என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    • உயரம் தாண்டுதலில் தேஜஸ்வி சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பார்படோஸ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் பார்படோஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றினர். இறுதியில் பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது.

    • பளு தூக்குதல் பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங், மொத்தம் 390 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் துலிகா மான் வெள்ளி வென்றார்.
    • இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    6-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் இன்று விளையாடினார்.

    இந்த போட்டியில் துலிகா மான், ஸ்காட்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதன்மூலம் துலிகா மான் வெள்ளி வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 3 சுற்றுகளில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கலம் வென்றார்.
    • இந்தியா இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவுடன் மோதினார்.

    இதில், சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவர் 11-6, 11-1, 11-4 என்ற கணக்கில் மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்பு

    பர்மிங்காம்:

    பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள்.

    இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கையைச் சோந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரியை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரர்கள் காணாமல் போனதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் தங்கியிருக்கும் விளையாட்டு கிராம அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த பிரிவில் கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சமோவா நாட்டின் ஜேக் ஓபலாக் 358 கிலோ எடை தூக்கி வெற்றிப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • இதன் எடை 20 கிராம் உள்ளது.

    லண்டன் :

    விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க கட்டி, ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்கக்கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

    மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியா மலேசியாவுடன் மோதியது.
    • இதில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    கலப்பு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது.

    இதையடுத்து, இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
    • டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை

    இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    ×