என் மலர்
டென்னிஸ்
- இகா ஸ்வியாடெக் 6- 0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி, மேடிசன் கீஸ் ஆகியோரும் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
மெல்போர்ன்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் (போலந்து), ரெபெக்கா ஷ்ரம்கோவா (ஸ்லோவாக்) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6- 0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் டெஸ்டானி ஐயாவா (ஆஸ்திரேலியா) மற்றும் டேனியல் ரோஸ் காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இதில் 7-4, 4-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி, மேடிசன் கீஸ் ஆகியோரும் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை படோசா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், பிரிட்டனின் ஜோடி அன்னா உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனுடன் மோதினார். இதில் படோசா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்-டிரிஸ்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.
- 2-வது சுற்று ஆட்டத்தில் ஷபலென்கா- ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.
- ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான ஷபலென்கா ( பெலாரஸ்) இன்று காலை நடத்த 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.
இதில் ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் லெசி மெர்டன்சை (பெல்ஜியம்) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
5-வது வரிசையில் உள்ள குயன்வென் ஜெங் (சீனா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியை சேர்ந்த லாரா ஷீக்மண்ட் 7-6 (7-3), 6-3 என்ற சேர் செட் கணக்கில் ஜெங்கை வீழ்த்தினார்.

14-வது வரிசையில் இருக்கும் மிர்ரா ஆன்ட்ரியா (ரஷியா), ஒல்கா டேனி லோவிச் (செர்பியா) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- ஜப்பான் வீரருக்கு எதிராக முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றினார்.
- 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் தரநிலை பெறாத ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் முதல் செட்டை 6-0 என எளிதான அல்காரஸ் கைப்பற்றினார். அல்காரஸின் ஒரு சர்வீசை முறியடித்து ஒரு கேமை கூட நிஷியோகாவால் வெல்ல முடியவில்லை.
2-வது செட்டிலும் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
3-வது செட்டில் மட்டும் நிஷியோகா சற்று நெருக்கடி கொடுத்தால். என்றாலும் அல்காரஸ் 6-4 எனக்கை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ், ஆன் லி உடன் மோதினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சக நாட்டவரான ஆன் லி உடன் மோதினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 2-வது சுற்றில் எலெனா கேப்ரியெலா ரூஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
- போபண்ணா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது.
- 2-வது செட்டை 6(5)-7(7) என இழந்து ஏமாற்றம் அடைந்தது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ்- ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7(5) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. முதல் செட்டின் தொடக்கத்தில் போபண்ணா ஜோடி சிறப்பாக விளைாடினாலும், அதன்பின் ஸ்பெயின் ஜோடி உத்வேகம் பெற்று முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
2-வது செட்டில் இரு ஜோடிகளும் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் ஸ்பெயின் ஜோடி 5-3 என முன்னிலை பெற்றிருந்தது.
அதன்பின் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி 5-5 என சமநிலை பெற்றது. என்றாலும் ஸ்பெயின் ஜோடி அடுத்த இரண்டு கேம்களையும் வென்று டை-பிரேக்கரை 7-5 என முறியடித்து 7-5, 7(5)-6(5) என வெற்றி பெற்றது.
இதனால் முதல் சுற்றோடு போபண்ணா ஜோடி ஏமாற்றம் அடைந்தது.
- முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ ஆகியோர் மோதினர்.
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை கோகோவிச் 4-6 என இழந்தார். அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பானிஷ்) அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் லூகாஸ் பவுலே உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் முனாரை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் படோசா 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா பங்கேற்கிறார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடங்க உள்ளது.
இதற்கிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதுகிறார்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். இவர் கடந்த 2024 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியிருந்தார்.
ஏற்கனவே, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






