search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arif Alvi"

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடிதம் எழுதினார்.
    • அவரது பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆளும் பிடிஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற டாக்டர் ஆரிப் ஆல்வி, 13-வது அதிபராக இன்று பதவியேற்றுக்கொண்டார். #PakistanPresident #DrArifAlvi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். 

    இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆரிப் ஆல்வி அதிபராக பதவியேற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசைன், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா, அனைத்து துறை மந்திரிகள், மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.  #PakistanPresident #DrArifAlvi
    பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ள இம்ரான் கான் கட்சியின் சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். #Pakistanpresidentpost #DrArifAlvi #Pakistanpresident
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபராக பதவி வகிக்கும் மம்னூன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு  முன்னதாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதிபர் தேர்தலுக்கான  வேட்பு மனுக்கள் இம்மாதம் 27-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர் இறுதிப்பட்டியல் 30-ம் தேதி வெளியாகும். இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் அந்நாட்டின் 22-வது பிரதமராக இன்று பதவியேற்ற சில நிமிடங்களுக்கு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பல் டாக்டராக தொழில் செய்துவரும் ஆரிப் ஆல்வி(69) இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தொடக்கக்கால தலைவர்களில் ஒருவராவார். கடந்த 2006-2013 காலகட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ள இவர், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கராச்சி தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistanpresidentpost #DrArifAlvi #Pakistanpresident
    ×