என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
    • நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் அடித்தார்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    இதைடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 


    இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    • டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    • சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
    • மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

    ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

    இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், வெலிங்டனில் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    • மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
    • மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

    ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

    இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ரன்னும், மொகமது ரிஸ்வான் 34 ரன்னும் எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது.

    • பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரைசதம் விளாசினார்.
    • இதன்மூலம் பாபர் அசாம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    இதில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதம் விளாசினார். இதன்மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் பாபர் அசாம் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்தார்.

    விராட் கோலி இந்த மைல்கல்லை 261 இன்னிங்சில் எட்டினார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார்.

    • நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பேசினார்.
    • அப்போது, எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் என குறிப்பிட்டார்.

    வெலிங்டன்:

    வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை மந்திரி ஜெய்சங்கர் திறந்துவைத்தார். அப்போது நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில் அவர் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம் உள்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

    கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கும் எவரும் ஸ்டீபன் பிளெமிங்கை புறக்கணிக்க முடியாது.

    கிரிக்கெட்டில் நமது அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

    எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், ஆனால் அது வேறு விஷயம் என குறிப்பிட்டார்.

    • நியூசிலாந்து பிரதமரை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்தார்.
    • அப்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கொரோனா காலத்தின்போது தடுப்பூசி தயாரிப்புகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.

    ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கையிலெடுத்துக் கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்.

    5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில் 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்னை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.

    மேலும், அந்நாட்டின் வெளிவிவகார மந்திரி நனையா மகுதாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.

    ×