search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது- கவர்னர் தமிழிசை விளக்கம்
    X

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது- கவர்னர் தமிழிசை விளக்கம்

    • புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
    • பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

    புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரத்தை கவர்னருக்கு அளிப்பது குறித்து, நேற்று முன் தினம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-

    நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதுபற்றி நான் பேசவில்லை. எந்த உரிமையையும் யாரும் கேட்கவில்லை.

    புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.

    பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, எந்த முன்னேற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். எல்லா வகையிலும் புதுவை முன்னேறப் போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×