என் மலர்
டென்னிஸ்
- ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையிடம் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.இதில் ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இதில் பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட்டுடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார். இதில் கோகோ காப் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
- ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஜெசிகா பெகுலா 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அர்ஜென்டினாவின் கமிலோ உகோ காரபெல்லி ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மற்றும் ரஷ்யாவின் அன்னா நிகோலாயெவ்னா கலின்ஸ்காயாவும் மோதினர். இதில் 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லே உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-4 என வென்ற யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டை 3-6 என இழந்தது. மூன்றாவது செட்டை 10-7 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் வென்றார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
இதில் ஒசாகா 7-6 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-4 என ஒசாகா கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான கார்லோஸ் அல்காரஸ், பெல்ஜியத்தின் டேவிட் காபின் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த காபின், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 2 வீரரான அல்காரஸ் தொடரின் முதல் சுற்றில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர்.
- சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
புளோரிடா:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் காலின்ஸ் (அமெரிக்கா), சொரானா மிஹேலா (ருமேனியா) உடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-4, 7-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் சக்காரி (கிரீஸ்), மசரோவா (சுவிட்சர்லாந்து), ஓன்ஸ் ஜபியர் (துனிசியா), லினெட்(போலந்து) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
- ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி:
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஜப்பானின் நவாமி ஒசாகா, ரஷ்யாவின் லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ் வீராங்கனை ரெபேக்கா மசரோவா குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர். இதில் மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வென்றார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவாமி ஒசாகா, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.
இதில் ஒசாகா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜாக் டிராபர் 6-2, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இன்று நடந்த முதல் அரையிறுதியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவிடம் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதியில் தரவரிசையில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயினைச் சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் டிராபர் முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். அடுத்த செட்டை அல்காரஸ் 6-0 என கைப்பற்றினார். வெற்றியாளரை
நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை டிராபர் 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அல்காரஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே, முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெத்வதேவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர், ஹோல்ஜர் ரூனேவுடன் மோதுகிறார்.






