என் மலர்
தோஷ பரிகாரங்கள்
புலீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பே, திருமணம்தான். இங்கு அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இங்கு திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேப் போல் திருமண தடை உள்ள ஆண்- பெண் இருபாலாரும் இந்த ஏழு அம்மனுக்கும் வஸ்திரங்கள் சாத்தி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். அப்படி திருமணம் கைகூடும் பக்தர்கள் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை வைத்துக் கொண்டாலும் திருமாங்கல்யத்தை புலீஸ்வரி அம்மன் சன்னிதியில் தான் வைத்து கட்டுகிறார்கள். இதை ஒரு நேர்த்திக் கடனாகவே அனைவரும் செய்கிறார்கள்.
இந்த அம்மனிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில்தான் நடத்துகிறார்கள். அப்படிப் பெயர் வைக்கும் வைபவம் நடத்தி முடித்தவுடன் சில காலம் கழித்து அந்த குழந்தையை இக்கோவிலில் அம்மனிடம் தத்து கொடுத்து, பின் வாங்கிக் கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து கொள்ளிடத்திற்கு ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பே, திருமணம்தான். இங்கு அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இங்கு திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேப் போல் திருமண தடை உள்ள ஆண்- பெண் இருபாலாரும் இந்த ஏழு அம்மனுக்கும் வஸ்திரங்கள் சாத்தி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். அப்படி திருமணம் கைகூடும் பக்தர்கள் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை வைத்துக் கொண்டாலும் திருமாங்கல்யத்தை புலீஸ்வரி அம்மன் சன்னிதியில் தான் வைத்து கட்டுகிறார்கள். இதை ஒரு நேர்த்திக் கடனாகவே அனைவரும் செய்கிறார்கள்.
இந்த அம்மனிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில்தான் நடத்துகிறார்கள். அப்படிப் பெயர் வைக்கும் வைபவம் நடத்தி முடித்தவுடன் சில காலம் கழித்து அந்த குழந்தையை இக்கோவிலில் அம்மனிடம் தத்து கொடுத்து, பின் வாங்கிக் கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து கொள்ளிடத்திற்கு ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
பிள்ளைகள் கல்வி - கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம். இதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பது வள்ளுவர் வாக்கு.
தங்கள் பிள்ளை, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம். ஆனால் உளவியல் ரீதியாக படிக்கும் குழந்தைகள் பலருக்கு கவனச் சிதறல்கள், சாதாரண விஷயங்களை கூட வெகு சுலபமாக மறப்பது, நன்கு படித்த பாடம், தெரிந்த கேள்விக்கு பதில் எழுத முடியாமல் போவது என ஞாபக சக்தி குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்விலும் தாய், தந்தைக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. தாய் - தந்தையின் மரபணுக்களே குழந்தைகள். பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்டு , மன நிம்மதியோடு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அபாரமான மூளை செயல்பாட்டுடன் இருப்பார்கள். கர்ப்ப காலத்தில் நேரத்திற்கு, குழந்தை வளர்ச்சிக்கு தேவையான உணவு சாப்பிடாமல் மன அழுத்தத்துடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளின் மூளை செயல்பாட்டுத் திறனும் குறைவாகவே இருக்கும்.
பிள்ளைகளின் படிக்கும் திறனை 3 விதமாக பிரிக்கலாம்.
1. படிக்காமலே அதிக மதிப்பெண் பெறுவது
இந்த பிரிவை சார்ந்த குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்து படிப்பது என்றாலே பிடிக்காத செயல். ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டு மூளையில் பதிய வைத்து விடுவார்கள். தேர்வு காலத்தில் நுனிப்புல்லாக புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் படித்து, அதிக மதிப்பெண் பெற்று விடுவார்கள். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி வாழ்க்கை மிக எதார்த்தமாக, மனதளவில் உற்சாகமாக இருக்கும். இவர்களுடைய ஜாதகத்தில் புத- ஆதித்திய யோகம் பலன் தரும் விதத்தில் இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் , மூலத்திரிகோணம் பெற்று இருக்கும். இவர்களுக்கு எதைப் பார்த்தாலும், படித்தாலும் ஆழ் மனதில் பதிய வைத்து, எப்பொழுது வேண்டுமானாலும் நினைவுபடுத்தும் அபாரத் தன்மை மிகுதியாக இருக்கும்.
2. அதிக நேரம் படித்து அதிக மதிப்பெண் பெறுவது
இந்த வகை பிள்ளைகள், பார்க்கும் நேரம் எல்லாம் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை வரி மாறாமல் மனனம் செய்து விடுவார்கள். தூங்கும் போது எழுப்பி கேட்டால் கூட அபாரமான ஞாபக சக்தியுடன் படித்ததை அப்படியே கூறுவார்கள். வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள். இவர்களில் பலர் புரிந்து படிப்பது இல்லை எனினும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று படித்த பலனை அடைந்து விடுவார்கள். இவர்களுடைய ஜாதகத்தில் புதன், சூரியனை நோக்கி செல்லும். தங்களுடைய படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத துறையில் வாழ்க்கையை நடத்துவார்கள். புதன் ஆட்சி, உச்சமாக இருந்து குரு சம்பந்தம் பெற்றவர்களும் அதீத ஞாபக சக்தி உடையவர் களாக இருப்பர். இவர்களில் பலர் படிக்கும் காலத்தில் பல கோப்பைகளை பெற்று, அதை நினைவுச்சின்னமாக பாதுகாப்பார்கள்.
3. நன்றாக படித்து குறைந்த மதிப்பெண் பெறுவது
உலகிலேயே கொடுமையான விஷயம், உழைப்பிற்கு தகுந்த பலன் இல்லாமல் போவதுதான். நன்றாக படித்து தேர்வு எழுதும் போது, ஞாபக மறதியால் எழுத முடியாமல் போகும் பிள்ளைகளின் மன உளைச்சலை வார்த்தையால் விமர்சித்து விட முடியாது. படிக்காமல் மதிப்பெண் குறைவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் படித்தும் மறந்து போவது, அந்தக் குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும். இவர்களுடைய ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு ராகு-கேதுவோடு சம்பந்தம் இருக்கும். அல்லது புதன், சனி சம்பந்தம் இருக்கும்.
எந்த அமைப்பு எப்படி இருந்தாலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற நன்றாக படித்தால் மட்டும் போதாது, மூளையின் செயல்படும் திறனையும் சரி செய்ய வேண்டும். ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள். போதிய சக்தி இன்மையால் மூளை நரம்புகள், மன அழுத்தத்தினால் சோர்வடைவதே சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி தரும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதால், குழந்தைகளின் நினைவாற்றல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டோடு, உடலும் ஆரோக்கியமாகும். குழந்தைகளுக்கு பால், முட்டை, பச்சை காய்கறிகள், கீரை, பயிறு, தானிய வகைகள் உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். சுத்தமான குடி நீரை பருக வேண்டும். அவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டுக்கள், குறுக்கெழுத்து போட்டிகள், செஸ் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு உடற்பயிற்சியும் சீரான தூக்கமும் அவசியம். தேர்வுக்கு முந்தைய நாளில் அதிக நேரம் படிக்காமல், அதிக நேரம் தூங்க வேண்டும்.
இவற்றோடு,
‘ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’
என்ற ஹயக்ரீவர் சுலோகத்தை காலை மற்றும் மாலை வேளையில் 9 முறை பாராயணம் செய்ய ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
தங்கள் பிள்ளை, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம். ஆனால் உளவியல் ரீதியாக படிக்கும் குழந்தைகள் பலருக்கு கவனச் சிதறல்கள், சாதாரண விஷயங்களை கூட வெகு சுலபமாக மறப்பது, நன்கு படித்த பாடம், தெரிந்த கேள்விக்கு பதில் எழுத முடியாமல் போவது என ஞாபக சக்தி குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்விலும் தாய், தந்தைக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. தாய் - தந்தையின் மரபணுக்களே குழந்தைகள். பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்டு , மன நிம்மதியோடு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அபாரமான மூளை செயல்பாட்டுடன் இருப்பார்கள். கர்ப்ப காலத்தில் நேரத்திற்கு, குழந்தை வளர்ச்சிக்கு தேவையான உணவு சாப்பிடாமல் மன அழுத்தத்துடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளின் மூளை செயல்பாட்டுத் திறனும் குறைவாகவே இருக்கும்.
பிள்ளைகளின் படிக்கும் திறனை 3 விதமாக பிரிக்கலாம்.
1. படிக்காமலே அதிக மதிப்பெண் பெறுவது
இந்த பிரிவை சார்ந்த குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்து படிப்பது என்றாலே பிடிக்காத செயல். ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டு மூளையில் பதிய வைத்து விடுவார்கள். தேர்வு காலத்தில் நுனிப்புல்லாக புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் படித்து, அதிக மதிப்பெண் பெற்று விடுவார்கள். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி வாழ்க்கை மிக எதார்த்தமாக, மனதளவில் உற்சாகமாக இருக்கும். இவர்களுடைய ஜாதகத்தில் புத- ஆதித்திய யோகம் பலன் தரும் விதத்தில் இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் , மூலத்திரிகோணம் பெற்று இருக்கும். இவர்களுக்கு எதைப் பார்த்தாலும், படித்தாலும் ஆழ் மனதில் பதிய வைத்து, எப்பொழுது வேண்டுமானாலும் நினைவுபடுத்தும் அபாரத் தன்மை மிகுதியாக இருக்கும்.
2. அதிக நேரம் படித்து அதிக மதிப்பெண் பெறுவது
இந்த வகை பிள்ளைகள், பார்க்கும் நேரம் எல்லாம் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை வரி மாறாமல் மனனம் செய்து விடுவார்கள். தூங்கும் போது எழுப்பி கேட்டால் கூட அபாரமான ஞாபக சக்தியுடன் படித்ததை அப்படியே கூறுவார்கள். வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள். இவர்களில் பலர் புரிந்து படிப்பது இல்லை எனினும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று படித்த பலனை அடைந்து விடுவார்கள். இவர்களுடைய ஜாதகத்தில் புதன், சூரியனை நோக்கி செல்லும். தங்களுடைய படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத துறையில் வாழ்க்கையை நடத்துவார்கள். புதன் ஆட்சி, உச்சமாக இருந்து குரு சம்பந்தம் பெற்றவர்களும் அதீத ஞாபக சக்தி உடையவர் களாக இருப்பர். இவர்களில் பலர் படிக்கும் காலத்தில் பல கோப்பைகளை பெற்று, அதை நினைவுச்சின்னமாக பாதுகாப்பார்கள்.
3. நன்றாக படித்து குறைந்த மதிப்பெண் பெறுவது
உலகிலேயே கொடுமையான விஷயம், உழைப்பிற்கு தகுந்த பலன் இல்லாமல் போவதுதான். நன்றாக படித்து தேர்வு எழுதும் போது, ஞாபக மறதியால் எழுத முடியாமல் போகும் பிள்ளைகளின் மன உளைச்சலை வார்த்தையால் விமர்சித்து விட முடியாது. படிக்காமல் மதிப்பெண் குறைவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் படித்தும் மறந்து போவது, அந்தக் குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும். இவர்களுடைய ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு ராகு-கேதுவோடு சம்பந்தம் இருக்கும். அல்லது புதன், சனி சம்பந்தம் இருக்கும்.
எந்த அமைப்பு எப்படி இருந்தாலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற நன்றாக படித்தால் மட்டும் போதாது, மூளையின் செயல்படும் திறனையும் சரி செய்ய வேண்டும். ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள். போதிய சக்தி இன்மையால் மூளை நரம்புகள், மன அழுத்தத்தினால் சோர்வடைவதே சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி தரும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதால், குழந்தைகளின் நினைவாற்றல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டோடு, உடலும் ஆரோக்கியமாகும். குழந்தைகளுக்கு பால், முட்டை, பச்சை காய்கறிகள், கீரை, பயிறு, தானிய வகைகள் உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். சுத்தமான குடி நீரை பருக வேண்டும். அவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டுக்கள், குறுக்கெழுத்து போட்டிகள், செஸ் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு உடற்பயிற்சியும் சீரான தூக்கமும் அவசியம். தேர்வுக்கு முந்தைய நாளில் அதிக நேரம் படிக்காமல், அதிக நேரம் தூங்க வேண்டும்.
இவற்றோடு,
‘ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’
என்ற ஹயக்ரீவர் சுலோகத்தை காலை மற்றும் மாலை வேளையில் 9 முறை பாராயணம் செய்ய ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
மத்தியஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி- தெய்வானை சமேதரர் முருகப்பெருமானை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும்.
இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அபிஷேகம் செய்து வழிபட்டால் காய்ச்சல் குணமாகும். இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று கூறுகிறார்கள். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை ‘சத்ரு சம்ஹார பைரவர்’ என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.
இந்த ஆலயம் பெருஞ் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சம். இவர் தனது காலடியில் 9 நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.
தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தாருகாபுரம் இருக்கிறது. தென்காசியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும்.
இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அபிஷேகம் செய்து வழிபட்டால் காய்ச்சல் குணமாகும். இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று கூறுகிறார்கள். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை ‘சத்ரு சம்ஹார பைரவர்’ என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.
இந்த ஆலயம் பெருஞ் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சம். இவர் தனது காலடியில் 9 நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.
தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தாருகாபுரம் இருக்கிறது. தென்காசியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. அதற்கு திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.
செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும்.
செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.
செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும்.
சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். இந்தத் தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு எதிரே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
1915-ம் ஆண்டு மயிலைப் பகுதியைச் சார்ந்து மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதியை ஒருவர் குத்தகைக்கு எடுத்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தார். அங்கு ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியில் தினமும் ஒரு நாகம் வந்து செல்வதை குத்தகைதாரர் பார்த்தார். அந்த நாகத்தை எதுவும் செய்ய விரும்பாத அவர், அதற்கு தீங்கு வராமல் பாதுகாத்து, வணங்கி வந்தார்.
பின்னர் அந்த இடத்திற்கு நாகம் ஒன்று வந்து செல்வது பற்றி, நிலத்தின் உரிமையாளரிடம், குத்தகைதாரர் கூறினார். ஆனால் உரிமையாளர் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நில உரிமையாளர் தான் சொன்னதை ஒரு பொருட்டாகவே கருதாததால், நாகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டுமா? அல்லது அங்கேயே தங்கச் செய்து வணங்கலாமா? என்பது புரியாமல் குத்தகைதாரர் விழி பிதுங்கி நின்றார்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது மனித தலையுடனும், சர்ப்ப உடலுடனும் பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தனது நிலத்தில் தெய்வ சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து குத்தகைதாரரிடமே, தன்னுடைய நிலத்தை கொடுத்து அதில் ஒரு நாகாத்தம்மன் ஆலயம் அமைக்கும்படி பணித்தார்.
அதன்படி குத்தகைதாரர் அந்த இடத்தில் சிறிய குடிசை போட்டு, ஆலயம் அமைக்கப்பட்டது. பிறகு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தம்மனை குடிகொள்ளச் செய்தனர்.
ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகப்பெருமான் அருள்கின்றனர். கருவறையில் அரசமரத்தை ஒட்டி, நாகாத்தம்மன் அருள்காட்சி தருகிறார். கருவறை முன்பு சிம்ம வாகனம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் ஒரு காலை மடித்துக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் இருக்கும் அன்னைக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. நான்கு கரங்களில் இடது கரங்களில் திரிசூலம், வரதஹஸ்த முத்திரையும், வலது கரங்களில் கத்தி மற்றும் அங்குச பாசத்துடன் அன்னை காட்சி தருகிறார். இந்த சன்னிதியில் உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
கருவறை பின்புறம் உள்ள அரசமரத்தடியில் நாகர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்குள்ள புற்றை வழிபாடு செய்கின்றனர். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
மு.வெ.சம்பத்
1915-ம் ஆண்டு மயிலைப் பகுதியைச் சார்ந்து மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதியை ஒருவர் குத்தகைக்கு எடுத்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தார். அங்கு ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியில் தினமும் ஒரு நாகம் வந்து செல்வதை குத்தகைதாரர் பார்த்தார். அந்த நாகத்தை எதுவும் செய்ய விரும்பாத அவர், அதற்கு தீங்கு வராமல் பாதுகாத்து, வணங்கி வந்தார்.
பின்னர் அந்த இடத்திற்கு நாகம் ஒன்று வந்து செல்வது பற்றி, நிலத்தின் உரிமையாளரிடம், குத்தகைதாரர் கூறினார். ஆனால் உரிமையாளர் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நில உரிமையாளர் தான் சொன்னதை ஒரு பொருட்டாகவே கருதாததால், நாகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டுமா? அல்லது அங்கேயே தங்கச் செய்து வணங்கலாமா? என்பது புரியாமல் குத்தகைதாரர் விழி பிதுங்கி நின்றார்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது மனித தலையுடனும், சர்ப்ப உடலுடனும் பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தனது நிலத்தில் தெய்வ சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து குத்தகைதாரரிடமே, தன்னுடைய நிலத்தை கொடுத்து அதில் ஒரு நாகாத்தம்மன் ஆலயம் அமைக்கும்படி பணித்தார்.
அதன்படி குத்தகைதாரர் அந்த இடத்தில் சிறிய குடிசை போட்டு, ஆலயம் அமைக்கப்பட்டது. பிறகு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தம்மனை குடிகொள்ளச் செய்தனர்.
ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகப்பெருமான் அருள்கின்றனர். கருவறையில் அரசமரத்தை ஒட்டி, நாகாத்தம்மன் அருள்காட்சி தருகிறார். கருவறை முன்பு சிம்ம வாகனம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் ஒரு காலை மடித்துக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் இருக்கும் அன்னைக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. நான்கு கரங்களில் இடது கரங்களில் திரிசூலம், வரதஹஸ்த முத்திரையும், வலது கரங்களில் கத்தி மற்றும் அங்குச பாசத்துடன் அன்னை காட்சி தருகிறார். இந்த சன்னிதியில் உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
கருவறை பின்புறம் உள்ள அரசமரத்தடியில் நாகர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்குள்ள புற்றை வழிபாடு செய்கின்றனர். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
மு.வெ.சம்பத்
வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. மேலே சொன்ன இந்த சங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இடம்பெற்றிருப்பதாக விகானாச ஆகம விதியில் கூறப்பட்டுள்ளது.
வெங்கடாஜலபதிக்கு மணி சங்கும், ரங்கநாதருக்கு துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு பாருதசங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலியபெருமாளுக்கு வெண் சங்கும், ஸ்ரீநாராயணமூர்த்திக்கு பூமா சங்கும் உள்ளன.
இவற்றில் வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
வெங்கடாஜலபதிக்கு மணி சங்கும், ரங்கநாதருக்கு துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு பாருதசங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலியபெருமாளுக்கு வெண் சங்கும், ஸ்ரீநாராயணமூர்த்திக்கு பூமா சங்கும் உள்ளன.
இவற்றில் வெண்சங்கு எனப்படும் வலம்புரிச் சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும்.
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். பத்தாம் இடம் என்பது உங்களது வாழ்வாதார தொழில் மற்றும் வேலையை குறிப்பதாகும். பத்தாம் இடத்தில் குரு வரும் போதெல்லாம் தொழில் மற்றும் வேலையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது குரு பகவான் சொந்த வீட்டில் இருப்பதால் இத்தகைய மாற்றங்கள் எதுவும் நிகழாது.
அதற்கு பதில் குருவின் பார்வை காரணமாக நன்மைகள்தான் அதிகம் உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6-ம் இடங்களை பார்க்க போகிறார். 2-ம் இடத்தின் பார்வை காரணமாக சுப நிகழ்ச்சி ஏற்பாடுகளில் நல்ல விதமான வெற்றிகள் உண்டாகும். 4-ம் இடத்தின் பார்வை காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். 6-ம் இடத்தின் பார்வை காரணமாக புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.
மொத்தத்தில் குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும். ஏற்கனவே பத்தாம் வீட்டில் சனி, கேது இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. ஆனால் பத்தாம் இடத்துக்கு சென்றுள்ள குரு பகவான் அந்த பாதிப்புகளை எல்லாம் நிவர்த்தி செய்து பலன் தருவார் என்பதே உண்மை.
ஆனால் இந்த பலன்களை மீனம் ராசிக்காரர்கள் முழுமையாக பெற வேண்டும் என்றால் உரிய வழிபாட்டை அவசியம் செய்தே ஆக வேண்டும். குரு வழிபாடு அதில் முதன்மையானது. குரு கவசம் படித்து வந்தால் உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. நிச்சயமாக மேலும் மேலும் வெற்றி கிடைக்கும்.
குரு பகவானின் ஆறாம் இடத்து பார்வையால் சுப நிகழ்ச்சிகளில் பேச்சுவார்த்தை வெற்றி பெறும். இந்த வெற்றியை பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு சென்று அருணாச லேஸ்வரரை வழிபட வேண்டும். அவரை வழிபட்ட பிறகு கிரிவலம் சென்று வருவது இன்னும் சிறப்பு. பவுர்ணமி கிரிவல நாட்களில் உங்களால் முடிந்த அன்னதானம் செய்தால் மேலும் சிறப்பு உண்டாகும். மங்கல காரியங்கள் தொடர்பான உங்களது முயற்சிகள் அனைத்துக்கும் உடனுக்குடன் வெற்றி கிடைக்கும்.
மகான்களை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்தால் மீனம் ராசிக்காரர்கள் மன குழப்பங்களில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண ஏற்பாடுகள் செய்பவர்கள் சில குழப்பங்களை, சஞ்சலங்களை சந்திக்க நேரிடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால் காஞ்சீபுரம் மகா பெரியவா அதிஸ்டானத்துக்கு சென்று வழிபடலாம். அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்கு சென்று குரு வழிபாடு செய்யுங்கள். மனதில் மாற்றம் ஏற்படுவதை காண்பீர்கள்.
28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் வக்கிரம் அடைகிறார். இதன் மூலம் உறவுகள் மேம்படும். துண்டிக்கப்பட்டு இருந்த பழைய உறவுகள் மீண்டும் உங்களை தேடி வரும். இதன் மூலம் குடும்பத்தில் புதிய சொந்தங்கள் தோன்றும். அதாவது புதிய உறவுகள் மூலம் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் வக்கிரம் ஆகிறார். இந்த கால கட்டங்களில் மீனம் ராசிக்காரர்களின் செயல்பாடுகள் மிக எளிதாக மாறும். எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகள் உடனே கை கூடி வரும். பெண்களின் தடை பட்ட திருமணம் மீண்டும் சுறுசுறுப்பு பெற்று திட்டமிட்டபடி நடைபெறும்.
இந்த கால கட்டத்தில் திருமண பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துங்கள். நல்லவரன் வரும்போது அலட்சியம் செய்து விடாதீர்கள். விசாரித்து முடிவு செய்யுங்கள். இல்லையெனில் இந்த கால கட்டத்தை தவற விட்டால் புதிய திருமண பேச்சுவார்த்தைகளுக்கு அலைய நேரிடலாம். எனவே கவனம் தேவை. இதில் வெற்றி பெற திருப்போரூர் சித்தர் சிதம்பரம் சுவாமிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் பலன் உண்டு.
சித்தர் வழிபாடு மட்டுமின்றி சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தாலும் வெற்றி கிடைக்கும். சுவாதி நட்சத்திர தினத்தன்று நரசிம்மருக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டாலும் குரு பெயர்ச்சி மாற்றம் உங்களை செம்மைப்படுத்தும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களை வழங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும். பெண்கள் நினைத்தது நடக்கும்.
மீனம் ராசியில் பூரட்டாதி (4-ம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட வேண்டும். அங்கு செல்பவர்கள் குரு வழிபாடு செய்ய தவறாதீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை வழிபட வேண்டும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சீபுரம் காமாட்சியம்மனை வழிபட வேண்டும்.
2020-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதிக்கு பிறகு உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகளுக்கு உழைக்கும் திறன் மேம்படும். இந்த கால கட்டத்தில் திருவண்ணாமலைக்கு சென்று வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டால் உங்கள் குடும்பத்தில் கெட்டி மேளம் ஓசை நிச்சயம் கேட்கும்.
லிங்கமே மலையாக அமைந்த மலை தவமுனிகளும் சித்தர்களும் திகழும் சிவத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலம் நினைத்தாலே முக்தி தரும் தலம் என்றெல்லாம் சிறப்பு பெற்றது திருவண்ணாமலை தலம். இங்கேதான், உண்ணாமுலையம்மை சிவபெருமானிடம் இடப்பாகம் பெற எண்ணி, கிரிவலம் வந்து தவம் செய்தார். இங்குதான் இடப வாகன சிவனார் அன்னை பார்வதிக்கு தன் உடம்பில் இடப்பாகம் தந்து ஜோதி ரூபமாகக் காட்சி தந்தார்.
சக்தி இத்தலத்தில் மீண்டும் சிவனிடம் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார். பிருங்கி முனிவர் உண்மை உணர்ந்தார். இப்படி அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை வெளிப்படுத்திய பெருமை உடைய தலம் இது. லிங்கமே மலை என்பதால், இந்த மலைதான் இங்கே புனிதம் வாய்ந்தது. திருவண்ணாமலை கிரிவலம் என்பதும் இந்த மலையை சிவலிங்கமாகக் கருதி வழிபட்ட சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளின் செயலால் ஏற்பட்டதுதான்.
கிரிவலத்தை எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவுக்கும் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக ஒவ்வொரு லிங்கம் உண்டு. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என இந்த எட்டு லிங்கங்களை வணங்கிச் செல்ல வேண்டும். சித்தர்கள் நம்மோடு நடந்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, பேசிக்கொண்டு செல்லக்கூடாது. அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடி நடக்க வேண்டும். அடிக்கடி மலையைப் பார்த்து கைகூப்பி, வணங்கி, வேறு திசை எங்கும் பார்க்காமல், பவுர்ணமி நிலவைப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில்தான் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் அளித்தார். எனவே அந்த தினத்தில் கிரிவலம் வருதல் சிறப்பு. முனிவர், ஞானியர், சித்தர்கள் தமிழ் மாதப் பிறப்பின்போதும் பிரதோஷ காலத்திலும் கிரிவலம் வந்தார்களாம். எனவே மாதப்பிறப்பு அன்று கிரிவலம் வருதல் நல்லது. பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் நலம் பயக்கும். அமாவாசையன்று கிரிவலம் வந்தால், மனக் கவலைகள் மாயும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலை நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிட்டும்.
ஞாயிறு- சிவபதவி திங்கள்- இந்திர பதவி செவ்வாய்- கடன் வறுமை நீங்கும் சுபிட்சம் நிலவும். புதன்- கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் வியாழன்- ஞானியர் நிலையை அடையலாம். வெள்ளி- விஷ்ணு பதம் கிட்டும். சனி- நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். மனத்துயர் நீக்கும் தலம் இது. கேட்கும் வரங்களை அள்ளித் தரும் மூர்த்தி அருணாசலேஸ்வரர். கல்யாண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்று கின்றனர். அண்ணா மலையாருக்கும் அம்மைக்கும் கல்யாண உற்சவம் நடத்தி வைத்தும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டுகின்றனர். இறந்தவர் நினைவாக மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழம், காய்கனி, வெல்லம் ஆகியவை நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது. நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகமும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகமும் செய்கிறார்கள். சுவாமிக்கு வேட்டியும் அம்மைக்கு புடவையும் சாத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். அண்ணா மலையார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் பெயர் அபிதகுஜாம்பாள். உண்ணாமுலையாள் என அழகுத் தமிழ்ப் பெயர். மகிழமரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிரம்மதீர்த்தம், சிவகங்கை இவை தலத்தின் தீர்த்தங்கள். இந்தத் தலம் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22-வது தலம். கார்த்திகை மாதம் பிரம்மோற்சவ விழா- தீபத்திருவிழா 10 நாட்களும் களை கட்டும்.
அதற்கு பதில் குருவின் பார்வை காரணமாக நன்மைகள்தான் அதிகம் உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6-ம் இடங்களை பார்க்க போகிறார். 2-ம் இடத்தின் பார்வை காரணமாக சுப நிகழ்ச்சி ஏற்பாடுகளில் நல்ல விதமான வெற்றிகள் உண்டாகும். 4-ம் இடத்தின் பார்வை காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். 6-ம் இடத்தின் பார்வை காரணமாக புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.
மொத்தத்தில் குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும். ஏற்கனவே பத்தாம் வீட்டில் சனி, கேது இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. ஆனால் பத்தாம் இடத்துக்கு சென்றுள்ள குரு பகவான் அந்த பாதிப்புகளை எல்லாம் நிவர்த்தி செய்து பலன் தருவார் என்பதே உண்மை.
ஆனால் இந்த பலன்களை மீனம் ராசிக்காரர்கள் முழுமையாக பெற வேண்டும் என்றால் உரிய வழிபாட்டை அவசியம் செய்தே ஆக வேண்டும். குரு வழிபாடு அதில் முதன்மையானது. குரு கவசம் படித்து வந்தால் உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. நிச்சயமாக மேலும் மேலும் வெற்றி கிடைக்கும்.
குரு பகவானின் ஆறாம் இடத்து பார்வையால் சுப நிகழ்ச்சிகளில் பேச்சுவார்த்தை வெற்றி பெறும். இந்த வெற்றியை பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு சென்று அருணாச லேஸ்வரரை வழிபட வேண்டும். அவரை வழிபட்ட பிறகு கிரிவலம் சென்று வருவது இன்னும் சிறப்பு. பவுர்ணமி கிரிவல நாட்களில் உங்களால் முடிந்த அன்னதானம் செய்தால் மேலும் சிறப்பு உண்டாகும். மங்கல காரியங்கள் தொடர்பான உங்களது முயற்சிகள் அனைத்துக்கும் உடனுக்குடன் வெற்றி கிடைக்கும்.
மகான்களை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்தால் மீனம் ராசிக்காரர்கள் மன குழப்பங்களில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண ஏற்பாடுகள் செய்பவர்கள் சில குழப்பங்களை, சஞ்சலங்களை சந்திக்க நேரிடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால் காஞ்சீபுரம் மகா பெரியவா அதிஸ்டானத்துக்கு சென்று வழிபடலாம். அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்கு சென்று குரு வழிபாடு செய்யுங்கள். மனதில் மாற்றம் ஏற்படுவதை காண்பீர்கள்.
28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் வக்கிரம் அடைகிறார். இதன் மூலம் உறவுகள் மேம்படும். துண்டிக்கப்பட்டு இருந்த பழைய உறவுகள் மீண்டும் உங்களை தேடி வரும். இதன் மூலம் குடும்பத்தில் புதிய சொந்தங்கள் தோன்றும். அதாவது புதிய உறவுகள் மூலம் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் வக்கிரம் ஆகிறார். இந்த கால கட்டங்களில் மீனம் ராசிக்காரர்களின் செயல்பாடுகள் மிக எளிதாக மாறும். எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகள் உடனே கை கூடி வரும். பெண்களின் தடை பட்ட திருமணம் மீண்டும் சுறுசுறுப்பு பெற்று திட்டமிட்டபடி நடைபெறும்.
இந்த கால கட்டத்தில் திருமண பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துங்கள். நல்லவரன் வரும்போது அலட்சியம் செய்து விடாதீர்கள். விசாரித்து முடிவு செய்யுங்கள். இல்லையெனில் இந்த கால கட்டத்தை தவற விட்டால் புதிய திருமண பேச்சுவார்த்தைகளுக்கு அலைய நேரிடலாம். எனவே கவனம் தேவை. இதில் வெற்றி பெற திருப்போரூர் சித்தர் சிதம்பரம் சுவாமிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் பலன் உண்டு.
சித்தர் வழிபாடு மட்டுமின்றி சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தாலும் வெற்றி கிடைக்கும். சுவாதி நட்சத்திர தினத்தன்று நரசிம்மருக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டாலும் குரு பெயர்ச்சி மாற்றம் உங்களை செம்மைப்படுத்தும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களை வழங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும். பெண்கள் நினைத்தது நடக்கும்.
மீனம் ராசியில் பூரட்டாதி (4-ம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட வேண்டும். அங்கு செல்பவர்கள் குரு வழிபாடு செய்ய தவறாதீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை வழிபட வேண்டும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சீபுரம் காமாட்சியம்மனை வழிபட வேண்டும்.
2020-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதிக்கு பிறகு உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகளுக்கு உழைக்கும் திறன் மேம்படும். இந்த கால கட்டத்தில் திருவண்ணாமலைக்கு சென்று வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டால் உங்கள் குடும்பத்தில் கெட்டி மேளம் ஓசை நிச்சயம் கேட்கும்.
லிங்கமே மலையாக அமைந்த மலை தவமுனிகளும் சித்தர்களும் திகழும் சிவத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலம் நினைத்தாலே முக்தி தரும் தலம் என்றெல்லாம் சிறப்பு பெற்றது திருவண்ணாமலை தலம். இங்கேதான், உண்ணாமுலையம்மை சிவபெருமானிடம் இடப்பாகம் பெற எண்ணி, கிரிவலம் வந்து தவம் செய்தார். இங்குதான் இடப வாகன சிவனார் அன்னை பார்வதிக்கு தன் உடம்பில் இடப்பாகம் தந்து ஜோதி ரூபமாகக் காட்சி தந்தார்.
சக்தி இத்தலத்தில் மீண்டும் சிவனிடம் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார். பிருங்கி முனிவர் உண்மை உணர்ந்தார். இப்படி அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை வெளிப்படுத்திய பெருமை உடைய தலம் இது. லிங்கமே மலை என்பதால், இந்த மலைதான் இங்கே புனிதம் வாய்ந்தது. திருவண்ணாமலை கிரிவலம் என்பதும் இந்த மலையை சிவலிங்கமாகக் கருதி வழிபட்ட சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளின் செயலால் ஏற்பட்டதுதான்.
கிரிவலத்தை எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவுக்கும் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக ஒவ்வொரு லிங்கம் உண்டு. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என இந்த எட்டு லிங்கங்களை வணங்கிச் செல்ல வேண்டும். சித்தர்கள் நம்மோடு நடந்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, பேசிக்கொண்டு செல்லக்கூடாது. அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடி நடக்க வேண்டும். அடிக்கடி மலையைப் பார்த்து கைகூப்பி, வணங்கி, வேறு திசை எங்கும் பார்க்காமல், பவுர்ணமி நிலவைப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில்தான் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் அளித்தார். எனவே அந்த தினத்தில் கிரிவலம் வருதல் சிறப்பு. முனிவர், ஞானியர், சித்தர்கள் தமிழ் மாதப் பிறப்பின்போதும் பிரதோஷ காலத்திலும் கிரிவலம் வந்தார்களாம். எனவே மாதப்பிறப்பு அன்று கிரிவலம் வருதல் நல்லது. பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் நலம் பயக்கும். அமாவாசையன்று கிரிவலம் வந்தால், மனக் கவலைகள் மாயும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலை நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிட்டும்.
ஞாயிறு- சிவபதவி திங்கள்- இந்திர பதவி செவ்வாய்- கடன் வறுமை நீங்கும் சுபிட்சம் நிலவும். புதன்- கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் வியாழன்- ஞானியர் நிலையை அடையலாம். வெள்ளி- விஷ்ணு பதம் கிட்டும். சனி- நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். மனத்துயர் நீக்கும் தலம் இது. கேட்கும் வரங்களை அள்ளித் தரும் மூர்த்தி அருணாசலேஸ்வரர். கல்யாண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்று கின்றனர். அண்ணா மலையாருக்கும் அம்மைக்கும் கல்யாண உற்சவம் நடத்தி வைத்தும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டுகின்றனர். இறந்தவர் நினைவாக மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழம், காய்கனி, வெல்லம் ஆகியவை நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது. நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகமும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகமும் செய்கிறார்கள். சுவாமிக்கு வேட்டியும் அம்மைக்கு புடவையும் சாத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். அண்ணா மலையார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் பெயர் அபிதகுஜாம்பாள். உண்ணாமுலையாள் என அழகுத் தமிழ்ப் பெயர். மகிழமரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிரம்மதீர்த்தம், சிவகங்கை இவை தலத்தின் தீர்த்தங்கள். இந்தத் தலம் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22-வது தலம். கார்த்திகை மாதம் பிரம்மோற்சவ விழா- தீபத்திருவிழா 10 நாட்களும் களை கட்டும்.
குரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும்.
குரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். இதனால் குரு பகவானின் ஆட்சி வீடாக தனுசு ராசி மாறி இருக்கிறது. குருவுக்கு சொந்த வீடே தனுசுதான். ஜென்ம இடத்துக்கு வந்து இருப்பதால் பழைய விரயங்கள் இனி இருக்காது. அப்படி இருந்தாலும் அவை அனைத்தும் சுப நிகழ்ச்சிக்கான சுப விரயங்களாகவே இருக்கும்.
தசாபுத்தி பலம் பெறும்போது சுப நிகழ்ச்சிகள் தானாகவே கை கூடி வரும். ஆனால் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் தான் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களை பெற முடியும். குரு பகவான் மகர ராசியில் வக்கிரம் அடையும்போது மட்டும் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால் குருபகவான் சொந்த வீட்டில் இருப்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடலாம்.
குருபகவானுக்குரிய ஆலயங்களை தேர்வுசெய்து வழிபட்டால் நல்லது. குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும். வியாழக்கிழமை களில் சிவாலயங்களில் உள்ள குருவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் திருமண நிகழ்ச்சிகள் கைகூடி வரும். தனுசு ராசியில் ஏற்கனவே சனிபகவானும், கேதுவும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு சுபகாரியங்கள் நடப்பதற்கு வழிவகுக்கும். குருவின் பார்வை 7-ம் இடத்தில் இருப்பதால் இதுவரை தாமதமாகி வந்த திருமண பேச்சுவார்த்தைகள் சுபமான முடிவுக்கு வரும்.
9-ம் இடத்து குருபார்வை காரணமாக சுபகாரியங் களுக்கான பொருட்களை அதிகளவில் வாங்கும் யோகம் உள்ளது. இந்த யோகத்தை தடையின்றி பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும்.குறிப்பாக தேனி மாவட்டம் வேதபுரியில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு கொண்டைக்கடலை தானம் செய்தால் தடைகள் அனைத்தும் விலகி சென்றுவிடும். சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூவரையும் வழிபட்டால் கைமேல் பலன் உண்டு.
குலதெய்வ வழிபாட்டுடன் பத்திரகாளியையும் வழிபட்டால் நல்லது. பத்திரகாளியை வழிபட இயலாதவர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்துக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் திருமணமாலை தேடிவரும். குருபெயர்ச்சி அடிப்படையில் திங்கட்கிழமைகளிலும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை குருபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் இருப்பார். இந்த காலகட்டத்தில் மட்டும் திருமண பேச்சுவார்த்தைகளில் சற்று கவனம் தேவை. உத்திராடம் நட்சத்திரத்துக்கு குருபகவான் வரும்போது (மார்ச் மாதம்) திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும். அந்த காலகட்டத்தில் திருமண பேச்சுவார்த்தைக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புகளும் விலகும்.
பொதுவாக குரு ஜென்ம ராசியில் அமரும்போது குருபலம் வந்துவிடும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் சிலருக்கு சற்று அலைச்சலுக்கு பிறகே சுபநிகழ்ச்சிகளில் வெற்றி உண்டாகும். இந்த வெற்றியை எளிதில் பெற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். பெருமாள் கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சனிக்கிழமை சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.
கும்பகோணத்தில் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் உங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். 5-ம் இடத்து குருபார்வை இதற்கு உதவியாக இருக்கும். சக்கரத்தாழ்வார் வழிபாடும் 5-ம் இடத்து குருபார்வையும் ஒன்றுசேரும்போது திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேதீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
2020-ம் ஆண்டு மார்ச் முதல் ஜூலைக்குள் குடும்பத்தில் பொருளாதாரம் மேம்படும். அது சுபசெலவுகளாக மாற வாய்ப்புள்ளது. அந்த சுபச்செலவு வாய்ப்பை பெற உத்திரமேரூர் அருகில் உள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட்டால் வெற்றி உண்டாகும். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் (1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. மூலம் நட்சத்திரக்காரர்கள் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடலாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநெல்வேலி காந்திமதி அம்மனை வழிபட வேண்டும். என்றாலும் சனிக்கிழமை களில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியில் திருமணம் உடனே கைகூடும். எனவே சக்கரத்தாழ்வார் பற்றி தனுசு ராசிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.
அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர். சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசித்தால் நல்லது.
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும். நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு.
அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிரக தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.
சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.
எனவே இந்த குரு பெய்ர்ச்சியில் தனுசு ராசிக்காரர்கள் அவசியம் சக்கரத்தாழ்வார் வழிபாட்டை செய்ய வேண்டும். சக்கரத்தாழ்வாருக்குரிய போற்றிகள் வீட்டில் இருந்து சொல்வதை விட வைணவ ஆலயங்களில் உள்ள அந்த சன்னதிகளில் அமர்ந்து சொல்வது சிறப்பானது. சக்கரத்தாழ்வாரிடம் சரண் அடைந்து வழிபட்டு பாருங்கள் உங்கள் குறைகள் எல்லாம் தவிடுபொடியாவதை அனுபவப்பூர்வமாக காண்பீர்கள்.
தசாபுத்தி பலம் பெறும்போது சுப நிகழ்ச்சிகள் தானாகவே கை கூடி வரும். ஆனால் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் தான் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களை பெற முடியும். குரு பகவான் மகர ராசியில் வக்கிரம் அடையும்போது மட்டும் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால் குருபகவான் சொந்த வீட்டில் இருப்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடலாம்.
குருபகவானுக்குரிய ஆலயங்களை தேர்வுசெய்து வழிபட்டால் நல்லது. குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும். வியாழக்கிழமை களில் சிவாலயங்களில் உள்ள குருவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் திருமண நிகழ்ச்சிகள் கைகூடி வரும். தனுசு ராசியில் ஏற்கனவே சனிபகவானும், கேதுவும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு சுபகாரியங்கள் நடப்பதற்கு வழிவகுக்கும். குருவின் பார்வை 7-ம் இடத்தில் இருப்பதால் இதுவரை தாமதமாகி வந்த திருமண பேச்சுவார்த்தைகள் சுபமான முடிவுக்கு வரும்.
9-ம் இடத்து குருபார்வை காரணமாக சுபகாரியங் களுக்கான பொருட்களை அதிகளவில் வாங்கும் யோகம் உள்ளது. இந்த யோகத்தை தடையின்றி பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும்.குறிப்பாக தேனி மாவட்டம் வேதபுரியில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு கொண்டைக்கடலை தானம் செய்தால் தடைகள் அனைத்தும் விலகி சென்றுவிடும். சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூவரையும் வழிபட்டால் கைமேல் பலன் உண்டு.
குலதெய்வ வழிபாட்டுடன் பத்திரகாளியையும் வழிபட்டால் நல்லது. பத்திரகாளியை வழிபட இயலாதவர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்துக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் திருமணமாலை தேடிவரும். குருபெயர்ச்சி அடிப்படையில் திங்கட்கிழமைகளிலும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை குருபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் இருப்பார். இந்த காலகட்டத்தில் மட்டும் திருமண பேச்சுவார்த்தைகளில் சற்று கவனம் தேவை. உத்திராடம் நட்சத்திரத்துக்கு குருபகவான் வரும்போது (மார்ச் மாதம்) திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும். அந்த காலகட்டத்தில் திருமண பேச்சுவார்த்தைக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புகளும் விலகும்.
பொதுவாக குரு ஜென்ம ராசியில் அமரும்போது குருபலம் வந்துவிடும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் சிலருக்கு சற்று அலைச்சலுக்கு பிறகே சுபநிகழ்ச்சிகளில் வெற்றி உண்டாகும். இந்த வெற்றியை எளிதில் பெற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். பெருமாள் கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சனிக்கிழமை சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.
கும்பகோணத்தில் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் உங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். 5-ம் இடத்து குருபார்வை இதற்கு உதவியாக இருக்கும். சக்கரத்தாழ்வார் வழிபாடும் 5-ம் இடத்து குருபார்வையும் ஒன்றுசேரும்போது திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேதீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
2020-ம் ஆண்டு மார்ச் முதல் ஜூலைக்குள் குடும்பத்தில் பொருளாதாரம் மேம்படும். அது சுபசெலவுகளாக மாற வாய்ப்புள்ளது. அந்த சுபச்செலவு வாய்ப்பை பெற உத்திரமேரூர் அருகில் உள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட்டால் வெற்றி உண்டாகும். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் (1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. மூலம் நட்சத்திரக்காரர்கள் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடலாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநெல்வேலி காந்திமதி அம்மனை வழிபட வேண்டும். என்றாலும் சனிக்கிழமை களில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியில் திருமணம் உடனே கைகூடும். எனவே சக்கரத்தாழ்வார் பற்றி தனுசு ராசிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.
அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர். சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசித்தால் நல்லது.
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும். நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு.
அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிரக தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.
சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.
எனவே இந்த குரு பெய்ர்ச்சியில் தனுசு ராசிக்காரர்கள் அவசியம் சக்கரத்தாழ்வார் வழிபாட்டை செய்ய வேண்டும். சக்கரத்தாழ்வாருக்குரிய போற்றிகள் வீட்டில் இருந்து சொல்வதை விட வைணவ ஆலயங்களில் உள்ள அந்த சன்னதிகளில் அமர்ந்து சொல்வது சிறப்பானது. சக்கரத்தாழ்வாரிடம் சரண் அடைந்து வழிபட்டு பாருங்கள் உங்கள் குறைகள் எல்லாம் தவிடுபொடியாவதை அனுபவப்பூர்வமாக காண்பீர்கள்.
குரு பகவான் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான இடத்துக்கு வந்திருக்கிறார். இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் மங்கலகரமான சூழல் ஏற்படும்.
குரு பகவான் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான இடத்துக்கு வந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக ஜென்ம ராசியில் இருந்த குரு தற்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை தேடி தரும். இவை சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உதவியாக அமையும். குடும்பத்தில் மங்கலகரமான சூழல் ஏற்படும்.
இரண்டாம் இடம் என்பது தன ஸ்தாபனம் ஆகும். இந்த தன ஸ்தாபனத்தில் குரு சஞ்சரிக்கும்போது அதிகப்படியான பலன்களை வாரி வழங்குவார். என்றாலும் பொது இடங்களில் விருச்சிகம் ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நல்லது. குறிப்பாக சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் 5, 7, 9&ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவை ஒருங்கி ணைவதால் திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இதற்கு அனு கூலமான சூழ் நிலையை உருவாக்க சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடலாம். குரு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதிக்கட்டம் நடப்பதால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை அவசியம் வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை நீங்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறீர்களோ அந்த அளவுக்கு சனி தொல்லை நீங்கி குரு பகவானின் அருள்பார்வைக்கு நன்மை கிடைக்கும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும். எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக் கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.
மலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றி வணங்கலாம். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உரு கும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக் கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் தோஷம் நீங்கும்.
முடிந்தவர்கள் சனிக்கிழமை தோறும் விர தம் இருக்கலாம். ஒரு தடவை திருநள்ளாறு தலத்துக்கு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வரலாம். முடியாதவர்கள் தினமும் மதியம் உணவு அருந்தும் முன்பு காகத் துக்கு உணவு வைத்து விட்டு சாப்பிட்டால் நல்லது. அடுத்த ஆண்டு குரு பகவான் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிர கதி அடைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். அந்த காலக்கட்டத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.
முருகப்பெருமானை வழிபடுவதும் நன்மை தரும். குறிப்பாக கிருத்திகை நட்சத்திர நாட்களில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாடை அணிவித்து ஆராதனை செய்து வந்தால் மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் வரவும் அதிகரிக்கும். இவை இரண்டும் சுப நிகழ்ச்சிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி முடிக்க கை கொடுக்கும்.
இரண்டில் குரு வந்தால் இனி எல்லாமே வெற்றிதான் என்று சொல்வார்கள். எனவே உங்கள் வாரிசுகளின் திருமண பேச்சுவார்த்தைகளை துணிச்சலுடன் மேற் கொள்ளுங்கள். திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் சென்று வருவதும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சீசனில் பயன் உள்ளதாக இருக்கும். கிரிவலம் செல்ல இயலாதவர்கள் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதற்கு பொருட் கள் வாங்கி கொடுத்து வழிபாடுகள் செய்யலாம். இதனால் திருமண யோகம் உள்பட அனைத்து யோகங்களும் தேடி வரும்.
பெண்களுக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் படிப்படியாக முன்னேற்றம் தந்து வெற்றியை கொடுக்கும். இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்ப தால் சர்ப்பதோஷ நிவர்த்தி பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். எனவே ராது&கேது தலங்களில் சிறப்பு வழிபாடு செய்யுங்கள். அப்படி ராகு-கேதுவுக்கு பூஜை செய்யும்போது கூடவே குரு பகவானுக்கும் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். இதுதான் திருமண யோகத்தை முந்திக் கொண்டு வந்து தரும்.
விருச்சிகம் ராசியில் விசாகம் (4&ம் பதம்), அனுஷம், கேட்டை ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. விசாகம் நட்சத்திரக் காரர்கள் ஆலங்குடி குருபகவானை வழிபட வேண்டும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் திருப்பைஞ்சலியில் உள்ள ஞானேஸ்வரர்& விசாலாட்சி அம்மனை வழிபட வேண்டும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவானை வழிபட்டால் உங்களுக்கு கிடைக்கும் அபரிதமான மங்கலயோகங்களை யாராலும் தடுக்க முடியாது.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது.
முதலில் திருநள் ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மானசீகமாக வணங்கி குளத்தின் நடு வில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி-தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பிறகு நல்லெண் ணையை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முக மாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக் குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகு கோவிலுக்குள் வந்து விநாயக பெருமானை வணங்கி, தர்பாரண் யேஸ்வரர், சனீஸ்வரரை வணங்கி, பிரணாம்பிகை அம்மனை வணங்கி தற் போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழி தடத்தின்படி வழிபாடு செய்வது நன்மையை தரும்.
அவரவர் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், ரக்ஷை தானம், பிரிதீ நவ நமஸ்காரம், நவபிரதட்சணம் முத லியவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் சனிபகவானை நவ பிரதட்சணம் செய்வதும் நல்ல பயன்தரும்.
திருநள்ளாறு சனீஸ்வரபகவானுக்கு உகந்த எள்ளை துணியில் முடிச்சாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதற்கு தில தீபம் என்று பெயர். கோவில் சார்பாக ரூ.5 கட்டணத்தில் தில தீபம் வழங்கப்படுகிறது.
அனைத்து ராசிக்காரர்களும் தில தீப வழிபாடு செய்வது சகல தோஷங்களையும் நீக்கும். நவக்கிரகங்களில் வலிமையான கிரக மாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ் வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் மட்டுமே.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல் லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். திருமண யோகம் உள் ளிட்ட விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.
திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ‘ஈசுவர பட்டம்’ பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.
சஷ்டி திதி நாட்களில் விரதம் இருந்தால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியே வராது. சுப நிகழ்ச்சிகளை திறம்பட நடத்துவதற்கு தினமும் கந்தசஷ்டி படித்து வரலாம். இந்த ராசி இளம்பெண்கள் இதுவரை திருமணம் தாமதமாகி கொண்டே வந்தால் கந்தசஷ்டி படிப்பது மூலம் அந்த குறையை நிவர்த்தி செய்ய முடியும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் தலத்துக்கு சென்றுவருவது நல்லது.
இரண்டாம் இடம் என்பது தன ஸ்தாபனம் ஆகும். இந்த தன ஸ்தாபனத்தில் குரு சஞ்சரிக்கும்போது அதிகப்படியான பலன்களை வாரி வழங்குவார். என்றாலும் பொது இடங்களில் விருச்சிகம் ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நல்லது. குறிப்பாக சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் 5, 7, 9&ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவை ஒருங்கி ணைவதால் திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இதற்கு அனு கூலமான சூழ் நிலையை உருவாக்க சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடலாம். குரு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதிக்கட்டம் நடப்பதால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை அவசியம் வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை நீங்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறீர்களோ அந்த அளவுக்கு சனி தொல்லை நீங்கி குரு பகவானின் அருள்பார்வைக்கு நன்மை கிடைக்கும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும். எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக் கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.
மலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றி வணங்கலாம். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உரு கும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக் கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் தோஷம் நீங்கும்.
முடிந்தவர்கள் சனிக்கிழமை தோறும் விர தம் இருக்கலாம். ஒரு தடவை திருநள்ளாறு தலத்துக்கு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வரலாம். முடியாதவர்கள் தினமும் மதியம் உணவு அருந்தும் முன்பு காகத் துக்கு உணவு வைத்து விட்டு சாப்பிட்டால் நல்லது. அடுத்த ஆண்டு குரு பகவான் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிர கதி அடைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். அந்த காலக்கட்டத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.
முருகப்பெருமானை வழிபடுவதும் நன்மை தரும். குறிப்பாக கிருத்திகை நட்சத்திர நாட்களில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாடை அணிவித்து ஆராதனை செய்து வந்தால் மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் வரவும் அதிகரிக்கும். இவை இரண்டும் சுப நிகழ்ச்சிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி முடிக்க கை கொடுக்கும்.
இரண்டில் குரு வந்தால் இனி எல்லாமே வெற்றிதான் என்று சொல்வார்கள். எனவே உங்கள் வாரிசுகளின் திருமண பேச்சுவார்த்தைகளை துணிச்சலுடன் மேற் கொள்ளுங்கள். திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் சென்று வருவதும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சீசனில் பயன் உள்ளதாக இருக்கும். கிரிவலம் செல்ல இயலாதவர்கள் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதற்கு பொருட் கள் வாங்கி கொடுத்து வழிபாடுகள் செய்யலாம். இதனால் திருமண யோகம் உள்பட அனைத்து யோகங்களும் தேடி வரும்.
பெண்களுக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் படிப்படியாக முன்னேற்றம் தந்து வெற்றியை கொடுக்கும். இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்ப தால் சர்ப்பதோஷ நிவர்த்தி பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். எனவே ராது&கேது தலங்களில் சிறப்பு வழிபாடு செய்யுங்கள். அப்படி ராகு-கேதுவுக்கு பூஜை செய்யும்போது கூடவே குரு பகவானுக்கும் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். இதுதான் திருமண யோகத்தை முந்திக் கொண்டு வந்து தரும்.
விருச்சிகம் ராசியில் விசாகம் (4&ம் பதம்), அனுஷம், கேட்டை ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. விசாகம் நட்சத்திரக் காரர்கள் ஆலங்குடி குருபகவானை வழிபட வேண்டும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் திருப்பைஞ்சலியில் உள்ள ஞானேஸ்வரர்& விசாலாட்சி அம்மனை வழிபட வேண்டும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவானை வழிபட்டால் உங்களுக்கு கிடைக்கும் அபரிதமான மங்கலயோகங்களை யாராலும் தடுக்க முடியாது.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது.
முதலில் திருநள் ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மானசீகமாக வணங்கி குளத்தின் நடு வில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி-தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பிறகு நல்லெண் ணையை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முக மாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக் குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகு கோவிலுக்குள் வந்து விநாயக பெருமானை வணங்கி, தர்பாரண் யேஸ்வரர், சனீஸ்வரரை வணங்கி, பிரணாம்பிகை அம்மனை வணங்கி தற் போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழி தடத்தின்படி வழிபாடு செய்வது நன்மையை தரும்.
அவரவர் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், ரக்ஷை தானம், பிரிதீ நவ நமஸ்காரம், நவபிரதட்சணம் முத லியவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் சனிபகவானை நவ பிரதட்சணம் செய்வதும் நல்ல பயன்தரும்.
திருநள்ளாறு சனீஸ்வரபகவானுக்கு உகந்த எள்ளை துணியில் முடிச்சாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதற்கு தில தீபம் என்று பெயர். கோவில் சார்பாக ரூ.5 கட்டணத்தில் தில தீபம் வழங்கப்படுகிறது.
அனைத்து ராசிக்காரர்களும் தில தீப வழிபாடு செய்வது சகல தோஷங்களையும் நீக்கும். நவக்கிரகங்களில் வலிமையான கிரக மாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ் வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் மட்டுமே.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல் லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். திருமண யோகம் உள் ளிட்ட விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.
திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ‘ஈசுவர பட்டம்’ பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.
சஷ்டி திதி நாட்களில் விரதம் இருந்தால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியே வராது. சுப நிகழ்ச்சிகளை திறம்பட நடத்துவதற்கு தினமும் கந்தசஷ்டி படித்து வரலாம். இந்த ராசி இளம்பெண்கள் இதுவரை திருமணம் தாமதமாகி கொண்டே வந்தால் கந்தசஷ்டி படிப்பது மூலம் அந்த குறையை நிவர்த்தி செய்ய முடியும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் தலத்துக்கு சென்றுவருவது நல்லது.
குரு பகவான் துலாம் ராசியில் மூன்றாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். நீங்கள் எந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றிகளை பெற முடியும்.
குரு பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பலன்களை எதிர்பார்க்க முடியாது. எனவே துலாம் ராசிக்காரர்கள் குல தெய்வ வழிபாட்டை அதிகளவு செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றிகளை பெற முடியும்.
மூன்றாம் இடம் என்பது பொருளாதார ரீதியாகவும் திருப்தியாக அமையாது. எனவே அந்த குறையை நிவர்த்தி செய்ய தினமும் வீட் டில் காலையும், மாலையும் விளக்கேற்றி குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண் டும். அம்மன் அம்சங்களில் ரேணுகா பர மேஸ்வரியை வழிபடுவது நல்லது.
குறிப்பாக வேலூர்-திருவண்ணாமலை வழித்தடத்தில் உள்ள படைவீடு ரேணுகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு ஒரு தடவை சென்று வழிபட்டு வரலாம். இந்த வழிபாடு காரணமாக தடைப்பட்டு நிற்கும் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டாகும். பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு விளக் கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
அம்மன் அருள்பெற வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருக் கலாம். சப்தகன்னியர்களுக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு நினைத்த இடத்தில் திருமணம் நடைபெறும். அம்மன் வழிபாடு குரு பார்வையில் மேம்படும். இதனால் திருமண யோகம் கைகூடி வரும். 7.7.2020 முதல் 30.7.2020 வரை குரு பகவான் தனுசு ராசியில் (உத்திராடம் 1-ம் பாதம்) வக்கிரம் அடைகிறார். இந்த கால கட்டத்தில்தான் இதுவரை தடைப்பட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தை தவிர்த்தால் உடனடி சுப காரியத்துக்கு வாய்ப்புள்ளது.
குரு பகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் ஆன்மீக ரீதியாக பல புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் மூலமும் சுப காரிய பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். சிலருக்கு வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் கிடைக்க வாய்ப்புள்ளது. குரு பெயர்ச்சியின் சில அம்சங்கள் உங்களது முயற்சிகளில் சில பின்னடைவுகளை உருவாக்கலாம். ஆனால் திட்டமிட்டு பணியாற்றினால் அந்த பின்னடைவுகளை உடைத்து சுப காரியங் களில் வெற்றி காண முடியும்.
குரு வழிபாடு காரணமாக திரு மணத்தை முன் நின்று நடத்தும் பாக்கியத்தை பெற முடியும். இந்த அந்தஸ்தை பெறு வதற்கு சென்னையில் இருப்பவர்கள் திருவடி சூலத்தில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். திருவடிசூலம் பைரவர் ஆலயத்தில் சுபகாரிய பிரார்த்தனைக்காக பல்வேறு வழிபாடுகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு பைரவரை வழிபட்டால் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
அடுத்து தாராபலம் உள்ள நாட்களை தெரிந்து கொண்டு அந்த நாட்களில் உங் களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாடும் சுப காரி யங்களை விரைந்து நிறைவேற்ற உதவியாக இருக்கும். உங்கள் ராசிப்படி குரு பகவான் மூன்று, ஆறு இடங்களுக்கு அதிபதியானவர். இது பரிவர்த்தனை யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகத்தை தரும். இது குடும்பத்தில் சுப காரியத்தை தானாகவே உருவாக்கும். ஏழாம் இடத்தில் குரு பார்வை பதிவதால் அந்த இல்லறம் இனிமையானதாக மாறும். அதற்கு குரு வழிபாடு அவசியமாகும். வியாழக்கிழமை தோறும் மறக்காமல் குரு வழிபாட்டை செய்து வந்தால் திருமண ஏற்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.
இது தவிர திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு உகந்த பூஜையை செய்யலாம். வில்வ அர்ச்சனை செய்வது நல்லது. துலாம் ராசியில் சித்திரை (3, 4-ம் பாதம்) சுவாதி, விசாகம் (1, 2, 3-ம் பாதம்) ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வழிபட வேண்டும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆலங்குடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
துலாம் ராசிக்காரர்கள் இந்த காலக் கட்டத்தில் காலபைரவரை வழிபடுவது நல்லது. தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் பின்னடைவுகள் தானாக விலகிவிடும். வாய்ப்பு இருப்பவர்கள் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சேத்திரபாலபுரம் எனும் ஊரில் இருக் கும் கால பைரவர் கோவிலுக்கு சென்று வரலாம்.
சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக் கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக் கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப் பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம் மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந் தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைர வரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து வேத விநாயகரை வணங்கினார்.
அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.
அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத் தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். காவிரி தீர்த்தத்தில் ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. காலை 8 மணிக்குள் காவிரியில் நீராடி விட்டு, 10.30 மணிக்குள் சூல தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கால பைரவரை வழிபடுதல் நலம் அளிக்கும்.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.
ஷேத்திரபாலபுரம் ஆனந்த கால பைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதியும் உண்டு. கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை சென்று அடையலாம். கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி 28 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.
மூன்றாம் இடம் என்பது பொருளாதார ரீதியாகவும் திருப்தியாக அமையாது. எனவே அந்த குறையை நிவர்த்தி செய்ய தினமும் வீட் டில் காலையும், மாலையும் விளக்கேற்றி குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண் டும். அம்மன் அம்சங்களில் ரேணுகா பர மேஸ்வரியை வழிபடுவது நல்லது.
குறிப்பாக வேலூர்-திருவண்ணாமலை வழித்தடத்தில் உள்ள படைவீடு ரேணுகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு ஒரு தடவை சென்று வழிபட்டு வரலாம். இந்த வழிபாடு காரணமாக தடைப்பட்டு நிற்கும் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டாகும். பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு விளக் கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
அம்மன் அருள்பெற வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருக் கலாம். சப்தகன்னியர்களுக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு நினைத்த இடத்தில் திருமணம் நடைபெறும். அம்மன் வழிபாடு குரு பார்வையில் மேம்படும். இதனால் திருமண யோகம் கைகூடி வரும். 7.7.2020 முதல் 30.7.2020 வரை குரு பகவான் தனுசு ராசியில் (உத்திராடம் 1-ம் பாதம்) வக்கிரம் அடைகிறார். இந்த கால கட்டத்தில்தான் இதுவரை தடைப்பட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தை தவிர்த்தால் உடனடி சுப காரியத்துக்கு வாய்ப்புள்ளது.
குரு பகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் ஆன்மீக ரீதியாக பல புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் மூலமும் சுப காரிய பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். சிலருக்கு வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் கிடைக்க வாய்ப்புள்ளது. குரு பெயர்ச்சியின் சில அம்சங்கள் உங்களது முயற்சிகளில் சில பின்னடைவுகளை உருவாக்கலாம். ஆனால் திட்டமிட்டு பணியாற்றினால் அந்த பின்னடைவுகளை உடைத்து சுப காரியங் களில் வெற்றி காண முடியும்.
குரு வழிபாடு காரணமாக திரு மணத்தை முன் நின்று நடத்தும் பாக்கியத்தை பெற முடியும். இந்த அந்தஸ்தை பெறு வதற்கு சென்னையில் இருப்பவர்கள் திருவடி சூலத்தில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். திருவடிசூலம் பைரவர் ஆலயத்தில் சுபகாரிய பிரார்த்தனைக்காக பல்வேறு வழிபாடுகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு பைரவரை வழிபட்டால் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
அடுத்து தாராபலம் உள்ள நாட்களை தெரிந்து கொண்டு அந்த நாட்களில் உங் களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாடும் சுப காரி யங்களை விரைந்து நிறைவேற்ற உதவியாக இருக்கும். உங்கள் ராசிப்படி குரு பகவான் மூன்று, ஆறு இடங்களுக்கு அதிபதியானவர். இது பரிவர்த்தனை யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகத்தை தரும். இது குடும்பத்தில் சுப காரியத்தை தானாகவே உருவாக்கும். ஏழாம் இடத்தில் குரு பார்வை பதிவதால் அந்த இல்லறம் இனிமையானதாக மாறும். அதற்கு குரு வழிபாடு அவசியமாகும். வியாழக்கிழமை தோறும் மறக்காமல் குரு வழிபாட்டை செய்து வந்தால் திருமண ஏற்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.
இது தவிர திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு உகந்த பூஜையை செய்யலாம். வில்வ அர்ச்சனை செய்வது நல்லது. துலாம் ராசியில் சித்திரை (3, 4-ம் பாதம்) சுவாதி, விசாகம் (1, 2, 3-ம் பாதம்) ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வழிபட வேண்டும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆலங்குடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
துலாம் ராசிக்காரர்கள் இந்த காலக் கட்டத்தில் காலபைரவரை வழிபடுவது நல்லது. தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் பின்னடைவுகள் தானாக விலகிவிடும். வாய்ப்பு இருப்பவர்கள் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சேத்திரபாலபுரம் எனும் ஊரில் இருக் கும் கால பைரவர் கோவிலுக்கு சென்று வரலாம்.
சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக் கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக் கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப் பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம் மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந் தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைர வரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து வேத விநாயகரை வணங்கினார்.
அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.
அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத் தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். காவிரி தீர்த்தத்தில் ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. காலை 8 மணிக்குள் காவிரியில் நீராடி விட்டு, 10.30 மணிக்குள் சூல தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கால பைரவரை வழிபடுதல் நலம் அளிக்கும்.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.
ஷேத்திரபாலபுரம் ஆனந்த கால பைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதியும் உண்டு. கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை சென்று அடையலாம். கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி 28 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்துள்ளார். கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரு பெயர்ச்சி படி சற்று அலைச்சலுக்கு பிறகு சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்துள்ளார். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானமாகும். என்றாலும் கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரு பெயர்ச்சி படி சற்று அலைச்சலுக்கு பிறகு சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். பயணங்கள் அதிகமாக இருக்கும். அதை கருத்தில் கொள்ளாமல் சென்று வந்தால் குடும்பத்தில் சுப காரியத்தை திட்டமிட்டபடி நடத்தி விடலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பார்வை எட்டாம் இடத்தில் வருகிறது. எட்டாம் இடம் என்பது விரைய ஸ்தானமாகும். ஆனால் சுப காரியங்களுக்கான சுப செலவுகளாக அவை அமையும். அதற்கேற்ப குருவின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் குரு வின் நல்ல பலன்களை பெற விரும்பும் கன்னி ராசிக்காரர்கள் தானங்கள் செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்யுங் கள். அமாவாசை தினத்தன்று அன்னதானம் செய்வது மிக மிக நல்லது.
மேலும் கன்னி ராசிக்காரர்கள் நினைத் ததையெல்லாம் பெறுவதற்கு அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள். எனவே அங்காள பரமேஸ்வரியை மறக்காமல் வழிபடுங்கள். மேல்மலையனூர் தலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடத்தினால் உடனே சுப காரியங்கள் கைகூடும்.
திருமண வயதில் உள்ள ஆண்கள்&பெண்கள் குடும்பத்தில் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. சில சமயம் வீண் விவாதங்கள் சுப காரியங்களுக்கு எதிராக அமைந்து விடக்கூடும். எனவே தேவையில்லாததை பேசக்கூடாது. சிலருக்கு புதிய நபர்களால் பண வரவு கிடைக்கக் கூடும். குரு பகவான் கன்னி ராசியில் எட்டாம் வீட்டை பார்ப்பதால் கொடுத்த கடன்கள் திரும்ப வசூலாகும். வாரிசுகளின் திருமண பேச்சுகளும் முழுமையான வெற்றியை கொடுக்கும். எட்டாம் வீட்டு பார்வைபடி சுப காரியங்களுக்கு தேவையான ஆபரண சேர்க்கையும் உண்டாகும். 12&ம் இடத்து பார்வையால் சுப செலவுகள் அதிகரிக்கும்.
சில கன்னி ராசிக்காரர்களுக்கு சுப காரிய பேச்சுகளில் தாமதம் ஏற்படலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த வழிபாடு அனைத்து தடைகளையும் நீக்கி சுப காரியங்களுக்கு வழிவகுக்கும்.
20.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 5&ம் இடமான மகர ராசியில் வக்கிரமாகி அமர்கிறார். இந்த அமைப்பு தடை பட்ட திருமணத்தை கைகூட செய்யும். குரு பகவான் பூராடம் நட்சத்திரத்துக்கு வரும்போது மட்டும் சற்று கவனம் தேவை. அந்த சமயத்தில் அனைவரிடமும் என்ன பிரச்சினையாக இருந்தாலும் வளைந்து கொடுத்து விடுங்கள்.
நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனவே கன்னி ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் ஸ்ரீகடல்மகள் நாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமை தோறும் வழிபட வேண்டும். இதனால் நல்ல சிந்தனை உண்டாகும்.
சனி பகவானுடன் கேது இருக்கிற நிலையில் குருபகவானும் சேர இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். இந்த பலனை பெற செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.
கன்னிராசியில் உத்திரம் (2,3,4&ம் பாதம்), ஹஸ்தம், சித்திரை(1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. உத்திரம் நட்சத் திரத்துக்காரர்கள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசித்து வர வேண்டும். ஹஸ்தம் நட்சத்திரகாரர்கள் திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலுக்கு சென்று வழிபட வேண்டும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும். இதனால் சுபகாரிய விஷயங்களில் நினைத்தது நடக்கும். உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் இந்த ஆலயத்தில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.
மூலவருக்கு கீழே இடது புறம் சுக்ரர், வசிஷ்டர், பிரகலாதன், நீலாவதி ஆகியோர் உள்ளனர். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இத்திருக் கோவில் விளங்குகிறது. நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு, கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்றால் அபிஷேகபாக்கம் என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கேதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
கன்னிராசிக்காரர்கள் திருமண யோகம் பெற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள். நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள்.
அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக ‘பெரியாயி’ மல்லாந்து படுத்த நிலையில் அருள்கிறாள். பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது.
இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர் களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைக் கண்டால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்துவிதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். தீய சக்திகளை விரட்டுவதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர். ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு - கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப் படும் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
ஆஞ்சநேயரை வழிபடுங்கள்...
கன்னி ராசிகாரர்களுக்கு சனி மற்றும் கேதுவின் ஆதிக்கத்தை குரு பகவான் கட்டுப்படுத்துகிறார் என்றாலும் ராகுவுக்கும், கேதுவுக்கும் வழி பாடு செய்வது நல்லது. இதனால் திருமண தடைகள் விலகும். மதுரை யில் உள்ள இம்மையில் நன்மை செய்வார் ஆலயத்துக்கு சென்று சிவன், பார்வதியுடன் தட்சிணா மூர்த்தியையும் வழிபட வேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்தால் திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும். குருபகவான் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் சுபகாரியங்கள் கைகூடும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பார்வை எட்டாம் இடத்தில் வருகிறது. எட்டாம் இடம் என்பது விரைய ஸ்தானமாகும். ஆனால் சுப காரியங்களுக்கான சுப செலவுகளாக அவை அமையும். அதற்கேற்ப குருவின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் குரு வின் நல்ல பலன்களை பெற விரும்பும் கன்னி ராசிக்காரர்கள் தானங்கள் செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்யுங் கள். அமாவாசை தினத்தன்று அன்னதானம் செய்வது மிக மிக நல்லது.
மேலும் கன்னி ராசிக்காரர்கள் நினைத் ததையெல்லாம் பெறுவதற்கு அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள். எனவே அங்காள பரமேஸ்வரியை மறக்காமல் வழிபடுங்கள். மேல்மலையனூர் தலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடத்தினால் உடனே சுப காரியங்கள் கைகூடும்.
திருமண வயதில் உள்ள ஆண்கள்&பெண்கள் குடும்பத்தில் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. சில சமயம் வீண் விவாதங்கள் சுப காரியங்களுக்கு எதிராக அமைந்து விடக்கூடும். எனவே தேவையில்லாததை பேசக்கூடாது. சிலருக்கு புதிய நபர்களால் பண வரவு கிடைக்கக் கூடும். குரு பகவான் கன்னி ராசியில் எட்டாம் வீட்டை பார்ப்பதால் கொடுத்த கடன்கள் திரும்ப வசூலாகும். வாரிசுகளின் திருமண பேச்சுகளும் முழுமையான வெற்றியை கொடுக்கும். எட்டாம் வீட்டு பார்வைபடி சுப காரியங்களுக்கு தேவையான ஆபரண சேர்க்கையும் உண்டாகும். 12&ம் இடத்து பார்வையால் சுப செலவுகள் அதிகரிக்கும்.
சில கன்னி ராசிக்காரர்களுக்கு சுப காரிய பேச்சுகளில் தாமதம் ஏற்படலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த வழிபாடு அனைத்து தடைகளையும் நீக்கி சுப காரியங்களுக்கு வழிவகுக்கும்.
20.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 5&ம் இடமான மகர ராசியில் வக்கிரமாகி அமர்கிறார். இந்த அமைப்பு தடை பட்ட திருமணத்தை கைகூட செய்யும். குரு பகவான் பூராடம் நட்சத்திரத்துக்கு வரும்போது மட்டும் சற்று கவனம் தேவை. அந்த சமயத்தில் அனைவரிடமும் என்ன பிரச்சினையாக இருந்தாலும் வளைந்து கொடுத்து விடுங்கள்.
நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனவே கன்னி ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் ஸ்ரீகடல்மகள் நாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமை தோறும் வழிபட வேண்டும். இதனால் நல்ல சிந்தனை உண்டாகும்.
குருபகவான் மகர ராசியில் வக்கிரமாகும் போது திருமண ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிபெறும். இந்த நிலையில் உள்ள பெண்கள் திரு மண விசயத்தில் பெற்றோர்க ளின் முடிவை ஏற்பது நல்லது. சென்னையில் இருப்பவர்கள் குன்றத் தூரில் உள்ள திரு ஊரகப்பெருமாளை வழி பட்டால் திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். அதோடு சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும்போது மனதில் துணிச்சலும் தைரியமும் உண்டாகும்.
கன்னிராசியில் உத்திரம் (2,3,4&ம் பாதம்), ஹஸ்தம், சித்திரை(1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. உத்திரம் நட்சத் திரத்துக்காரர்கள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசித்து வர வேண்டும். ஹஸ்தம் நட்சத்திரகாரர்கள் திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலுக்கு சென்று வழிபட வேண்டும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும். இதனால் சுபகாரிய விஷயங்களில் நினைத்தது நடக்கும். உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் இந்த ஆலயத்தில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.
மூலவருக்கு கீழே இடது புறம் சுக்ரர், வசிஷ்டர், பிரகலாதன், நீலாவதி ஆகியோர் உள்ளனர். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இத்திருக் கோவில் விளங்குகிறது. நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு, கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்றால் அபிஷேகபாக்கம் என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கேதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
கன்னிராசிக்காரர்கள் திருமண யோகம் பெற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள். நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள்.
அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக ‘பெரியாயி’ மல்லாந்து படுத்த நிலையில் அருள்கிறாள். பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது.
இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர் களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைக் கண்டால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்துவிதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். தீய சக்திகளை விரட்டுவதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர். ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு - கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப் படும் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
ஆஞ்சநேயரை வழிபடுங்கள்...
குரு பகவான் உங்கள் ராசியில் 10&ம் இடத்தை பார்க்கிறார். இது பெண்களுக்கு ஏற்றத்தை தரும். தொழிலில் ஈடுபட்டால் மேன்மை உண்டாகும். நிலம் வாங்கும் யோகம் இருக்கிறது. பத்தை குரு பார்த்தால் பணி யில் நிறைவு உண்டாகும் என்று சொல்வார்கள். எனவே பணி செய்யும் இடங்களில் கவனம் தேவை.
சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
குருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம்.
குருபெயர்ச்சிப்படி ரிஷப ராசிகாரர்களுக்கு 8-ம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். இந்த அமைப்பு சற்று தாமதமான பலனை தந்தாலும் நிச்சயமாக ஆதாயத்தை தரும். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். திருமண விஷயத்தில் பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் ஏற்பாடுகளை இளம் பெண்கள் ஏற்பது நல்லது.
பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் இரும்பு மற்றும் ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். பொதுவாக பொருளாதார நிலை மாற்றத்தால் வரவிற்கு ஏற்ப செலவு இருக்கும். சுப செலவுகள் ஏராளமாக உண்டாகலாம். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம். பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட்ட பிறகு ஏழைகளுக்கு தானம் செய்தால் நல்லது நடக்கும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரிஉடனுறை ஸ்ரீதிருப்புலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங் கள். மேன் மேலும் வெற்றி பெறு வீர்கள். செல்வம் பெருகும். குருபார்வை காரணமாக தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குருவின் 7, 9-ம் இடத்தின் பார்வையால் பொருளாதாரம் மேம்படும். புதிய வீடு, வாகனங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
ரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவரை வழிபடுவது மிக, மிக நல்லது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும். குறிப்பாக பரிக்கல்லில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது கூடுதல் பலன்களை பெற்றுதரும். பிரதோஷ நாட்களில் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.
பிரதோஷ நாட்களில் நந்தியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உடனுக்குடன் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். நேரம் கிடைக்கும் போது தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வாராகி அம்மனை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்ய வேண்டும். பைரவர்க்குரிய நெய்வேத்திய பொருட்களை படைத்து வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் நிச்சயம் நிறைவேறும்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்ட மத்தில் குருவின் ஆதிக்கம் நடக் கிறது. இதனால் குருபெயர்ச்சி தொடக்க நாட்களில் சற்று பண விரையம் ஏற்படலாம். ஆனால் வாரந்தோறும் வியாழக்கிழமை குரு வழிபாட்டை செய்து வந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். வியாழக்கிழமை விரதம், நந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பிரதோஷ வழிபாடு, பைரவர் வழிபாடு ஆகிய ஐந்தும்தான் ரிஷப ராசிகாரர்களுக்கு திருமண யோகத்தை பெற்றுத்தரும். குறிப்பாக கால பைரவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இரண்டும் முக்கியமாகும்.
சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் கால பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். காலபைரவரின் திருஉருவத்தில் பன் னிரண்டு ராசிகளும் அடங்கி உள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலாராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப்பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீன ராசியும் அமைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண் டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மரிக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
சனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழி படுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.
தருமபுரிக்கு அருகில் அமைந்து உள்ளது அதியமான் கோட்டை ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் ஆலயம். தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கும் அற்புதமான தலம். தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலை வில் உள்ளது. அதியமான்கோட்டை திருத்தலத்தில், பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபடுகிற வழக்கம் உண்டு. அதேபோல், பிரகாரத்தை எட்டு முறை வலம் வந்து வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
தேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு, 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. ரிஷப ராசிக்காரர்கள் இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் பலன் உண்டாகும்.
வைணவ தலத்தில் வழிபாடு செய்து குருபெயர்ச்சி மூலம் பலன் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம். 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.
பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாச ரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆல யத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலை வில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.
திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.
இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. குருபெயர்ச்சி பலன்களை அதிக சுபமாக பெற விரும்புபவர்கள் இந்த திருமஞ்சனத்தில் பங்கேற்று வழிபாடுகள் செய்து பலன் பெறலாம்.
பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் இரும்பு மற்றும் ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். பொதுவாக பொருளாதார நிலை மாற்றத்தால் வரவிற்கு ஏற்ப செலவு இருக்கும். சுப செலவுகள் ஏராளமாக உண்டாகலாம். குரு பெயர்ச்சிப்படி சுபகாரியங்கள் ஏற்பட ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மனை வழிபட்டு வரலாம். பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட்ட பிறகு ஏழைகளுக்கு தானம் செய்தால் நல்லது நடக்கும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரிஉடனுறை ஸ்ரீதிருப்புலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங் கள். மேன் மேலும் வெற்றி பெறு வீர்கள். செல்வம் பெருகும். குருபார்வை காரணமாக தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குருவின் 7, 9-ம் இடத்தின் பார்வையால் பொருளாதாரம் மேம்படும். புதிய வீடு, வாகனங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
ரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவரை வழிபடுவது மிக, மிக நல்லது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபடவேண்டும். குறிப்பாக பரிக்கல்லில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது கூடுதல் பலன்களை பெற்றுதரும். பிரதோஷ நாட்களில் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.
பிரதோஷ நாட்களில் நந்தியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உடனுக்குடன் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். நேரம் கிடைக்கும் போது தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வாராகி அம்மனை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்ய வேண்டும். பைரவர்க்குரிய நெய்வேத்திய பொருட்களை படைத்து வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் நிச்சயம் நிறைவேறும்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு அஷ்ட மத்தில் குருவின் ஆதிக்கம் நடக் கிறது. இதனால் குருபெயர்ச்சி தொடக்க நாட்களில் சற்று பண விரையம் ஏற்படலாம். ஆனால் வாரந்தோறும் வியாழக்கிழமை குரு வழிபாட்டை செய்து வந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். வியாழக்கிழமை விரதம், நந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பிரதோஷ வழிபாடு, பைரவர் வழிபாடு ஆகிய ஐந்தும்தான் ரிஷப ராசிகாரர்களுக்கு திருமண யோகத்தை பெற்றுத்தரும். குறிப்பாக கால பைரவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இரண்டும் முக்கியமாகும்.
சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் கால பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். காலபைரவரின் திருஉருவத்தில் பன் னிரண்டு ராசிகளும் அடங்கி உள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலாராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப்பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீன ராசியும் அமைந் திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண் டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மரிக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
சனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழி படுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.
தருமபுரிக்கு அருகில் அமைந்து உள்ளது அதியமான் கோட்டை ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் ஆலயம். தோஷங்களையும் எதிர்ப்புகளையும் போக்கும் அற்புதமான தலம். தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலை வில் உள்ளது. அதியமான்கோட்டை திருத்தலத்தில், பூசணிக்காயில் விளக்கேற்றி வழிபடுகிற வழக்கம் உண்டு. அதேபோல், பிரகாரத்தை எட்டு முறை வலம் வந்து வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
தேய்பிறை அஷ்டமி தோறும் நடக்கும் குருதி பூஜை சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி அன்று இரவு 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், குருதி பூஜை முதலியன நடக்கும். இதில் 500 கிலோ வர மிளகாய் , 108 கிலோ மிளகு, 8 தீப்பந்தங்கள் கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. ரிஷப ராசிக்காரர்கள் இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் பலன் உண்டாகும்.
வைணவ தலத்தில் வழிபாடு செய்து குருபெயர்ச்சி மூலம் பலன் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம். 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.
பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாச ரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆல யத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலை வில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.
திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.
இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. குருபெயர்ச்சி பலன்களை அதிக சுபமாக பெற விரும்புபவர்கள் இந்த திருமஞ்சனத்தில் பங்கேற்று வழிபாடுகள் செய்து பலன் பெறலாம்.






