search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனில் கவாஸ்கர், டிம் பெய்ன்
    X
    சுனில் கவாஸ்கர், டிம் பெய்ன்

    வார்த்தைப்போரில் ஆர்வம் காட்டும் டிம் பெய்ன் கேப்டன் பதவி பறிக்கப்பட்டால் ஆச்சர்யம் இல்லை- கவாஸ்கர்

    பீல்டிங் அமைப்பது, பந்து வீச்சை மாற்றுவதில் ஆர்வம் காட்டாமல், வார்த்தைப்போரில் ஆர்வம் காட்டு டிம் பெய்ன் கேப்டன் பதவி பறிக்கப்பட்டால் ஆச்சர்யம் இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    தலைசிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட ஆஸ்திரேலியா அணியால் 131 ஓவர்கள் வீசி இந்திய அணி பேட்ஸ்மேன்களை ஆல்-அவுட் ஆக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் ரிஷப்  பண்ட்-க்கு இரண்டு கேட்ச்களையும், ஹனுமா விஹாரிக்கு ஒரு கேட்சையும் விட்டார்.

    மேலும், அஸ்வினுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இந்த நிலையில் டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எனக்குத் தெரியாது, நான் ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் அல்ல. ஆனால், டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. சிறந்த பந்து வீச்சு குழுவைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியால், 130 ஓவர்களுக்கு மேல் இந்திய அணியை பேட்டிங் செய்ய அனுமதி அளித்துள்ளனர். பந்து வீச்சு மாற்றம், பீல்டிங் இடங்களை மாற்றுதல் போன்றவை முடிவுகளை மாற்றும்.

    பீல்டிங் அமைத்தல், பந்து வீச்சை மாற்றுதல் ஆகியவற்றை காட்டிலும், டிம் பெய்ன்  பேட்ஸ்மேன்களிடம் பேசுவதிலேயே ஆர்வம் காட்டினார். இந்தத் தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி மாற்றப்பட்டால், நான் ஆச்சர்யப்படமாட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×