என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது- கவர்னர் தமிழிசை விளக்கம்
- புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
- பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரத்தை கவர்னருக்கு அளிப்பது குறித்து, நேற்று முன் தினம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-
நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதுபற்றி நான் பேசவில்லை. எந்த உரிமையையும் யாரும் கேட்கவில்லை.
புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, எந்த முன்னேற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். எல்லா வகையிலும் புதுவை முன்னேறப் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்