என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார் .
    • வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

    கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார் . பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும். இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த முறை ஸ்விங் ஸ்டேட்ஸிலும் தொடங்கத்தில் இருந்து டிரம்ப் முன்னிலையில் இருந்தார். ஆனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கமலாவும் நெருங்கி வந்ததால் எந்த நேரமும் ரிசல்ட் மாறலாம் என்ற சூழல் நிலவியது. ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்பார்ப்புகளை பொய்யாகி ஸ்விங் மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

    ஸ்விங் ஸ்டேட்டஸ் தேர்தல் வெற்றி

    பென்சில்வேனியா-  2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.         

    நெவேடா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் வென்றிருந்தார்.

    மிச்சிகன்- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    ஜார்ஜிய- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    அரிசோனா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    வடக்கு கரோலினா- 2024 தேர்தலில் டிரம்ப் வெற்றி, 2020 ஆம் ஆண்டு இங்கு ஜோ பைடன் வென்றார். 2016 தேர்தலில் டிரம்ப் வென்றிருந்தார்.

    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்
    • உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு  இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார்.

    அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா கவனம் பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு எதிரான குடியரசுக் கட்சியின் நகர்வாக இது பார்க்கப்பட்டது.

    உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது. 1970களில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான் டியகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜன்நாயக கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது ஜேடி வான்ஸ் துணை அதிபர் ஆகியுள்ள நிலையில் உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்நத ஒருவர் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை ஆகும் 

    • தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
    • இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

    வருங்கால கணவர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை முடிக்க விரும்புவதாக பெண் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இணையத்தில் உலாவும் நேரத்தில் வாக்களிக்கத் தவறியதால், தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட ரெடிட் பதிவில், அவர்கள் புளோரிடாவில் வசிப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் வாக்களிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் விளக்கினார். ஏனெனில் அவருக்கு எந்த வேட்பாளர்களும் பிடிக்கவில்லை. மேலும் எங்கள் உரிமைகளை இன்னும் கட்டுப்படுத்தும் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

    மேலும் "எங்கள் அரசியல் கருத்துக்கள் மிகவும் ஒத்தவை. எனவே அவர் இந்த வாக்கைத் தவிர்ப்பதில் ஏன் அலட்சியமாக இருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை," என்று அவர் கூறினார். "அவர் வாக்களிக்கவில்லை என்றால் நான் அவருடன் இருக்க முடியாது என்று சொல்வது கொடுமையா?" என்று பதிவிட்டு இருந்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. கமென்ட்ஸ் பிரிவில், சில பயனர்கள் அவரது முடிவை ஆதரித்தாலும், மற்றவர்கள் வாக்களிப்பது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்களின் உறவைப் பாதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

    • வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார்.
    • அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

    வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார். மேடைக்கு தனது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோருடன் வந்த டிரம்ப்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இதுவாகும். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும்.

    அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். என்னை தேர்வு செய்த அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். எனது அழகான மனைவி மெலானியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார்.எலான் மஸ்க்கை குறிப்பிட்டு,  ஒரு நட்சத்திரம் உதயமாகிவிட்டதாக டிரம்ப் தனது உரையின்போது நெகிழ்ந்தார்.

    • அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். 

    இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். எலக்ட்ரல் வாக்குகளை தாண்டி மக்களின் மொத்த வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

    கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான டிரம்ப் அதற்கு அடுத்த 2020 தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் மூன்றாம் முறை மீண்டும் வென்று டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் வெள்ளை மாளிகை மீண்டும் டிரம்ப் வசம் வருவதால் குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். 

    • பென்சில்வேனியாவில் 19 எலக்டோரல் வாக்குகள்.
    • அலாஸ்காவில் 3 எலக்டோரல் வாக்குகள்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வந்தார். பின்னர் கமலா ஹாரிஸ் இடைவெளியை குறைத்து கடும் போட்டி கொடுத்தார். கலிபோர்னியா (54), வாஷிங்டன் (12) மாகாணங்களில் பெற்றி பெற்றபோது இருவருக்கும் இடையிலான முன்னணி வித்தியாசம் குறைவாக இருந்தது.

    ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் கை ஓங்கியது. வடக்கு கரோலினா (16), ஜார்ஜியா (16), பென்சில்வேனியா (19) ஆகிவற்றில் வெற்றி பெற்றார். இந்த மூன்று மாகாணங்களில் மொத்தம் 51 எலக்டோரல் வாக்குகள் கிடைத்ததால் தற்போது 267 வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸை விட 53 வாக்குகள் முன்னிலை பெற்றார். அலாஸ்கா மாகாணத்தில் வெற்றி பெற்று 3 எலக்டோரல் வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெஜாரிட்டிக்கு தேவையான 270 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மிச்சிகன் (15), விஸ்கான்சின் (10), அரிசோனா (11), நெவாடா (6) ஆகிய மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்த மாகாணங்களில் அவர் வெற்றி பெற்றால் 303 எலக்டோரல் வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.

    • 248 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபர் கூட இல்லை
    • ஒரு இளம்பெண் பலாத்காரமாகக் கருவுற்றால் அதை கலைக்காமல் சுமக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா

    உலகமே எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்குள் மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவர்.  

    இரு தலைவர்களும் நாடு முழுவதும் பயணித்து தீவிர பிரசாரம் செய்தது அறிந்ததே. பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து பொதுமக்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்தினர். தாராளவாதத்தைப் பின்பற்றும் அமெரிக்காவில் ஆணாதிக்க போக்கு இருப்பதும் அரசியலில் அது வெளிப்படையாகக் காணப்படுவதும் உண்டு. 248 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபர் கூட இல்லாதது இதை உறுதிப்படுகிறது.

    கமலா ஹாரிஸ் வென்றால் அவரே அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். ஆனால் தேர்தல் முடிவுகள் கமலா தோல்வி முகத்தில் இருப்பதையே காட்டுகிறது. இதற்கிடையே சமீபத்தில் வெளியான அரசியல் விளம்பரம் ஒன்று கவனம் பெற்றது. அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அந்த விளம்பரத்தில் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கும் மனைவிமார்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை மறைப்பதாகச் சித்தரிக்கப்பட்டது.

    இதன்மூலம் இந்த தேர்தலில் பாலின சமத்துவம் முக்கிய பேசுபொருளானது. குறிப்பாக டிரம்ப்புடன் நடந்த விவாதத்தின்போது கமலா கேட்ட கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது. அதாவது, கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக பேசி வரும் டிரம்பை பார்த்து கமலா, ஒரு இளம்பெண் பலாத்காரமாகக் கருவுற்றால் அதை கலைக்காமல் சுமக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டார்.

    இதற்கு பதிலளிக்க முடியாமல் டிரம்ப் திணறினார். தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய அந்த விளம்பரத்தில், டிரம்ப் ஆதரவு கணவன் வாக்களித்து வெளியே வந்ததும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் பெண், கணவனை பார்க்காமல் சுதந்திரமாகக் கமலாவுக்கு வாக்களிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் பின்னணி குரல் அளித்திருந்தார்.அவர் கூறியதாவது, பெண்கள் கணவர்களின் அழுத்தம் இல்லாமல் அமெரிக்காவில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.

    அதிக சுதந்திரம் கொண்டதாக கருதப்படும் அமெரிக்க சமூகத்தில் மனைவிகள் தாங்கள் ஒரு பெண்ணுக்கு வாக்களித்தோம் என்பதை தங்களின் கணவன்ளுக்கு பயந்து மறைக்க வேண்டிய சூழலே உள்ளதாகவும் இந்த விளம்பரம் பொருளுணர்த்துகிறது .

    • டொனால்டு டிரம்ப் வெற்றியை நோக்கி முன்னோக்கிச் செல்கிறார்.
    • முக்கியமான 51 எலக்டோரல் வாக்குகளை பெறுவது யார் என்பதில் இழுபறி.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 247 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஸ்விங் மாகாணங்களாக கருதப்படும் 7-ல் இன்னும் ஐந்தில் (பென்சில்வேனியா, விஸ்கான்சின், நெவாடா, மிச்சிகன், அரிசோனா) முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இங்கு இன்னும் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சிறிய நம்பிக்கையில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஹோவர்ட் பல்கலைகழகத்தில் கமலா ஹாரிஸ் இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச இருந்தார். தற்போது பின்னதங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.

    "இன்னும் எண்ண வேண்டிய வாக்குகள் எங்களிடம் உள்ளன. இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு குரலும் பேசுவதை உறுதி செய்ய, ஒரே இரவில் தொடர்வோம். எனவே, இன்று இரவு துணை ஜனாதிபதியிடம் இருந்து நீங்கள் உரையை கேட்க மாட்டீர்கள். ஆனால் நாளை அவளிடமிருந்து நீங்கள் கேட்பீர்கள், அவர் நாளை இங்கு வருவார், தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் உரையாற்றுவார்" என கமலா ஹாரிஸின் பிரசார இணைத் தலைவர் செட்ரிக் ரிச்மண்ட் கூறினார்.

    • அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன
    • தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 எலக்டோரல் வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 50 மாகாணங்களில் மொத்தம் 51.2% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். 47.4% வாக்குகளுடன் கமலா பின்தங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் [மேலவை] டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதிக்கத்தை நிறுவியுள்ளது. செனட் [மேலவை] மற்றும் பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] ஆகிய இரண்டிலும் அதிக இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன. இதில் 51 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வென்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 42 இடங்களில் உள்ளது.

    இதன்மூலம் செனட் சபையில் பெரும்பான்மை பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி, நீதிபதிகளை நியமித்தல் உள்ளிட்ட மேலவை செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, டிரம்ப் வெற்றி பெற்றால் எந்த தடங்கலும் இன்றி மேலவையில் உள்ள பெரும்பான்மையை வைத்து சுதந்திரமாக முடிவுகளை செயல்படுத்த முடியும். அதே நேரம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும், மேலவையில் டிரம்ப் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது கடினம். எனவே தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அதேபோல் 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] இடங்கள் உள்ளன. இதில் தற்போது 184 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும், 155 இடங்களில் கமலாவின் ஜனநாயக கட்சியும் வென்றுள்ளது. இதில் 218 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே பிரதிநிதிகள் சபையில் [ஹவுஸ்] பெரும்பான்மையைப் பெறும்

    • டொனால்டு டிரம்ப் 26,36,905 வாக்குகள் பெற்றார்.
    • கமலா ஹாரிஸ் 25,09,360 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஸ்விங் மாகாணங்கள் எனக் கருதப்படும் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் ஏழு மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.

    வடக்கு கரோலினாவில் டிரம்ப் சுமார் 3.2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.

    தொடக்கத்தில் சுமார் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார். இதனால் கடும் இழுபறி நீடித்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. இறுதியில் கமலா ஹாரிஸை விட 2.5 சதவீதம் வாக்குள் அதிகம் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் 26,36,905 வாக்குகள் பெற்றார். கமலா ஹாரிஸ் 25,09,360 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 1,27,545 ஆகும். டொனால்டு டிரம்ப் 50.9 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், கமலா ஹாரிஸ் 48.4 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த வெற்றி மூலம் டொனால்டு டிரம்ப் 16 எலக்டோரல் வாக்குகளை பெற்று மொத்தம் 247 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகள் பெற்றுள்ளார்.

    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சா வளியை சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 5 பேர் தற்போது எம்.பி.யாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

    இவர் சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீசை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

    தெற்காசிய வாக்காளர்களை குறிவைத்து மேற்கொண்ட இவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்து கோவில்கள் உள்பட வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்த இவர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இல்லினாய்ஸின் பியோரியில் வளர்ந்த அவர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எந்திர என்ஜினீயரிங் பயின்றார். மேலும் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற இவர் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை குழுக்களிலும் பணியாற்றுகிறார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்த போது கவலை அடைந்த இவர் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தவதற்கு இடைக்கால வங்காளதேசம் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இவர் இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பிரியா டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    • 51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார்
    • 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரல் பிரதிநிதிகளின் வாக்காகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார்.  51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 209  எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தற்போது 47.5% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

    ஆனால் உண்மையில் வெற்றியை தீர்மானிக்கப்போகும் ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஸ்விங் மாகாணமாக வட கரோலினாவில் மொத்தம் உள்ள 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    இதைதவிர்த்து மீதமுள்ள பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் 6 ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. அரிசோனாவில் 11, நெவேடாவில் 6, விஸ்கான்சின் 10, மிச்சிகனில் 11, பென்சில்வேனியாவில் 19, ஜார்ஜியாவில் 16 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன.

    ஜார்ஜியா:  டிரம்ப் - 50.8%, கமலா - 48.5%

    அரிசோனா: டிரம்ப் - 49.8%, கமலா - 49.3%

    நெவேடா: டிரம்ப் -  52.2%, கமலா - 46.1%

    விஸ்கான்சின்: டிரம்ப் - 51.2%, கமலா - 47.3%

    பென்சில்வேனியா:  டிரம்ப் - 50.9%, கமலா - 48.1% வாக்குகள் இடைவெளியில் உள்ளனர்.

    ×