என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னி டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் மூன்று கேட்ச்களை டிம் பெய்ன் பிடிக்க தவறியதால், இந்தியாவுக்கு டிரா செய்யும் வாய்ப்பு கிட்டியது.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதற்கு ரிஷப் பண்ட், அஸ்வின், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

    அதேவேளையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மூன்று கேட்ச்கள் விட்டது, லாபஸ்சேன் ஒரு கேட்ச் விட்டதும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

    ரிஷப் பண்ட் சொற்ப ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு முறை டிம் பெய்ன் கேட்ச் பிடிக்க தவறினார். ஹனுமா விஹாரி பேட்டில் பந்து பட்டு பறந்து சென்றது. இதை டிம் பெய்ன் டைவ் அடித்து பிடிக்க தவறினார்.

    அஸ்வின் கொடுத்த கேட்சை லாபஸ்சேன் பிடிக்க தவறினார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டிம் பெய்ன் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அஸ்வினை சீண்டிக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் டிம் பெய்னை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    டிம் பெய்ன்

    டிம் பெய்னின் உதடுகளும், கையுறைகளும் மூடவே இல்லை என்றும், விஹாரி கேட்சை சரியாக பிடிக்கவில்லை என்றும், கேட்ச் மிஸ் செய்யபின் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அறையை பார்க்கனுமே... என்றும்

    அஸ்வினை சீண்டிய அடுத்த ஓவரில் கேட்ச் தவறவிட்டதை, ஸ்லெட்ஜிங் இறுதிகட்ட ஆயுதம் என்றும், அஸ்வின், விஹாரியை சீண்டுவதற்கு கவனம் செலுத்தி கேட்ச்சை கோட்டைவிட்டு விட்டார் என்றும்,

    கேட்ச் பிடிக்க முடியவில்லை, பேட்டிங் செய்ய முடியவில்லை, தற்காலிய கேப்டன், தேவையில்லாமல் பேச மட்டுமே தெரிகிறது என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் நிதிஷ் ராணா, இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாட, மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தவான் (23), ஹிடேன் தலால் (24) ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர்.

    அடுத்து வந்த ஹிம்மத் சிங் 32 பந்தில் 53 ரன்களும், நிதிஷ் ராணா 37 பந்தில் 74 ரன்களும் விளாச டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

    பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இளறங்கியது. தொடக்க வீரர்களான யாஷவி ஜெய்ஸ்வால் (0), ஆதித்யா தரே (3), சூர்யகுமார் யாதவ் (7), சித்தேஷ் லாட் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    ஷிவம் டுபே 42 பந்தில் 63 ரன்கள் அடித்தாலும், மும்பை அணி 18.1 ஓவரில் 130 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.  இதனால் டெல்லி அணி 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இசாந்த் சர்மா 3.1 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரதீப் சங்வான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி, ஜடேஜா பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், இந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் தோற்ற பின்னரும், இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் காயம் அடைந்தது சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

    முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, பேட்டிங் செய்யும்போது இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. 4-வது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் ஜடேஜா பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    ஹாம்ஸ்டிரிங் காயத்துடன் விளையாடி 161 பந்தில் 23 ரன்கள் அடித்த ஹனுமா விஹாரியும் காயத்தால் பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து விலக இருக்கிறார். அவரது காயத்தின் தன்மை முதல் நிலையாக இருந்தாலும் குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடாதது உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே இந்திய அணியில் பலம் காயம் அடைந்துள்ளனர். விஹாரிக்குப் பதில் சாஹா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர்தான் களம் இறங்க வேண்டும். ஒருவேளை சாஹா முழுநேர விக்கெட் கீப்பராகவும், ரிஷப் பண்ட் முழுநேர பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லை எனில் ரிஷப் பண்ட் கீப்பராகவும், மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ஹனுமா விஹாரி

    ஜடேஜாவுக்குப் பதில் ஷர்துல் தாகூர் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் சற்று குழப்பமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில் இருக்கும்போது, ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா 338 ரன்னில் ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்தார். விஹாரி 2-வது இன்னிங்சில் அஸ்வினுடன் இணைந்து போட்டியை டிரா ஆக்கினார்.
    ’இந்தியாவுக்கு வாங்க... அதுதான் உங்கள் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு அவரது ஆக்ரோஷமான மொழியிலேயே இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
    சிட்னி:

    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட முடிவில் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    போட்டியின் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களேயே ரஹானே வெளியேறினார். அதன்பின் புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

    புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களை பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி விரைந்தது. ஆனால் ரிஷப் பண்ட் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, ஹனுமா விஹாரி களமிறங்கினார். புஜாராவும், விஹாரியும் இணைந்து இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 77 ரன் எடுத்த நிலையில் புஜாராவும் வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால், அடுத்து களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின் , விஹாரியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்கவிடாமல் தடுத்தது. இரு வீரர்களுமே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    இருவரின் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் போட்டி டிராவில் முடிந்தது. சிறப்பான ஆடிய விஹாரி 161 பந்தில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இரு அணிகளும் விளையாடும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவின்ஸ்லேண்டில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த மைதானத்திற்கு காபா என்ற புனைப்பெயர் உள்ளது.

    இதற்கிடையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களே வேண்டுமேன்ற வம்புக்கு இழுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்றைய 5-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன்\விக்கெட் கீப்பர் டிம் பெயின் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் அஸ்வினை கிண்டல் அடிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். டிம் பெயினின் கருத்துக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்தார்.  

    டிம் பெயின் கூறுகையில்,  ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.

    டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் (டிம்ப் பெயின்) கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்றார்.

    இரு வீரர்களின் இந்த காரசாரமான விவாதம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 'Come To India' (இந்தியாவுக்கு வாருங்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.


    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது தெரிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபின், இந்தியா திரும்பினார். குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என விரும்பினார். பிசிசிஐ விடுமுறை எடுக்க அனுமதி அளித்தது.

    விராட் கோலி

    இந்த நிலையில் விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஸ்டீவ் ஸ்மித், தெரியாமல் சென்று க்ரீஸ் கார்டை அழித்த வீடியோ வைரலாகி வருகிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரஹானே ஆட்டமிழந்ததும் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். முதலில் திணறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    வீரர்கள் களம் இறங்கியதும் மூன்று ஸ்டம்ப்களில் எதில் நின்று விளையாட வேண்டும் என்பதற்காக க்ரீஸ் கார்டு எடுப்பார்கள். எடுத்து அதில் அடையாளத்திற்கான ஒரு கோட்டை ஏற்படுத்துவார்கள். அப்போதுதான் எங்கு நின்று விளையாடுகிறோம் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெரியும்.

    முதல் செசனுக்கனா கூல்டிரிங்ஸ் இடைவேளையின்போது ரிஷப் பண்ட் குளிர்பானம் அருந்திவிட்டு வந்தார். அதற்குள் ஸ்டீவ் ஸ்மித், பேட்ஸ்மேன் இடத்திற்கு வந்து ரிஷப் பண்ட் ஆடுவது போன்று சைகை காட்டினார். அதன்பின் காலால் ரிஷப் பண்ட் ஏற்படுத்தி வைத்த க்ரீஸ் கார்டை காலால் சுரண்டி அழித்தார்.

    பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும்போது எடுத்து வைத்திருந்த க்ரீஸ் கார்டு அழிக்கப்பட்டிருந்ததை கண்டார். அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புதிதாக க்ரீஸ் கார்டு எடுத்து விளையைாடினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 ரன்னில் வெளியேறினார்.

    ஸ்மித்தின் இந்த செயலை ரசிகர்கள் டுவிட்டரில் கண்டித்து வருகிறார்கள். இதுகுறித்து ரஹானேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் வீடியோ பார்த்தபின் பதில் அளிக்கிறார் என்றார்.
    புஜாரா, பண்ட், அஸ்வின் கிரிக்கெட் அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன் என சவுரவ் கங்குலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இந்த போட்டியை டிரா செய்தது.

    இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி டுவிட்டர் பக்கத்தில் புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்கி தரமான பந்து வீச்சை எப்போதும் எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல.... கிட்டதட்ட 400 விக்கெட்டுகள் எளிமையாக கிடைக்கவில்லை.. இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது... தொடரை வெல்வதற்கான நேரம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.
    வெற்றியை பற்றி நினைக்காமல் எதுவாக இருந்தாலும் கடைசி வரை போராட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா இந்த பேட்டியில் தோல்வியடையும் என நினைத்தனர். ஆனால் வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் கடைசி வரை போராடி போட்டியை டிரா பெறச் செய்தனர்.

    போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானே கூறுகையில் ‘‘எங்களது ஆளுமையை வெளிப்படுத்தி கடைசி வரை போராட வேண்டும் என்று போட்டி தொடங்குவதற்கு முன் பேசிக்கொண்டோம். நாங்கள் போட்டியின் முடிவு குறித்து யோசிக்கவில்லை.

    இன்றைக்கு போராடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில், 338 ரன்னில் ஆல்அவுட் ஆக்கியது சிறப்பானது.

    நாங்கள் இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. ஆனால் அஸ்வின் மற்றும் விஹாரியை சிறப்பாக குறிப்பிட்டாகனும். அவர்கள் கடைசி வரை வெளிப்படுத்திய ஆளுமை, பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. ரிஷப் பண்ட்-ஐ பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் ஒரு யுக்தியை உருவாக்கினோம். ஆனால், எல்லாமே திட்டத்தை வெளிப்படுத்திய வகையில் அமைந்தது’’ என்றார்.
    ஹனுமா விஹாரி ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரியால் அவதிப்பட்ட நிலையிலும், அஸ்வின் முது வலியால் அவதிப்பட்ட நிலையிலும் அணிக்காக போராடியது பாராட்டுக்குரியது.
    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது.

    புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் ரஹானே நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார்.

    அதன்பின் புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். முதலில் மெதுவாக விளையாடிய ரிஷப் பண்ட் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி விரைந்தது. ஆனால் ரிஷப் பண்ட் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்பும் இந்தியா வெற்றிக்காக போராட நினைத்தது. ஆனால் அடுத்து வந்த ஹனுமா விஹாரிக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி ஏற்பட்டது. இதனால் தடை ஏற்பட்டது. அதேவேளையில் புஜாரா 77 ரன்கள் எடுத்த  நிலையில் வெளியேறினார்.

    ஹனுமா விஹாரி

    அப்போது இந்தியா 88.2 ஓவரில் 272 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து அஸ்வின் களம் இறங்கினார். இந்தியாவின் வெற்றிக்கு 43.4 ஓவரில் 135 ரன்கள் தேவைப்பட்டது. ஹனுமா விஹாரியால் ஓட முடியாது. அஸ்வின் நேற்று படுக்கச் செல்லும்போது அவருக்கு முதுகுப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் அவரால் குனிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அணிக்காக விளையாட வந்தார்.

    இதனால் தடுப்பாட்டம் ஒன்றே வழி என்ற நிலையில் இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் காயம் ஏற்பட்டிருக்கும் ஜடேஜா களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அந்த நிலை ஏற்படாமல் இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

    விஹாரி 161 பந்தில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4-வது இன்னிங்சில் 131 ஓவர்கள் விளையாடி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
    ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சிட்னி ஆடுகளத்தில் 400 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டுவது எளிதான காரியம் அல்ல. இதனால் இந்தியா தோல்வி அடைவது உறுதி எனக் கருதப்பட்டது.

    ஆனால் 131 ஓவர்கள் விளையாடி ஆட்டத்தை டிரா செய்தனர். 1980-க்குப் பிறகு தற்போதுததான் இந்தியா 4-வது இன்னிங்சில் 130 ஓவர்களுக்கு மேல் விளையாடி அசத்தியுள்ளனர்.

    மேலும், 4-வது இன்னிங்சில் ஆறு பேட்ஸ்மேன்கள் 50 பந்துகளுக்கு மேல் சந்தித்ததும் இதுதான் முதன்முறையாகும். ரோகித் சர்மா 98 பந்துகளும், ஷுப்மான் கில் 64 பந்துகளும், புஜாரா 205 பந்துகளும், ஹனுமா விஹாரி 161 பந்துகளும், அஸ்வின் 139 பந்துகளும் விளையாடியுள்ளனர்.
    அஸ்வின் மற்றும் விஹாரியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 52 ரன்னிலும், சுப்மன் கில் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 9 ரன்னும், ரகானே 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 309 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தொடர்ந்தது.

    போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே ரகானே மேலும் ரன் ஏதும் எடுக்காமல் அதே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை லயன் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 102 ஆக இருந்தது

    அடுத்து ரி‌ஷப் பண்ட் களம் வந்தார். முதல் இன்னிங்சில் பேட்டிங்கின் போது முழங்கையில் காயம் அடைந்ததால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதில் இருந்து குணமடைந்த ரி‌ஷப்பண்ட் இன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 15-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும்.

    இந்திய அணி 68-வது ஓவரில் 200 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து இருந்தது. ரி‌ஷப்பண்ட் 74 ரன்னும், புஜாரா 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ரி‌ஷப்பண்டின் ஆட்டம் தொடர்ந்து அதிரடியாக இருந்தது. கிரீன், லயன் ஓவர்களில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.

    மறுமுனையில் இருந்த புஜாரா அவருக்கு உறுதுணை அளிக்கும் வகையில் நிதானமாக ஆடினார். அவர் 170 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். அவரது 27-வது அரை சதமாகும். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார்.

    புதிய பந்தை எடுப்பதற்குள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் ரி‌ஷப்பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 97 ரன்னில் ஆட்டம் இழந்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

    ரி‌ஷப்பண்ட் விக்கெட்டை லயன் கைப்பற்றினார். புதிய பந்தை எடுப்பதற்கான கடைசி ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 77 ரன்னில் இருக்கும் போது ஹசில்வுட் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இதனால் இந்திய அணி தோல்வி அடைய நிறைய வாய்ப்பு இருந்தது.

    இதனையடுத்து விஹாரி அஸ்வின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் இந்த ஜோடி போட்டியை டிரா செய்தது. விஹாரி 161பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வி  அடைந்து விடும் என்று நினைத்த நிலையில் இந்த ஜோடி நம்பிக்கை அளித்து விளையாடியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15-ம் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை குயின்ஸ்லாந்து மாகாணாத்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.

    இதற்கிடையே பிரிஸ் பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறையை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தங்கி இருக்கும்போது தங்களது தளத்தை விட்டு வேறு தளத்துக்கு சென்று வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையென்றால் இங்கு வரவேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரதுறை எச்சரித்து இருந்தது.

    தனிமைபடுத்துவதற்கு இணையான இந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட இந்திய அணி தயக்கம் காட்டியது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து இருந்ததால் இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரகானே இந்த புதிய கெடுபிடிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

    இதற்கிடையே அங்கு கடந்த 72 மணி நேரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரிஸ்பேனில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 4-வது டெஸ்டை பிரிஸ்பேனில் விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹோக்ளே தெரிவித்தார்.

    இது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேன் புறப்பட்டு செல்லும்.

    ×