என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா- மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.

    இதில் அலியாசிம் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
    • நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.

    இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2-வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா- கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோர் மோதினர். இதில் 7-4, 6-3 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலிக்ஸ் அகர் அலியாசிம், டாமி பாலுடன் மோதினர்.
    • இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.

    அடிலெய்டு டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா வீரரான பெலிக்ஸ் அகர் அலியாசிம், அமெரிக்காவின் டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகினார்.

    ஆக்லாந்து:

    நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, டென்மார்க்கின் கிளாரா டவ்சன் உடன் மோதினார். இதில் ஒசாகா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் ஒசாகா காயம் காரணமாக திடீரென விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கிளாரா டவ்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
    • இதில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா, அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.

    இதில் ஜிரி லெஹெகா 4-1 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரெய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனால் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 4-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் பெறுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஆக்லாந்து:

    நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அலிசியா பர்க்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் கிளாரா டவ்சன், அமெரிக்க வீராங்கனை ராபின் மோன்ட்கோமேரி உடன் மோதினார்.

    இதில் கிளாரா டவ்சன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் ஓபெல்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா, பிரான்சின் பெரிகார்ட் உடன் மோதினார்.

    இதில் ஓபெல்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஓபெல்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

    • சபலென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-2 என எளிதாக வீழ்த்தினார்.
    • ரஷியாவின் குடெர்மெடோவா உக்ரைனின் கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடெர்மெடோவா- உக்ரைனின் கலினினா ஆகியோர் மோதினர். இதில் குடெர்மெடோவா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா- 8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-2 என எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா- குடெர்மோடோவா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் லெகேக்கா, ஓபெல்கா ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    • முதல் செட்டை டிமித்ரோவ் 4-6 என இழந்தார்.
    • 2-வது செட்டில் 4-4 என சமநிலை பெற்றபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான டிமித்ரோவ், செக்குடியரசின் தரநிலை பெறாத ஜிரி லெகேக்காவை எதிர்கொண்டார்.

    நடப்பு சாம்பியனுக்கு எதிராக லெகாக்கா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிமிட்ரோவால் லெகாக்கா ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார்.

    2-வது செட்டில் நம்பிக்கையுடன் விளையாடினார். 2-வது செட்டில் 4-4 என சமநிலையில் இருக்கும்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செக்குடியரசு வீரர் ஜிரி லெகேக்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

    மற்றொரு அரையிறுதி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா- பிரான்ஸின் பெரிகார்ட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் வீரருடன் ஜிரி லெகேக்கா சாம்பியன் பட்டத்திற்காக மோதுவார்.

    முதல்நிலை வீரரான ஜோகோவிச் நேற்று நடைபெற்ற காலிறுதியில் அமெரிக்காவின் ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குடெர்மெட்டோவா கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனையாக சபலென்கா 8-ம் நிலை வீராங்கனையான அனட்ரீவாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான டிமித்ரோவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

    இதில் டிமித்ரோவ் முதல் செட்டை 6-1 என வென்றார். 2வது செட்டில் 2-1 என முன்னிலை வகித்தபோது தாம்சன் திடீரென விலகினார்.

    இதையடுத்து, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டிமித்ரோவ், செக் வீரரான ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

    ×