என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர் - ஹர்த்திக் பாண்ட்யா
    X
    கவாஸ்கர் - ஹர்த்திக் பாண்ட்யா

    இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் - கவாஸ்கர்

    டி20 உலக கோப்பை அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இஷான் கிஷனை இந்திய அணியில் சேர்க்கலாம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.

    அந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட அவர் பந்து வீச இன்னும் தயார் ஆகாததால் வாய்ப்பு வழங்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாண்ட்யா பந்து வீசி பயிற்சி எடுத்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா தேர்வால் அணியில் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை உள்ளது.

    இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வருகிற 31-ந்தேதி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் ஹர்த்திக் பாண்யாவுக்கு பதிலாக இஷான் கி‌ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷான் கி‌ஷனை அணியில் சேர்க்க வேண்டும். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். எனவே நான் நிச்சயமாக பாண்ட்யாவுக்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன்.

    புவனேஸ்குமாருக்கு பதிலாக ‌ஷர்துல் தாக்கூரை சேர்க்கலாம். நீங்கள் அதிக மாற்றங்களை செய்தால், அணி பீதியடைந்து இருப்பதாக காட்டும். பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் இந்தியா ஒரு சிறந்த அணி.

    நீங்கள் ஒரு நல்ல அணியுடன் முதல் ஆட்டத்தில் தோற்று விட்டீர்கள். இதனால் இந்தியா அடுத்து வெற்றி பெறாது அல்லது கோப்பையை வெல்லாது என்று அர்த்தமல்ல. அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கும் அங்கிருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். எனவே அதிக மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×