என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அடிலெய்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டே-நைட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பெறுகிறார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், வில் புகோவ்ஸ்கி ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜோ பேர்ன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார்கள் எனக் கருதப்பட்டது.

    ஆனால் டேவிட் வார்னர் காயத்தால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் புகோவ்ஸ்கி, மார்கஸ் ஹாரிஸ் இடையே போட்டி இருந்தது. புகோவ்ஸ்கி முதல் பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.

    இதனால் மார்கஸ் ஹாரிஸ் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும், இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளதால் உறுதியாக அணியில் இடம் பெறுகிறார். மேலும், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டு போட்டிகளில் 355 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 118.33 ஆகும்.
    பிக் பாஷ் லீக் டி20-யில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிராக மெல்போர்ன் ரெனேகட்ஸ் 60 ரன்னில் சுருண்டு 145 ரன்னில் படுதோல்வியடைந்தது.
    பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் ஜோஷ் பிலிப் (57 பந்தில் 3 சிக்ஸ், 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள்), ஜோர்டான் சில்க் (19 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்) ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

    பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது. அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் ரெனேகட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 10.4 ஓவர்கள் மட்டுமே தாகுப்பிடித்து 6 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் 165 ரன் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. பிக் பாஷ் டி20 லீக்கில் மிகவும் அதிக ரன் வித்தியாசத்தில் ஒரு அணி தோல்வி அடைந்தது இதுவே முதல்முறையாகும்.
    லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் இர்பான் பதான், டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா சாதனையுடன் இணைந்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரிமீயர் லீக்கில் கண்டி டஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிராக 19 பந்தில் 25 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் டி20-யில் 2000 ரன்கள் அடித்ததுடன் 150 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியாவைச் சேர்ந்த ஜடேஜா இதற்கு முன் 2000 ரன்கள் அடித்ததுடன், 150 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 220 போட்டிகளில் இந்த சாதனையை எட்டினார். இர்பான் பதான் 180 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
    சிட்னியில் நடைபெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
    ஆஸ்திரேலியா ‘ஏ’- இந்தியா இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. பகல் - இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பும்ரா 55 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 194 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ‘ஏ’ இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    86 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி (104), ரிஷப் பண்ட் (103) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்தது.

    இன்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியா 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதன்பின் 473 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹாரிஸ் (5), ஜோ பேர்ன்ஸ் (1), நிக் மேடின்சன் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், பென் மெக்டெர்போட் (107), ஜேக் வைல்டர்முத் (111) சதம் அடிக்க ஆஸ்திரேலியா ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் அடித்திருந்தது.

    அப்போது இரு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
    தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்ற சென்னையின் எப்.சி. இன்று கவுகாத்தி அணியுடன் மோத உள்ளது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது.

    சென்னையின் எப்.சி. 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி 5-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) இன்று மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிகறது.

    தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்ற சென்னையின் எப்.சி. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கவுகாத்தியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அதேநேரத்தில் கவுகாத்தி அணியை வீழ்த்துவது சென்னைக்கு சவாலானதே. கவுகாத்தி அணி 2 வெற்றி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    தோல்வியை சந்திக்காத நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூர்-கேரளா அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி ஒரு வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், கேரளா 2 டிரா, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளன.

    பெங்களூர் அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. கேரளா முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ரன்னும் , வாக்னர் 66 ரன்னும் எடுத்தனர். கேப்ரியல் , அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 இழப்புக்கு 124 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. பாலோ ஆனை தவிர்க்க மேலும் 137 ரன் தேவை, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 7 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டை இழந்தது. அந்த அணி 56.4 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, ஜேமிசன் தலா 5 விக்கெட் வீழ்த்தினார்கள். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்து விட்டனர்.

    பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.

    நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 2-வது இன்னிங்சிலும் திணறியது. 170 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டை இழந்தது. கேம்பல் அதிகபட்சமாக 68 ரன்னும், புரூக்ஸ் 36 ரன்னும் எடுத்தனர். போல்ட் 3 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    7-வது விக்கெட்டான கேப்டன் ஹோல்டர்- ஜோஸ்வா ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தனர். 

    இந்த டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இதன்மூலம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது. ஏற்கனவே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை அந்த அணி 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது.
    கோவா:

    11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. கோவா வீரர் இகோர் அன்குலோ 45-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். பதில் கோல் திருப்ப ஒடிசா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 5-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் களம் கண்ட ஒடிசா அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-சென்னையின் எப்.சி. (மாலை 5 மணி), பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    சிட்னியில் நடந்து வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடிக்க இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பும்ரா தாக்குப்பிடித்து விளையாடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா 194 ரன்னில் சுருண்டது.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 108 ரன்னில் சுருண்டது. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி பந்து வீச்சில் அனல் பறந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலும், அடுத்து இறங்கிய ஷுப்மான் கில்லும் நிதானமாக ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 100 ரன்களை எடுத்தது.

    அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்த போது ஷுப்மான் கில் 65 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஹனுமா விஹாரி இறங்கினார். முதலில் இருந்தே அவர் பொறுப்புடன் ஆடினார். விஹாரி-அகர்வால் ஜோடி 53 ரன்கள் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் 61 ரன்னில் வெளியேறினார்.
     
    தொடர்ந்து இறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரகானே விஹாரியுடன் ஜோடி சேர்ந்து 78 ரன்கள் சேர்த்தார். ரகானே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் விஹாரியுடன் ஜோடி சேர்ந்து மேலும் விக்கர் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    ரிஷப் பண்ட் சற்று அதிரடியாக ஆடினார். இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர்.

    இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 104 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 103 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா ஏ அணியை விட இந்திய அணி 472 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவராஜ் சிங், விவசாயிகளின் பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்தப் பிறந்த நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தந்தை கூறிய கருத்தை நிராகரித்துள்ளார்.

    இதுதொடர்பாக யுவராஜ் சிங் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேசத்தின் ரத்தநாளங்கள் விவசாயிகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

    விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, விவசாயிகளுக்கும், நம்முடைய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

    என் தந்தை யோகராஜ் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன், வேதனைப்படுகிறேன். இந்த விஷயத்தில் நான் தெளிவுபடுத்துவது என்னவென்றால், அது அவரின் தனிப்பட்ட கருத்து. அவருடைய எண்ணங்களைப் போல், கொள்கைகளைப் போல் என்னுடைய எண்ணங்கள் இருக்காது.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    பனாஜி:

    7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    25-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஒடிசா-கோவா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 460 ரன்கள் குவித்தது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து இருந்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

    நிக்கோலஸ் தொடர்ந்து அபாரமாக ஆடி 174 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 162 ரன் எடுத்ததே அவருக்கு அதிகபட்சமாக இருந்தது.

    நியூசிலாந்து அணி 114 ஓவர்களில் 460 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. வாக்னர் 42 பந்தில் 66 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

    பிராத்வெயிட் (0), டாரன் பிராவோ (7 ரன்) ஆகியோரை சவுத்தியும், கேம்பல் (14 ரன்), ரோஸ்டன் சேஸ் (0) ஆகியோரை ஜேமிசனும் அவுட் ஆக்கினார்கள்.

    பிளாக்வுட் ஜோடி நிதானத்துடன் ஆடி அரை சதத்தை கடந்த அவர் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். புரூக்ஸ் 14 ரன்னும் கேப்டன் ஹோல்டர் 9 ரன்களும் ஜோசப் 0 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தனர்.

    நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை சவுத்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ஆக்லாந்து:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    வில்லியம்சன், போல்ட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். வில்லியம்சன் முதல் போட்டியில் ஆட மாட்டார். 2-வது மற்றும் 3-வது போட்டிக்கு கேப்டனாக இருப்பார். முதல் ஆட்டத்தில் சான்ட்னெர் கேப்டனாக பணியாற்றுவார்.

    இதற்கிடையே கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாக நியூசிலாந்து பயணத்தில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

    ×