கு முன்னர் சுதையால் செய்யப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவினை கேட்டு கற்சிற்பங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என பிரகாரங்கள் அமைந்துள்ளன.
மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமாமுனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமாமுனிவருக்கும், பண்டாரப்பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐந்து முகங்களைக்கொண்டு எழுந்தருளியுள்ள சுரலிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி, ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், வடமேற்கு மூலையில் பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, வடகிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன்பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அம்மனின் சன்னதியில் அம்மனின் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் கூடுவர். குண்டுசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் வண்ணம் நிசப்தத்துடன் அம்மனை மனமுருக வேண்டியபடி அமர்ந்து இருப்பர். கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடக்குப்பகுதியில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்குப்பிரகாரத்தில் உள்ள திருவாச்சி பக்கமோ பல்லி சப்தம் தருவதை அம்மனின் உத்தரவாக கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனின் உத்தரவு கேட்கும்போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூதராஜாவின் பக்கம் பல்லி சப்தம் செய்து சகுனம் அளித்தால் திருவிழா நடத்தப்படுவதில்லை. மேலும் எந்த பகுதியிலும் பல்லி சப்தம் கொடுக்கவில்லை என்றாலும் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை எனக்கருதி திருவிழா நடைபெறுவதில்லை.
அம்மனின் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா பாரம்பரிய அடிப்படையில் சாட்டுதல் நடைபெறும். மறுநாள் முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டாரப்பெட்டி சன்னதியிலிருந்து கிளம்பி கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதனைத்தொடர்ந்து புராண நாடகங்களும் நடைபெறும். உற்சவ காலத்தில் எழுந்தருளும் அம்மன் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை மூட்டை, களிமண் உள்ளிட்ட பல பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம்நாள் வெள்ளிக்கிழமை உருவாக்கப்படுகிறது. பிறப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் கண்திறப்பு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பபடுவார்.
அங்கு அம்மனின் கண்திறப்பு விழா அரசு உயர் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காலை 10 மணிக்கு நடைபெற்று உடனடியாக ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். கண்திறக்கப்பட்ட உற்சவகால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வது வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.
அன்று பகல் முழுவதும் சகல வரம் தரும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றோர் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தைகளை தூக்கிவந்தும் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் அம்மனின் அருளால் தங்களது விவசாயத்தில் கிடைத்த கம்பு, சோளம், நெல், மக்காசோளம், வாழைப்பழம் உள்ளிட் விவசாய பொருட்களை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு மண்பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அன்று நள்ளிரவு அம்மன் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். மறுநாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன், பின்னர் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் மத்தியில் உலா வந்து பூஞ்சோலையில் எழுந்தருள்வார். குறிப்பாக அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தின்று, பூஜிக்கப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இத்திருக்கோவிலின் காவல் தெய்வமான பூதராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அகரம் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.
அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
ரூ.2 கோடியில் திருப்பணிகள்
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து மத்தூர் மாரியம்மனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ரூ.2 கோடியில் திருப்பணிகள் முடிந்து இந்த கோவிலுக்கு பிப்ரவரி 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிகளின்படி...
இந்த கோவிலின் நான்கு புறமும் பிரதான வாசல்கள் ஆகம விதிகளின்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் ஒருபுறம் பிரமாண்டமான குதிரை சிலைகளும், மற்றொரு புறம் நவக்கிரகங்களுக்கான மகா மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை செல்லும் வழியில் கருங்கல்லூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில், பெட்ரோல் பங்கிற்கு வடக்கே அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்புகள்
குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆயாதி கணித்து, வாஸ்து நட்சத்திரம், ராசி நட்சத்திரம், கர்த்தா நட்சத்திரம், ராசிக்கு பொருந்திய ஆயாதி அளவுகள் தீர்மானித்து 3 நிலை விமானம் நீண்ட சதுரம் அமைப்பில் 3 பக்க வாசலுடன் கூடிய மகா மண்டபத்துடன் அமைந்திருப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது.
அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
ரூ.2 கோடியில் திருப்பணிகள்
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து மத்தூர் மாரியம்மனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ரூ.2 கோடியில் திருப்பணிகள் முடிந்து இந்த கோவிலுக்கு பிப்ரவரி 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிகளின்படி...
இந்த கோவிலின் நான்கு புறமும் பிரதான வாசல்கள் ஆகம விதிகளின்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் ஒருபுறம் பிரமாண்டமான குதிரை சிலைகளும், மற்றொரு புறம் நவக்கிரகங்களுக்கான மகா மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை செல்லும் வழியில் கருங்கல்லூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில், பெட்ரோல் பங்கிற்கு வடக்கே அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்புகள்
குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆயாதி கணித்து, வாஸ்து நட்சத்திரம், ராசி நட்சத்திரம், கர்த்தா நட்சத்திரம், ராசிக்கு பொருந்திய ஆயாதி அளவுகள் தீர்மானித்து 3 நிலை விமானம் நீண்ட சதுரம் அமைப்பில் 3 பக்க வாசலுடன் கூடிய மகா மண்டபத்துடன் அமைந்திருப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
காஞ்சி : திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் 7 சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது, இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
கடலாடி : சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது.
மாம்பாக்கம்: சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது.
தென்மகாதேவ மங்கலம் : போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது.
எலத்தூர் : சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.
பூண்டி: சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.
குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
காஞ்சி : திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் 7 சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது, இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
கடலாடி : சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது.
மாம்பாக்கம்: சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது.
தென்மகாதேவ மங்கலம் : போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது.
எலத்தூர் : சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.
பூண்டி: சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.
குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழியில் அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.
முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித்தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.
எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர்களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது. மனைவியின் மேல் பிரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்ட செட்டியாரின் மகன், அவளது சொத்தை அபகரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான்.
அன்றைய தினம்… முப்பந்தலில் மூவேந்தர்களுக்கும் மத்தியஸ்தம் நடந்தது. இதைக் காண்பதற்காக இசக்கியை அழைத்துச் சென்றான் செட்டியார் மகன். வழியில், பயணக் களைப்பும் தாகமும் சேர்ந்து அவளை வாட்டின. உடனே அந்த இடத்தில் மணலை குவித்து, இசக்கியை அதில் படுக்கச் சொன்ன செட்டியார் மகன், தண்ணீர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான். அப்படியே உறங்கிப் போனாள் இசக்கி. திரும்பி வந்த செட்டியார் மகன், இதுதான் தக்க தருணம் என்று கருதி பாறாங்கல்லைத் தூக்கி இசக்கியின் தலையில்போட்டான். துடிதுடித்து இறந்தாள் இசக்கி.
பிறகு, தனக்கும் தாகம் எடுக்கவே தண்ணீரைத் தேடி ஓடினான். சிறிது தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றைக் கண்டவன், அதிலிருந்து தண்ணீர் சேகரிக்க முயன்றான். அப்போது, கருநாகம் தீண்டி அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான்.
இந்த நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் சென்று தன் கணவனே தன்னைக் கொன்ற விவரத்தைக் கூறி நியாயம் கேட்டாள். அவளிடம், “அவன் செய்த பாவத்துக்கு அவனும் பலியாகி விட்டான்” என்றார் சிவன். ஆனாலும் இசக்கி சமாதானம் அடையவில்லை.
“என்னை நம்ப வைத்து சாகடித்தவனை, நானே பழி தீர்க்க வேண்டும். எனவே, என்னையும் அவனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று வேண்டினாள். ‘அப்படியே ஆகட்டும்‘ என அருளினார் சிவன். அதன்படி, கிணற்றடியில் இறந்து கிடந்த செட்டியார் மகன் தடாலென எழுந்து வீட்டுக்குச் சென்றான். இசக்கியோ, பிறந்த வீட்டுக்கும் செல்லாமல், புகுந்த வீட்டுக்கும் போகாமல் கணவனை அழிப்பதற்காக சுற்றித் திரிந்தாள்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள், பழவூர் நோக்கி ஆவேசத்துடன் கிளம்பினாள் இசக்கி. வழியில், கள்ளிச்செடியை ஒடித்துத் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டாள். அந்தச் செடி, குழந்தையாக மாறியது.
குழந்தையுடன் பழவூர் மந்தைக்கு வந்தவள், ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாள். “உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவன், என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இங்கு வந்து விட்டான். என்னையும் அவனையும் சேர்த்து வையுங்கள்” என்று முறையிட்டாள்.
பஞ்சாயத்தார், “உன் கணவன் யாரென்று சொல்” என்றனர். உடனே குழந்தையைத் தரையில் இறக்கி விட்டவள், “இந்தக் குழந்தை தன் தகப்பனை அடையாளம் காட்டும்” என்றாள். அதன்படி, கூட்டத்தில் இருந்த செட்டியார் மகனை, ‘அப்பா‘ என்று அழைத்தபடி அவனிடம் சென்றது குழந்தை. உடனே, இருவரையும் சேர்த்து வைப்பது எனப் பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். “கொலை செய்யப்பட்டவள் உயிருடன் எப்படி வந்தாள்?” என்று குழம்பித் தவித்தான் செட்டியார் மகன். பஞ்சாயத்தாரும் ஊர்மக்களும் சேர்ந்து, இருவரையும் ஒரு வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டினர். தவிர, வீட்டுக்கு வெளியே காவலுக்கும் நின்றனர்.
வீட்டுக்குள் விசுவ ரூபமெடுத்து தன்னை வெளிக் காட்டினாள் இசக்கி. அரண்டு போன செட்டியார் மகன் அவளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால் மனம் இரங்காத இசக்கி, விடிவதற்குள் அவன் கதையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். ஆனாலும் அவளது கோபம் தணியவில்லை. பழவூர் கிராமத்தையே தீக்கிரையாக்கினாள். எரிந்து சாம்பலாகும் ஊரைப் பரவசத்துடன் பார்த்தவள், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள்.
அன்று முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார், அவளை அழைத்து சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். ஊரைக் காக்கும்தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், “முப்பந்தல் இசக்கியம்மன்” என்று பெயர் கொண்டாள்.
இதன் பிறகு இசக்கியின் அண்ணன்களான சுடலைமாடன், பட்டவராயன் இருவரும் அவளுக்குத் துணையாக அவளது வாசலிலேயே குடியேறினர். துவக்கத்தில் இசக்கியம்மனுக்கு ஒரேயொரு கோயில் மட்டுமே இருந்தது. பின்னர், பூர்வீக கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் ஒன்றையும் எழுப்பினர்.
பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.
பூர்வீக கோயிலின் முக்கிய கருவறையில் இசக்கியம்மன் இருக்கிறாள். இந்த சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில், குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனைத் தொட்டில்கள் உள்ளன. இந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தால், முகப்பு மண்டபம். இங்கு கிழக்கு நோக்கி நிற்கிறார் சுடலைமாடன். பூர்வீகக் கோயில், வீடு போன்ற அமைப்பில் உள்ளது.
புதிய கோயில் கோபுரத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் மூலவ மூர்த்தமாக காட்சி தருகிறாள் இசக்கி அம்மன். இவளுக்கு வலப் புறம் பிராமணத்தி அம்மன். கருவறையின் வெளிச் சுற்றில் விஷ்ணு துர்கை மற்றும் வைணவிதேவியை காணலாம். மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், ஒளவையாரம்மன், பாலமுருகன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். கோயில் முகப்பில் கிழக்கு நோக்கி சுடலைமாடன்; எதிரே பட்டவராயர்.
இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு, திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் ‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து, பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறிகளுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது, இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.
பிளவுக்கல் என்ற இடத்தில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப்பிரிவினைக்காக உயரமான பாறையைச் சமமாக பிளந்து வெளிப்பட்டாள் என்ற கதையும் காணப்படுகிறது. குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.
மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!
இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை.
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.
முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித்தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.
எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர்களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது. மனைவியின் மேல் பிரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்ட செட்டியாரின் மகன், அவளது சொத்தை அபகரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான்.
அன்றைய தினம்… முப்பந்தலில் மூவேந்தர்களுக்கும் மத்தியஸ்தம் நடந்தது. இதைக் காண்பதற்காக இசக்கியை அழைத்துச் சென்றான் செட்டியார் மகன். வழியில், பயணக் களைப்பும் தாகமும் சேர்ந்து அவளை வாட்டின. உடனே அந்த இடத்தில் மணலை குவித்து, இசக்கியை அதில் படுக்கச் சொன்ன செட்டியார் மகன், தண்ணீர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான். அப்படியே உறங்கிப் போனாள் இசக்கி. திரும்பி வந்த செட்டியார் மகன், இதுதான் தக்க தருணம் என்று கருதி பாறாங்கல்லைத் தூக்கி இசக்கியின் தலையில்போட்டான். துடிதுடித்து இறந்தாள் இசக்கி.
பிறகு, தனக்கும் தாகம் எடுக்கவே தண்ணீரைத் தேடி ஓடினான். சிறிது தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றைக் கண்டவன், அதிலிருந்து தண்ணீர் சேகரிக்க முயன்றான். அப்போது, கருநாகம் தீண்டி அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான்.
இந்த நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் சென்று தன் கணவனே தன்னைக் கொன்ற விவரத்தைக் கூறி நியாயம் கேட்டாள். அவளிடம், “அவன் செய்த பாவத்துக்கு அவனும் பலியாகி விட்டான்” என்றார் சிவன். ஆனாலும் இசக்கி சமாதானம் அடையவில்லை.
“என்னை நம்ப வைத்து சாகடித்தவனை, நானே பழி தீர்க்க வேண்டும். எனவே, என்னையும் அவனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று வேண்டினாள். ‘அப்படியே ஆகட்டும்‘ என அருளினார் சிவன். அதன்படி, கிணற்றடியில் இறந்து கிடந்த செட்டியார் மகன் தடாலென எழுந்து வீட்டுக்குச் சென்றான். இசக்கியோ, பிறந்த வீட்டுக்கும் செல்லாமல், புகுந்த வீட்டுக்கும் போகாமல் கணவனை அழிப்பதற்காக சுற்றித் திரிந்தாள்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள், பழவூர் நோக்கி ஆவேசத்துடன் கிளம்பினாள் இசக்கி. வழியில், கள்ளிச்செடியை ஒடித்துத் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டாள். அந்தச் செடி, குழந்தையாக மாறியது.
குழந்தையுடன் பழவூர் மந்தைக்கு வந்தவள், ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாள். “உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவன், என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இங்கு வந்து விட்டான். என்னையும் அவனையும் சேர்த்து வையுங்கள்” என்று முறையிட்டாள்.
பஞ்சாயத்தார், “உன் கணவன் யாரென்று சொல்” என்றனர். உடனே குழந்தையைத் தரையில் இறக்கி விட்டவள், “இந்தக் குழந்தை தன் தகப்பனை அடையாளம் காட்டும்” என்றாள். அதன்படி, கூட்டத்தில் இருந்த செட்டியார் மகனை, ‘அப்பா‘ என்று அழைத்தபடி அவனிடம் சென்றது குழந்தை. உடனே, இருவரையும் சேர்த்து வைப்பது எனப் பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். “கொலை செய்யப்பட்டவள் உயிருடன் எப்படி வந்தாள்?” என்று குழம்பித் தவித்தான் செட்டியார் மகன். பஞ்சாயத்தாரும் ஊர்மக்களும் சேர்ந்து, இருவரையும் ஒரு வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டினர். தவிர, வீட்டுக்கு வெளியே காவலுக்கும் நின்றனர்.
வீட்டுக்குள் விசுவ ரூபமெடுத்து தன்னை வெளிக் காட்டினாள் இசக்கி. அரண்டு போன செட்டியார் மகன் அவளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால் மனம் இரங்காத இசக்கி, விடிவதற்குள் அவன் கதையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். ஆனாலும் அவளது கோபம் தணியவில்லை. பழவூர் கிராமத்தையே தீக்கிரையாக்கினாள். எரிந்து சாம்பலாகும் ஊரைப் பரவசத்துடன் பார்த்தவள், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள்.
அன்று முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார், அவளை அழைத்து சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். ஊரைக் காக்கும்தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், “முப்பந்தல் இசக்கியம்மன்” என்று பெயர் கொண்டாள்.
இதன் பிறகு இசக்கியின் அண்ணன்களான சுடலைமாடன், பட்டவராயன் இருவரும் அவளுக்குத் துணையாக அவளது வாசலிலேயே குடியேறினர். துவக்கத்தில் இசக்கியம்மனுக்கு ஒரேயொரு கோயில் மட்டுமே இருந்தது. பின்னர், பூர்வீக கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் ஒன்றையும் எழுப்பினர்.
பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.
பூர்வீக கோயிலின் முக்கிய கருவறையில் இசக்கியம்மன் இருக்கிறாள். இந்த சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில், குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனைத் தொட்டில்கள் உள்ளன. இந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தால், முகப்பு மண்டபம். இங்கு கிழக்கு நோக்கி நிற்கிறார் சுடலைமாடன். பூர்வீகக் கோயில், வீடு போன்ற அமைப்பில் உள்ளது.
புதிய கோயில் கோபுரத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் மூலவ மூர்த்தமாக காட்சி தருகிறாள் இசக்கி அம்மன். இவளுக்கு வலப் புறம் பிராமணத்தி அம்மன். கருவறையின் வெளிச் சுற்றில் விஷ்ணு துர்கை மற்றும் வைணவிதேவியை காணலாம். மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், ஒளவையாரம்மன், பாலமுருகன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். கோயில் முகப்பில் கிழக்கு நோக்கி சுடலைமாடன்; எதிரே பட்டவராயர்.
இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு, திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் ‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து, பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறிகளுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது, இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.
பிளவுக்கல் என்ற இடத்தில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப்பிரிவினைக்காக உயரமான பாறையைச் சமமாக பிளந்து வெளிப்பட்டாள் என்ற கதையும் காணப்படுகிறது. குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.
மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!
இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை.
பச்சைமலை(மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும்.
பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.
பச்சைமலை - பெயர்க்காரணம்
நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.
வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.
காலங்கள் கடந்தோட, மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.
மூலவர்
பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.
ஸ்ரீ ஷண்முகர்
பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.
பூஜை விபரம் / திறந்திருக்கும் நேரம்
பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.
இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும்.
அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது. கல்யாண சுப்பிரமணியர் முன் இந்த இறுதி தீபராதனையில் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிறகு பிரசாதமாக திணை மாவு மற்றும் ஞானப்பால் வழங்கபடுகிறது.
இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி
பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 Km தொலைவிலும், கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 80 Km தொலைவிலும் அமைந்துள்ளது.
பச்சைமலை - பெயர்க்காரணம்
நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.
வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.
காலங்கள் கடந்தோட, மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.
மூலவர்
பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.
ஸ்ரீ ஷண்முகர்
பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.
பூஜை விபரம் / திறந்திருக்கும் நேரம்
பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.
இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும்.
அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது. கல்யாண சுப்பிரமணியர் முன் இந்த இறுதி தீபராதனையில் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிறகு பிரசாதமாக திணை மாவு மற்றும் ஞானப்பால் வழங்கபடுகிறது.
இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி
பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 Km தொலைவிலும், கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 80 Km தொலைவிலும் அமைந்துள்ளது.
பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.
மூலவர் – பள்ளி கொண்ட பெருமாள்
தாயார் – ரங்கநாயகி
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் – பள்ளி கொண்டான்
மாவட்டம் – வேலூர்
மாநிலம் – தமிழ்நாடு
மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.
இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “க்ஷீரநதி” என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.
தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், இராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் “பாலாறு” என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.
இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.
இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் “சோட்டா ரங்கநாதர்” எனப்படுகிறார்.
திருவிழா:
சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.
வேண்டுகோள்:
தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,
பள்ளிகொண்டான் – 635 809.
வேலூர் மாவட்டம்
+91- 94439 89668, 94436 86869.
தாயார் – ரங்கநாயகி
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் – பள்ளி கொண்டான்
மாவட்டம் – வேலூர்
மாநிலம் – தமிழ்நாடு
மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.
இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “க்ஷீரநதி” என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.
தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், இராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் “பாலாறு” என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.
இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.
இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் “சோட்டா ரங்கநாதர்” எனப்படுகிறார்.
திருவிழா:
சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.
வேண்டுகோள்:
தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,
பள்ளிகொண்டான் – 635 809.
வேலூர் மாவட்டம்
+91- 94439 89668, 94436 86869.
கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமான மூர்த்தமாக, பைரவர் விளங்குகிறார். ஈசனை வழிபடுபவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பவர் இவரே. இவரை வணங்குபவர்களுக்கு எம பயம் இல்லை. சிவாலயங்கள் அனைத்திலும் இவர் வீற்றிருப்பார். நாயை வாகனமாகக் கொண்டவர். வேதங்களே, நாய் வடிவில் இவரது வாகனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் குண்டடம் பகுதியில் அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்திருந்தன. எனவே இதற்கு ‘இந்து வனம்’ என்று பெயர். இந்த இடத்தில் விடங்கி முனிவர் என்பவர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த வனத்தில் இருந்த சீசகன் என்ற அரக்கன், விடங்கி முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தான். அவரையும் கொல்லத் துணிந்தான். இதனால் பதறிப் போன முனிவர், காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நினைத்து வேண்டினார்.
தன்னுடைய பக்தனுக்கு ஏதாவது இடையூறு என்றால், ஈசன் விட்டு விடுவாரா என்ன.. முனிவரின் வேண்டுதலுக்கு மதிப்பு கொடுத்து, தன்னுடைய வடிவங்களில் ஒருவரான வடுக பைரவரை அனுப்பி வைத்தார். காசியில் இருந்து குண்டடம் வந்த வடுக பைரவர், அரக்கனை கொன்று தன்னுடைய கடமையை செய்து முடித்தார். இதையடுத்து விடங்கி முனிவர் மீண்டும் தன்னுடைய தவத்தைத் தொடங்கினார். அவருக்கு வேறு எந்த அரக்கர்களாலும் இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பைரவர் அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்பினார். இதற்காக அங்கிருந்த ஒரு இலந்தை மரத்தடியில் குடியமர்ந்தார்.
விடங்கி முனிவர் தன்னுடைய தவம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொர்க்கம் செல்ல முன்வந்தார். அதற்கு முன்னதாக, பைரவர் குடிகொண்டிருந்த இலந்தை மரத்தைச் சுற்றி சிறிய கோவில் ஒன்றை எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால், இத்தல இறைவன் ‘விடங்கீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு ‘கொங்கு வடுகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
ஆலய அமைப்பு
ஆரம்ப காலத்தில் இந்தக் கோவில் எட்டு பிரகாரங்கள், எட்டுத் தெப்பக்குளங்கள் என்று மிகப் பிரமாண்டமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் தென்படுகின்றன.
ராஜகோபுரத்தை தரிசித்து ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜப் பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்கலாம். கோவிலுக்கு என்று நந்தவனமும் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இடது பக்கம் நோக்கிய நிலையில் இருக்கிறது. தனிச் சன்னிதிகளில் விசாலட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக காலபைரவரின் வடிவமான வடுகநாதரின் சன்னிதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக செய்யப் படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 66 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் குண்டடம் அமைந்துள்ளது. பல்லடத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமான மூர்த்தமாக, பைரவர் விளங்குகிறார். ஈசனை வழிபடுபவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பவர் இவரே. இவரை வணங்குபவர்களுக்கு எம பயம் இல்லை. சிவாலயங்கள் அனைத்திலும் இவர் வீற்றிருப்பார். நாயை வாகனமாகக் கொண்டவர். வேதங்களே, நாய் வடிவில் இவரது வாகனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் குண்டடம் பகுதியில் அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்திருந்தன. எனவே இதற்கு ‘இந்து வனம்’ என்று பெயர். இந்த இடத்தில் விடங்கி முனிவர் என்பவர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த வனத்தில் இருந்த சீசகன் என்ற அரக்கன், விடங்கி முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தான். அவரையும் கொல்லத் துணிந்தான். இதனால் பதறிப் போன முனிவர், காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நினைத்து வேண்டினார்.
தன்னுடைய பக்தனுக்கு ஏதாவது இடையூறு என்றால், ஈசன் விட்டு விடுவாரா என்ன.. முனிவரின் வேண்டுதலுக்கு மதிப்பு கொடுத்து, தன்னுடைய வடிவங்களில் ஒருவரான வடுக பைரவரை அனுப்பி வைத்தார். காசியில் இருந்து குண்டடம் வந்த வடுக பைரவர், அரக்கனை கொன்று தன்னுடைய கடமையை செய்து முடித்தார். இதையடுத்து விடங்கி முனிவர் மீண்டும் தன்னுடைய தவத்தைத் தொடங்கினார். அவருக்கு வேறு எந்த அரக்கர்களாலும் இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பைரவர் அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்பினார். இதற்காக அங்கிருந்த ஒரு இலந்தை மரத்தடியில் குடியமர்ந்தார்.
விடங்கி முனிவர் தன்னுடைய தவம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொர்க்கம் செல்ல முன்வந்தார். அதற்கு முன்னதாக, பைரவர் குடிகொண்டிருந்த இலந்தை மரத்தைச் சுற்றி சிறிய கோவில் ஒன்றை எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால், இத்தல இறைவன் ‘விடங்கீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு ‘கொங்கு வடுகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
ஆலய அமைப்பு
ஆரம்ப காலத்தில் இந்தக் கோவில் எட்டு பிரகாரங்கள், எட்டுத் தெப்பக்குளங்கள் என்று மிகப் பிரமாண்டமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் தென்படுகின்றன.
ராஜகோபுரத்தை தரிசித்து ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜப் பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்கலாம். கோவிலுக்கு என்று நந்தவனமும் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இடது பக்கம் நோக்கிய நிலையில் இருக்கிறது. தனிச் சன்னிதிகளில் விசாலட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக காலபைரவரின் வடிவமான வடுகநாதரின் சன்னிதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக செய்யப் படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 66 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் குண்டடம் அமைந்துள்ளது. பல்லடத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
பாண்டிய மன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலாகும்.
இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்
தலசிறப்பு
செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருக பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய கண்ணனாய் கலைகள் களையும் தோழனாய் அருள்பாலித்து வருகிறார். அதனாலே இத்தளத்திலுள்ள காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
சூரிய பூஜை
அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். இக்காட்சியை காண பக்தர்கள் பெருமளவில் கூடுவர். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
குழந்தைப்பேறு பிரார்த்தனை ஸ்தலம்
மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.
12 இராசிகளுக்குமான குபேரன்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். இதுவன்றி 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.
இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.
வெள்ளித்தேர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கும் மலையின் வெளி பிரகாரத்தில் மாலை 6.00 மணிக்கு வெள்ளி ரதம் பவனி வருகிறது. வெள்ளிரத புறப்பாட்டு கட்டணமாக ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 20,000/-ம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பிய நாளில் வெள்ளிரத புறப்பாடு செய்யலாம்.
அழகிய மலை மீது அழகன் முருகன் அருள்பாளிக்கிறார். இம்மலை மீது ஏறிசெல்ல தனிப்படிகளும், இறங்கி வர தனிப்படிகளும் வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைந்துள்ளது.
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்
தலசிறப்பு
செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருக பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய கண்ணனாய் கலைகள் களையும் தோழனாய் அருள்பாலித்து வருகிறார். அதனாலே இத்தளத்திலுள்ள காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
சூரிய பூஜை
அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். இக்காட்சியை காண பக்தர்கள் பெருமளவில் கூடுவர். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
குழந்தைப்பேறு பிரார்த்தனை ஸ்தலம்
மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.
12 இராசிகளுக்குமான குபேரன்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். இதுவன்றி 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.
இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.
வெள்ளித்தேர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கும் மலையின் வெளி பிரகாரத்தில் மாலை 6.00 மணிக்கு வெள்ளி ரதம் பவனி வருகிறது. வெள்ளிரத புறப்பாட்டு கட்டணமாக ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 20,000/-ம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பிய நாளில் வெள்ளிரத புறப்பாடு செய்யலாம்.
அழகிய மலை மீது அழகன் முருகன் அருள்பாளிக்கிறார். இம்மலை மீது ஏறிசெல்ல தனிப்படிகளும், இறங்கி வர தனிப்படிகளும் வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைந்துள்ளது.






