என் மலர்
புதுச்சேரி
சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நண்பகல் 12 மணிக்குள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. புதுவை முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து அனைத்து வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர்.
இதில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு காரணத்தை கேட்டுத்தான் அனுப்புகிறார்கள். முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும், ஆட்டோக்களில் இருவர், கார்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது.
தேவையின்றி சாலையில் சுற்றித் திரியக்கூடாது, மருத்துவ தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும், மற்றபடி வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நண்பகல் 12 மணிக்குள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. புதுவை முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து அனைத்து வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர்.
இதில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு காரணத்தை கேட்டுத்தான் அனுப்புகிறார்கள். முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும், ஆட்டோக்களில் இருவர், கார்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது.
தேவையின்றி சாலையில் சுற்றித் திரியக்கூடாது, மருத்துவ தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும், மற்றபடி வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவையில் ஜனவரி 16-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மையத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் அனுப்பப்படும்.
அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசிடம் புதுவைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என அரசு கோரியிருந்தது.
முதல்கட்டமாக தற்போது 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவையில் ஜனவரி 16-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மையத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் அனுப்பப்படும்.
அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்காலில் காமராஜர் கல்லூரி வளாகம், மாகி, ஏனாமில் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசிடம் புதுவைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என அரசு கோரியிருந்தது.
முதல்கட்டமாக தற்போது 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம்.
புதுச்சேரி:
புதுவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடிக்கிறது. ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அதேநேரம், கூடுதலாக சில கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூஸ் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட வேண்டும். மற்ற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மருந்து, மருத்துவம், சானிடைசர், ஆக்சிஜன், பாதுகாப்பு, விவசாயம், உரம் மற்றும் அவை தொடர்பான தொழிற்சாலைகள் செயல்படலாம்.
மேற்கண்ட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றுக்கான ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கும் அனுமதி உண்டு.
வளாகத்திலேயே தங்கி வேலை செய்யும் ஊழியர்களை கொண்டு மட்டும் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வாகனங்களில் தான் ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.

காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம். அதுவும், டிரைவருக்கும், பயணிப்பவருக்கும் இடையே சமூக இடைவெளிக்கான தடுப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் ஊழியர் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தொழிற்சாலை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு பூர்வா கார்க் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம்? என கேட்டபோது, உயிரிழப்பு குறித்து தினமும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறோம்.
மருத்துவமனையில் சேர்ந்து 5 நாட்களுக்குப்பிறகு சிகிச்சை பலனின்றி இறந்த வர்களை மட்டும் இந்த ஆய்வில் சேர்த்துள்ளோம். இதில், நிமோனியாவினால் தான் அதிகம்பேர் இறந்துள்ளனர்.
அதற்கடுத்து இதய நோய் உள்ளிட்ட இணை நோய் ஏற்கனவே இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நாங்கள் இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார்.
புதுவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடிக்கிறது. ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அதேநேரம், கூடுதலாக சில கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூஸ் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட வேண்டும். மற்ற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மருந்து, மருத்துவம், சானிடைசர், ஆக்சிஜன், பாதுகாப்பு, விவசாயம், உரம் மற்றும் அவை தொடர்பான தொழிற்சாலைகள் செயல்படலாம்.
மேற்கண்ட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றுக்கான ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கும் அனுமதி உண்டு.
வளாகத்திலேயே தங்கி வேலை செய்யும் ஊழியர்களை கொண்டு மட்டும் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வாகனங்களில் தான் ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் சென்றால், அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மற்றபடி தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும்.

காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். மருத்துவம், இன்டர்வியூ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களில் செல்லலாம். அதுவும், டிரைவருக்கும், பயணிப்பவருக்கும் இடையே சமூக இடைவெளிக்கான தடுப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் ஊழியர் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தொழிற்சாலை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு பூர்வா கார்க் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம்? என கேட்டபோது, உயிரிழப்பு குறித்து தினமும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறோம்.
மருத்துவமனையில் சேர்ந்து 5 நாட்களுக்குப்பிறகு சிகிச்சை பலனின்றி இறந்த வர்களை மட்டும் இந்த ஆய்வில் சேர்த்துள்ளோம். இதில், நிமோனியாவினால் தான் அதிகம்பேர் இறந்துள்ளனர்.
அதற்கடுத்து இதய நோய் உள்ளிட்ட இணை நோய் ஏற்கனவே இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நாங்கள் இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார்.
புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 1,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 1,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாக செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் கொரோனா பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதல் பெற்ற பிறகு இம்மையம் நிறுவப்படும்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரிய, ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான போதெல்லாம் சிகிச்சைக்கு முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு படுக்கைகள் மற்றும் சிறப்பு வார்டுகளை ஒதுக்கவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தும்.
அத்துடன் புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுவை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் கொரோனா பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதல் பெற்ற பிறகு இம்மையம் நிறுவப்படும்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரிய, ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான போதெல்லாம் சிகிச்சைக்கு முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு படுக்கைகள் மற்றும் சிறப்பு வார்டுகளை ஒதுக்கவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தும்.
அத்துடன் புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தந்தை, மகன்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தனியார் துணிக்கடை உள்ளது. இதன் உரிமையாளருடன் அவரது சகோதரர், தந்தை ஆகியோர் கடையில் உதவியாக இருந்து வந்தனர்.
துணிக்கடை உரிமையாளரின் தம்பி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவர் கடந்த 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பலியானார்.
அவருடன் தொடர்பில் இருந்த அவரது அண்ணன், தந்தை ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு துணிக்கடை உரிமையாளர் இறந்தார். அவரது தந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் என 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரி மோகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 49). கலால் துறை துணை தாசில்தாரான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். இவரது மனைவியும் (45) தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தனியார் துணிக்கடை உள்ளது. இதன் உரிமையாளருடன் அவரது சகோதரர், தந்தை ஆகியோர் கடையில் உதவியாக இருந்து வந்தனர்.
துணிக்கடை உரிமையாளரின் தம்பி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவர் கடந்த 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பலியானார்.
அவருடன் தொடர்பில் இருந்த அவரது அண்ணன், தந்தை ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு துணிக்கடை உரிமையாளர் இறந்தார். அவரது தந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் என 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரி மோகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 49). கலால் துறை துணை தாசில்தாரான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். இவரது மனைவியும் (45) தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பாக இருக்கும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
கவர்னர் தமிழிசை கொரோனா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘சி.ஐ.ஐ. கூட்டமைப்பு சார்பில் கொரோனாவுக்கு தேவையான மருந்துகள், கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இதுபோல் பலரும் கொடுக்க முன்வரும்போது கொரோனாவில் இருந்து மக்களை அதிகளவில் பாதுகாக்க முடியும்.
தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கையால் சிங்கப்பூரில் இருந்து ராஜேஷ் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தை பார்த்து, இங்கு தொடர்பு கொண்டு ஆக்சிஜன் ப்லோ மீட்டர் அனுப்பியுள்ளார். கதிர்காமம் மருத்துவமனையில் 2-வது மாடியில் புதிதாக 48 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கி கொண்டு இருக்கிறோம்.
பொதுமக்களின் பங்களிப்போடு கொரோனாவை எதிர்த்து போராடுவதில் மிக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுகிறது. 31 பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விழா ஆரம்பிக்க இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பாக இருக்கும்.
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தாமாகவே சுயக்கட்டுப்பாட்டோடு வீட்டில் இருக்க வேண்டும். 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்பதால் வெளியே வந்தால் மறுபடியும் கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டி இருக்கும்.
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக என்னிடம் வந்து மனு அளித்தனர். புதிய இடத்துக்கு எங்களால் கடைகளை மாற்றம் செய்ய முடியாது, அங்கு தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர். நான் கலெக்டரை தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தேன்.
அவரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதே இடத்திலேயே தனிமனித இடைவெளியுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் கடைகள் இயங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆதலால் மக்களின் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு எல்லாவிதத்திலும் மக்களோடு இருக்கிறது. மக்களும் அரசுடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
புதுவை முதல்- அமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறி வந்துள்ளார். அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்றும், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர்கள் பட்டியல் எதுவும் என்னிடம் வரவில்லை. அது அரசாங்க ரீதியிலான முடிவு. அமைச்சர்கள் பட்டியல் குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
அரபி கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக மாகியில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
புதுச்சேரி:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது.
அரபி கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மாகியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
ரெயில் நிலையம், மண்டல அதிகாரி அலுவலகம், கடற்கரை நடைபாதை உட்பட அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் காணப்படுகிறது.
கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் நீர் உட்புகுந்துள்ளது. தலச்சேரி-மாகி தேசிய நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாகி எம்.எல்.ஏ. ரமேஷ் பரம்பத், மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் காலமானார்.
புதுச்சேரி:
பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2019 செப்டம்பர் 25-ம் தேதி கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர்.
சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை, என போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்றழைக்கப்பட்டவர்.
தலைசிறந்த கதை சொல்லி எனப்போற்றப்பட்ட கி.ரா தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர் ஆவர்.
பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2019 செப்டம்பர் 25-ம் தேதி கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர்.
சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை, என போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்றழைக்கப்பட்டவர்.
தலைசிறந்த கதை சொல்லி எனப்போற்றப்பட்ட கி.ரா தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர் ஆவர்.
மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி பதவியேற்றார்.
பதவியேற்புக்கு முன்பே ரங்கசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பதவியேற்புக்கு பின்னரும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் 9-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் தொற்று உறுதியானது. இதனால் அன்றைய தினமே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.
தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரங்கசாமி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து இன்று புதுவை திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி கும்பிட்டார்.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் ரங்கசாமி தனிமைப்படுத்திக்கொண்டார். டாக்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் இருக்கும்படி அவரை அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தை போல் கொரோனா நிவாரணம் வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பும் எழுந் துள்ளது. இவை குறித்து ரங்கசாமி போனிலேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி பதவியேற்றார்.
பதவியேற்புக்கு முன்பே ரங்கசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பதவியேற்புக்கு பின்னரும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் 9-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் தொற்று உறுதியானது. இதனால் அன்றைய தினமே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.
தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரங்கசாமி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து இன்று புதுவை திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி கும்பிட்டார்.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் ரங்கசாமி தனிமைப்படுத்திக்கொண்டார். டாக்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் இருக்கும்படி அவரை அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய அரசில் ரங்கசாமி மட்டுமே முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் அமைச்சர்கள் யார்? என முடிவாகவில்லை. எம்.எல்.ஏ.க்களும் இதுவரை பதவியேற்கவில்லை.

மேலும் புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தை போல் கொரோனா நிவாரணம் வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பும் எழுந் துள்ளது. இவை குறித்து ரங்கசாமி போனிலேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.
கலெக்டர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.
நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. சராசரியாக 25 பேர் மரணமடைந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் காந்தி வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியின்றி மக்கள் கூடி பொருட்களை பெற்று வருவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பெரிய மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய பஸ்நிலையம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். மொத்தம், சில்லறை, அடிக்காசு காய்கறி வியாபாரிகள் இந்த இடங்களில் சமூக இடைவெளியோடு கடைகளை நடத்துவதை கண்காணிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
ஆனால், கலெக்டர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பெரியமார்க்கெட் இடமாற்ற அறிவிப்பு தொடர்பாக வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டில் சுமார் 40 மொத்த வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை தொடர்ந்து அங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். சில்லறை, அடிக்காசு வியாபாரிகளை நேரு வீதி, பழைய சிறைச்சாலை வளாகத்தில் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
எனவே, புதிய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது என தீர்மானித்தனர். இதனால் இன்று (திங்கட்கிழமை) பெரிய மார்க்கெட் இடம் மாறவில்லை.
புதிய பஸ்நிலைய வளாகத்தில் காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வசதியாக மேற்கூரை, குடிநீர், மின் இணைப்பு, தடுப்புகட்டை போன்றவற்றை நகராட்சி செய்து கொடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் புதுவை பஸ் நிலையத்தில் நடக்கவில்லை.
பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகளின் எதிர்ப்பால் பதட்டமும், பரபரப்பும் உருவாகியுள்ளது.
புதுவையில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.
நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. சராசரியாக 25 பேர் மரணமடைந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் காந்தி வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியின்றி மக்கள் கூடி பொருட்களை பெற்று வருவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பெரிய மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய பஸ்நிலையம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். மொத்தம், சில்லறை, அடிக்காசு காய்கறி வியாபாரிகள் இந்த இடங்களில் சமூக இடைவெளியோடு கடைகளை நடத்துவதை கண்காணிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
ஆனால், கலெக்டர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பெரியமார்க்கெட் இடமாற்ற அறிவிப்பு தொடர்பாக வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டில் சுமார் 40 மொத்த வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை தொடர்ந்து அங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். சில்லறை, அடிக்காசு வியாபாரிகளை நேரு வீதி, பழைய சிறைச்சாலை வளாகத்தில் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
எனவே, புதிய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது என தீர்மானித்தனர். இதனால் இன்று (திங்கட்கிழமை) பெரிய மார்க்கெட் இடம் மாறவில்லை.
புதிய பஸ்நிலைய வளாகத்தில் காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வசதியாக மேற்கூரை, குடிநீர், மின் இணைப்பு, தடுப்புகட்டை போன்றவற்றை நகராட்சி செய்து கொடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் புதுவை பஸ் நிலையத்தில் நடக்கவில்லை.
பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகளின் எதிர்ப்பால் பதட்டமும், பரபரப்பும் உருவாகியுள்ளது.
புதுவை மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.






