என் மலர்
அமெரிக்கா
- 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
- தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்றார்
அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.
அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
அந்த வகையில் பிரதானமான கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் உள்ள 54 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 66 எலக்ட்ரல் வாக்குகளைக் கமலா ஹாரிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.
- டொனால்டு டிரம்ப் 26,42,585 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 24,42,560 வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருந்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
காலை 9 மணி நிலவரப்படி டொனல்டு டிரம்ப் 214 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 113 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெற்றி தீர்மானிக்கக் கூடியதாக ஸிவிங் என அழைக்கப்படும் ஏழு மாகாணங்கள் திகழ்கிறது. இதில் பென்சில்வேனியா மாகாணமும் ஒன்று இந்த மாகாணத்தில் முதலில் கமலா ஹாரிஸ் சுமார் 60 சதவீதம் வாக்குள் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல டொனால்டு டிரம்ப் அவரை முந்தினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 26,42,585 (51.3 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 24,42,560 (47.8 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
73 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த மாகாணத்தில் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.
- 40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
- கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை டிரம்ப் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது சர்வ சக்திவாய்ந்தது. தற்போதைய ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறும்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிகாலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஆயத்த பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது.
ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகளிலும் யாரை யார் முந்துகிறார்கள் என்பதும் கணித்து கூறமுடியாத அளவுக்கு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 198 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.
முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெறுவார் எனக் கூறப்பட்டது. நாடு முழுவதும் 48 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் 44 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர்.
ஜனநாயகம், பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய ஐந்து விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்டு டிரம்ப் அதிக இடங்களில் முன்னணி பெற்று வருகிறார். இதன்மூலம் கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
காலை 9 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 52.சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
- ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 11 வயது சிறுமி செல்லமாக ஒரு ஆட்டை வளர்த்து வந்தாள். அதை கண்காட்சிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது.
குழந்தைகளுக்கு விவசாய, சமூக திறன்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு திட்டத்தின் கீழ் அந்த ஆடு சிறுமிக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த ஆட்டை திட்ட அதிகாரிகள் பெற்றுச் சென்றுவிடுவார்கள். ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
செல்லமாக வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு கொடுக்க சிறுமிக்கு மனம் வரவில்லை. ஆனால் திட்ட அதிகாரிகள் ஒப்பந்தப்படி ஆட்டை அழைத்துச் சென்று ஏலத்தில் விட்டு விற்றுவிட்டனர். ஆனால் அன்றைய தினம், சிறுமி மேஜைக்கு அடியில் படுத்து அழுதுபுரண்டாள். அவளை பெற்றோரால் சமாதானப்படுத்த முடியவில்லை.
ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. ஏலமிடப்பட்ட ஆடு பலியிடப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் தாய், ஏல நிறுவனம் மீது கோர்ட்டில் முறையிட்டாள். 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. பலியான ஆட்டிற்காக 3 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2½ கோடி) சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.
- டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்) வாக்குகள் பெற்றார்.
- கமலா ஹாரிஸ் 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதிக எலக்டோரல் வாக்குகள் கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்), 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகளும் பெற்றனர். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 178 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.
- பென்சில்வேனியாவில் 68 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை.
- மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்புதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்விங் மாகாணமான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழும்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
இதில் ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் முன்னிலை பெற்று வருகிறார். பென்சில்வேனியாவில் 19 எலக்டோரல் காலேஜ் (Electoral College) வாக்குகள் உள்ளன. மிச்சிகனில் 15 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ்க்கு 34 வாக்குகள் கிடைக்கும்.
பென்சில்வேனியாவில் இதுவரை 68 சதவீத வாக்குகளும், மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.
- டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்) பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகள் பெற்றுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் பல மாகாணங்கள் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் ரெட் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும். அதேபோல் பல மாகாணங்கள் ஜனநாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் க்ரீன் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும்.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழு மாகாணங்கள் மாறிமாறி வாக்களிக்கும். இதனால் ஸ்விங் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு அதிக வாக்குகள் பெறுவர்கள்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். 47 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதில் டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்), கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகளும் பெற்றுள்ளனர்.
+2
- இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இரண்டு மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
- குடியரசு கட்சிக்கு சாதகமான வெர்மொன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.
தொடக்க சுற்றுகள் முடிவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
இண்டியானா மாகாணாத்தில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் 11 எல்க்டரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இது டிரம்பிற்கு முழுமையாக வந்து சேரும். இண்டியானா மாகாணம் குடியரசு கட்சிக்கு சாதகமானதாகும்.
அதேபோல் கென்டக்கி மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 3-வது முறையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இங்கு 8 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் உள்ளது.

வெர்மொன்ட் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில் இதற்கு முன்னதாக குடியரசு கட்சிக்கு சார்பாக வாக்களித்து வந்தது. தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
மேலும் 4 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் ஒரு மாகாணத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
- மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.
- எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.
அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதைதொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வெல்லப்போவது டிரம்பா..? கமலா ஹாரிஸா? என்பது இன்று பிற்பகவில் தெரியவரும்.
- வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.
- பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.
அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (6.11.2024) அதிகாலை 5.30 மணியளவில் தேர்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 2 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.
இதுபற்றி அவர் பேசும்போது, மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு தேசிய அளவில் தடை விதிக்கும் திட்டம் உள்ளது.
குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி குறைப்பு மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக முன்பணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் உள்ளன என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, குடியுரிமை திட்ட நடைமுறையில் உள்ள குறைகளை சரி செய்வதற்கான தேவையும் உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசு என இரண்டு அரசுகளின் நிர்வாகத்தின் கீழும் அது நீண்டகாலம் வரை சரிவர செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதனை சரி செய்ய போகிறேன் என்றார்.
அதனுடன், அமெரிக்க தொழிற்சாலை, அமெரிக்க தொழிலாளர்கள் என இவற்றில் முதலீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும். 21-ம் நூற்றாண்டில் உலகளவில் போட்டியாளராக அமெரிக்கா இருக்கும் என உறுதி செய்யப்படும். வெளிப்படையாக கூறுவதென்றால், 21-ம் நூற்றாண்டில் சீனாவுடனான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம். இவையே என்னுடைய முன்னுரிமையான விஷயங்கள் ஆகும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
குடியேற்ற விவகாரத்தில், எல்லையில் ஏஜெண்டுகளை அதிகரிப்பது, மனித கடத்தலை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்காக மசோதா ஒன்றை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் விஷயங்களை மேற்கொள்ளும் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
- நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது.
- பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.
புளோரிடா:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (5.11.2024) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்
முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இதேபோன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தங்களுடைய வீட்டின் அருகே உள்ள பாம் பீச் பகுதியில் அமைந்த வாக்கு மையத்திற்கு மனைவி மெலனியா டிரம்புடன், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகை தந்து, வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, நான் அதிக நம்பிக்கையாக உணர்கிறேன். நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.
அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பென்சில்வேனியா மாகாணத்தில் அரசியல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, கடின உழைப்பை தரும் தேசப்பற்றாளர்கள் நாட்டை பாதுகாக்க போகிறார்கள் என்றார். என்னுடைய தலைமையின் கீழ், பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.
அமெரிக்காவை வளம் கொழிக்கும் நாடாக மீண்டும் உருவாக்குவோம். ஆனால், அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நாம் அனைவரும் இதற்காக காத்திருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.






