என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியத்தை பாருங்கள்
Byமாலை மலர்11 Jan 2021 11:39 AM GMT (Updated: 11 Jan 2021 11:39 AM GMT)
ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஸ்டீவ் ஸ்மித், தெரியாமல் சென்று க்ரீஸ் கார்டை அழித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரஹானே ஆட்டமிழந்ததும் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். முதலில் திணறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வீரர்கள் களம் இறங்கியதும் மூன்று ஸ்டம்ப்களில் எதில் நின்று விளையாட வேண்டும் என்பதற்காக க்ரீஸ் கார்டு எடுப்பார்கள். எடுத்து அதில் அடையாளத்திற்கான ஒரு கோட்டை ஏற்படுத்துவார்கள். அப்போதுதான் எங்கு நின்று விளையாடுகிறோம் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெரியும்.
முதல் செசனுக்கனா கூல்டிரிங்ஸ் இடைவேளையின்போது ரிஷப் பண்ட் குளிர்பானம் அருந்திவிட்டு வந்தார். அதற்குள் ஸ்டீவ் ஸ்மித், பேட்ஸ்மேன் இடத்திற்கு வந்து ரிஷப் பண்ட் ஆடுவது போன்று சைகை காட்டினார். அதன்பின் காலால் ரிஷப் பண்ட் ஏற்படுத்தி வைத்த க்ரீஸ் கார்டை காலால் சுரண்டி அழித்தார்.
பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும்போது எடுத்து வைத்திருந்த க்ரீஸ் கார்டு அழிக்கப்பட்டிருந்ததை கண்டார். அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புதிதாக க்ரீஸ் கார்டு எடுத்து விளையைாடினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 ரன்னில் வெளியேறினார்.
ஸ்மித்தின் இந்த செயலை ரசிகர்கள் டுவிட்டரில் கண்டித்து வருகிறார்கள். இதுகுறித்து ரஹானேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் வீடியோ பார்த்தபின் பதில் அளிக்கிறார் என்றார்.
Classic bit of “peak Straya” by Steve Smith scuffing out the batsmen’s mark for no reason other than just being an a hole... Aussies... No surprises there! pic.twitter.com/IhxgVhhWvm
— The ACC (@TheACCnz) January 11, 2021
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X