என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

    மேலும் 80 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அப்போது நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 80 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து 20 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளத்தில் விழுந்த வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது.
    • விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பலுஸ்திஸ்தான்:

    பாகிஸ்தான் கில்கிட் பலுஸ்திஸ்தான் பகுதியில் சுற்றுலா மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. இந்த வேனில் 16 பேர் பயணம் செய்தனர்.

    டைமர் மாவட்டம் பாசார்பாஸ் என்ற பகுதியில் சென்ற போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் சென்ற பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். பள்ளத்தில் விழுந்த வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை உள்பட 8 பேர் இறந்தனர். 4 பெண்கள், 4 குழந்தைகள், மற்றும் ஒரு ஆண் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பாகிஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் விழுந்து 6 பேர் பலியானார்கள். பலுகிஸ்தான் பகுதியில் பல ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • ஒரு பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார்.
    • தப்பி ஓடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    பாகிஸ்தானின் கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது உடல்களில் குண்டுகளை கட்டி இருந்தனர்.

    போலீசார் அங்கு வந்து பயங்கரவாதிகளை பிடிக்க முயன்றனர். ஒரு பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    • நஸ்ருல்லாவுடன் சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு.
    • இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    பெஷாவர் :

    கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.

    காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார். இதை அப்படியே புரட்டிப்போட்டது போல இருக்கிறது, அஞ்சுவின் கதை.

    உத்தரபிரதேச மாநிலம் கைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த அஞ்சு (வயது 34).

    இவர் திருமணத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் கணவர் அரவிந்த்குமாருடன் வசித்தார். இந்த தம்பதிக்கு 15 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு அஞ்சுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் முகநூலில் (பேஸ்புக்) அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை, ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிச் சென்றார் அஞ்சு. ஆனால் அவர் சென்றது, பாகிஸ்தானில் உள்ள தனது முகநூல் காதலரை காண்பதற்கு. அதற்காக, குடும்பத்தினருக்கு தெரியாமல், முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாத விசாவையும் அஞ்சு பெற்றுள்ளார். நஸ்ருல்லாவின் சொந்த ஊர், கைபர் பக்துங்வா மாகாணம் அப்பர் திர்மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற குக்கிராமம். அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, 5 சகோதரர்களில் இளையவர். திருமணம் ஆகாதவர்.

    நஸ்ருல்லா வீட்டுக்கு சென்று தங்கிய அஞ்சு, அங்கிருந்தபடி, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்தார். ஆனால் 'தோழி'யான அஞ்சுவை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறினார்.

    ஆனால் ஒரே நாளில் அதிரடியாக காட்சிகள் மாறின.

    'பாத்திமா' என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய 'அஞ்சு', நேற்று மாவட்ட கோர்ட்டில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் முன்னிலையில் முறைப்படி அவரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம், நஸ்ருல்லாவுடன் கைபர் பக்துங்வா சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு. அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கரம் கோர்த்தபடி அந்த ஜோடி உற்சாகமாக உலா வந்தது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தில் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'எனது மகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு நேரடித் தொடர்பில்லை. அவர் மனரீதியாக பிரச்சினை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். என் மருமகன் எளிமையான மனிதர். அவர் மீது தவறு எதுவும் கிடையாது' என்றார்.

    இதற்கிடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஞ்சு, 'நான் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இந்தியாவில் உள்ள எனது உறவினர்களையும், குழந்தைகளையும் ஊடகத்தினர் யாரும் தொந்தரவுபடுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    புதிய மண்ணில், புது வாழ்வை தொடங்கிவிட்டார், 'பாத்திமா' ஆகிவிட்ட 'அஞ்சு'. ஆனால் இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    • விசாரணை குழு முன்பு கடந்த 11-ந் தேதி இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.
    • இம்ரான் கானை கைது செய்வதற்காக வாரண்டை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணை குழு முன்பு கடந்த 11-ந் தேதி இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக வாரண்டை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இதில் இம்ரான் கானை கைது செய்து இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் காவல்துறை தலைவரை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    • பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள்
    • உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது.

    நிலைமையை சரி செய்யும் முயற்சியில் அந்நாடு பல உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது.

    சமீபத்தில் உலக நாணய நிதியம் (IMF) விதித்திருக்கும் நிபந்தனைகள் அனைத்திற்கும் சம்மதித்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறது. தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து கூடுதலாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ($600 மில்லியன்) கடனையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைவர் சையத் அசிம் முனிர், சுயசார்புடைய நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    கானேவால் மாதிரி விவசாயப் பண்ணை (Khanewal Model Agriculture Farm) திறப்பு விழாவில் பேசிய சையது கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள். தற்போது உள்ள பிச்சை எடுக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அல்லா, அனைத்து ஆசீர்வாதங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளார். உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.

    ஒரு மாநிலம் ஒரு தாயைப் போன்றது. மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, அன்பும் மரியாதையும் கொண்டது. பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் இன்றியமையாதவை. பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டிற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறது.

    ராணுவம் தனது பலத்தை மக்களிடமிருந்து பெறுவதுபோல் மக்களும் ராணுவத்தால் பலம் பெறுகின்றனர். தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீளும் வரை ராணுவம் ஓயப்போவதில்லை. நாடு விவசாய புரட்சியை சந்திக்கும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஜூலை நிலவரப்படி, அந்நாடு சீனாவிற்கு திருப்பி தர வேண்டிய கடன் உட்பட, மொத்த கடன் ரூ.20 ஆயிரம் கோடி ($2.44 பில்லியன்) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலில் விழுந்துள்ளார்.
    • அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார்

    பெஷாவர் :

    'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

    அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார்.

    இவரும், பாகிஸ்தான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் திர் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர். இந்த நிலையில் நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.

    அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார்.

    அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமாரும் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.

    • நான்கு ஒருநாள் போட்டி மற்றும் முப்பது 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.
    • ஓய்வு பெறுவதாக ஆயிஷா நசீம் திடீரென்று அறிவித்து உள்ளார்.

    பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம். 18 வயதான அவர் இதுவரை நான்கு ஒருநாள் போட்டி மற்றும் முப்பது 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆயிஷா நசீம் திடீரென்று அறிவித்து உள்ளார். தனது முடிவை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது நான் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இஸ்லாத்தின் படி என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு கீழ் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளது
    • சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது

    ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து அசல் பாஸ்போர்ட்டுகளில், அதனை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தரவரிசையாகும். இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

    உலகின் 199 பாஸ்போர்ட்டுகளில் அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி கணக்கிடப்பட்ட 2023-க்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

    இதன்படி பாகிஸ்தானிய பாஸ்போர்ட் 'நான்காவது மோசமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே பாகிஸ்தான் மிஞ்சி பட்டியலில் மேலான இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 33 மாநிலங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது.

    சிரியாவின் பாஸ்போர்ட் 30 இடங்களுக்கும், ஈராக் 29 இடங்களுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் 29 இடங்களுக்கும் இது போன்ற அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    குடிமக்களுக்கு 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் இடம் பெறுகிறது.

    190 இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் இந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன.

    முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா தனது தரவரிசையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 8-வது இடத்திற்கு விழுந்துள்ளது.

    2022-ம் வருடம் இப்பட்டியலில் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உலகின் 57 இடங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்தியாவை போல 80-வது இடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது
    • சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது

    பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவுகிறது. சமீப காலமாக அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

    பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இலங்கை போன்று பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து அந்நாடு பல நாடுகளிடம் உதவி கோரியது.

    சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு பாகிஸ்தான் சம்மதித்த பிறகு, சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் எதிர்கால விரிவான பொருளாதார நிலையை ஆராய்ந்த நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மீண்டும் ஒருமுறை இது போன்ற ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம், சிக்கலான மற்றும் பன்முகம் கொண்ட சவால்களை சந்தித்து ஒரு அபாயகரமான நிலையில் இருக்கிறது.

    இந்த சவால்களை எதிர்கொள்ள அந்நாட்டிற்கு அந்நிய வழிகளில் பல உதவிகள் தேவைப்படும். இது மட்டுமல்லாமல் ஐஎம்எஃப் நிதியும் மீண்டுமொரு முறை தேவைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

    மின்சார மற்றும் எரிபொருள் ஆகிய இரு துறைகளிலும் அந்நாடு பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஐஎம்எஃப் உடன் கடன் பெறுவதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நுகர்வோருக்கு கட்டணத்தை உயர்த்த சம்மதித்து உள்ளது.

    இதற்கு உள்நாட்டிலேயே பல எதிர்ப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் 150 ஆண்டுகால இந்து கோவில் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
    • காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.

    இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

    அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டுச் சென்றனர்.

    கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கிறது.

    இதேபோல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது, கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்'களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ×