என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2011லிருந்து 2017 வரை தென் கரோலினா கவர்னராக இருந்தவர் நிக்கி
    • நிக்கி-மைக்கேல் தம்பதிக்கு ரேனா எனும் மகள், நலின் எனும் மகன் உள்ளனர்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை பின்பற்றப்படும் அந்நாட்டில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

    2011லிருந்து 2017 வரை தென் கரோலினா முன்னாள் கவர்னராகவும், 2017லிருந்து 2018 வரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றிய நிக்கி ஹாலே, குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உட்கட்சி போட்டியில் இறங்கி உள்ளார்.

    ஜனவரி 22 அன்று, 52 வயதான நிக்கி ஹாலே, நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், சலேம் பகுதியில் உள்ள ஆர்டிசன் ஓட்டலில் தனது ஆதரவாளர்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.

    எதிர்பாராத விதமாக, அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் நிக்கி ஹாலேவை நோக்கி, "நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என கேட்டார்.


    உடனே சிரித்து விட்ட ஹாலே, "எனக்கு வாக்களிப்பீர்களா?" என மென்மையாக கேட்டார்.

    இதற்கு, "நான் டிரம்பிற்கு வாக்களிக்க உள்ளேன்" என அந்த மனிதர் பதிலளித்தார்.

    இதையடுத்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொறுமையாக நிக்கி கேட்டு கொண்டார்.

    கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட எதிர்பாராத நிலைமையை கண்ணியமாக கையாண்ட நிக்கி ஹாலேவை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, திருமணம் ஆனவர். அவரது கணவர் மேஜர். மைக்கேல் ஹாலே.

    இத்தம்பதியினருக்கு ரேனா எனும் மகளும், நலின் எனும் மகனும் உள்ளனர்.


    நேற்றைய நிலவரப்படி குடியரசு கட்சியின் உட்கட்சி போட்டியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனாலும், போட்டியில் இருந்து நிக்கி ஹாலே பின்வாங்கவில்லை.

    • அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
    • ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்

    2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.

    அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

    நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.

    அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

    • நான்கு பேர் போட்டியிட முன்வந்த நிலையில் இருவர் பின் வாங்கினர்.
    • டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

    இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தேர்தலுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.

    டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

    இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

    இது அவருக்கான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்டோனியோ குடெரஸ் சமகால சவால்களை உணர வேண்டும் என கருத்து தெரிவித்தார்
    • நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம் பெறாதது ஏன் என ஐசன்பர்க் கேள்வி எழுப்பினார்

    டெஸ்லா, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), எக்ஸ்ஏஐ (xAI) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான 52 வயதான எலான் மஸ்க் (Elon Musk).

    இவர் பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது வெளிப்படையான அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர்.

    இந்நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் குழுவில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த எந்த நாட்டிற்கும் இடம் இல்லாதது கவலையளிக்கிறது. 80 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை உலக அமைப்புகள் கடந்து தற்போது உள்ள சமகால சவால்களையும், உண்மை நிலவரத்தையும் உணர வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க-இஸ்ரேல் வம்சாவளி தொழிலதிபரான மைக்கேல் ஐசன்பர்க் (Michael Eisenberg), "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அமைப்பில் இந்தியா இடம் பெறாதது ஏன்? ஐக்கிய நாடுகள் (UNO) அமைப்பை கலைத்து விட்டு ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்" என எக்ஸ் கணக்கில் கருத்து தெரிவித்தார்.

    ஐசன்பர்கின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    வருங்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பையும், அதன் கிளை அமைப்புகளையும் கலைத்துதான் ஆக வேண்டும்.

    உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவை போன்ற பெரிய நாடு, ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்படாதது அறிவற்ற செயல்.

    அத்துடன் ஆப்பிரிக்காவிற்கும் அப்பதவி அளிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு மஸ்க் பதிவிட்டார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளும், 10 நிரந்தரம் அல்லாத உறுப்பினர் நாடுகளும் உள்ளன.

    15 நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒரு நாடு எதிர்த்து வாக்களித்தாலும், அத்தீர்மானம் தோற்றதாக கருதப்படும்.

    • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் 875 பேர் துப்பாக்கிச்சூடு வன்முறையால் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோ அருகில் உள்ள ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஏழு பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 23 வயதான அவருடைய பெயர் ரோமியோ நான்ஸ். சிகப்பு கலர் டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடிவிட்டார். ஆயுதங்களுடன் உள்ள அவர் ஆபத்தானவர் எனவும் எச்சரித்திருந்தார்.

    நான்ஸ் மற்றும் அவரது கார் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்ஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 875 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீவிர பனிப்பொழிவும், பனிப்புயலும் மக்களின் வாழ்வை முடக்கி உள்ளது
    • குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர்

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பருவநிலையில் தோன்றிய தீவிர வானிலை மாற்றங்களினால் அமெரிக்காவில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பல மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவுடன் பனிப்புயலும் தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    டென்னிசி மாநிலத்தில் 25 பேரும், ஒரேகான் மாநிலத்தில் 16 பேரும் கடும் பனிப்பொழிவால் உயிரிழந்ததையடுத்து அங்கெல்லாம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


    இது மட்டுமின்றி இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிபி, வாஷிங்டன், கென்டுக்கி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உயிரிழப்பு நடந்துள்ளது.

    கடந்த புதன்கிழமையன்று ஒரேகான் மாநில போர்ட்லேண்டு பகுதியில் 3 பேர் சென்று கொண்டிருந்த காரின் மீது ஒரு மின்சார லைன் அறுந்து விழுந்தது. இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒரு குழந்தையை தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

    பல மாநிலங்களில் மின்சார தடை ஏற்பட்டு நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்.

    சியாட்டில் பகுதியில் வீடுகள் இல்லாத 5 பேர், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தனர்.

    மிசிசிபி மாநிலத்தில் அவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டென்னிசி மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் காய்ச்சிய குடிநீரையே உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பல இடங்களில் உணவகங்கள் குடிநீர் இல்லாததால் மூடப்பட்டன.

    நியூயார்க் மாநில விளையாட்டு அரங்கங்களில் பெருமளவு பனி நிறைந்துள்ளதால், அவற்றை அகற்ற விளையாட்டு ரசிகர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு தொடரலாம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் வரலாம்
    • டிரம்புடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றார் ரான் டி சான்டிஸ்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயாக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகளின் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

    டொனால்ட் டிரம்பை தவிர தென் கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே (Nikki Haley) மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டி சான்டிஸ் (Ron DeSantis) ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

    பிரதிநிதித்துவ தேர்தல் முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், வேட்பாளர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே முதலில் ஆதரவு இருப்பதை நிலைநாட்ட வேண்டும்.

    இதுவரை டொனால்ட் டிரம்பிற்கு சிறப்பான ஆதரவு இருந்து வருகிறது.

    ரான் டி சான்டிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.


    இதை தொடர்ந்து ரான் போட்டியிலிருந்து விலகினார்.

    இது குறித்து பேசிய ரான், "போட்டியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு கோரிய பிரசாரத்தையும் நிறுத்தி கொள்கிறேன். குடியரசு கட்சி வாக்காளர்கள் மீண்டும் டொனால்ட் டிரம்ப் அதிபராவதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கும் டிரம்பிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய அதிபர் ஜோ பைடனை விட பன்மடங்கு திறமையும், தகுதியும் உள்ளவர். அவருக்கு என் ஆதரவை முழுமையாக அளிக்கிறேன்" என தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு கோரி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமஸ்வாமி, போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 


    தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்பிற்கு அக்கட்சியில் நிக்கி ஹாலே மட்டுமே போட்டியாளராக உள்ளார்.

    • நான்சி பெலோசி பெயருக்கு பதில் நிக்கி ஹாலே பெயரை டிரம்ப் பயன்படுத்தினார்
    • அதிபர் பதவி கடும் மன அழுத்தங்களை தர கூடியது என்றார் ஹாலே

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களம் இறங்கி வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப் மீது சில மாநிலங்களில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அவர் அதிபர் ஆவதில் சிக்கல்கள் எழலாம் என நம்பப்படுகிறது.

    எனவே, குடியரசு கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் தென் கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலேயும் போட்டியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன், டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பேரணியில் 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார்.

    அப்போது பேசிய டிரம்ப், நிக்கி ஹாலேயின் பெயரை குறிப்பிட்டு பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை நிக்கி சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.

    ஆனால், டிரம்ப் பேச முற்பட்டது அப்போதைய முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை குறித்து என்பது பின்னர் தெளிவாகியது. பெயர்களை மாற்றி டிரம்ப் உரையாற்றியது விமர்சனத்திற்கு உள்ளானது.

    நிக்கி ஹாலே தனது எக்ஸ் கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு பேரணியில், 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது நான் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி பேசி உள்ளார்.

    அப்போது நான் வாஷிங்டன் பகுதியிலேயே இல்லை.

    டிரம்ப், நான்சி பெலோசியை குறிப்பிட நினைத்து என் பெயரை பயன்படுத்தி விட்டார் என பிறகு நான் அறிந்தேன்.

    ஆனால், அந்த உரையில் "நிக்கி ஹாலே" என தெளிவாக பல முறை என் பெயரைத்தான் அவர் பயன்படுத்தினார்.

    கடும் அழுத்தத்தை தர கூடிய அமெரிக்க அதிபர் பதவியில் அமர மிக அதிகமான மன உறுதி வேண்டும். அந்த மன நிலை இல்லாதவர்கள் அப்பதவிக்கு வர கூடாது.

    இவ்வாறு நிக்கி பதிவிட்டுள்ளார்.

    • மிட்நைட் ப்ளிசார்ட் எனும் ஹேக்கர் குழு ரஷிய ஆதரவுடன் செயல்படுகிறது
    • 2023 நவம்பரிலும் இக்குழு தாக்குதல் நடத்த முயன்றதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது

    கணினிகளை பயன்படுத்த முக்கியமாக தேவைப்படுவது "இயக்க முறைமை" எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் (Operating System).

    உலக அளவில் கம்ப்யூட்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ்.

    இதை தயாரிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் (Redmond) பகுதியில் உள்ள மைக்ரோசாப்ட்.

    நேற்று, தனது நிறுவன பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து மைக்ரோசாப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

    சைபர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கடந்த 12 அன்று ரஷிய ஆதரவுடன் செயல்படும் மிட்நைட் ப்ளிசார்ட் (Midnight Blizzard) எனும் "ஹேக்கர்" (hacker) குழு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் மென்பொருள் கட்டுமானத்திற்கு உள்ளே அத்துமீறி ஹேக் செய்தது. பல ஈ-மெயில்களையும், பணியாளர்களின் கணக்கிலிருந்து சில கோப்புகளையும் திருடியது.

    மூத்த அதிகாரிகள், சட்டத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் ஈ-மெயில்கள் திருடப்பட்டுள்ளன.

    அக்குழுவினரின் செயல்கள் குறித்து எங்கள் நிறுவனம் அறிந்துள்ள ரகசிய தகவல்கள் என்னென்ன என வேவு பார்க்க இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கடந்த 2023 நவம்பரில் "பாஸ்வேர்ட் ஸ்பிரே தாக்குதல்" எனும் முறையில் இதே குழு, பல முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல்களை ஊடுருவ முயன்றது.

    அரசாங்க துணையுடன் செயல்படும் குழுக்களால் இது போன்ற தாக்குதல்கள் தொடர்கிறது.

    இவ்வாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன், நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றால் அது குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    • புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது என்றது அட்லஸ் ஏர்
    • நடந்து கொண்டிருந்த மெலனி, வானில், விமானத்தின் பின்புறம் தீயை கண்டார்

    அமெரிக்காவின் அட்லஸ் ஏர் ஃப்ளைட் (Atlas Air Flight) எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 5Y095 சரக்கு விமானம், வியாழன் அன்று புளோரிடா மாநில மியாமி விமான நிலையத்திலிருந்து கரீபியன் தீவில் உள்ள ப்யூர்டோ ரிகோ (Puerto Rico) பகுதியின் ம்யூனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

    "இரவு 10:22 மணிக்கு புறப்பட்ட போயிங் 5Y095 , எஞ்சின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் 10:30 மணிக்கு மியாமி விமான நிலையத்தில் மீண்டும் தரை இறக்கப்பட்டது" என அட்லஸ் விமான நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    ஆனால், இந்த விமானத்தில் பின்புறத்தில் தீ வெளிப்பட்டுள்ளது.

    மஞ்சள் கலந்த செந்நிற தீயை வெளிப்படுத்திய அந்த காட்சியை மியாமி நகரத்தை சேர்ந்த மெலனி அடராஸ் (Melanie Adaros) என்பவர், தனது தாயாருடன் நடந்த சென்று கொண்டிருந்த போது எதேச்சையாக கண்டுள்ளார்.

    இரவு வானில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டு, அப்பொழுதே தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

    குறைந்த மற்றும் அதிக எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்லவும், பிரபலமானவர்களை குழுக்களாக நீண்ட தூரம் கொண்டு செல்லும் சேவையிலும் அட்லஸ் ஏர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


    சில தினங்களுக்கு முன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு போயிங் விமானத்தில், பயணத்தின் போதே, நடுவானில், ஒரு கதவு திறந்து கொண்டதையடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த போயிங் விமான சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


    • நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது.
    • லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.

    விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமானதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா தெரிவித்துள்ளது.

    நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டருக்கும் (எல்.ஆர்.ஓ.) விக்ரம் லேண்டருக்கும் இடையே ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

    லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது. இந்த வெற்றிகரமான சோதனையானது நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக கண்டறிய வழி வகுக்கும்.

    நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மேற்பரப்பில் பின்னோக்கி பிரதிபலிப்பை கண்டறிய முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்டமாகும்.

    இவ்வாறு நாசா தெரிவித்தது.

    ×