என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது.
    • சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.

    புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக எல்லையான கோட்டக்குப்பம் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

    இங்கு பிரியாணி, புரோட்டா, சிக்கன் சமோசா, ஆட்டுகால் சூப் என மசாலா மணம் கமழும். இங்கு 5 ரூபாய் புரோட்டா கடையும் உள்ளது. 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கும் ஒரே புரோட்டா கடை இது தான்.

    கவி பக்கிரி மைதீன் என்பவர் நடத்திய இந்த கடைக்கு கவி ஓட்டல் என பெயர் இருந்தாலும் 5 ரூபாய் புரோட்டா கடை என்பதுதான் அடையாளம்.

    10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது. சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.

    ஏ.சி. கிடையாது, வசதியான சேர்-டேபிள் கிடையாது. அந்த காலத்து பெஞ்சு, சேர், சாதாரண மர மேஜை மட்டுமே. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை புரோட்டா கிடைக்கும்.

    இதனால் புரோட்டாவை ஒருபுறம் போட்டு கொண்டே இருக்கிறார்கள். மறுபக்கம் சால்னா கொதித்து கொண்டே இருக்கிறது. விறகு அடுப்பில்தான் சமையல். மசாலா பொருட்கள் அனைத்தையும் சொந்தமாக தயாரிக்கிறார்கள்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் புரோட்டா 5 ரூபாயானது. அதன் பிறகு விலை ஏற்றவில்லை. தரமும் குறைக்கப்படவில்லை. நாளுக்கு 2 ஆயிரம் புரோட்டா வரை போடுகிறார்கள். கடையில் 10 பேர் பணிபுரிகிறார்கள்.

    பல ஆண்டுகளாக ஒரே சுவையை அளிக்கின்றனர். இயற்கை முறையிலான உணவு தயாரிப்பதை சாப்பிடும் மக்கள் இங்கு நேரடியாகவே பார்ப்பது கூடுதல் சிறப்பு.

    செயற்கை சுவையூட்டி மற்றும் நிறமூட்டி கிடையாது என்பதால் புதுவைக்கு பல பகுதிகளில் இருந்து வருபவர்கள் இங்கு சாப்பிட்டு செல்கின்றனர்.

    • புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
    • பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

    புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரத்தை கவர்னருக்கு அளிப்பது குறித்து, நேற்று முன் தினம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதுபற்றி நான் பேசவில்லை. எந்த உரிமையையும் யாரும் கேட்கவில்லை.

    புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.

    பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, எந்த முன்னேற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். எல்லா வகையிலும் புதுவை முன்னேறப் போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பா.ஜனதா அதே முறையை மகா ராஷ்டிராவில் செய்கிறது.
    • சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல் - அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பா.ஜனதா அதே முறையை மகா ராஷ்டிராவில் செய்கிறது. சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளன.கட்சி மாறிகளால்தான் இந்திய அரசியல் தூய்மை இழந்துள்ளது.

    கடந்த ஓராண்டில் 35 மத்திய மந்திரி புதுவைக்கு வந்துள்ளார்கள். அவர்க ளால் புதுவைக்கு ஒரு பைசா கொண்டு வர முடிந்ததா? குடுகுடுப்பைக் காரனை போல் புதுவைக்கு நல்ல காலம் பிறப்பதாக கவர்னர் கூறுகிறார். எங்கே நல்ல காலம் வருகிறது. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 10 சதவீதம் நிதியை பெற்றேன். ஆனால், ரங்கசாமியால் கூடுதலாக 1.56 சதவீதம் நிதி தான் பெற முடிந்துள்ளது.

    மத்தியிலும், மாநிலத்திலும் சீர்கெட்ட நிர்வாகம் நடக்கிறது. ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுவையில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.

    புதுவையில் நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. பட்டா மாற்றும் அதிகாரம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமை படுத்தி கொடுக்கும் அதிகாரம் என்று 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

    புதுவையில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல் படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடு ப்பதற்காக கவர்னருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது.

    முதல்-அமைச்சர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டு கொடுத்துவிட்டார். கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராகவும், ரங்கசாமி டம்மி முதல்- அமைச்சராக வும் இருப்பதாக நான் கூறியது நிரூபணமாகியுள்ளது.

    புதுவையில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து போராடுவோம். புதுவை மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.
    • புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

    புதுச்சேரி:

    தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.

    புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.மக்கள் நீதிமன்றத்தை, சென்னை ஐகோர்ட்டு நீதி பதி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் ராஜா தொடங்கி வைத்தார்.

    ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், துணை தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேல், அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நிலுவை, நேரடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன், மனைவி பிரச்னை சம்பந்தம்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதற்காக புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகள், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 3 அமர்வுகள், மாகியில் 2, ஏனாமில் 1 என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டது.இதுபற்றி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா கூறியதாவது:-

    சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். நீதிகேட்டு வருவோருக்கு நியாயப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றம் கட்டமைப்பை உருவாக்கி, நீதிமன்றத்தில் பல காலங்களாக தேங்கி கிடக்கும் வழக்குகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

    நீதியை காலதாமதம் இல்லாமல் வழங்கவே மக்கள் நீதிமன்றம் உருவாகியது. மக்கள் நீதிமன்றத்துக்கு வந்து நீதி கேட்பவர்கள் நீதிமன்ற கட்டணம் அளிக்க வேண்டியதில்லை. நீதிமன்றம் கேட்டு வழக்கு போடுபவர்கள் நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள் நீதிமன்றம் முன்பு வந்து நீதிகேட்டால், நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நீதிமன்றத்தில் தாக்கலாகி மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம்.

    நீண்ட ஆண்டு களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. நீதிமன்ற கட்டணமே இல்லாமல் விரைவாக நீதி கிடைக்கும்.

    தீர்ப்புகள் மேல்முறை யீட்டுக்கு எடுக்கப்படாது. உடன் பைசல் செய்யப்படு வதால், வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவும். இதன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கலாகி பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் வழக்குகளை தீர்வு காணலாம்.

    சென்னை உயர்நீதி மன்றத்தின் புதுவை கிளை அமைப்பது தொடர்பாக அரசுதான் நடவடிக்கை எடுக்க இயலும். தமிழகத்தை ஒப்பிடுகையில் புதுவையில் வழக்குகள் எண்ணிக்கை குறைவுதான். கடந்தாண்டு 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது 1700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு ராஜா கூறினார்.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு..க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
    • உள்துறை அமைச்சகம் அது சம்பந்தமான சீராய்வு கூட்டத்திற்கு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு..க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியை போன்று அரசு நில விற்பனை அதிகாரமும், அரசு நிலத்தை 99 ஆண்டிற்கு குத்தகை விடும் அதிகாரமும் மாநில அரசுக்கு தேவை என முதல் -அமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அது சம்பந்தமான சீராய்வு கூட்டத்திற்கு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தது.

    1973-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசிடம் உள்ள அரசு நில விற்பனை, குத்தகை விடும் அதிகாரத்தை முதல்-அமைச்சர் மாநில அரசுக்கு கேட்கிறார். இந்த அதிகாரம் ஏதோ மாநில அரசிடம் உள்ளது போன்றும் அதை மத்திய அரசு எடுத்து கவர்னரிடம் ஒப்படைப்பது போன்றும் தவறான கருத்தை தி.மு.க. மக்கள் மத்தியில் பரப்பி உள்ளது.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை இன்றுவரை நமக்கு அதிகாரம் இல்லாததால் விற்பனை செய்ய முடியவில்லை.

    சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஆர்ஜிதம் செய்த நிலத்தை பிப்டிக் நிறுவனத்திற்கு மாற்ற முடியவில்லை.இதற்கு மாநில நில உரிமை சம்பந்தமான சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசிடம் உள்ள அதிகாரம் நமக்கு வழங்க வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொய் தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் மீது அவதூறு பரப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.வின் முயற்சி தவறானது.

    அரசு நில விவகாரத்தில் மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை மாநில அரசுக்கு கேட்கிறோம். மத்திய அரசு மாநில அரசுக்கு டெல்லி போன்று நில அதிகாரம் வழங்கினால் அது மாநில நிர்வாகி கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் வழங்கப்படும்.

    பொய் தகவல்களை பரப்பி புதுவையில் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க. இதுபோன்ற தவறுகளை செய்வதை நிறுத்த வேண்டும்.எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து வீண் புரளியை பரப்புவதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்

    புதுச்சேரி:

    கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுவை மேட்டுப் பாளையம் சாணரப் பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (வயது20). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனையறிந்த கலை யரசன் தன்னுடன் வேலை பார்க்கும் கதிர்காமம் பகுதியை சேர்ந்த கிரிதரன் என்பவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது கலையரசனின் காதலிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கொண்டி ருக்கும் போது காதலியிடம் கலையரசன் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார்.

    இதனை அங்கு பணியில் இருந்த டாக்டர் முகமது ரில்வான்(25) கண்டித்து பணிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் டாக்டர் முகமது ரில்வானை கையால் தாக்கினார். மேலும் கலையரசனின் நண்பர் கிரிதரன் தகாத வார்த்தைகளால் டாக்டரை திட்டினார்.

    இதுகுறித்து டாக்டர் முகமது ரில்வான் கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கலையரசனையும், அவரது நண்பர் கிரிதரனையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.
    • பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார்

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.

    பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திகா பங்கேற்று 185 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதுபோல் 85 கிலா பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கமும், மற்றொரு போட்டியில் 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ஆசிய இரும்பு பெண்மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்று புதுவை திரும்பிய மாணவி கிருத்திகா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை முருகானந்தம், பயிற்சியாளர் பாக்யராஜ் மற்றும் பளு தூக்கும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    • இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே உருவையாறு லட்சுமி நரசிம்மர் நகரை சேர்ந்தவர் காந்தி (வயது62). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரம்சந்த் திருமணம் முடிந்து தனது மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் மாடியில் வசித்து வருகிறார். இளையமகன் ஸ்ரீதர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே கரம்சந்த் தனது பெற்றோரிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் வாசலில் இருந்த அலங்கார விளக்கை கரம்சந்த் கழற்றிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் வசந்தி பார்த்து ஏன் அலங்கார விளக்குகளை கழற்றுகிறாய் என கேட்டார். அப்போது கரம்சந்த் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை காந்தியை முகத்தில் குத்தினார். இதனை தடுக்க முயன்ற தாயையும் அவர் தாக்கினார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த காந்தி மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து காந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது

    புதுச்சேரி:

    தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது34). இவர் புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் அலெக்ஸ் மது குடிக்க தொடங்கினார். தனது மன வேதனையை அவ்வப்போது அவருக்கு தெரிந்த நண்பரான லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த பவித்ரன் என்பவரிடம் போனில் அடிக்கடி பேசி வருத்தப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் பணி முடிந்து விடுதி அறைக்கு தூங்க செல்வதாக அலெக்ஸ் மற்ற ஊழியர்களிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மற்ற ஊழியர்கள் அலெக்ஸ் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் அலெக்ஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி விவாகரத்து பெற்று சென்றதால் அலெக்ஸ் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து விடுதி மானேஜர் விக்னேஸ்வரன் கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம், செந்நாடா சங்கம், விழுப்புரம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி இணைந்து இந்திய சுதந்திர 75-வது ஆண்டின் சிறப்பிற்காகவும், சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

    முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாஜலபதி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தின் கலந்து கொண்டனர்.

    ஜிப்மர் ரத்ததான வங்கி யிலிருந்து மருத்துவ குழுவினர் தகுதியுள்ள கொடை யாளர்களை வகைப்படுத்தி 264 யூனிட் ரத்தத்தை பெற்றனர். மாணவ-மாணவிகள் முகாமுக்கு வந்து ரத்த பரிசோதனை செய்து ரத்ததானம் அளித்தனர்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செந்நாடா சங்க அலுவலர் பேராசிரியர் கருணாகரன் செய்திருந்தார்.

    • புதுப்பேட் கிராமத்தில் உள்ள குறுக்கு சாலைகளுக்கு வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.41 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது.
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 144-க்கான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட் கிராமத்தில் உள்ள குறுக்கு சாலைகளுக்கு வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.41 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது.

    இதுபோல் கரையான்பேட் கிராமத்தில் வாய்க்காலுடன் கூடிய உட்புறசாலைகள் அமைக்கும் பணி ரூ.24 லட்சம் மதிப்பிலும், பெரியபேட் கிராமத்தில் இருந்து காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலும், உத்திரவாகினிபேட் திடலுக்கு சுற்று மதில் சுவர் அமைக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 144-க்கான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாட்கோ மேலாண் இயக்குனர் தயாளன், இளநிலை பொறியாளர் திருவரசன், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ பொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி துணை செயலாளர் பழனிசாமி, தொகுதி துணை செயலாளர்கள் அங்காளன், குணேசகரன், கிளை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், செல்வநாதன், அன்புநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
    • பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

    புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.

    ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.

    பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×