என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

    குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பொதுமக்கள் டீக்குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மந்திரி ஆஷான் இக்பால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 8000 கோடி ரூபாய் இந்த தேயிலை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் கடன் வாங்கிய தொகையாகும். நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் மக்கள் தினம் டீக்குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு இக்பால் தெரிவித்துள்ளார்.

    இக்பாலின் இந்த கருத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் அவர், பாகிஸ்தான் வணிகர்கள் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும், அவ்வாறு செய்வது நாம் பெட்ரோல் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என ஏற்கெனவே கூறியிருந்தார்.

    • 2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தோற்றவுடன் எங்கள் தேசமே சோகத்தில் ஆழ்ந்தது என கூறினார்.
    • பாகிஸ்தான் அணி நிர்வாகம் செய்த நியாயமற்ற செயலால், நாங்கள் தோற்றுவிட்டோம் என கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகள் மோதுகிறது என்றால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்பின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதி காரணமாக இடம் பெறவில்லை. இந்நிலையில் அந்த போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்திருக்கும் என அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயப் அக்தர் கூறியதாவது:-

    2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் செய்த செயல் நியாயமற்றது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் உலகக் கோப்பையை வென்றுவிட்டு விடை பெறலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடற்தகுதியை காரணம் காட்டி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை.

    ஒருவேளை அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்திருப்பேன். ஆனால் நான் இல்லாமல் பாகிஸ்தான் தோற்றுவிட்டது. அந்த ஆட்டத்தை பார்த்து வேதனையாக இருந்தது. அதேபோல்தான் எனது தேசமும் இருந்தது.

    இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.

    • கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பு, கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் அந்நாட்டு குடிமக்களில் பலர் வேலையில்லாமல், வருவாயுமின்றி திண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1,56,877 பேர், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 76,213 பேர் உள்பட 2.86 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் வேலை தேடி பதிவு செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இவர்களில் 54 சதவீதம் பேர் சவுதி அரேபியா, 13.4 சதவீதம் பேர் ஓமன் மற்றும் 13.2 சதவீதம் பேர் கத்தார் ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு செல்வதென்று முடிவு செய்துள்ளனர். இதனை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது.

    இதன்படி, கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
    • இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது.

    கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    • முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்திருந்தது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.

    முல்டன்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்நாட்டு அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் அடித்தார். கைல் மேயர்ஸ் 33 ரன்களும், கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்களும், வாசிம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
    • இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.

    78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன.

    இந்நிலையில், துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • இம்ரான் கான் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • இம்ரான் கான் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தேசிய மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக இம்ரான்கானே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அப்போது தொண்டர்களிடம் இம்ரான் கான் பேசியதாவது;- "பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இது எங்கள் உரிமை. அனைத்து கட்சி அமைப்புகளையும் தயாராக இருக்கும்படி நான் கூறியுள்ளேன். சுப்ரீம் கோர்ட்டிலிருந்து அனைத்து தெளிவையும் பெற நாங்கள் காத்திருக்கிறோம். அது முடிந்தவுடன், அடுத்த சில நாட்களில் நான் தேதியை அறிவிப்பேன். உண்மையான சுதந்திரத்திற்கான நமது பிரச்சாரத்திற்கு நாம் முழுவதுமாகச் செல்ல வேண்டும்."

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
    • இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 4932 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.

    இதைத்தவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார். இந்த சாதனையை பாபர் அசாம் 13 போட்டிகளில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

    இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்லாமாபாத்தில் நடக்கும் திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது.

    4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் சதமடித்தார்.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஷமார் புருக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 70 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். மொகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    வேனில் பயணித்த 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தானின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

    ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த வேனில் பயணித்த 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக துணை ஆமையர் ஹாபிஸ் முகமது காசிம் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.
    • சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    1974-ன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.

    இந்தப் பயணத்தின் போது யாத்ரீகர்கள் வேறு வேறு இடங்களுக்கிடையில் பஞ்ச சாஹிப், நங்கனா சாஹிப் மற்றும் கர்தார்பூர் சாஹிப் செல்வார்கள்.

    இந்நிலையில், ஜூன் 8 முதல் 17-ம் தேதி வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர திருவிழாவிற்காக சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று 163 விசாக்களை வழங்கி உள்ளது.

    பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    குரு அர்ஜன் தேவ் தியாக தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானுக்கான உயர் கமிஷன் இந்த விசா வழங்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் 'யாத்ரீகர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களுக்கு நிறைவான யாத்திரை அமைய வாழ்த்துக்களையும்' உயர் கமிஷன் பொறுப்பாளர் அப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

    ×