search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கையின்போது தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு வைத்த ஆப்பு தெரியும்- செல்லூர் ராஜூ
    X

    வாக்கு எண்ணிக்கையின்போது தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு வைத்த ஆப்பு தெரியும்- செல்லூர் ராஜூ

    • அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி.
    • பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.

    மதுரை:

    மதுரை கோச்சடையில் புதிய ரேசன் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது தி.மு.க.

    நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. தி.மு.க. காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.


    அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா? தொடர்வாரா? என்பது தெரியும்.

    கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மனவேதனை.

    பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.

    கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பா.ஜ.க.வை விட்டு வாருங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பா.ஜ.க.வை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?

    விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சிறு பிள்ளைகள். 2026-ம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு தி.மு.க.வுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.க.வுக்கு கோபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×