என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
    ஒஸ்லோ:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது.

    இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் புயல் அன்ஷூ மாலிக் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டினார். இதில் ஹெலினிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் அன்ஷூ
    மாலிக். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று என்ற சாதனையையும் படைத்தார்.

    வெண்கலம் வென்ற சரிதா மோர்

    இதேபோல், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடனின் சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 6-வது வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
    ஷார்ஜா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் அய்யர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 12 ரன்னில் அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்த ஷுப்மான் கில் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
     
    3 விக்கெட் வீழ்த்திய பெர்குசன்

    ராகுல் திரிபாதி 21 ரன், தினேஷ் கார்த்திக் 14 ரன்கள் (நாட் அவுட்), மார்கன் 13 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

    ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, ராகுல் தேவாட்டியா, பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் ராகுல் டெவாடியா மட்டும் தாக்குப்பிடித்து 44 ரன்னில் வெளியேறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 85 ரன்னில் ஆல் அவுட்டானது.  இதனால் 86 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது.

    கொல்கத்தா சார்பில் ஷிவம் மாலி 4 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார்.

    இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வு நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது டோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். 


    சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஷுப்மான் கில்-வெங்கடேஸ் அய்யர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    ஷார்ஜா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ஷுப்மான் கில்-வெங்கடேஸ் அய்யர்  இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தனர். 79 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வெங்கடேஸ் அய்யர் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 12 ரன்களில் அவுட் ஆனார். அரை சதம் கடந்த ஷுப்மான் கில் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின்னர் ராகுல் திரிபாதி 21 ரன்கள், தினேஷ் கார்த்திக் 14 ரன்கள் (நாட் அவுட்), மார்கன் 13 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, ராகுல் தேவாட்டியா, பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 
    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    ஷார்ஜா:

    ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ராஜஸ்தான் அணி விவரம்:-

    1. லிவிங்ஸ்டன், 2. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. ஷிவம் டுபே, 5. பிலிப்ஸ், 6. மோரிஸ், 7. டெவாட்டியா, 8. உடன்கட், 9. ரவாத், 10. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 11. சேத்தன் சகாரியா.

    கொல்கத்தா அணி விவரம்:-

    1. வெங்கடேஷ் அய்யர் 2. சுப்மன் கில் 3. நிதிஷ் ரானா 4. திரிபாதி 5. இயன் மார்கன் 6. வருண் சக்கரவர்த்தி 7. தினேஷ் கார்த்திக் 8. சுனில் நரேன் 9. சிவம் மாவி 10. பெர்குசன் 11. சகீப் அல் ஹசன்

    பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தார்.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி 61 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் 76 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

    இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினார். மயங்க் அகர்வால் (12), சர்பராஸ் கான் (0), ஷாருக் கான் (8), மார்க்ராம் (13) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றியை உறுதி செய்தார். 

    பஞ்சாப் அணி 42  பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கே.எல்.ராகுல், மொத்தம் 42 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 98 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார்.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கெய்க்வாட் 12, மொயீன் அலி 0, அம்பதி ராயுடு 4, ராபித் உத்தப்பா 2, டோனி 12 என சென்னை அணி வரிசை கட்டி விக்கெட்டுகளை இழந்தது. 12 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. 

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

    பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
    சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் லீக்  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூரனுக்கு பதில் கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை அணி: டூ பிளெசிஸ், கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ராபித் உத்தப்பா, டோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாகர், ஜோஷ் ஹாசில்வுட்.

    பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ராம், ஷாருக் கான், சர்பராஸ் கான், ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
    பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.

    ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஜி-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பன் உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலை.

    2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

    2021-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா. அதிபன், ஆர்.பிரக் ஞானந்தா, ஆர். வைஷாலி மற்றும் பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

    கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பா. அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி.வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல் மற்றும்மு.பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற செல்வி பா. சவிதா ஸ்ரீ ஆகியோ ருக்கு தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர்- உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படியுங்கள்...லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ஐதராபாத் வீரர் உமரன் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியது பாராட்டுக்குரியது என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 142 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஜேசன் ராய் அதிகபட்சமாக 38 பந்தில் 44 ரன் (5 பவுண்டரி), கேப்டன் வில்லியம்சன் 29 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.ஹர்‌ஷல் படேல் 3 விக்கெட்டும், கிறிஸ்டியன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 4 ரன்னில் தோல்வியை தழுவியது.

    தேவ்தத் படிக்கல் 41 ரன்னும், மேக்ஸ்வெல் 25 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர்குமார் ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கவுல், உமரன் மாலிக், ரஷித்கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி முடியாமல் போனது ஏமாற்றமே. கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் மிகவும் நேர்த்தியாக வீசினார். அவர் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

    இந்த தோல்வியால் பெங்களூர் அணி 2-வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோனது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    தொடக்கத்திலே 3 விக்கெட் சரிந்ததால் மீண்டும் நிலை நிறுத்துவது முக்கியமானது. படிக்கலும், மேக்ஸ்வெல்லும் அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்தனர்.

    சிறப்பாக ஆடி வந்த மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாகும். அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    ஐதராபாத் வீரர் உமரன் மாலிக்கை, விராட் கோலி பாராட்டி ஆட்டோகிராப் போட்டதை படத்தில் காணலாம்.

    ஐதராபாத் வீரர் உமரன் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியது பாராட்டுக்குரியது. அவர் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தினார். இதுபோன்ற வீரர்களின் திறமையை பார்க்கும் போது அவர்களைமாதிரி மற்ற வீரர்களும் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இது குறித்து அந்த அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “இளம்வீரர் உமரன் மாலிக் 153 கி.மீட்டரில் அதிவேகத்தில் பந்து வீசியது மிகவும் முக்கியமானது. அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

    153 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய உமரன் மாலிக் காஷ்மீரை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு 21 வயதுதான் ஆகிறது. 

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷல் பட்டேல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்த சீசனில் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். பும்ரா கடந்த சீசனில 27 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இதுதான் ஒரு சீசனில் இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய அதிக விக்கெட்டாக இருந்தது. தற்போது ஹர்ஷல் பட்டேல் இந்த சாதனையை முறியடித்துள்ளார். ஆர்.சி.பி. இன்னும் ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டியுள்ளது.
    சென்னை அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றனர்.

    துபாய்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    19-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி வெற்றி பெற்றால் டெல்லியுடன் இணைந்து தலா 20 புள்ளிகளை பெறும். ரன்ரேட்டில் டெல்லியை விட நல்ல நிலையில் இருப்பதால் வெற்றி பெற்றாலே முதல் இடத்திற்கு சென்னை முன்னேறிவிடும்.

    அதே நேரத்தில் டெல்லி அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரை நாளை வீழ்த்தினால் 22 புள்ளியுடன் முதல் இடத்தை பிடிக்கும்.

    சென்னை அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்ற பிறகு 2 தோல்வியை தழுவியது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும்.

    பஞ்சாப் அணியை பொறுத்தவரை பிளே- ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே சொல்லலாம். சென்னையை வீழ்த்தவேண்டிய நெருக்கடி உள்ளது. வெற்றிபெற்றால் 12 புள்ளியை பெறும்.

    அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து அதன் நிலை இருக்கிறது. ரன் ரேட்டிலும் அந்த அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

    ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. அந்த அணியின் நிலை பஞ்சாப்பை போன்றே உள்ளது.

    நாளையுடன் லீக் ஆட்டம் முடிகிறது. நாளைய ஆட்டங்களில் மும்பை- ஐதராபாத், டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 4-வதாக எந்த அணி தகுதி பெறும் என்று நாளை தெரியும். 4 அணிகள் இதற்கான வாய்ப்பில் இருந்தாலும் கொல்கத்தா, மும்பை இடையேதான் போட்டி நிலவுகிறது.

    ×