என் மலர்
விளையாட்டு
பாங்காக்:
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.
30 வயதான இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
சாய்னாநேவால் இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற இருக்கும். தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.
இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.
இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இதன் காரணமாக இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்து தோல்வியில் இருந்து தப்பியது.
407 ரன் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 5-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அவர் 97 ரன்னிலும், புஜாரா 77 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 272 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.
இதனால் எஞ்சிய 5 விக்கெட்டுகளை இந்தியா எளிதில் இழந்து தோல்வியை அடைந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 6-வது விக்கெட்டான விகாரி-அஸ்வின் ஜோடி மனம் தளராமல் கடைசி வரை போராடி தோல்வியில் இருந்து தப்பி ஆட்டத்தை டிரா செய்தது.
கடைசி வரை இந்த ஜோடியை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க முடியாமல் நொந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு இருவரும் மிகவும் கவனத்துடன் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டத்தின் முடிவில் இந்தியா 130 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. விகாரி 161 பந்துகளில் 4 பவுண்டரியுடன், 23 ரன்னும், அஸ்வின் 178 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 39 ரன்னும் எடுத்தனர்.இருவரும் இணைந்து 259 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் எடுத்தனர்.
சிட்னி டெஸ்ட் டிரா ஆனது வெற்றிக்கு நிகரானது என இந்திய அணி பொறுப்பு கேப்டன் ரகானே கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியில் விகாரியின் சிறப்பான இன்னிங்சை அனைவரும் பார்த்தோம். இதில் அவர் ஆடிய விதம் 2019-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விகாரி அடித்த சதத்தை விட சிறந்த ஒன்றாகும்.
காயமடைந்த பிறகும் அவர் போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்டு உள்ளார். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் அவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த டிராவானது வெற்றிக்கு நிகரானது.
இதற்கான அனைத்து பாராட்டுக்களும் விகாரி, அஸ்வின், ரிஷப்பண்ட், புஜாரா ஆகியோரை சேரும். ரிஷப்பண்ட் மிக அற்புதமாக ஆடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.
இந்திய அணியை பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. வீரர்களின் ஓய்வு அறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து இருப்போம். இந்தியா மிகவும் கடினமாக போராடியது. தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. காயம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இந்திய அணி மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இதேபோல ஷேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் திறனை பாராட்டி உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய வீரர்களின் போராட்ட குணத்தை பாராட்டி உள்ளது.
இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து, ஹனுமா விஹாரி மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களும் பிரிஸ்பென்னில் நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக டி நடராஜன் களமிங்களாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








