search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாம்பிராணி தூபம்
    X
    சாம்பிராணி தூபம்

    கண் திருஷ்டி, கெட்ட சக்தியை மூன்றே நாட்களில் விரட்டும் பரிகாரம்

    இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.
    நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டால் போதும். அதன் பின்பு, எப்படி தான் கஷ்டங்கள் வருமோ என்று தெரியாது. நடந்த ஒரு நல்லதுக்கு, பத்து கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

    ‘ஏண்டா இந்த நல்லது நடந்தசுன்னு, யோசிக்கிற அளவுக்கு சில பேருக்கு எல்லாம் கஷ்டம் வரும்’. sad நம்மில் பலபேர் இதை அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்போம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால், கண்திருஷ்டி பட்டு உடனடியாக அடுத்து ஏதாவது ஒரு பெரிய சண்டை வந்துவிடும். தொழிலில் லாபம் கிடைத்தால், கண் திருஷ்டி பட்டு எதிர்மறை ஆற்றலால் ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விடும் அல்லவா? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சுலபமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  

    ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் நாம் நமது வீட்டில் இருந்தப்படியே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறை ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

    எப்படி பரிகாரம் செய்வது?

    பருத்திக்கொட்டை மூன்று, வரமிளகாய் மூன்று, ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    முதலில், வரமிளகாயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஓமத்தை எடுத்து உங்களது தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

    அடுத்ததாக பருத்திக் கொட்டையையும் எடுத்து தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை கொண்டுபோய் உங்கள் வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விட்டு, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும்.

    இரண்டு மா மரக்குச்சி, இரண்டு வெள்ளெருக்கு குச்சிகளை, அந்த அக்கினியில் போட்டு விடுங்கள்.

    இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.
    Next Story
    ×