search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : புதுவையில் ஒரே நாளில் 32 பேர் பலி - புதிதாக 1,961 பேருக்கு தொற்று

    புதுவை மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×