search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவராஜ் சிங்
    X
    யுவராஜ் சிங்

    விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க பிரார்த்தனை -பிறந்தநாளில் யுவராஜ் சிங் உருக்கம்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவராஜ் சிங், விவசாயிகளின் பிரச்சினைக்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்தப் பிறந்த நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தந்தை கூறிய கருத்தை நிராகரித்துள்ளார்.

    இதுதொடர்பாக யுவராஜ் சிங் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேசத்தின் ரத்தநாளங்கள் விவசாயிகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

    விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பு பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, விவசாயிகளுக்கும், நம்முடைய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

    என் தந்தை யோகராஜ் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன், வேதனைப்படுகிறேன். இந்த விஷயத்தில் நான் தெளிவுபடுத்துவது என்னவென்றால், அது அவரின் தனிப்பட்ட கருத்து. அவருடைய எண்ணங்களைப் போல், கொள்கைகளைப் போல் என்னுடைய எண்ணங்கள் இருக்காது.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×