என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற 46வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அதிரடியாக ஆட 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

    அடுத்து ஆடிய ஐதராபாத் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் சமன்செய்துள்ளார்.  

    ஐபிஎல் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் 31 இன்னிங்ஸ்களில் 1,076 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் 34 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பண்ட் (35), தேவ்தத் படிக்கல் (35) ஆகிய இருவரும் 3ம் இடத்திலும், ரோகித் சர்மா (37), எம்.எஸ்.டோனி (37) ஆகிய இருவரும் 4ம் இடத்திலும் உள்ளனர். 
    நடத்தை விதியின் கீழ் குற்றத்தை பிரித்வி ஷா ஒப்புக் கொண்டார் என்று ஐ.பி.எல்.நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று  நடைபெற்ற  45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
    இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 

    இந்த  ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணி தொடக்க வீரர்  பிரித்வி ஷா-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக அவர் செலுத்த வேண்டும். நடத்தி விதிகளின் படி குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதுடன் அனுமதியை ஏற்றுக் கொண்டதாகவும் ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விளையாட்டு போட்டியில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்பு தேசிய போர் நினைவகத்தைப் அவர்கள் பார்வையிட்டது தம்மை மிகவும் கவர்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    செவித்திறன் இழந்தோருக்கான டெப்லிம்பிக் 2021,  விளையாட்டுப் போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்தி தடகள வீரர்கள் பிரேசில் சென்றுள்ளனர். 

    அவர்களுக்கு பிரதமர் மோடி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக  தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

    இன்று தொடங்கும் # Deaflympics2021 -ல்  இந்தியா நமது  குழுவை உற்சாகப்படுத்துகிறது. நமது  திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    விளையாட்டு போட்டிக்கு புறப்படுவதற்கு  முன் தேசிய போர் நினைவகத்தைப் பார்வையிட்ட அவர்களின் செயல்  என்னை மிகவும் கவர்ந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    முதலில் விளையாடிய சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி 182 ரன்களை குவித்தது
    புனே:

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். 

    பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 39 ரன்னும், கேப்டன் வில்லிம்சன் 47 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். திரிபாதி டக்அவுட்டானார். மார்க்ராம் 17 ரன்னுடன் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய பூரன்   பந்துகளில்   ரன்கள் குவித்தார்.  

    ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 189  ரன்கள் அடித்தது.  இதையடுத்து சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
    புனே:

    ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். 

    பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. ருதுராஜ் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். டோனி 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
    196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களே சேர்த்தது.
    மும்பை:

    ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினார். தீபக் ஹூடா 52 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 5 ரன்களிலும், டேவிட் வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 37 ரன்கள், கேப்டன்  ரிஷப் பண்ட் 44 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 

    கடுமையாக போராடிய பாவெல் 35 ரன்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்தனர். எனினும் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லக்னோ அணி 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 14 புள்ளிகள் பெற்று  புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது.
    புனே:

    ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது. சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிராவோ மற்றும் சிவம் ஆகியோருக்கு பதில் கான்வே, சிமர்ஜீத் சிங் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் இல்லை.
    டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, லக்னோ அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது டி காக் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா கேப்டன் ராகுலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.

    தீபக் ஹூடா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 77 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    டெல்லி அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
    டிசம்பர் மாதம் ஸ்பெயினில் நடந்த 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக கரோலினா மரின் விலகினார்.
    மேட்ரிட்:

    ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை சந்தித்தார்.

    இதில் கரோலினா மரின் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 41 நிமிடத்தில் இவர் வெற்றியை தன் வசமாக்கினார்.

    கரோலினா மரின் தொடர்ந்து 6வது முறையாக ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து, லக்னோ அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது நீடிக்கிறது.
    ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத்தை வீழ்த்த இயலும்.

    புனே:

    ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

    சி.எஸ்.கே. அணி பெங்களூரை 23 ரன் வித்தியாசத்தலும், மும்பையை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் கிங்சிடம் (54 ரன் மற்றும் 11 ரன்) இரண்டு முறையும், கொல்கத்தா (6 விக்கெட் லக்னோ (6 விக்கெட்), ஐதராபாத் (3 விக்கெட்), ஆகியவற்றிடம் தலா ஒரு முறையும் தோற்று இருந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் கேப்டன் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    இந்த ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி ஜடேஜாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 8 போட்டியில் 6ல் தோற்றது. இரண்டி மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு கேப்டன் பதவியால் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என 3 துறையும் பாதிக்கப்பட்டது. எஞ்சிய ஆட்டங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் டோனி மீண்டும் கேப்டனாகி உள்ளார்.

    டோனியின் கேப்டன் பதவியால் சென்னை சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத்தை வீழ்த்த இயலும்.

    ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி சி.எஸ்.கே.வை மீண்டும் வீழ்த்தி 6வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஐதராபாத்தின் பலமே வேகப்பந்து வீச்சுதான். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜ ன், ஜான்சென் போன்ற சிறந்த வேகப்பந்து வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 12ல் ஐதராபாத் 5ல் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி லக்னோவை வீழ்த்தி 5வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோவிடம் ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இதற்கு டெல்லி அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 7வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    முதன்முறையாக கேரள ஒலிம்பிக் போட்டிகள் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று தொடங்கின.
    திருவனந்தபுரம்:

    கேரள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    கேரளா பல குத்துச்சண்டை வீரர்களை வழங்கியுள்ளது. கேரளாவில் இருந்து வளர்ந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை வீரர்கள் இன்று இல்லை. 

    கேரளாவில் இருந்து திறமையான இளம் குத்துச்சண்டை வீரர்கள் வரும்போது, ​​எங்கள் அகாடமியில் இலவச பயிற்சி அளிப்போம். இதுபோன்ற சர்வதேச விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கு ஒலிம்பிக் சங்கம் போன்ற அமைப்புகள் முன்முயற்சி எடுக்க வேண்டும். 

    ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குறித்து அதிக கவனம் செலுத்துகிறேன்.  ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே எனது ஒரே ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×