என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வீட்டில் நாம் செய்யும் சில விஷயங்கள் வாஸ்து தொடர்பான தற்செயலான தவறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் அது வீட்டில் தொந்தரவை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றைப் பற்றி அறிந்து அவற்றைத் தவிர்த்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
    வீட்டில் நாம் செய்யும் சில விஷயங்கள் வாஸ்து தொடர்பான தற்செயலான தவறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் அது வீட்டில் தொந்தரவை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றைப் பற்றி அறிந்து அவற்றைத் தவிர்த்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

    பூட்ஸ் மற்றும் செருப்பை சிலர் தங்கள் படுக்கைகளுக்கு அருகில், அதாவது தலையணைக்கு அருகில் தூங்குகிறார்கள், இது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒருபோதும் படுக்கைக்கு அடியில் அல்லது தலையை நோக்கி ஒருபோதும் காலணிகள் அல்லது செருப்புகளை கழற்ற வேண்டாம்.

    உங்கள் கார், அலுவலகம் அல்லது வீட்டு சாவியுடன் நீங்கள் தூங்கினால், இந்த பழக்கத்தை இன்று விட்டுவிடுங்கள். வாஸ்துவின் கூற்றுப்படி, அவ்வாறு செய்வது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

    தலையணையின் அருகே எண்ணெயையும் உங்கள் தலைக்கு அருகில் விட்டால், நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உண்மையில், வாஸ்துவின் கூற்றுப்படி, அவ்வாறு செய்வது வாழ்க்கையில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது.

    உங்கள் தலையில் தண்ணீர் பாத்திரம் அல்லது குடம் வைக்கும்போது ஒருபோதும் தூங்க வேண்டாம். இது சந்திரனை பாதிக்கிறது மற்றும் மனநோயை ஏற்படுத்துகிறது.

    படுக்கை நேரத்தில் ஒருபோதும் உங்கள் பணப்பையை (பணப்பையை) உங்கள் தலையில் வைக்க வேண்டாம். இது உங்கள் தேவையற்ற செலவுகளை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், இது வீட்டிலுள்ள நிதி இழப்பையும், குவிப்பையும் ஏற்படுத்துகிறது. குபேரா மற்றும் லட்சுமியின் தங்குமிடமான பணம் எப்போதும் பெட்டகத்திலோ அலமாரியிலோ இருக்கும். தூங்குவதற்கு முன், உங்கள் பணப்பையை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள்.

    வாஸ்து படி, இரவில் தூங்கும் போது மருந்துகளை தலையணைக்கு அருகில் வைக்கக்கூடாது. இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது, எனவே மருந்துகளை உங்கள் தலைக்கு அருகில் வைத்து தூங்க மறக்காதீர்கள்.

    மொபைல் அல்லது மடிக்கணினி: வாட்ச், மொபைல், தொலைபேசி, மடிக்கணினி, டிவி, வீடியோ கேம் போன்ற மின்சார உபகரணங்கள் வாஸ்துவில் தானாகவே கருதப்படுகின்றன, அதாவது அவை எப்போதும் இயங்குகின்றன. மேலும், மின்சார விஷயங்கள் ராகுவுடன் தொடர்புடையவை, மேலும் இது ராகுடோஷாவை ஏற்படுத்துகிறது, எனவே அவற்றை படுக்கை நேரத்தில் அருகில் வைக்கக்கூடாது.

    செய்தித்தாள் அல்லது பத்திரிகை: வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு நபர் செய்தித்தாள், பத்திரிகை போன்றவற்றை தனது தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது. இவற்றை வைத்திருப்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை பாதிக்கிறது.

    பழைய அல்லது அழுக்கு துணிகளை படுக்கை நேரத்தில் படுக்கையில் வைக்க வேண்டாம். இது எதிர்மறைக்கு வழிவகுக்கிறது. இது தூங்கும் போது கெட்ட கனவுகளை ஏற்படுத்தும்.
    கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். இந்த பரிகாரங்கள் உங்கள் கடன் பிரச்சனையை விரைவில் தீர்க்க உதவும்.
    லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.

    ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர்.

    கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.

    ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

    சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான்.
    இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.
    நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டால் போதும். அதன் பின்பு, எப்படி தான் கஷ்டங்கள் வருமோ என்று தெரியாது. நடந்த ஒரு நல்லதுக்கு, பத்து கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

    ‘ஏண்டா இந்த நல்லது நடந்தசுன்னு, யோசிக்கிற அளவுக்கு சில பேருக்கு எல்லாம் கஷ்டம் வரும்’. sad நம்மில் பலபேர் இதை அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்போம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால், கண்திருஷ்டி பட்டு உடனடியாக அடுத்து ஏதாவது ஒரு பெரிய சண்டை வந்துவிடும். தொழிலில் லாபம் கிடைத்தால், கண் திருஷ்டி பட்டு எதிர்மறை ஆற்றலால் ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விடும் அல்லவா? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சுலபமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  

    ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் நாம் நமது வீட்டில் இருந்தப்படியே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறை ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

    எப்படி பரிகாரம் செய்வது?

    பருத்திக்கொட்டை மூன்று, வரமிளகாய் மூன்று, ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    முதலில், வரமிளகாயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஓமத்தை எடுத்து உங்களது தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

    அடுத்ததாக பருத்திக் கொட்டையையும் எடுத்து தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை கொண்டுபோய் உங்கள் வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விட்டு, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும்.

    இரண்டு மா மரக்குச்சி, இரண்டு வெள்ளெருக்கு குச்சிகளை, அந்த அக்கினியில் போட்டு விடுங்கள்.

    இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.
    நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
    ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    குடும்பத்தில் பிரச்சனை, வருமான தடை, உடல் நிலை பாதிப்புகள் என்று ஏதாவது ஒரு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டியை கூட செலுத்த முடியாத சூழ்நிலையில் பரிதவித்து நிற்பார்கள். இது போன்றவர்களுக்கு எம்பெருமான் முருகப் பெருமான் துணையாக இருப்பார்.

    முருகனை அன்றி நம் பாரத்தை தாங்க கூடியவர்கள் வேறு யாருமில்லை. கடன் என்ற சுமையை முருகப் பெருமானிடம் இறக்கி வைத்து விடுங்கள். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனை செவ்வாய் ஹோரையில் வணங்கி விட்டு கடனை செலுத்தினால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம். -

    அதே போல் சரபேஸ்வரர் சன்னதியில் இந்த விளக்கு ஏற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சரபேஸ்வரர் பக்தர்களின் துன்பம் தீர்க்க இன்றும் கோவில்களில் அருள் பாலிக்கின்றார். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் திருத்தலங்களில் சரபேஸ்வரர் சந்நிதியை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் ஹோரை நேரத்தில் அங்கு சென்று இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் உங்களுடைய எப்பேற்பட்ட கடனும் விரைவாக தீர்ந்து விடும். செவ்வாய், சனி கிரக சேர்க்கையால் நீங்கள் படும் துன்பங்கள் தீரும். அத்துடன் கர்ம வினை பாவங்களும் நீங்கும். அந்த விளக்கு எப்படி போடுவது என்பதை பார்ப்போம்.

    9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வாழை தண்டு நார் மூலம் உருவாக்கப்பட்ட திரிகளை போட்டு ஏழு ஏலக்காய்களை நுணுக்கி விளக்குகளில் சிறிது சிறிதாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை சரபேஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வாருங்கள். சரபேஸ்வரரின் அருள் இருந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள் சுலபமாக நீங்கி விடும். சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்கள் நலம் பெறுவார்கள்.
    நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். தீவினைகள் நீங்கவும், எதிரிகள் பயம் விலகவும் நரசிம்மரை போற்றி வழிபட வேண்டும்.
    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அதர்மத்தை அழிக்க உக்ர ரூபத்துடன் தூணைப் பிளந்து அவதரித்த திருமாலின் நான்காவது அவதாரம் நரசிம்மம். தன்பால் பக்தி கொண்டொழுகும் பக்தர்களை அனவரதமும் தெய்வம் காத்து நிற்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்வது இந்த தெய்வ அவதாரம். அதர்மவாதிகளுக்குத்தான் அவர் சிம்மசொப்பனமே தவிர, அன்பர்களுக்கு அவர் வெல்லக்கனியாகத் திகழ்கிறார்.

    அதுமட்டுமல்ல, நரசிம்ம மூர்த்தியை பேரழகன் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். ராமபிரானை அழகு ராமன் என்றும், அபிராமன் என்றும் போற்றும் பக்தர்கள், நரசிம்மரை பேரழகன் என்று பொருள்படும்படியாக ‘வேள்’ என்று அடைமொழியுடன் சேர்த்து அழைத்து வழிபடுகிறார்கள். அதாவது சிங்கவேள் பெருமாள் என்று போற்றுவர். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். தீவினைகள் நீங்கவும், எதிரிகள் பயம் விலகவும் இந்த அழகரை சிங்கவேள் பெருமாளைப் போற்றி வழிபட வேண்டும்.

    ஒவ்வொரு சனிக்கிழமையும், சுவாதி நட்சத்திர திருநாள் மற்றும் பிரதோஷ காலங்களில் ஸ்ரீநரசிம்மரை வழிபட உகந்த நாட்களாகும். துளசி மாலை சாற்றி, பானகம் நைவேத்யம் செய்து வழிபடுவது சிறப்பானதாகும். ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீநாராயணீயம் படித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
    இந்த நாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம்.
    கரிநாள் தினமும் காலண்டர் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி கண்ணில் படும் ஒரு வார்த்தை. இதைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இந்த தகவல். நாம் தமிழ் காலண்டரில் சில நாட்களில் கரிநாள் என போட்டிருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரியாமல் பலரும் குழம்பிப் போயிருப்பார்கள். நம்மை ஒருசில விஷயங்களுக்காக எச்சரிக்கும் விதமாக ஜோதிட வல்லுனர்கள் ஆக இருந்த நம்முடைய முன்னோர்கள் பல காலங்களாக ஆராய்ந்து முடிவு செய்து இதுபோன்ற குறிப்பை எழுதி வைத்துள்ளனர்.

    வருடத்தில் 34 நாட்கள் மட்டுமே கரிநாள் என குறித்து வைக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் ஆடி வரை உள்ள கரிநாட்கள் உதவா நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குனியில் உள்ள கரிநாட்கள் மிகுந்த தீமையை தரும் நாட்கள் என்று முதன்மை ஜோதிட நூலான ஜோதிட சிந்தாமணி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய தென்னிந்தியாவில் மட்டுமே கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன.

    இந்த நாட்களில் கிழமை, திதிகள், வளர்பிறை, தேய்பிறை இவற்றின் அடிப்படையில் அமையாமல் தமிழ் மாதத்தின் நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் வரக்கூடிய மாதங்களில் ஒரே தேதியில் இந்த நாட்கள் கரி நாட்களாக சொல்லப்படுகின்றன. எந்த ஒரு நாளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தலையீடு இல்லாமல் இருக்காது.

    இந்த கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம்முடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு, வேலை செய்யக்கூடிய அதனுடைய தன்மையும் மாறுபட்டு, மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும்.

    அது மட்டுமல்லாமல் இந்த நாட்களில் திருமணம் போன்ற எந்தவிதமான சுபகாரியங்களும் செய்யக்கூடாது என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கரி நாட்களில் திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம், நீண்ட தூரம் பிரயாணம் இவைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. கரிநாளில் இவைகளை நீங்கள் செய்தால் அவை கெடுதல்களில் முடிய வாய்ப்பு உள்ளது.

    மேலும் அந்த கெடுதல்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிழல் போல் தொடர வாய்ப்பு உள்ளதால், கரிநாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆனால் பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள் இவைகளையெல்லாம் கரிநாளில் செய்யலாம்.

    அது போல இந்த கரிநாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம். கடன் பிரச்சினைகள் உங்களிடமிருந்து விரைவிலேயே மாறுமாம். மனிதர்களுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனையே இந்த கடன் பிரச்சனை. பல தீமைகளை கொண்டிருந்தாலும் உங்களுடைய கடன் பிரச்சினையை போக்க வல்லது இந்த கரிநாள் என சொல்லப் படுகிறது. ஆகையால் இந்த நாளில் நீங்கள் கடனாளியாக இருந்தால் உங்கள் கடனில் முடிந்த அளவு திருப்பி செலுத்தும் பொழுது உங்களுடைய கடன் விரைவில் முடிவடையும். மீண்டும் நீங்கள் கடன் வாங்க மாட்டீர்கள்.

    ஒவ்வொரு வருடமும் கரிநாட்கள் இந்த தமிழ் மாதங்களில் இந்த நாட்களில் மட்டுமே வரும். சித்திரை : 6, 15. வைகாசி: 7,16,17. ஆனி: 1,6. ஆடி: 2,10,20. ஆவணி: 2,9,28. புரட்டாசி: 16,29. ஐப்பசி: 6,20. கார்த்திகை: 1,10,17. மார்கழி: 6,9,11. தை: 1,2,3,11,17. மாசி: 15,16,17. பங்குனி: 6,15,19. இந்த நாட்களை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கரிநாட்கள் மாறவே மாறாது. ஆகையால் இந்த நாட்களில் நீங்கள் எந்தவிதமான சுபநாள் சுபகாரியங்களையும் செய்யாமல் கரிநாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
    தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும்.
    சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகலவும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கவும் அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள்.

    அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்க்கை காளியம்மனுக்கு புடவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்தும் அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார்.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார்.

    அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி” அதென்ன திதி? பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம்.

    பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

    பௌர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர். இவை முறையே…

    1. பிரதமை.
    2. துவி தியை.
    3. திருதியை.
    4. சதுர்த்தி.
    5. பஞ்சமி.
    6. சஷ்டி.
    7. சப்தமி.
    8. அஷ்டமி.
    9. நவமி.
    10. தசமி.
    11. ஏகாதசி.
    12. துவாதசி.
    13. திரயோதசி.
    14. சதுர்தசி.
    15. அமாவாசை அல்லது பௌர்ணமி என்று வரிசைப்படுத்தப்படுகிறது.

    சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப்படுகின்றன.

    இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் நான்காவது நாளான வளர்பிறை சதுர்த்தி திதி பற்றியே.. அதிலும் வரும் வளர்பிறை சதுர்த்தி நாள்தான் ”நாக சதுர்த்தி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக சதுர்த்தி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது. சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர்.

    தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்…

    “நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

    பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்க மாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

    நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

    நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்…
    தமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் பல கோவில்கள், சிறப்பு பிரார்த்தனைக்குரிய தலங்களாக இருப்பதை நாம் அறியலாம். அப்படி சிறப்பு பிரார்த்தனைக்குரிய சில ஆலயங்களை இங்கே காண்போம்.
    தமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் பல கோவில்கள், சிறப்பு பிரார்த்தனைக்குரிய தலங்களாக இருப்பதை நாம் அறியலாம். அப்படி சிறப்பு பிரார்த்தனைக்குரிய சில ஆலயங்களை இங்கே காண்போம்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்
    சென்னை ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்
    கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கை காலபைரவர் கோவில்.
    திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில்
    சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில்
    கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கராதேவி ஆலயம்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவில்.
    கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில்

    கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு..

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்
    திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோவில்.
    ஆச்சாள்புரம் சிவலோகதியாகர் திருக்கோவில்.
    ஊட்டி மஞ்சூரில் உள்ள அன்னமலை தண்டாயுதபாணி ஆலயம்.

    கல்வி வளம் பெருக..

    மாதவரம் கரிவரதராஜப் பெருமாள் கோவில்
    கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம்.
    செட்டிபுண்ணியம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
    திருவஹிந்தபுரம் தேவநாதசுவாமி ஆலயம்.

    குழந்தைப்பேறு கிடைக்க..

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்
    தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் ஆலயம்
    தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்.
    திருச்சி தாயுமானசுவாமி திருக்கோவில்.
    தென்காசி ஆயக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவில்.

    நீண்ட ஆயுள் கிடைக்க..

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
    பரமக்குடி அடுத்த எமனேஸ்வரத்தில் உள்ள எமனேஸ்வரமுடையார் கோவில்
    கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோவில்
    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவில்
    சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் திருக்கோவில்
    ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
    வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,
    கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.
    இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.

    முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். உண்பதற்கு பசுவிற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) நம்மை பிடித்த தீராத பாவங்கள் விலகும்.

    பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

    பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். "மா" என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும்.
    பொருளாதாரரீதியாக உங்களுக்கு ஏற்பட போகும் சரிவையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
    ஜோதிட சாஸ்திரத்தின் படி தகுந்த காரணமும், எச்சரிக்கையும் இன்றி நம் வாழ்வில் எந்தவொரு சம்பவமும் நடப்பதில்லை. நல்ல நேரமோ, கெட்ட நேரமோ எதுவாக இருந்தாலும் அது நடப்பதற்கு முன் சில அறிகுறிகளை நமக்கு காட்டும். நாம் அப்போதே சுதாரித்து கொள்ள வேண்டும். இல்லையேல் அது மிகபெரிய தீமைகளை நமக்கு ஏற்படுத்தும். இந்த பதிவில் பொருளாதாரரீதியாக உங்களுக்கு ஏற்பட போகும் சரிவையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    * உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் அடிக்கடி பழுதடைந்தாலும், அதற்கு கவனிப்பு தேவைப்பட்டாலும் அது ஒரு கெட்ட சகுனத்தின் அறிகுறியாகும். இது உங்களின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் சமிஞ்ஞையாகும்.

    * ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படுவது என்பது சாதாரணமானது. ஆனால் அந்த சண்டை காரணமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்டால் உங்களுக்கு திடீர் பணச்சிக்கலோ அல்லது வியாபாரத்தில் நஷ்டமோ ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

    * சிலசமயங்களில் உங்களின் தேக ஆரோக்கியமும் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும். அதீத பதட்டம், வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பண பிரச்சனை ஏற்பட போகிறது என்பதன் அறிகுறியாகும்.

    * ஜோதிட சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மிக பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக போகிறவர்களுக்கு வாயில் அதிகபடியான உமிழ்நீர் சுரக்குமாம். வழக்கத்திற்கு மாறாக அவர்கள் பேசும்போது வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வெளியேறுமாம். இது அவர்களுக்கு நஷ்டம் ஏற்படபோவதை உணர்த்தும் நிச்சயமான அறிகுறியாகும்.

    * உங்கள் வீட்டில் ஏதேனும் உயிர்பலி நடந்தால் அதனால் உங்களுக்கு பணபிரச்சனையை ஏற்படுத்தும் அறிகுறியாகும். அதிலும் வீட்டில் வளர்க்கும்  செல்லப்பிராணிகள் மரணமடைந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம்.

    * உங்கள் வீட்டின் மேல் தண்ணீர் தொட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மேற்கூரையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து ஒழுகுவது உங்கள் குடும்பம் பெரிய பணக்கஷ்டத்தில் சிக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.
    .
    * ஒரு கருப்பு மச்சம் உங்கள் கையில் தீடீரென தோன்ற ஆரம்பித்தால் நீங்கள் இதுவரை சேர்த்து வைத்த உங்களின் அனைத்து சேமிப்புகளும் இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் உங்களுடைய கூட்டாளிகள் சரியில்லாமல் போவதுதான்.

    * உங்கள் வீட்டின் முன்புற கதவில் எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒரு விரிசல் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தின் மீது மிகப்பெரிய கடன்சுமை ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

    * தங்கத்தை தொலைத்தாலோ அல்லது அடிக்கடி ஞாபகமறதியால் தவறான இடத்தில் வைத்தாலோ நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினராலோ அல்லது நண்பராலோ ஏமாற்றப்பட்டு உங்கள் செல்வத்தை இழக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

    மேற்கண்ட காரணங்கள் உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட போவதன் அறிகுறிகளாகும். இவற்றை தவிர்க்க முன்பே திட்டமிட்டோ அல்லது உடனே சுதாரித்தாலோ பணகஷ்டம் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
    ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.
    1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.

    2. இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

    3. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார்.  திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும்  வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

    4. திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.

    இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

    4. வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமகேஸ்வரர். பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

    5. தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் அகரத்தில் காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, ‘தக்ஷிண காசி’ என்று ஞான நூல்கள் சிறப்பிக்கின்றன. இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை, `தட்சிண கங்கை’என்று போற்றுகின்றனர். பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.

    ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை திருநாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, பித்ரு ஸ்ரார்தங்கள் செய்து  ஈரத்துணியுடன் ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபட வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர். கோசாரத்தில் விருச்சிக ராசியில் குருபகவான் பயணம் செய்வதால் தாமிரபரணி புஷ்கர வருஷமாக திகழும் இந்த வருஷத்தில் ஆடி மாதத்தில் அகரம் படித்துறையில் பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் உன்னதமான ஸ்தலமாகும்.

    5. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், ஸ்ரார்தம் செய்து

    "தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ:| தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
    ×