என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.
    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின், கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ரன்னிலும், பகர் சமான் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் வெளியேறினார். ஷோயப் மாலிக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
    கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் ஆட்டமிழக்காமல் தலா 35 ரன்கள் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை அற்புதமாக வீசிய ரஸல் 9 ரன்களில் கட்டுப்படுத்தினார்.
    ஷார்ஜா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் விளையாடின. 

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். ராஸ்டன் சேஸ் 39 ரன்கள் எடுத்தார். 

    இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கறமிறங்கிய வங்காளதேசம் அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் 17 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய லிட்டன் தாஸ் 44 ரன்கள் சேர்த்தார் சவுமா சர்க்கார் 17 ரன், முஷ்பிகுர் ரகிம் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை அற்புதமாக வீசிய ரஸல் 9 ரன்களில் கட்டுப்படுத்தினார். இதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களே எடுத்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

    மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 31 ரன்களுடனும், ஆபிப் உசைன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.
    143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கி விளையாடிவருகிறது.
    ஷார்ஜா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஷார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். ராஸ்டன் சேஸ் 39 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மஹதி ஹசன், முஸ்டாபிசுர் ரஹ்மான், சோரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.  துவக்க வீரர் முகமது நைம் 17 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வங்காளதேச வீரர்கள் நிதானமாக ஆடினர்.
    இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என சக்லைன் முஷ்டாக் தெரிவித்தார்.
    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சக்லைன் முஷ்டாக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ‘இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அதாவது இறுதிப்போட்டியில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன். மீண்டும் ஒரு முறை விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். 

    முந்தைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி எங்களது வீரர்களை கட்டித்தழுவி பாராட்டிய விதம், அவர்களிடம் டோனி உரையாடியது, எங்களது வீரர்களின் தன்னடக்கம் இவை எல்லாம் நாம் எல்லோரும் மனிதர்கள், ஒருவருக்கொருவர் நேசிக்கிறோம், இது வெறும் விளையாட்டு தான் என்ற தகவலை உலகிற்கு உணர்த்துவதாக இருந்தது. 

    இந்தியா பாகிஸ்தான் வீரர்கள்

    விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். நட்புறவு வெற்றி பெறட்டும். பகைமை தோற்கட்டும் என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் ஐ.சி.சி. மகிழ்ச்சி அடையும். ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள்’ என்றார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்-தீபிகா தம்பதிகளுக்கு பிறந்துள்ள இரட்டை குழந்தைகளின் பெயர்களை தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர், பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய டுவிட்டர் பதிவின் மூலம் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். 

    அதில் அவர், "எனக்கும் தீபிகாவுக்கும் இரண்டு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெயர் கபீர் பள்ளிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பள்ளிகல் கார்த்திக்" என்று அதில் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
    டி20 உலக கோப்பை அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இஷான் கிஷனை இந்திய அணியில் சேர்க்கலாம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.

    அந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட அவர் பந்து வீச இன்னும் தயார் ஆகாததால் வாய்ப்பு வழங்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாண்ட்யா பந்து வீசி பயிற்சி எடுத்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா தேர்வால் அணியில் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை உள்ளது.

    இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வருகிற 31-ந்தேதி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் ஹர்த்திக் பாண்யாவுக்கு பதிலாக இஷான் கி‌ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷான் கி‌ஷனை அணியில் சேர்க்க வேண்டும். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். எனவே நான் நிச்சயமாக பாண்ட்யாவுக்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன்.

    புவனேஸ்குமாருக்கு பதிலாக ‌ஷர்துல் தாக்கூரை சேர்க்கலாம். நீங்கள் அதிக மாற்றங்களை செய்தால், அணி பீதியடைந்து இருப்பதாக காட்டும். பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் இந்தியா ஒரு சிறந்த அணி.

    நீங்கள் ஒரு நல்ல அணியுடன் முதல் ஆட்டத்தில் தோற்று விட்டீர்கள். இதனால் இந்தியா அடுத்து வெற்றி பெறாது அல்லது கோப்பையை வெல்லாது என்று அர்த்தமல்ல. அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கும் அங்கிருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். எனவே அதிக மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு துபாயில் நடந்த சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குஷால் பெரைரா, நிசாங்கா தலா 35 ரன்னும், பானுகா ராஜபக்சே 33 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 65 ரன் எடுத்தது.

    இலங்கை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பவர்- பிளேயான முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்தது. அதன்பின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா சிறப்பாக பந்து வீசினார். அவர் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.

    ஆடம் ஜம்பா 4 ஓவர் வீசி 12 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மேலும் அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது. அதன்பின் ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினர்.

    மிடில் ஓவர்களில் அவர்கள் தொடர்ந்து தலா இரண்டு ஓவர்கள் வீசி விக்கெட்டுகளை கைப்பறினார்.

    பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆட்டத்தில் பவர்-பிளேயில் ஓவருக்கு 15 ரன் எடுக்கப்படலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓவருக்கு 8 ரன்னுக்கு மேலேயே விட்டு கொடுத்தோம்.

    ஆடம் ஜம்பாவுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையின் பவர்-பிளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது.

    அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றிடினார். அவரிடமிருந்து உலக தரம் வாய்ந்த செயல்பாடு வெளிப்பட்டது. டேவிட் வார்னர் நன்றாக பேட்டிங் செய்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.

    துவக்க வீரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. துவக்க வீரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதன்பின்னர் ஸ்டீவன் ஸ்மித் (28 ரன்கள்), ஸ்டாய்னிஸ் 16 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா வெற்றியை எட்டியது.

    3 ஓவர்களில் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

    குசால் பெரேரா, அசலங்கா தலா 35 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்ச 26 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம்  ஜம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கிறது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் மெக்காய் காயம் அடைந்ததால் மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார். 

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மெக்காய் காயம் அடைந்ததால் மாற்று வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இந்த போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது.


    முழுமையான உடல் தகுதி பெறாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 31-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் பந்து பட்டது. இதனால் காயம் அடைந்து இருப்பாரோ என்ற அச்சத்தில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு எந்த காயமும் இல்லை என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் விளையாட அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியில் ஸ்பெ‌ஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்த்திக் பாண்ட்யா கருதப்படுகிறார். இதனால் அணிக்குள் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. இதையடுத்து அவரை பந்து வீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியிலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த சூழலில் அணியில் கூடுதலாக பந்து வீச்சாளரை சேர்ப்பதற்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை 2 ஓவர் வீசச் செய்தால் 6-வது பந்து வீச்சாளர் தேவையில்லை என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு பந்து வீச பயிற்சி அளிக்கப்பட்டது. அணியின் ஆலோசகர் டோனி, உடற்பயிற்சி வல்லுனர் நிதின் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீசினார். ஏறக்குறைய 20 நிமிடங்கள் அவர் பந்து வீசி பயிற்சி எடுத்தார்.

    தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் பந்து வீசாமல் தவிர்த்து வந்த ஹர்த்திக் பாண்ட்யா பல மாதங்களுக்கு பிறகு பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பந்தை எறிந்து பயிற்சி எடுத்தலும் அளிக்கப்பட்டது.

    முழுமையான உடல் தகுதி பெறாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. மேலும் அவர் நிச்சயமாக பந்து வீச மாட்டார் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாகவே அக்‌ஷர் படேலை நீக்கிவிட்டு ‌ஷர்துல் தாகூரை அணி நிர்வாகம் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×