என் மலர்
விளையாட்டு
- முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கொச்சி:
ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- அர்ஜென்டினாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மோதல் ஏற்பட்டது
- ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர்.
இந்தோனேஷியா நாட்டில் கடந்த வாரம் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 139 பேர் இறந்தனர். இந்த சோக சம்பவம் மறைவதற்குள் அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர் ஒருவர் பலியாகிவிட்டார்.
அர்ஜென்டினாவில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பிய நிலையில், மேலும் ரசிகர்கள் வந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர்.
போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். உடனே போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர்.
- இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது.
- அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 6-ம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ள போதும், பந்துவீச்சு தான் கவலையளித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ரவிசாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது தான். அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. இதில் இனி கவலைக்கொண்டு எந்தவித பயனும் இல்லை. எனவே இதனை மற்றொருவருக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நகர வேண்டும்.
இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது. அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே தொடக்கத்தையும், லீக் சுற்றையும் சிறப்பாக விளையாட வேண்டும். பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் இருக்கும் அணியிடம் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும். புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.
இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.
தற்போது பெர்த் நகரத்திற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி பெறவுள்ளது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனும், நியூசிலாந்துடனும் பயிற்சி போட்டிகளில் மோதவுள்ளது. இவை முடிந்தவுடன் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
- 75 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
- ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 75 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
முதல் ஓவரின் 5-வது பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது வெஸ்ட் இண்டீஸ். அதனையடுத்து சார்லஸ்-கிங் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிங் ஸ்டெம்பிங் மூலம் வெளியேறினார். அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன்(2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய சார்லஸ் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்த வந்த வீரர்கள் ஹோல்டர்(16), பவல்(18), ஹோசைன் (25), சுமித் (4), என விக்கெட்டுகளை பறிக்கொடுக்க 20 ஓவரில் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் 75 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
- பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்திய அணியை சேர்ந்த ரிச்சா கோஷ் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.
சில்கெட்:
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகப்பட்சமாக ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.
19.4 ஓவர் வரை விளையாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - கீரின் களமிறங்கினர். முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரிகள் மூலம் ரன்களை தொடங்கினர். 2-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் கீரின் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஞ்ச் 15 ரன்னிலும் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் வெளியேறினார்.
ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 20 பந்தில் 42 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
ஸ்டீவ் சுமித்17 ரன்னிலும் மேத்யூ வேட் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
- இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- பாகிஸ்தான் அணியின் நிதா தார் அரை சதம் அடித்தார்.
சில்கெட்:
சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 33 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது.
அதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மரூப் - நிதா தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிகப்பட்சமாக நிதா தார் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
- பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.
கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர்.
- ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர்.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது.
இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 75 ரன்னும், கிளாஸ்சன் 74 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் (4 ரன்), சுப்மன் கில் (3), ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யர்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. அதில் சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்னே எடுத்தார்.
இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா 9 ரன் வித்தியாசத்தில் வென்றது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர். பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.
தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது.
இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன். பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.
சஞ்சு சாம்சன் கூறும் போது, நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன்.
கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும். கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன். அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.
3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன.
சில்கெட்:
வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் இன்று சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆடும் லெவனில் விளையாடும் இந்திய வீராங்கனைகள்:-
ஸ்மிருதி மந்தனா, மேக்னா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்
ஆடும் லெவனில் விளையாடும் பாகிஸ்தான் வீராங்கனைகள்:-
முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சோஹைல், அய்மான் அன்வர், சாடியா இக்பால், துபா ஹாசன், நஷ்ரா சந்து
- இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
- கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிடோரியசுக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் அவர் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.
- விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் விளையாடியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக யாசிர் ஷா 42 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி ஓவரில் 20 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி நாளை நியூசிலாந்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது.






