search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூரியகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்து வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    சூரியகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்து வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    • சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    Next Story
    ×