search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு - பிரதமர் பரிந்துரையை ஏற்றார் அதிபர்
    X

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு - பிரதமர் பரிந்துரையை ஏற்றார் அதிபர்

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடிதம் எழுதினார்.
    • அவரது பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×