என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • 6 வாரங்கள் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
    • பிணயக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 150 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்குள் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 100 பிணயக்கைதிகளை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை தயாரானது. ஆனால் கடைசி நேர ஆதாயத்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுப்பதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அதை மறுத்தது.

    பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட இருக்கிறது.

    6 வாரம் போர் நிறுத்தத்தின்போது முதற்கட்டமாக 33 பயணக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனத்தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 95 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்ய இருக்கிறது.

    இஸ்ரேல் நேரப்படி நாளை மாலை 4 மணிக்கு முன்னதாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் அனைவரும் இளைஞர்கள் அல்லது பெண்களாக இருப்பார்கள்.

    அதேவேளையில் ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளில் பலர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இதனால் பிணயக்கைதிகள் பெயர் வெளியிடப்பட்டால்தான் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுடன் காசா பகுதியில் உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

    போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

    அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    அதன்படி,பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    "பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.

    "பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்," என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

    இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

    போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியது.
    • ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    "நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது," என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.

    • போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்தன.
    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    டெல் அவிவ்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய இஸ்ரேல் நோக்கி வந்த ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளது.
    • எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் மறைவிடத்திற்கு ஓட்டம்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு ஆகியவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திடீரென ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான மறைவிடத்திற்கு ஓடினர்.

    இதற்கிடையே ஏவுகணையை தடுத்து அழிக்கும் பாதுகாப்பு சிஸ்டம் மூலமாக ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    திங்கட்கிழமை இரவும் ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்குள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஏமனின் தலைநகரான சானாவை 2014-ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், சுமார் 100 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    • ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனர் தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் தடை.
    • ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாக 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணி மற்றும் விவசாயப் பணிகளில் மேற்கு கரை மற்றும் காசா முனையில் உள்ள பாலஸ்தீனர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

    அப்போது பாலஸ்தீன ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடைவிதித்தது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணிக்கு ஆட்களை வரவழைக்க இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டது.

    அந்த வகையில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவை சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார். அவருடன் ஏராளமான இந்தியர்கள் கட்டுமான உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி ஏர் ரெய்டு வார்னிங் வரும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம். எச்சரிக்கை ஒலி நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் எனக் கூறும் நிஷாத் "இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை" என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

    "பணம் சம்பாதிப்பது அவசியமானது. குடும்பத்தின் வருங்காலத்திற்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பது முக்கியமானது" என சுரேஷ் கமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான கி.மீ. கடந்த இஸ்ரேல் செல்வ முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

    நிஷாத் சுமார் 16 ஆயிரம் பேர்களில் ஒருவர். இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலில் பல தசாப்தங்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் வயதான இஸ்ரேலியர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களாகவும், மற்றவர்கள் வைர வியாபாரிகளாகவும், ஐடி நிபுணர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

    ஆனால் காசாவில் போர் தீவிரமடைந்ததிலிருந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கும் இந்தியர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

    வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வரும் Dynamic Staffing Services என்ற நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அனுப்பி வைத்துள்ளார். இஸ்ரேலுக்கு மட்டும் 3500 பேரை அனுப்பி வைத்துள்ளார். இது அவருக்கு புதிய சந்தை எனத் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்கலுக்கு முன்னதாக இஸ்ரேலில் 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் 26 வெளிநாட்டினரும் பணியாற்றி வந்தனர். தற்போது 30 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முழுநேர வேலை கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    • அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    • குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நேதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    "பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார்" என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை, நேதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக, மார்ச் மாதத்தில், நேதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், நேதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.
    • வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது.

    அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தி உள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.

    இதனை டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை கடந்த அக்டோபர் மாதம் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கியது.

    இந்நிலையில் அந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தாட் அமைப்பு இடைமறிக்கும் கருவியை ஏவுவதும், அதைத் தொடர்ந்து ஒரு அமெரிக்க வீரர், பதினெட்டு ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறுவதும் பதிவாகி உள்ளது.

    தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பு 

    தாட் அமைப்பு பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவற்றின் முனைய கட்டத்தில் இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

    தாக்குதல்களை தடுக்க தாட், இயக்க ஆற்றலை நம்பியுள்ளது, அதாவது வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது. ஒரு தாட் பேட்டரி, ஆறு டிரக் - லாஞ்சர்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் எட்டு இடைமறித்து அழிக்கும் தடுப்புகளை வைத்திருக்கும்.

     

    அதனுடன் ஒரு ரேடார் மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். தாட் - இன் ரேடார் 870 முதல் 3,000 கிலோமீட்டர் தொலைவிலான ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்டறியும் வல்லமை உடையது. 

    • உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

    அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் வரை உள்ள நிலையில் காசாவில் ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேதன்யாகுவை கண்டித்து பேரணி நடத்தினர்.

    அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர், ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    • முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
    • பாதுகாப்பு அமைப்புகளை கண்மூடித்தனமாக அழித்துவிட்டோம்.

    இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து பேசிய அவர், "இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும்போது, எனது கருத்துகளின் தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்: நாங்கள் ஹமாஸை தோற்கடித்துவிட்டோம். ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை கண்மூடித்தனமாக அழித்துவிட்டோம்.

    உற்பத்தி முறைகள், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்திவிட்டோம், தீமையின் அச்சுக்கு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம். மேலும் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு, கடைசியாக நிற்கிறது" என்று காட்ஸ் கூறினார்.

    இஸ்ரேல் "அவர்களின் மூலோபாய உள்கட்டமைப்பை சேதப்படுத்தும், நாங்கள் அவர்களின் தலைவர்களின் தலையை துண்டிப்போம் - நாங்கள் தெஹ்ரான், காசா மற்றும் லெபனானில் உள்ள ஹனியே, சின்வார் மற்றும் நசரெல்லாவுக்கு செய்தது போல் - நாங்கள் அதை ஹொடைடா மற்றும் சனாவிலும் செய்வோம்" என்று காட்ஸ் மேலும் தெரிவித்தார்.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
    • ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் -இல் ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    நேற்று டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே ஏவுகணை விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கத் தவறியதால் அது கீழே விழுந்துள்ளது என்றும் இதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

     

    ஏமனின் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.

    பதிலுக்கு, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.

    செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், டிரோன்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வப்போது ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

     

    முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகளை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    • பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    காசா முனையில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுதகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய அமெரிக்க அரசு மற்றும் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் அமெரிக்க நிர்வாகங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கும் முன் போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    எனினும், இது தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. சமீபத்திய தாக்குதலை மருத்துவமனையின் அருகாமையில் இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முயற்சிப்பதாக இராணுவம் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மக்கள் மத்தியில் மறைந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

    ×