என் மலர்
கோவில்கள்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்காரா வட்டம், சடையமங்கலம் வட்டாரத்தில் இருக்கும் இட்டிவா என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது குடவரைக் கோயில்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்காரா வட்டம், சடையமங்கலம் வட்டாரத்தில் இருக்கும் இட்டிவா என்னும் கிராமத்தின் கோட்டுக்கல் பகுதியில் சிவபெருமான், கணபதி மற்றும் அனுமன் சன்னிதிகளைக் கொண்டிருக்கும் குடவரைக் கோயில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
இந்தக் குடவரைக் கோவிலுக்கென்று தனிப்பட்ட தல வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இக்கோவில், கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில், குறிப்பாக, பாண்டிய நாட்டு மன்னன் ஜடில பராந்தக நெடுஞ் சடையன் என்கிற முதலாம் வரகுணன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குச் சான்றாக, இப்பகுதியில் இருக்கும் பெரிய ஊருக்குச் சடையமங்கலம் என்று பெயர் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
கோவில் அமைப்பு
வயலின் நடுவே இயற்கையாய் அமைந்துள்ள குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைக் கோவில் தொலைவிலிருந்து பார்க்கும் போது, ஒரு யானை படுத்திருப்பது போன்று சிறிய குன்றாகத் தோற்றமளிக்கிறது.
இந்தச் சிறிய குன்றில், கிழக்கு நோக்கியபடி இரண்டு குடவரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இருக்கும் குடவரையில் சதுர வடிவிலான கருவறையும், செவ்வக வடிவத்தில் முன்மண்டபமும் உள்ளது. குட வரையின் முகப்பில் இரண்டு பெரிய தூண்கள், உத்திரம் அமைக்கப்பட்டு மேற்பகுதியைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கருவறையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், அதன் முன்பகுதியில் நந்தியும் இருக்கிறது.
இரண்டாவது குடவரை நீள்வட்டமான கருவறையைக் கொண்டிருக்கிறது. இங்கு முன்மண்டபம் இல்லை. இக்கருவறையில் அனுமன் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த இரு கருவறைகளுக்கிடையிலான பாறையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட இடத்தினுள் கணபதி அமர்ந்த நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிணற்றில் இருக்கும் நீர் இதுவரை வற்றியதே இல்லை என்கின்றனர்.
கல்லில் செதுக்கிய கோவில் என்பதை, மலையாளத்தில் ‘கொட்டிய கல்லுக் கோவில்’ என்று அழைத்து, பின்னர் ‘கொட்டுக்கல்’ என்றும் அழைத்தனர். நாளடைவில் அதுவே ‘கோட்டுக்கல் கோவில்’ என்றும், ‘கோட்டுக்கல் குடவரைக் கோவில்’ என்றும் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கான பிரதான ஆலயமாக இருக்கிறது. இங்கு சிவபெருமான் தவிர, கணபதி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த ஆலயத்தை மலையாளத்தில் ‘திரிகோவில்' என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் சிவராத்திரி நாளில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சடையமங்கலம் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலை விலும், அஞ்சல் எனும் ஊரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல சடையமங்கலம், அஞ்சல் ஆகிய ஊர்களிலிருந்து உள்ளூர் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கொல்லம், திருவனந்தபுரம் ஊர் களிலிருந்து சடையமங்கலம் வழியாகப் பல நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
தல வரலாறு :
இந்தக் குடவரைக் கோவிலுக்கென்று தனிப்பட்ட தல வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இக்கோவில், கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில், குறிப்பாக, பாண்டிய நாட்டு மன்னன் ஜடில பராந்தக நெடுஞ் சடையன் என்கிற முதலாம் வரகுணன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குச் சான்றாக, இப்பகுதியில் இருக்கும் பெரிய ஊருக்குச் சடையமங்கலம் என்று பெயர் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
கோவில் அமைப்பு
வயலின் நடுவே இயற்கையாய் அமைந்துள்ள குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைக் கோவில் தொலைவிலிருந்து பார்க்கும் போது, ஒரு யானை படுத்திருப்பது போன்று சிறிய குன்றாகத் தோற்றமளிக்கிறது.
இந்தச் சிறிய குன்றில், கிழக்கு நோக்கியபடி இரண்டு குடவரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இருக்கும் குடவரையில் சதுர வடிவிலான கருவறையும், செவ்வக வடிவத்தில் முன்மண்டபமும் உள்ளது. குட வரையின் முகப்பில் இரண்டு பெரிய தூண்கள், உத்திரம் அமைக்கப்பட்டு மேற்பகுதியைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கருவறையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், அதன் முன்பகுதியில் நந்தியும் இருக்கிறது.
இரண்டாவது குடவரை நீள்வட்டமான கருவறையைக் கொண்டிருக்கிறது. இங்கு முன்மண்டபம் இல்லை. இக்கருவறையில் அனுமன் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த இரு கருவறைகளுக்கிடையிலான பாறையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட இடத்தினுள் கணபதி அமர்ந்த நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிணற்றில் இருக்கும் நீர் இதுவரை வற்றியதே இல்லை என்கின்றனர்.
கல்லில் செதுக்கிய கோவில் என்பதை, மலையாளத்தில் ‘கொட்டிய கல்லுக் கோவில்’ என்று அழைத்து, பின்னர் ‘கொட்டுக்கல்’ என்றும் அழைத்தனர். நாளடைவில் அதுவே ‘கோட்டுக்கல் கோவில்’ என்றும், ‘கோட்டுக்கல் குடவரைக் கோவில்’ என்றும் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கான பிரதான ஆலயமாக இருக்கிறது. இங்கு சிவபெருமான் தவிர, கணபதி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த ஆலயத்தை மலையாளத்தில் ‘திரிகோவில்' என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் சிவராத்திரி நாளில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சடையமங்கலம் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலை விலும், அஞ்சல் எனும் ஊரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல சடையமங்கலம், அஞ்சல் ஆகிய ஊர்களிலிருந்து உள்ளூர் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கொல்லம், திருவனந்தபுரம் ஊர் களிலிருந்து சடையமங்கலம் வழியாகப் பல நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக (கிருஷ்ணன்) அவதரித்து, கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து பால லீலைகள் பல புரிந்தவர். இக்கலியுகத்தில் வில்லிவாக்கம் எனும் சேத்திரத்தில் சவுமிய தாமோதரனாக சேவை சாதிக்கிறார்.
பக்தர்களிடம் நீங்காத அன்புள்ளவரும், தாமரை மலரின் (உட்புறம்) சிவந்த நிறமுள்ளவரும், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவரும், எல்லாவற்றுக்கும் காரணமானவரும், யசோதை தாயால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு ஏற்பட்டுள்ள வயிறுள்ளவரும், எதையும் பொறுத்துக்கொள்ளும் அடக்கக் குணத்தால் தம் தாய்க்குப் பெருமை சேர்த்தவரே தாமோதரன்!
அன்னையின் வளர்ப்பு :
அத்ரி மகரிஷியின் மகன் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் ஞானமார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். அசுர குணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு விலகி, காட்டிற்குச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, ரிஷிகளை பழிவாங்கும்படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள்.
அதன்படியே, அண்ணனும் தம்பியும் சிவ பக்தர்களைப்போல வேடம் கொண்டு, அவ்வழியே வரும் முனிவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை உணவாக சமைத்து, விருந்து உபசரிப்பார் வில்வலன். முனிவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ‘வாதாபி வெளியே வா!' என்று வில்வலன் அழைத்ததும், முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே தாவிக் குதிப்பான். உடனே முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.
இதனால் பயம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதற்கு ஈசன், அகத்திய மகரிஷி பூலோகம் வரும்பொழுது இதற்கு ஒரு முடிவு ஏற்படும்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.
சில காலம் கழித்து, பூலோகத்தில் தென்திசை வழியாக அகத்தியர் வந்தபோது, ரிஷிகளுக்கு நடந்த கொடுமைகளை தம் ஞானத்தினால் அறிந்துகொண்டார். வழக்கம்போல வில்வலனும் வாதாபியும் அகத்தியரை விருந்துக்கு அழைத்து உபசரித்தார்கள். முன்னதாகவே இந்த சூழ்ச்சியை அறிந்திருந்த அகத்தியர் விருந்துண்டதும், மந்திர சக்தியால் வாதாபியை தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார். தாம்பூலம் தந்து உபசரித்த வில்வலன், எப்போதும்போல் ‘வாதாபி வெளியே வா!' என்றான். அகத்தியர் சிரித்துக்கொண்டே வயிற்றைத் தடவினார்.
தம்பி வெளியே வரமுடியாதது கண்டு கோபங்கொண்ட வில்வலன், அகத்தியரை பலவிதமாகத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தம் இஷ்ட தெய்வம் முருகன் மற்றும் சிவன், விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். சிவனும் விஷ்ணுவும் அனுமதி தர, முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து, அருகம்புல்லை அஸ்திரமாக விடும்படி அகத்தியரிடம் கூறினார். அவ்வாறே செய்து வில்வலனை சம்ஹாரம் செய்தார். இதனால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அகத்தியரின் ஆசை
தோஷ நிவர்த்திக்காக சிவனை வேண்டினார் அகத்தியர். அவ் விடத்தில், அங்காரஹத் தீர்த்தக் குளம் ஒன்றையும், வழிபட சிறிய படிகலிங்கம் ஒன்றையும் அகத்தியரிடம் வழங்கினார் ஈசன். அதற்கு நன்றி கூறிய அகத்தியர், ‘சுவாமி! எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ ஞாபகார்த்தமாக தாங்களும் விஷ்ணுவும் இந்த வனத்திலேயே திருக்கோவில் கொண்டு பக்தர்களைக் காப்பற்ற வேண்டும்’ என்று பணிந்து நின்றார். அதன்படியே இங்கு தனித்தனியே கோவில் கொண்டனர் ஈசனும், பெருமாளும்.
புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.
இவ்வாலயம், தென்கலை வைணவத்தலங்களுள் சிறப்புமிக்கத் தலமாகவும், வைகானச ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவிலாகவும் விளங்குகிறது.
முழங்கால் அளவு
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் சவுமிய தாமோதரப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேற்கரம் இரண்டும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரம் ஆவாஹன ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது (வழிபடும் பக்தர் களைக் காப்பாற்றுவேன், கவலை வேண்டாம் என உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், உங்கள் துயரம் முழங்கால் அளவுதான் என்று உணர்த்தும் ஆவாஹன ஹஸ்தமாகவும் உள்ளது). பெருமாளின் அடிவற்றில் தழும்பு வடுக்கள் அமைந்துள்ளன.
அமிர்தவல்லித் தாயார் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேல் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள் தாங்கி, கீழ்க்கரம் இரண்டும் வரத, அபய முத்திரைகளுடன் புன்னகை தவழும் முகத்துடன் தாயார் சேவை சாதிக்கிறார்.
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமிர்தவல்லித் தாயார் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருகிறார். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி தினங்களில் (பஞ்சபர்வ உற்சவம்) தாயாரும் பெருமாளும் தோட்டத்தில் உலா வந்து, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வழிபாட்டு முறை
கை, கால் சுத்தம் செய்து கொண்டு, முதலில் பலி பீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, பூமி நமஸ்காரம் செய்து வெளிப்பிரகாரம், அஷ்டதிக் பலி பீடங் களையும் வலம் வந்து மீண்டும் கொடி மரத்தை வணங்கி தாயார், கண்ணன், ராமர் சன்னிதிகளை வணங்கி, ஆண்டாள், ஆழ்வார்களையும் வணங்கி, வலம்வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி, ‘பெரிய திருவடி' கருடனை வணங்கி, ஜய, விஜயர்கள் உத்தரவு பெற்றுக்கொண்டு கருவறையிலுள்ள பெருமாளை வணங்கி, பிறகு ‘சிறிய திருவடி' அனுமனை வழிபடவும்.
வழிபாட்டு பலன்
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழி படுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தை களுக்கு தானம் தருவது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம்இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.
அமைவிடம்
சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் - பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது.
பக்தர்களிடம் நீங்காத அன்புள்ளவரும், தாமரை மலரின் (உட்புறம்) சிவந்த நிறமுள்ளவரும், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவரும், எல்லாவற்றுக்கும் காரணமானவரும், யசோதை தாயால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு ஏற்பட்டுள்ள வயிறுள்ளவரும், எதையும் பொறுத்துக்கொள்ளும் அடக்கக் குணத்தால் தம் தாய்க்குப் பெருமை சேர்த்தவரே தாமோதரன்!
அன்னையின் வளர்ப்பு :
அத்ரி மகரிஷியின் மகன் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் ஞானமார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். அசுர குணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு விலகி, காட்டிற்குச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, ரிஷிகளை பழிவாங்கும்படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள்.
அதன்படியே, அண்ணனும் தம்பியும் சிவ பக்தர்களைப்போல வேடம் கொண்டு, அவ்வழியே வரும் முனிவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை உணவாக சமைத்து, விருந்து உபசரிப்பார் வில்வலன். முனிவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ‘வாதாபி வெளியே வா!' என்று வில்வலன் அழைத்ததும், முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே தாவிக் குதிப்பான். உடனே முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.
இதனால் பயம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதற்கு ஈசன், அகத்திய மகரிஷி பூலோகம் வரும்பொழுது இதற்கு ஒரு முடிவு ஏற்படும்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.
சில காலம் கழித்து, பூலோகத்தில் தென்திசை வழியாக அகத்தியர் வந்தபோது, ரிஷிகளுக்கு நடந்த கொடுமைகளை தம் ஞானத்தினால் அறிந்துகொண்டார். வழக்கம்போல வில்வலனும் வாதாபியும் அகத்தியரை விருந்துக்கு அழைத்து உபசரித்தார்கள். முன்னதாகவே இந்த சூழ்ச்சியை அறிந்திருந்த அகத்தியர் விருந்துண்டதும், மந்திர சக்தியால் வாதாபியை தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார். தாம்பூலம் தந்து உபசரித்த வில்வலன், எப்போதும்போல் ‘வாதாபி வெளியே வா!' என்றான். அகத்தியர் சிரித்துக்கொண்டே வயிற்றைத் தடவினார்.
தம்பி வெளியே வரமுடியாதது கண்டு கோபங்கொண்ட வில்வலன், அகத்தியரை பலவிதமாகத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தம் இஷ்ட தெய்வம் முருகன் மற்றும் சிவன், விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். சிவனும் விஷ்ணுவும் அனுமதி தர, முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து, அருகம்புல்லை அஸ்திரமாக விடும்படி அகத்தியரிடம் கூறினார். அவ்வாறே செய்து வில்வலனை சம்ஹாரம் செய்தார். இதனால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அகத்தியரின் ஆசை
தோஷ நிவர்த்திக்காக சிவனை வேண்டினார் அகத்தியர். அவ் விடத்தில், அங்காரஹத் தீர்த்தக் குளம் ஒன்றையும், வழிபட சிறிய படிகலிங்கம் ஒன்றையும் அகத்தியரிடம் வழங்கினார் ஈசன். அதற்கு நன்றி கூறிய அகத்தியர், ‘சுவாமி! எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ ஞாபகார்த்தமாக தாங்களும் விஷ்ணுவும் இந்த வனத்திலேயே திருக்கோவில் கொண்டு பக்தர்களைக் காப்பற்ற வேண்டும்’ என்று பணிந்து நின்றார். அதன்படியே இங்கு தனித்தனியே கோவில் கொண்டனர் ஈசனும், பெருமாளும்.
புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.
இவ்வாலயம், தென்கலை வைணவத்தலங்களுள் சிறப்புமிக்கத் தலமாகவும், வைகானச ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவிலாகவும் விளங்குகிறது.
முழங்கால் அளவு
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் சவுமிய தாமோதரப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேற்கரம் இரண்டும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரம் ஆவாஹன ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது (வழிபடும் பக்தர் களைக் காப்பாற்றுவேன், கவலை வேண்டாம் என உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், உங்கள் துயரம் முழங்கால் அளவுதான் என்று உணர்த்தும் ஆவாஹன ஹஸ்தமாகவும் உள்ளது). பெருமாளின் அடிவற்றில் தழும்பு வடுக்கள் அமைந்துள்ளன.
அமிர்தவல்லித் தாயார் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேல் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள் தாங்கி, கீழ்க்கரம் இரண்டும் வரத, அபய முத்திரைகளுடன் புன்னகை தவழும் முகத்துடன் தாயார் சேவை சாதிக்கிறார்.
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமிர்தவல்லித் தாயார் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருகிறார். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி தினங்களில் (பஞ்சபர்வ உற்சவம்) தாயாரும் பெருமாளும் தோட்டத்தில் உலா வந்து, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வழிபாட்டு முறை
கை, கால் சுத்தம் செய்து கொண்டு, முதலில் பலி பீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, பூமி நமஸ்காரம் செய்து வெளிப்பிரகாரம், அஷ்டதிக் பலி பீடங் களையும் வலம் வந்து மீண்டும் கொடி மரத்தை வணங்கி தாயார், கண்ணன், ராமர் சன்னிதிகளை வணங்கி, ஆண்டாள், ஆழ்வார்களையும் வணங்கி, வலம்வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி, ‘பெரிய திருவடி' கருடனை வணங்கி, ஜய, விஜயர்கள் உத்தரவு பெற்றுக்கொண்டு கருவறையிலுள்ள பெருமாளை வணங்கி, பிறகு ‘சிறிய திருவடி' அனுமனை வழிபடவும்.
வழிபாட்டு பலன்
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழி படுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தை களுக்கு தானம் தருவது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம்இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.
அமைவிடம்
சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் - பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது.
நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இது வரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.
இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வள ரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப் போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம் மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார்.
கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது.
காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ர மணியர் சந்நதி.
நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந் தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இது வரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.
இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வள ரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப் போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம் மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார்.
கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது.
காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ர மணியர் சந்நதி.
நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந் தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
கல்வி மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டியும் வழிபடும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் இருக்கிறது.
தல வரலாறு :
காசியப முனிவர் - திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமியற்றி, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று வரங்களைப் பெற்று, மூன்று உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய சகோதரனான இரண்யாட்சனும் தவமியற்றிப் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று, பெரும் ஆற்றலுடையவனாக இருந்தான். அவன், தனது ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தித் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்து வந்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தான். அதனால், அவன் கண் பார்வையில் படாமல், தேவர்கள் அனைவரும் மறைந்து வாழ்ந்தனர்.
ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவின் மகன் சுயம்பு, படைப்புத் தொழிலைத் தொடங்கினார். கடலுக்கடியில் பூமி மூழ்கிக் கிடந்ததால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் வாழ்விடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவர், கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பூமியை மீட்டுத் தரும்படி தந்தையான பிரம்மனிடம் வேண்டினார்.
பிரம்மனுக்கு, இரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுத் தரும் பலமில்லாததால், அவர் விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். விஷ்ணுவும் பூமியை மீட்பதற்காக, வராகம் (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து, கடலில் மூழ்கிக் கிடந்த பூமியைத் தனது தெற்றுப் பற்களினால் மேலேத் தூக்கி வந்தார்.
பூமியை மீட்பதற்காக இரண்யாட்சனுடன் செய்த போரினால், கோபமடைந்திருந்த விஷ்ணுவை அமைதிப் படுத்த வந்த லட்சுமி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். மனைவி லட்சுமியின் அன்பில் கோபம் குறைந்த விஷ்ணு, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இந்தக் கதையினை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் அமைக்கப்பட்டிருக் கிறது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலை இறைவன் விஷ்ணுவே உருவாக்கியதாக வராக புராணத்தில் தெரிவிக்கப்பட் டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
இக்கோவிலில் வட்ட வடிவிலான கருவறையில் வராக மூர்த்தி மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது மடியில் லட்சுமி இருக்கிறார். அவருடைய நாற்கரங்களில், பின்புறமுள்ள இரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. முன்புறமுள்ள கரங்களில் இடது கரம், அவரது மடியில் அமர்ந் திருக்கும் லட்சுமியை அணைத்த நிலையிலும், வலது கரம் பக்தர்களுக்கு அருளும் நிலையிலும் இருக்கின்றன.
கருவறைக்கு வெளியிலான சுற்றம்பலத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், நாகராஜா போன்ற திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர, இக்கோவிலில் வெள்ளிக்கவசம் பொருத்திய அனுமன் சிலை ஒன்றும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. இங்குள்ள ‘வராக தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் குளம், கேரள மாநிலக் கோவில்களில் இருக்கும் குளங்களில் இரண்டாவது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபாடும் பலன்களும் :
இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சீவேலி வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழா மற்றும் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்பாயசம், அரவணை, மோதகம், பானகம், பஞ்சாமிர்தம் போன்றவைகளைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் முதன்மை பெற விரும்புபவர்கள், வியாழக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இதே போன்று, வேலைவாய்ப்பு வேண்டிப் பயனடைந்தவர்கள், இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து, லட்சார்ச்சனை, மலர் அபிஷேகம், கலசத் திருமஞ்சனம், துலாபாரம், கருட வாகனச் சேவைகளைச் செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம் இருப்பவர்கள், இக்கோவிலில் இருக்கும் நாகராஜாவுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
நான்கு கால்களுடன் வராக மூர்த்தி :
வர+அஹ = வராஹ. ‘வர’ என்றால் ‘மூடுபவர்’ என்றும், ‘அஹ’ என்றால் ‘எல்லை இல்லாததற்கு எல்லை நிர்ணயித்தல்’ என்றும் பொருள். ‘வராஹ’ என்றால் ‘உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர்’ என்றும், அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள். பிரளய முடிவில், இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக்கொண்டு வந்தது.
தென் மாநிலங்களில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வராகம் (பன்றி) போற்றப்படுகிறது. மனித உடலும், வராக தலையும் கொண்டதாக இந்த அவதாரம் இருக்கும். விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை மடியில் அமர்த்தி, அணைத்தபடி காட்சி தருபவரை ‘லட்சுமி வராகர்’ என் கிறார்கள். வடமாநிலங்களில் இருக்கும் வராக மூர்த்தி சிலைகளில், மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவமே உள்ளது.
சதுர்யுகம் :
கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. கிருதயுகம் என்பது 17,28,600 வருடங்களும், திரோதா யுகம் என்பது 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் என்பது 8,64,000 வருடங்களும், கலியுகம் என்பது 4,32,000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் ஆகும். ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்ததும், புதிய சதுர் யுகத்திற்கான முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். இப்படிப் பல சதுர் யுகங்கள் தோன்றியிருக்கின்றன. இந்த சதுர் யுகங்களில் இறைவன் பல முறை புதிய தோற்றத்தை எடுத்து உள்ளார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரப் பகுதியில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு :
காசியப முனிவர் - திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமியற்றி, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று வரங்களைப் பெற்று, மூன்று உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய சகோதரனான இரண்யாட்சனும் தவமியற்றிப் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று, பெரும் ஆற்றலுடையவனாக இருந்தான். அவன், தனது ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தித் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்து வந்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தான். அதனால், அவன் கண் பார்வையில் படாமல், தேவர்கள் அனைவரும் மறைந்து வாழ்ந்தனர்.
ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவின் மகன் சுயம்பு, படைப்புத் தொழிலைத் தொடங்கினார். கடலுக்கடியில் பூமி மூழ்கிக் கிடந்ததால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் வாழ்விடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவர், கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பூமியை மீட்டுத் தரும்படி தந்தையான பிரம்மனிடம் வேண்டினார்.
பிரம்மனுக்கு, இரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுத் தரும் பலமில்லாததால், அவர் விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். விஷ்ணுவும் பூமியை மீட்பதற்காக, வராகம் (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து, கடலில் மூழ்கிக் கிடந்த பூமியைத் தனது தெற்றுப் பற்களினால் மேலேத் தூக்கி வந்தார்.
பூமியை மீட்பதற்காக இரண்யாட்சனுடன் செய்த போரினால், கோபமடைந்திருந்த விஷ்ணுவை அமைதிப் படுத்த வந்த லட்சுமி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். மனைவி லட்சுமியின் அன்பில் கோபம் குறைந்த விஷ்ணு, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இந்தக் கதையினை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் அமைக்கப்பட்டிருக் கிறது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலை இறைவன் விஷ்ணுவே உருவாக்கியதாக வராக புராணத்தில் தெரிவிக்கப்பட் டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
இக்கோவிலில் வட்ட வடிவிலான கருவறையில் வராக மூர்த்தி மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது மடியில் லட்சுமி இருக்கிறார். அவருடைய நாற்கரங்களில், பின்புறமுள்ள இரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. முன்புறமுள்ள கரங்களில் இடது கரம், அவரது மடியில் அமர்ந் திருக்கும் லட்சுமியை அணைத்த நிலையிலும், வலது கரம் பக்தர்களுக்கு அருளும் நிலையிலும் இருக்கின்றன.
கருவறைக்கு வெளியிலான சுற்றம்பலத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், நாகராஜா போன்ற திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர, இக்கோவிலில் வெள்ளிக்கவசம் பொருத்திய அனுமன் சிலை ஒன்றும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. இங்குள்ள ‘வராக தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் குளம், கேரள மாநிலக் கோவில்களில் இருக்கும் குளங்களில் இரண்டாவது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபாடும் பலன்களும் :
இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சீவேலி வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழா மற்றும் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்பாயசம், அரவணை, மோதகம், பானகம், பஞ்சாமிர்தம் போன்றவைகளைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் முதன்மை பெற விரும்புபவர்கள், வியாழக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இதே போன்று, வேலைவாய்ப்பு வேண்டிப் பயனடைந்தவர்கள், இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து, லட்சார்ச்சனை, மலர் அபிஷேகம், கலசத் திருமஞ்சனம், துலாபாரம், கருட வாகனச் சேவைகளைச் செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம் இருப்பவர்கள், இக்கோவிலில் இருக்கும் நாகராஜாவுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
நான்கு கால்களுடன் வராக மூர்த்தி :
வர+அஹ = வராஹ. ‘வர’ என்றால் ‘மூடுபவர்’ என்றும், ‘அஹ’ என்றால் ‘எல்லை இல்லாததற்கு எல்லை நிர்ணயித்தல்’ என்றும் பொருள். ‘வராஹ’ என்றால் ‘உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர்’ என்றும், அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள். பிரளய முடிவில், இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக்கொண்டு வந்தது.
தென் மாநிலங்களில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வராகம் (பன்றி) போற்றப்படுகிறது. மனித உடலும், வராக தலையும் கொண்டதாக இந்த அவதாரம் இருக்கும். விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை மடியில் அமர்த்தி, அணைத்தபடி காட்சி தருபவரை ‘லட்சுமி வராகர்’ என் கிறார்கள். வடமாநிலங்களில் இருக்கும் வராக மூர்த்தி சிலைகளில், மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவமே உள்ளது.
சதுர்யுகம் :
கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. கிருதயுகம் என்பது 17,28,600 வருடங்களும், திரோதா யுகம் என்பது 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் என்பது 8,64,000 வருடங்களும், கலியுகம் என்பது 4,32,000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் ஆகும். ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்ததும், புதிய சதுர் யுகத்திற்கான முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். இப்படிப் பல சதுர் யுகங்கள் தோன்றியிருக்கின்றன. இந்த சதுர் யுகங்களில் இறைவன் பல முறை புதிய தோற்றத்தை எடுத்து உள்ளார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரப் பகுதியில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.
பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருமங்கை நகர், பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை.
இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.
தல வரலாறு :
சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.
அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.
அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.
முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.
சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.
ஆலய அமைப்பு :
இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.
செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.
சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.
அமைவிடம் :
தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் வசதிகளும் உள்ளன.
இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.
தல வரலாறு :
சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.
அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.
அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.
முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.
சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.
ஆலய அமைப்பு :
இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.
செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.
சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.
அமைவிடம் :
தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் வசதிகளும் உள்ளன.
உரோமச முனிவர் நிறுவி வழிபட்ட சிவலிங்கம், சேர்ந்தபூ மங்கலத்தில் கயிலாசநாதர் எனும் திருநாமத்தில் கிழக்கு நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார்.
பொதிகை மலையில் பிறந்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி, கடலில் கலக்கும் இடம் பழங்காலத்தில் ‘கொற்கை’ என்று அழைக்கப்பட்டது. கொற்கை வழியாக ஓடித்தான் வங்கக் கடலில் சங்கமித்திருக்கிறது தாமிரபரணி. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் ஏரலுக்கு முன்பாக ஒரு சிறிய சாலை வடக்கு நோக்கித் திரும்புகிறது. அந்தச் சாலையில் வரும் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் கிழக்கிலும், உமரிக்காடு எனும் கிராமத்திற்கு 4 கிலோமீட்டர் வடக்கிலும், முக்காணி எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் கொற்கை அமைந்துள்ளது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கிய கொற்கையில், தற்போது தாமிரபரணி கடலில் கலக்கவில்லை. ஆம்! கால ஓட்டத்தில் தூர்ந்து கடல் உள்வாங்கியதால் கொற்கையில் தற்போது கடல் இல்லை. மாறாக ஆத்தூர், முக்காணி, சேர்ந்த பூமங்கலம் வழியாக வந்து அருகிலுள்ள பழையகாயல், புன்னக்காயல் பகுதிகள் வழியாக ஓடி வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது தாமிரபரணி.
உரோமச முனிவருக்கு முக்தி அடைய வேண்டும் என்று ஆர்வம். அகத்திய முனிவரின் வழிகாட்டலின்படி தாமிரபரணி நதியில் ஒன்பது பூக்களை மிதக்கவிட்டார். அந்தப் பூக்கள் கரை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்பது அகத்தியர் இட்ட கட்டளை. அதன்படி உரோமச முனிவர் தாமிரபரணி நதியில் மிதக்க விட்ட பூக்கள் முறையே, பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், சங்காணி எனும் குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி ஆகிய தலங்களில் ஒதுங்கியது. அந்த எட்டு தலங்களிலும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர், கடைசிப் பூ கரை சேர்ந்த, ‘சேர்ந்த பூமங்கலம்’ என்ற இடத்திலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகத்தில் நீராடி வழிபட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், முனிவரின் முன்பாக தோன்றினார். மேலும் முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். உரோமச முனிவர் நிறுவி வழிபட்ட சிவலிங்கம், சேர்ந்தபூ மங்கலத்தில் கயிலாசநாதர் எனும் திருநாமத்தில் கிழக்கு நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார். அவரது உடனுறை சக்தியாக தெற்கு நோக்கிய வண்ணம் அழகிய பொன்னம்மை எனும் சவுந்தர்ய நாயகி அருள்கிறாள். சிவகாமி அம்பாள் தான், இங்கு அழகிய பொன்னம்மையாக அருள்வதாக சொல்லப்படுகிறது.
பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி, பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்த பூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சங்குமுகம் பகுதியில் தான் மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து ஒன்றாகும் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எனவே, சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி இத்தல கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்ர தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
ஏனெனில் இங்கு அகத்தியரின் எண்ணப்படி, சிவபெருமான் சுக்ரனின் அம்சமாக இருந்து அருள்கிறார். அதுமட்டுமல்ல இத்தலத்தின் அருகில்தான் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகம் இருக்கிறது. இத்தல தீர்த்தக்கரையினில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வெகு சிறப்பு என்கிறார்கள்.
இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். ஆலயப் பிரகாரத்தில் கன்னி விநாயகர், அறுபத்து மூவர், நால்வர் சன்னிதி, வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், மீனாட்சியம்மன், சொக்கநாதர், நவலிங்கங்கள், பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி போன்றவை உள்ளன. இத்தல நவலிங்க வழிபாடு மனநோய்களை அகற்றும் என்கிறார்கள். பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, சிவராத்திரி, அமாவாசை நாட்களில் இத்தலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இத்தல தாமிரபரணி தீர்த்தக்கரையினில் புஷ்கர நாட்கள், மாதப்பிறப்பு, அமாவாசை நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது நன்மை தரும். இதுநாள் வரை சரியாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, ஆலயத்தை பதினோரு முறை வலம் வரவேண்டும். பின்னர் இங்குள்ள நவலிங்க சன்னிதியில் நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நற்பலன்களை தரும் என்கிறார்கள்.
உரோமச முனிவருக்கு முக்தி கிடைத்த தலம் என்பதால், முன்னோர்களுக்காக இத்தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து, நவலிங்கங்களை வலம் வந்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
அமைவிடம் :
தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருநெல்வேலியில் இருந்து 51 கிலோமீட்டர் தூரத்திலும் மற்றும் ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கிய கொற்கையில், தற்போது தாமிரபரணி கடலில் கலக்கவில்லை. ஆம்! கால ஓட்டத்தில் தூர்ந்து கடல் உள்வாங்கியதால் கொற்கையில் தற்போது கடல் இல்லை. மாறாக ஆத்தூர், முக்காணி, சேர்ந்த பூமங்கலம் வழியாக வந்து அருகிலுள்ள பழையகாயல், புன்னக்காயல் பகுதிகள் வழியாக ஓடி வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது தாமிரபரணி.
உரோமச முனிவருக்கு முக்தி அடைய வேண்டும் என்று ஆர்வம். அகத்திய முனிவரின் வழிகாட்டலின்படி தாமிரபரணி நதியில் ஒன்பது பூக்களை மிதக்கவிட்டார். அந்தப் பூக்கள் கரை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்பது அகத்தியர் இட்ட கட்டளை. அதன்படி உரோமச முனிவர் தாமிரபரணி நதியில் மிதக்க விட்ட பூக்கள் முறையே, பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், சங்காணி எனும் குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி ஆகிய தலங்களில் ஒதுங்கியது. அந்த எட்டு தலங்களிலும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர், கடைசிப் பூ கரை சேர்ந்த, ‘சேர்ந்த பூமங்கலம்’ என்ற இடத்திலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகத்தில் நீராடி வழிபட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், முனிவரின் முன்பாக தோன்றினார். மேலும் முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். உரோமச முனிவர் நிறுவி வழிபட்ட சிவலிங்கம், சேர்ந்தபூ மங்கலத்தில் கயிலாசநாதர் எனும் திருநாமத்தில் கிழக்கு நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார். அவரது உடனுறை சக்தியாக தெற்கு நோக்கிய வண்ணம் அழகிய பொன்னம்மை எனும் சவுந்தர்ய நாயகி அருள்கிறாள். சிவகாமி அம்பாள் தான், இங்கு அழகிய பொன்னம்மையாக அருள்வதாக சொல்லப்படுகிறது.
பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி, பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்த பூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சங்குமுகம் பகுதியில் தான் மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து ஒன்றாகும் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எனவே, சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி இத்தல கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்ர தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
ஏனெனில் இங்கு அகத்தியரின் எண்ணப்படி, சிவபெருமான் சுக்ரனின் அம்சமாக இருந்து அருள்கிறார். அதுமட்டுமல்ல இத்தலத்தின் அருகில்தான் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்குமுகம் இருக்கிறது. இத்தல தீர்த்தக்கரையினில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வெகு சிறப்பு என்கிறார்கள்.
இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். ஆலயப் பிரகாரத்தில் கன்னி விநாயகர், அறுபத்து மூவர், நால்வர் சன்னிதி, வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், மீனாட்சியம்மன், சொக்கநாதர், நவலிங்கங்கள், பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி போன்றவை உள்ளன. இத்தல நவலிங்க வழிபாடு மனநோய்களை அகற்றும் என்கிறார்கள். பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, சிவராத்திரி, அமாவாசை நாட்களில் இத்தலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இத்தல தாமிரபரணி தீர்த்தக்கரையினில் புஷ்கர நாட்கள், மாதப்பிறப்பு, அமாவாசை நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது நன்மை தரும். இதுநாள் வரை சரியாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், சேர்ந்தபூமங்கலம் வந்து தாமிரபரணியில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, ஆலயத்தை பதினோரு முறை வலம் வரவேண்டும். பின்னர் இங்குள்ள நவலிங்க சன்னிதியில் நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நற்பலன்களை தரும் என்கிறார்கள்.
உரோமச முனிவருக்கு முக்தி கிடைத்த தலம் என்பதால், முன்னோர்களுக்காக இத்தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து, நவலிங்கங்களை வலம் வந்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
அமைவிடம் :
தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருநெல்வேலியில் இருந்து 51 கிலோமீட்டர் தூரத்திலும் மற்றும் ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.
ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.
தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.
புராண வரலாறு :
இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.
சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.
திருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள் திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
போர்ச்சுக்கீசியரின் அராஜகம் :
இந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.

1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.
கொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.
ஆலய அமைப்பு :
மூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.
கருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
இறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.

விஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று :
திருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.
திருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.
இலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.
ராவணன் வெட்டு :
ராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.
ராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இருக்கிறது.
புராண வரலாறு :
இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.
சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.
திருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள் திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
போர்ச்சுக்கீசியரின் அராஜகம் :
இந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.
திட்டமிட்டபடி போர்ச்சுக்கீசிய தளபதி டீசா, திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த மலை, மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோவில் என மூன்று கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான். இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில் ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது ‘பிரட்றிக் கோட்டை’ என அழைக்கப்படுகிறது.

1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.
கொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.
ஆலய அமைப்பு :
மூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.
கருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
இறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.
இவ்வாலயத்தில் பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. சிவராத்திரியில் திருக்கோணேஸ்வரர், திருக்கோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது, திருக்கோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது மற்றுமொரு சிறப்பு.

வெந்நீர் ஊற்றுகள்
விஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று :
திருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.
திருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.
இலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.
ராவணன் வெட்டு :
ராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.
ராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குகிறது சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவில்.
காரணீஸ்வர் கோவில் மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு :
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.
இதனை அறிந்த தேவேந்திரன் இந்த பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.
இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்று வலப்பக்கமாகச் சென்றால், கொடிமரத்தை அடையலாம். கொடி மரத்தின் கீழே வடக்குப் பக்கமாகப் பார்த்து நமஸ்கரித்து இடப்பக்கம் பார்வையைத் திருப்பினால், கொடிமர விநாயகர் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதைக் காணலாம். அவரை வணங்கி மேற்குப் புறமாகக் சென்றால், கன்னி மூலையிலும் ஒரு விநாயகர். அவரை வணங்கி வலம் வந்து, அதையொட்டினாற்போன்று காணப்படும்.
மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால், கோபுர வாயில் வழியாக வந்தபோது தரிசித்த நடராஜர் இப்போது மிக அருகில் காட்சி தருகிறார்.
இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.
அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.
வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.
இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பாக உள்ளது.
தல வரலாறு :
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.
இதனை அறிந்த தேவேந்திரன் இந்த பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.
இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்று வலப்பக்கமாகச் சென்றால், கொடிமரத்தை அடையலாம். கொடி மரத்தின் கீழே வடக்குப் பக்கமாகப் பார்த்து நமஸ்கரித்து இடப்பக்கம் பார்வையைத் திருப்பினால், கொடிமர விநாயகர் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதைக் காணலாம். அவரை வணங்கி மேற்குப் புறமாகக் சென்றால், கன்னி மூலையிலும் ஒரு விநாயகர். அவரை வணங்கி வலம் வந்து, அதையொட்டினாற்போன்று காணப்படும்.
மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால், கோபுர வாயில் வழியாக வந்தபோது தரிசித்த நடராஜர் இப்போது மிக அருகில் காட்சி தருகிறார்.
இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.
அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.
வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.
இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பாக உள்ளது.
சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ளது தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்புப் பதியைப் போல் நித்த வாகன உலா இங்கும் நடைபெறுகிறது.
பண்பாட்டின் சான்றாய், புண்ணியவான்களின் புகலிடமாய், வேதங்களின் விளைநிலமாய், ஆன்மிகத்தின் ஆதாரமாய், அவதாரங்களின் பிறப்பிடமாய், புராண இதிகாசங்களின் நிகழ்விடமாய்த் திகழ்ந்த பாரதநாடு முழுவதும் எண்பது சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதீயக் கொடுமைகளால் முடக்கப்பட்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம். பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல் ஜாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங்காலம்.
இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது, தென் திருவிதாங்கூர் சமஸ்தானம். அன்று, இன்றைய கன்னியாகுமரி மாவட்டமும், தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு சேய் வேறாக அடிமைகளாக விற்கப்பட்டார்கள். உயர் ஜாதி என்று தம்மைத்தாமே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சொக்கத் தங்கத்திற்கு இணையான சுவர்னர் என்ற மேட்டுக்குடியினராகவும், வசதி வாய்ப்பற்ற பதினெட்டு ஜாதி மக்கள், அவர்னர்கள் என்று தீண்டத்தகாதவர்களாகவும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டாம் தர மக்களான அவர்னர்கள் காலனி அணியவோ, ஓடுவேய்ந்த வீட்டில் வாழவோ குடை பிடிக்கவோ, பசுமாடு வளர்க்கவோ, மேட்டுக்குடியினர் ஏவும் வேலையைச் செய்துவிட்டு அதற்கான கூலி கேட்கவோ கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் ஏந்தவோ, நகை அணியவோ கூடாது. போதாக்குறைக்கு தாலிக்கு வரி, ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி, முதியோரின் ஊன்றுகோலுக்கு வரி, மண்வெட்டி, அரிவாள், ஓலைப்பெட்டி போன்ற உபகரணங்களுக்கும், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா, தாவரங்கள் அனைத்துக்கும் வரி இப்படி நூற்றுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி, தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்ற கொள்கைப்படி பள்ளிக்கூடம், நீதிமன்றம், கோவில், மேட்டுக்குடியினர் வசிக்கும் தெரு, அவர்கள் பயன்படுத்தும் குளம், கிணறு ஆகியவற்றின் அருகில் கூட செல்லக்கூடாது. யாரிடமும் ‘நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக்கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்த ஒடுக்கப்பட்ட பதினெட்டுச் ஜாதியினரும் ஆன்மிக நூல்களை தொடவோ, பார்க்கவோ கூடாது. மேற்காணும் விதிமுறைகளை மீறுகின்ற ஒரு அவர்னரை எந்தச் சுவர்னர் வெட்டிக்கொன்றாலும் கேட்பாரில்லை.
இப்படியெல்லாம் மேட்டுக்குடியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்ட பதினெட்டு ஜாதி மக்களும், தமக்கு நேர்ந்துள்ள இந்த இழிநிலையை எண்ணி எண்ணி ஏங்கினர். ‘இறைவா எங்களை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறாய்?. இதைவிட எங்களை மிருகங்களாகப் பிறப்பித்திருக்கலாமே?’ என்று வாய்விட்டு அழுதனர். கண்ணீர் விட்டுக் கதறினர். அந்தக் குமுறல்கள் ஏகமும் படைத்து எங்கும் நிறைந்த இறைவனுக்கு எட்டியது.
‘எங்கே அதர்மம் ஆட்சிபுரிகிறதோ, அங்கே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்ற கீதா உபதேசத்திற்கிணங்க இறைவனின் மனம் கசிந்தது. இதுவரை நிகழ்ந்த, எந்த யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகையக் கொடுமைகளை எந்த அரக்கனும் செய்ததில்லை. இது கலியுகம் ஆகையால்தான் இத்தகைய கயமைத் தனம் அரசாட்சி செய்கிறது.
இச்செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் முன்புள்ள யுகங்களைப் போல் மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி மட்டும் மண்ணகத்தில் அவதரித்தால் போதாது. ஆயுதங்களால் அழிக்க முடியாத இந்த மாயையாகியக் கலியை மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாகி சாதாரண மனிதனைப்போல் அவதரித்து நீதிபோதனை செய்ய வேண்டுமென இறைவன் நிச்சயித்தார்.
அதன்படி திருச்செந்தூர் கடலினுள் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி ‘வைகுண்டம்’ என்ற பெயரோடு உதித்தார். மண்ணகத்தில் வந்து மனு சொரூபம் எடுத்தார். மணவைப் பதியாம் சாமிதோப்பில் வந்து ஒரு தபோதனனைப் போல் அமர்ந்தார்.
தெய்வமும் அவராய், திருவுள்ளமும் அவராய் மக்கள் மனம் மகிழ மனிதனைப் போலும் காட்சியளித்த அந்த மாயாதி சூட்சனை நாடி, மக்கள் வெள்ளம்போல் குவிந்தனர். சாமிதோப்பு அன்றைய தினம் ஜன சமுத்திரம் போல் காட்சியளித்தது. தம் எதிரே குழுமிய மக்களைப் பார்த்து மகிழ்ந்த வைகுண்டர், ‘இன்று முதல் இகாபரா தஞ்சமென ஒன்றுபோல் எல்லாரும் ஒரு புத்தியாய் இருங்கோ, அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ, எவனெவனுக்கும் பதறி இனி மலைக்க வேண்டாம்’ என்று கன்றுக்கு மாதா இரங்கி கற்பித்தது போல் கற்பித்து, அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்து மகிழ்ந்தார்.
ஜாதிக்கொரு கிணறு என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சகலருக்கும் ஒரே கிணறு என்றொரு சமத்துவக் கிணற்றை உண்டாக்கினார். அந்த அரிய கிணற்று நீரை, அனைத்துச் ஜாதி மக்களும் ஒருமித்துக் கூடிநின்று குளித்தும், குடித்தும் மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் அரிய மருந்தாகத் திகழும் நீரைத் தரும் அக்கிணறு தான் சாமிதோப்பிலுள்ள ‘முத்திரிக்கிணறு’ ஆகும். இந்தக் கிணற்று நீரை பாத்திரங்களில் எடுத்துவைத்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்நீர் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கர்மவியாதி, செவிடு, கண்குருடு, ஊமை போன்ற அனைத்து வியாதிகளையும் முத்திரிக்கிணற்று நீரால் அய்யா வைகுண்டர் தீர்த்து வைக்கிறார் என்ற செய்தியும், ஆண்- பெண் என்ற இரண்டு ஜாதிகளைத் தவிர அய்யா வைகுண்டரின் முன் அடுத்தொரு ஜாதியில்லை என்ற செய்தியும் ஆங்காங்கே பரவியது. இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் திருவிதாங்கூர் மன்னன், வைகுண்ட சுவாமியை சிறைப்பிடித்து திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் சிறைவைத்து சுண்ணாம்புக் கால்வாய், நெருப்பு குண்டம், காய்ந்த மிளகாய்ப் புகைமூட்டம், பசித்த புலியிருக்கும் கூண்டுக்குள் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான்.
எல்லா சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்று வென்று திரும்பிய வைகுண்டர், அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் ஆலய வழிபாடுகளும், ஆன்மிக நுகர்வுகளும் இல்லாமல் அடிமைத் தழும்பேறித் தவித்த பதினெட்டு ஜாதி மக்களுக்கும் ஆன்மிக அறிவை எளிமையான பயிற்சி மூலம் வழங்கவேண்டுமென முடிவெடுத்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு வடக்கில் கடற்கரையைச்சார்ந்த ஆமணக்கன் விளை என்ற ஊரில் நின்ற நான்கு வாகை மரங்களை நடுநாயகமாகக் கொண்டு தவம் செய்யும்படி ஏழுநூறு குடும்பத்தை அனுப்பிவைத்து, ஆத்மஞானம் பெறுவதற்கான துவையல் தவசு செய்ய வைத்தார்.
துவையல் தவசில் ஈடுபட்டிருந்த மக்கள் காலையிலும் மாலையிலும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக உகப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், உச்சிவேளையில் ஜெபிப்பதற்காக உச்சிப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், சதாகாலமும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக அகண்டநாமம் என்ற மகாமந்திரத்தையும் அந்த மக்களுக்கு தமிழில் ஞானபோதகமாக அருளினார். அந்த மந்திரங்களை முறைப்படி தமிழில் உச்சரித்து அடிமை உணர்வற்று அந்த மக்கள் ஆன்மிகத் தெளிவு பெற்றனர்.
எல்லா மக்களும் எளிமையாகச் சொல்லவும், எளிமையான முறையில் வழிபடவும் வழிவகுத்த அய்யா வைகுண்டர் இவ்வுலகத்தில் எவ்வாறு வாழ்ந்தால் கலியுகத்திலிருந்து கடைத்தேற முடியும் என்பதற்கான அறிவுரைகளை அன்று தம்மிடம் வந்த அன்பர்களுக்கு நேரடியாகவும், எதிர்கால மக்கள் அறிவதற்காக அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்ற இருபெரும் ஆகமங்களின் மூலமாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களையெல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும் பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப் பெற்ற ஆலயம், சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்புப் பதியைப் போல் நித்த வாகன உலா இங்கும் நடைபெறுகிறது. அதே போல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது. இந்த ஆண்டு 500 நபர்கள் அமர்ந்து அன்னம் அருந்த வசதியாக நவீன அன்ன மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.
அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் திருக்கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகனப் பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெறும்.
மூன்று மந்திரங்கள்
தமிழ்மொழியிலான உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அகண்டநாமம் ஆகிய மூன்று மந்திரங்களையும், பக்திப் பெருக்கோடு தினசரி படித்து வந்தால் ஊழ்வினை அகலும். வல்லமை சித்திக்கும். அருள்ஞானம் பெருகும். வைராக்கியம் உண்டாகும். ஆபத்துகள் அகலும் என்பது அனுபவ ரீதியான நம்பிக்கையாகும். இம்மூன்று மந்திரங்களிலும் சிவதோத்திரம், விஷ்ணு தோத்திரம், பிரம்ம தோத்திரம், சக்தி தோத்திரம், லட்சுமி தோத்திரம், சரஸ்வதி தோத்திரம், இந்திர தோத்திரம், சூரிய தோத்திரம், கந்த தோத்திரம், கணபதி தோத்திரம், மகாலிங்கம், சிவலிங்கம், குருலிங்கம், திருலிங்கம், ஏகலிங்கம், ஏக்காலிங்கம், அரிலிங்கம், லிங்காலிங்கம், சொக்கலிங்கம், சுகாலிங்கம், ஆதிலிங்கம், அருள்லிங்கம், அடங்காலிங்கம் ஆகிய லிங்கதோத்திரங்களும் இடம்பெற்றுள்ளதால் இம்மந்திரங்கள் காயத்திரி மந்திரத்திற்கு இணையான தமிழ் மந்திரம் என்று ஆன்மிகச் சான்றோர்கள் ஆராதிக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது, தென் திருவிதாங்கூர் சமஸ்தானம். அன்று, இன்றைய கன்னியாகுமரி மாவட்டமும், தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு சேய் வேறாக அடிமைகளாக விற்கப்பட்டார்கள். உயர் ஜாதி என்று தம்மைத்தாமே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சொக்கத் தங்கத்திற்கு இணையான சுவர்னர் என்ற மேட்டுக்குடியினராகவும், வசதி வாய்ப்பற்ற பதினெட்டு ஜாதி மக்கள், அவர்னர்கள் என்று தீண்டத்தகாதவர்களாகவும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டாம் தர மக்களான அவர்னர்கள் காலனி அணியவோ, ஓடுவேய்ந்த வீட்டில் வாழவோ குடை பிடிக்கவோ, பசுமாடு வளர்க்கவோ, மேட்டுக்குடியினர் ஏவும் வேலையைச் செய்துவிட்டு அதற்கான கூலி கேட்கவோ கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் ஏந்தவோ, நகை அணியவோ கூடாது. போதாக்குறைக்கு தாலிக்கு வரி, ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி, முதியோரின் ஊன்றுகோலுக்கு வரி, மண்வெட்டி, அரிவாள், ஓலைப்பெட்டி போன்ற உபகரணங்களுக்கும், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா, தாவரங்கள் அனைத்துக்கும் வரி இப்படி நூற்றுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி, தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்ற கொள்கைப்படி பள்ளிக்கூடம், நீதிமன்றம், கோவில், மேட்டுக்குடியினர் வசிக்கும் தெரு, அவர்கள் பயன்படுத்தும் குளம், கிணறு ஆகியவற்றின் அருகில் கூட செல்லக்கூடாது. யாரிடமும் ‘நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக்கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்த ஒடுக்கப்பட்ட பதினெட்டுச் ஜாதியினரும் ஆன்மிக நூல்களை தொடவோ, பார்க்கவோ கூடாது. மேற்காணும் விதிமுறைகளை மீறுகின்ற ஒரு அவர்னரை எந்தச் சுவர்னர் வெட்டிக்கொன்றாலும் கேட்பாரில்லை.
இப்படியெல்லாம் மேட்டுக்குடியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்ட பதினெட்டு ஜாதி மக்களும், தமக்கு நேர்ந்துள்ள இந்த இழிநிலையை எண்ணி எண்ணி ஏங்கினர். ‘இறைவா எங்களை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறாய்?. இதைவிட எங்களை மிருகங்களாகப் பிறப்பித்திருக்கலாமே?’ என்று வாய்விட்டு அழுதனர். கண்ணீர் விட்டுக் கதறினர். அந்தக் குமுறல்கள் ஏகமும் படைத்து எங்கும் நிறைந்த இறைவனுக்கு எட்டியது.
‘எங்கே அதர்மம் ஆட்சிபுரிகிறதோ, அங்கே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்ற கீதா உபதேசத்திற்கிணங்க இறைவனின் மனம் கசிந்தது. இதுவரை நிகழ்ந்த, எந்த யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகையக் கொடுமைகளை எந்த அரக்கனும் செய்ததில்லை. இது கலியுகம் ஆகையால்தான் இத்தகைய கயமைத் தனம் அரசாட்சி செய்கிறது.
இச்செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் முன்புள்ள யுகங்களைப் போல் மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி மட்டும் மண்ணகத்தில் அவதரித்தால் போதாது. ஆயுதங்களால் அழிக்க முடியாத இந்த மாயையாகியக் கலியை மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாகி சாதாரண மனிதனைப்போல் அவதரித்து நீதிபோதனை செய்ய வேண்டுமென இறைவன் நிச்சயித்தார்.
அதன்படி திருச்செந்தூர் கடலினுள் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி ‘வைகுண்டம்’ என்ற பெயரோடு உதித்தார். மண்ணகத்தில் வந்து மனு சொரூபம் எடுத்தார். மணவைப் பதியாம் சாமிதோப்பில் வந்து ஒரு தபோதனனைப் போல் அமர்ந்தார்.
தெய்வமும் அவராய், திருவுள்ளமும் அவராய் மக்கள் மனம் மகிழ மனிதனைப் போலும் காட்சியளித்த அந்த மாயாதி சூட்சனை நாடி, மக்கள் வெள்ளம்போல் குவிந்தனர். சாமிதோப்பு அன்றைய தினம் ஜன சமுத்திரம் போல் காட்சியளித்தது. தம் எதிரே குழுமிய மக்களைப் பார்த்து மகிழ்ந்த வைகுண்டர், ‘இன்று முதல் இகாபரா தஞ்சமென ஒன்றுபோல் எல்லாரும் ஒரு புத்தியாய் இருங்கோ, அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ, எவனெவனுக்கும் பதறி இனி மலைக்க வேண்டாம்’ என்று கன்றுக்கு மாதா இரங்கி கற்பித்தது போல் கற்பித்து, அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்து மகிழ்ந்தார்.
ஜாதிக்கொரு கிணறு என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சகலருக்கும் ஒரே கிணறு என்றொரு சமத்துவக் கிணற்றை உண்டாக்கினார். அந்த அரிய கிணற்று நீரை, அனைத்துச் ஜாதி மக்களும் ஒருமித்துக் கூடிநின்று குளித்தும், குடித்தும் மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் அரிய மருந்தாகத் திகழும் நீரைத் தரும் அக்கிணறு தான் சாமிதோப்பிலுள்ள ‘முத்திரிக்கிணறு’ ஆகும். இந்தக் கிணற்று நீரை பாத்திரங்களில் எடுத்துவைத்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்நீர் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கர்மவியாதி, செவிடு, கண்குருடு, ஊமை போன்ற அனைத்து வியாதிகளையும் முத்திரிக்கிணற்று நீரால் அய்யா வைகுண்டர் தீர்த்து வைக்கிறார் என்ற செய்தியும், ஆண்- பெண் என்ற இரண்டு ஜாதிகளைத் தவிர அய்யா வைகுண்டரின் முன் அடுத்தொரு ஜாதியில்லை என்ற செய்தியும் ஆங்காங்கே பரவியது. இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் திருவிதாங்கூர் மன்னன், வைகுண்ட சுவாமியை சிறைப்பிடித்து திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் சிறைவைத்து சுண்ணாம்புக் கால்வாய், நெருப்பு குண்டம், காய்ந்த மிளகாய்ப் புகைமூட்டம், பசித்த புலியிருக்கும் கூண்டுக்குள் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான்.
எல்லா சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்று வென்று திரும்பிய வைகுண்டர், அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் ஆலய வழிபாடுகளும், ஆன்மிக நுகர்வுகளும் இல்லாமல் அடிமைத் தழும்பேறித் தவித்த பதினெட்டு ஜாதி மக்களுக்கும் ஆன்மிக அறிவை எளிமையான பயிற்சி மூலம் வழங்கவேண்டுமென முடிவெடுத்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு வடக்கில் கடற்கரையைச்சார்ந்த ஆமணக்கன் விளை என்ற ஊரில் நின்ற நான்கு வாகை மரங்களை நடுநாயகமாகக் கொண்டு தவம் செய்யும்படி ஏழுநூறு குடும்பத்தை அனுப்பிவைத்து, ஆத்மஞானம் பெறுவதற்கான துவையல் தவசு செய்ய வைத்தார்.
துவையல் தவசில் ஈடுபட்டிருந்த மக்கள் காலையிலும் மாலையிலும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக உகப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், உச்சிவேளையில் ஜெபிப்பதற்காக உச்சிப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், சதாகாலமும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக அகண்டநாமம் என்ற மகாமந்திரத்தையும் அந்த மக்களுக்கு தமிழில் ஞானபோதகமாக அருளினார். அந்த மந்திரங்களை முறைப்படி தமிழில் உச்சரித்து அடிமை உணர்வற்று அந்த மக்கள் ஆன்மிகத் தெளிவு பெற்றனர்.
எல்லா மக்களும் எளிமையாகச் சொல்லவும், எளிமையான முறையில் வழிபடவும் வழிவகுத்த அய்யா வைகுண்டர் இவ்வுலகத்தில் எவ்வாறு வாழ்ந்தால் கலியுகத்திலிருந்து கடைத்தேற முடியும் என்பதற்கான அறிவுரைகளை அன்று தம்மிடம் வந்த அன்பர்களுக்கு நேரடியாகவும், எதிர்கால மக்கள் அறிவதற்காக அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்ற இருபெரும் ஆகமங்களின் மூலமாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களையெல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும் பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப் பெற்ற ஆலயம், சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்புப் பதியைப் போல் நித்த வாகன உலா இங்கும் நடைபெறுகிறது. அதே போல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது. இந்த ஆண்டு 500 நபர்கள் அமர்ந்து அன்னம் அருந்த வசதியாக நவீன அன்ன மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.
அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் திருக்கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகனப் பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெறும்.
மூன்று மந்திரங்கள்
தமிழ்மொழியிலான உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அகண்டநாமம் ஆகிய மூன்று மந்திரங்களையும், பக்திப் பெருக்கோடு தினசரி படித்து வந்தால் ஊழ்வினை அகலும். வல்லமை சித்திக்கும். அருள்ஞானம் பெருகும். வைராக்கியம் உண்டாகும். ஆபத்துகள் அகலும் என்பது அனுபவ ரீதியான நம்பிக்கையாகும். இம்மூன்று மந்திரங்களிலும் சிவதோத்திரம், விஷ்ணு தோத்திரம், பிரம்ம தோத்திரம், சக்தி தோத்திரம், லட்சுமி தோத்திரம், சரஸ்வதி தோத்திரம், இந்திர தோத்திரம், சூரிய தோத்திரம், கந்த தோத்திரம், கணபதி தோத்திரம், மகாலிங்கம், சிவலிங்கம், குருலிங்கம், திருலிங்கம், ஏகலிங்கம், ஏக்காலிங்கம், அரிலிங்கம், லிங்காலிங்கம், சொக்கலிங்கம், சுகாலிங்கம், ஆதிலிங்கம், அருள்லிங்கம், அடங்காலிங்கம் ஆகிய லிங்கதோத்திரங்களும் இடம்பெற்றுள்ளதால் இம்மந்திரங்கள் காயத்திரி மந்திரத்திற்கு இணையான தமிழ் மந்திரம் என்று ஆன்மிகச் சான்றோர்கள் ஆராதிக்கிறார்கள்.
குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார். தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.
நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த வாரம் நடைபெற்றது. குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கூட குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.
திருச்செந்தூர்
குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர் களைக் காக்க முருகப்பெருமான் அசுரர் களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப் படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி யின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவ சியம் ஒரு முறையாவது சென்று வரவேண் டிய தலம் இது.
பாடி திருவலிதாயம்
சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.
தென்குடி திட்டை
திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.
குருவித்துறை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னி தியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின் றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ மந்திரம் கற்றிருந்தார். இத னால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திர த்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியா ரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந் தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தந்தை யிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஆலங்குடி
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங் களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குரு தட்சிணாமூர்த்தி என்பதால், இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணா மூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர் களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் உண் டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பட்டமங்கலம்
கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங் கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
அகரம் கோவிந்தவாடி
காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரி கிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கூட குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.
திருச்செந்தூர்
குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர் களைக் காக்க முருகப்பெருமான் அசுரர் களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப் படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி யின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவ சியம் ஒரு முறையாவது சென்று வரவேண் டிய தலம் இது.
பாடி திருவலிதாயம்
சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.
தென்குடி திட்டை
திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.
குருவித்துறை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னி தியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின் றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ மந்திரம் கற்றிருந்தார். இத னால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திர த்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியா ரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந் தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தந்தை யிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஆலங்குடி
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங் களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குரு தட்சிணாமூர்த்தி என்பதால், இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணா மூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர் களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் உண் டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பட்டமங்கலம்
கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங் கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
அகரம் கோவிந்தவாடி
காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரி கிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
நாகை மாவட்டத்தை சுற்றியுள்ள 11 சிவதலங்களும் ஒன்று தான் மதங்கீஸ்வர சுவாமி ஆலயம். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தில் 11 வைணவ திருப் பதிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய தலம் திருநாங்கூர். இந்த ஊரில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுதினம், 11 பெருமாளும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தருவார்கள். இதுவே ‘கருடசேவை’ ஆகும். இந்த உற்சவம் இன்றும் தொடர்ந்து வைணவ பக்தர்களால் பற்பல சிறப்புகளோடு நடை பெற்று வருவது இத்தலத் தின் சிறப்பம்சமாகும்.
இந்த ஊரைச் சுற்றி 11 சிவதலங்களும் உள்ளன. அந்த 11 ஆலயங்களில் ஒன்று தான் மதங்கீஸ்வர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மதங்கீஸ்வரர். இறைவி பெயர் ராஜமாதங்கீஸ்வரி. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் விஸ்தாரமான பிரகாரம். வலது புறம் இறைவியின் தனி ஆலயம்.
இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதியாம்.
பின் மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, அன்னையின் மேனியில் வழியும் பால் பச்சை நிறமாக காட்சி தருவது பக்தர்களை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்களாகும். இவை தெற்கு பிரகாரத்தில் உள்ளன.
மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக் கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மதங்கீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க ரூபமாய் (யானை வடிவில்) தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர் பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார்.
உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.
நாரதர் மதங்கரைப் பார்த்து ‘பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால் அது அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை ‘பலாச வனம்’ என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்’ என்றார்.
மதங்க முனிவர் நாரதர் சொன்னபடியே அங்கு வந்து தவம் செய்யத் தொடங்கி னார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன் மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் அங்கு வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன் மதனை ‘சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்’ எனச் சபித்தார் முனிவர்.

பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்ட ‘நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்’ என அருளினார்.
மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு தரிசனம் அளித்தார்.
‘மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார் மகாவிஷ்ணு.
அதற்கு முனிவர் ‘தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்’ என வேண்டினார். மகா விஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.
மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும்?’ என கேட்டார்.
மதங்கர், ‘நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் ‘மதங்கேசர்’ என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்’ என வேண்டிக் கொண்டார்.
மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டிலிருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேஸ்வரர் என்ற திருநாமத்தில், மாதங்கீஸ்வரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.
ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் ஆனந்த மகா காளி தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். காளி முகத்தில் அமைதியும் சாந்தமும் தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. இந்த காளி ஒரு தாரு விக்ரகம். இந்த அன்னை பீடத்தில் அமராமல் ஊஞ்சலில் அமர்ந்துள்ளாள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த காளிக்கு குடமுழுக்கு திருவிழா நடைபெறுவதுடன், அன்று மூலவர் காளி வீதியுலா வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் விலக்கும் தேவியாகவும் இந்த காளி விளங்குகிறாள். பவுர்ணமி அன்று 7 மாவிளக்கு தீபமிட்டு, 27 நெய்விளக்கு ஏற்றி, கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தோஷம் உள்ளவர்கள் பெயரில் அர்ச்சனை செய்ய தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.
இங்குள்ள முப்பெரும் தேவிகளுக்கு குங்கும அர்ச் சனை செய்து சிவப்பு நிறத் தில் ஆடை சாத்தினால் பிரம் மஹத்தி தோஷம் நீங்கும்.
தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க வடக்கு பிரகாரத்தில் சண்டீ ஸ்வரர் சன்னிதி உள்ளது.
தினசரி 2 கால ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலயத்தை சுற்றிலும் அழகிய உயர்ந்த திருமதில் சுவர்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை நிர்வாகத் தின் கீழ் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மாதங்கீஸ்வரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்ப வருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இரட்டை நந்திகள் :
வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும் மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி ‘சுவேத நந்தி’ எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி ‘மதங்க நந்தி’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்தி களையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை ‘மாப்பிள்ளை நந்தி’ எனவும், ‘மாமனார் நந்தி’ எனவும் அழைக்கின்றனர்.
அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சீர் காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.
இந்த ஊரைச் சுற்றி 11 சிவதலங்களும் உள்ளன. அந்த 11 ஆலயங்களில் ஒன்று தான் மதங்கீஸ்வர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மதங்கீஸ்வரர். இறைவி பெயர் ராஜமாதங்கீஸ்வரி. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் விஸ்தாரமான பிரகாரம். வலது புறம் இறைவியின் தனி ஆலயம்.
இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதியாம்.
பின் மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, அன்னையின் மேனியில் வழியும் பால் பச்சை நிறமாக காட்சி தருவது பக்தர்களை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்களாகும். இவை தெற்கு பிரகாரத்தில் உள்ளன.
மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக் கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மதங்கீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க ரூபமாய் (யானை வடிவில்) தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர் பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார்.
உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.
நாரதர் மதங்கரைப் பார்த்து ‘பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால் அது அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை ‘பலாச வனம்’ என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்’ என்றார்.
மதங்க முனிவர் நாரதர் சொன்னபடியே அங்கு வந்து தவம் செய்யத் தொடங்கி னார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன் மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் அங்கு வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன் மதனை ‘சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்’ எனச் சபித்தார் முனிவர்.

இரட்டை நந்திகள் :
பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்ட ‘நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்’ என அருளினார்.
மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு தரிசனம் அளித்தார்.
‘மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார் மகாவிஷ்ணு.
அதற்கு முனிவர் ‘தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்’ என வேண்டினார். மகா விஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.
மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும்?’ என கேட்டார்.
மதங்கர், ‘நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் ‘மதங்கேசர்’ என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்’ என வேண்டிக் கொண்டார்.
மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டிலிருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேஸ்வரர் என்ற திருநாமத்தில், மாதங்கீஸ்வரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.
ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் ஆனந்த மகா காளி தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். காளி முகத்தில் அமைதியும் சாந்தமும் தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. இந்த காளி ஒரு தாரு விக்ரகம். இந்த அன்னை பீடத்தில் அமராமல் ஊஞ்சலில் அமர்ந்துள்ளாள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த காளிக்கு குடமுழுக்கு திருவிழா நடைபெறுவதுடன், அன்று மூலவர் காளி வீதியுலா வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் விலக்கும் தேவியாகவும் இந்த காளி விளங்குகிறாள். பவுர்ணமி அன்று 7 மாவிளக்கு தீபமிட்டு, 27 நெய்விளக்கு ஏற்றி, கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தோஷம் உள்ளவர்கள் பெயரில் அர்ச்சனை செய்ய தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.
இங்குள்ள முப்பெரும் தேவிகளுக்கு குங்கும அர்ச் சனை செய்து சிவப்பு நிறத் தில் ஆடை சாத்தினால் பிரம் மஹத்தி தோஷம் நீங்கும்.
தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க வடக்கு பிரகாரத்தில் சண்டீ ஸ்வரர் சன்னிதி உள்ளது.
தினசரி 2 கால ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலயத்தை சுற்றிலும் அழகிய உயர்ந்த திருமதில் சுவர்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை நிர்வாகத் தின் கீழ் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மாதங்கீஸ்வரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்ப வருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இரட்டை நந்திகள் :
வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும் மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி ‘சுவேத நந்தி’ எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி ‘மதங்க நந்தி’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்தி களையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை ‘மாப்பிள்ளை நந்தி’ எனவும், ‘மாமனார் நந்தி’ எனவும் அழைக்கின்றனர்.
அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சீர் காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றான் கிராமம் லிங்ககிரி மலையில் அமைந்திருக்கிறது, குடவரை கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றான் கிராமம் லிங்ககிரி மலையில் அமைந்திருக்கிறது, குடவரை கோவில். இங்கு மலைக்கொழுந்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது.
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த தலமானது, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மீது எழிலுற காட்சி தரும் இந்தக் கோவிலில் மூலவராக மலைகொழுந்தீஸ்வரர் அருளாட்சி செய்கிறார். இறைவியின் திருநாமம் மரகதவள்ளி என்பதாகும்.
இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியும் விதமாக கல்வெட்டுகளும், பல்லவர்களின் சின்னமான சிங்கமும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கோவிலில் அமைந்திருக்கும் லிங்ககிரி மலையை ‘மொட்டை மலை’ என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். மலையின் மீது பாறையை குடைந்து, 26 அடி நீளமும், 20 அடி அகலத்திலும் இந்தக் கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள்.
கோவிலின் உட்புறத்தில் உள்ள பாறைகளில் கற்பக விநாயகர், ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான், ருத்திர தாண்டவ கோலத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிலைகள் காட்சி தருகின்றன. இந்த மலை ‘ஓம்' வடிவத்தில் அமைந்திருப்பது சிறப்புக்கெல்லாம் சிறப்பானது என பக்தர்கள் சிலாகித்து கூறுகிறார்கள்.
இந்த தலத்தில் நந்தி சிலை, லிங்கத்திற்கு அருகிலேயே இருக்கிறது. மண்டபத்தின் வழி யாக கோவிலுக்கு செல்லும் போது, இதைப் பார்த்தால் நந்தி சிலை மீது சிவலிங்கம் இருப் பது போன்ற தோற் றம் அளிக்கும் என பக்தர்கள் கூறு கிறார்கள். சிவலி ங்கம் மற்றும் பரி வார தெய்வ ங்களு க்கு அபிஷேகம் செய்வதற்காக முன்பு திருவோடு வடிவத்தில் உள்ள திருவோட்டுக் கேணி எனப்படும் நீர்நிலையை பயன்படுத்தி வந்தனர்.

மலையின் நடுவே உள்ள இந்த கேணியில் இருந்து தண்ணீர் எடுத்து வர சிரமமாக இருந்ததால், சித்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அர்ச்சுனன் பானம் விட்டு மலையின் நடுவே ஒரு சுனையை உருவாக்கியதாகவும், இந்த சுனை ‘ஆகாய கங்கை’ எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆகாய கங்கை தீர்த்தம் கோவில் மண்டபத்திற்குள் வரு வதற்காக, மலையின் ஒரு பகுதியில் கால்வாய் போன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆகாய கங்கை தீர்த்தத்தில் தான் மூலவர் மற்றும் பரி வார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அர்ச்சு னன் பானம் விட்டு சுனை உருவாக்கியதால், இதில் இருந்து உருவாகி செல்லும் நதியை ‘அர்ச்சுனா நதி' என்கிறார்கள்.
தொழில் விருத்தி, குழந்தை பாக்கியம் வேண்டியும், கடன்தொல்லை தீரவும், வேலை கிடைக்கவும் மலை கொழுந் தீஸ் வரரை வணங்கிச்சென்றால் எல்லாம் ஜெயமே. தற்போது மலை கொழுந்தீஸ்வரர் சன்னிதி அருகே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரகதவள்ளி அம்பாள், குடவரை கோவிலுக்குள் இல்லாமல் தனியாக மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் சித்திரை 1-ந்தேதி திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது சப்பரத்தில் சாமியும் அம்பாளும் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பவுர்ணமி தினங்களில் கிரிவலம் நடைபெறும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 2 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பள்ளியறை பூஜையுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
தமிழரின் கட்டிடக்கலையை மலைகொழுந்தீஸ்வரர் கோவிலில் காணலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த தலமானது, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மீது எழிலுற காட்சி தரும் இந்தக் கோவிலில் மூலவராக மலைகொழுந்தீஸ்வரர் அருளாட்சி செய்கிறார். இறைவியின் திருநாமம் மரகதவள்ளி என்பதாகும்.
இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியும் விதமாக கல்வெட்டுகளும், பல்லவர்களின் சின்னமான சிங்கமும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கோவிலில் அமைந்திருக்கும் லிங்ககிரி மலையை ‘மொட்டை மலை’ என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். மலையின் மீது பாறையை குடைந்து, 26 அடி நீளமும், 20 அடி அகலத்திலும் இந்தக் கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள்.
கோவிலின் உட்புறத்தில் உள்ள பாறைகளில் கற்பக விநாயகர், ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான், ருத்திர தாண்டவ கோலத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிலைகள் காட்சி தருகின்றன. இந்த மலை ‘ஓம்' வடிவத்தில் அமைந்திருப்பது சிறப்புக்கெல்லாம் சிறப்பானது என பக்தர்கள் சிலாகித்து கூறுகிறார்கள்.
இந்த தலத்தில் நந்தி சிலை, லிங்கத்திற்கு அருகிலேயே இருக்கிறது. மண்டபத்தின் வழி யாக கோவிலுக்கு செல்லும் போது, இதைப் பார்த்தால் நந்தி சிலை மீது சிவலிங்கம் இருப் பது போன்ற தோற் றம் அளிக்கும் என பக்தர்கள் கூறு கிறார்கள். சிவலி ங்கம் மற்றும் பரி வார தெய்வ ங்களு க்கு அபிஷேகம் செய்வதற்காக முன்பு திருவோடு வடிவத்தில் உள்ள திருவோட்டுக் கேணி எனப்படும் நீர்நிலையை பயன்படுத்தி வந்தனர்.

மலையின் நடுவே உள்ள இந்த கேணியில் இருந்து தண்ணீர் எடுத்து வர சிரமமாக இருந்ததால், சித்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அர்ச்சுனன் பானம் விட்டு மலையின் நடுவே ஒரு சுனையை உருவாக்கியதாகவும், இந்த சுனை ‘ஆகாய கங்கை’ எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆகாய கங்கை தீர்த்தம் கோவில் மண்டபத்திற்குள் வரு வதற்காக, மலையின் ஒரு பகுதியில் கால்வாய் போன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆகாய கங்கை தீர்த்தத்தில் தான் மூலவர் மற்றும் பரி வார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அர்ச்சு னன் பானம் விட்டு சுனை உருவாக்கியதால், இதில் இருந்து உருவாகி செல்லும் நதியை ‘அர்ச்சுனா நதி' என்கிறார்கள்.
தொழில் விருத்தி, குழந்தை பாக்கியம் வேண்டியும், கடன்தொல்லை தீரவும், வேலை கிடைக்கவும் மலை கொழுந் தீஸ் வரரை வணங்கிச்சென்றால் எல்லாம் ஜெயமே. தற்போது மலை கொழுந்தீஸ்வரர் சன்னிதி அருகே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரகதவள்ளி அம்பாள், குடவரை கோவிலுக்குள் இல்லாமல் தனியாக மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் சித்திரை 1-ந்தேதி திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது சப்பரத்தில் சாமியும் அம்பாளும் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பவுர்ணமி தினங்களில் கிரிவலம் நடைபெறும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 2 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பள்ளியறை பூஜையுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
தமிழரின் கட்டிடக்கலையை மலைகொழுந்தீஸ்வரர் கோவிலில் காணலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.






